Saturday 4 May 2019

மௌனத்தில் இருந்து ஞானம் வழங்கிய மகான்கள்
நம் மண்ணில் பலர் உண்டு .

நமது காலத்தில் ,
நம் கண் முன்னே
அப்படி ஒரு குருவாய் வாழ்ந்து வரும் சித்த புருஷர்தான்
சுவாமிமலை மௌன குரு - "திண்ணை  சித்தர் " என அழைக்கப்படும்
ஸ்ரீ. சத்குரு  பிரகாசம் சுவாமிகள் .

 சுமார் 55 வயது மதிப்புள்ள பிரகாசம் சுவாமிகள் , சுவாமிமலையில்தான் அவதரித்துள்ளார்கள்.

பள்ளி பருவத்திலேயே தனை மறந்து தியானத்தில் ஆழ்ந்துவிடும்  சுவாமிகள் , அவரது குரு அருளால் ஆட்கொள்ளப்பட்டு  தற்போது சுவாமிமலை வீதிகளில் வலம் வருகிறார்கள்.

 சித்த புருஷர் என்றால்...
அவர் ஏதேனும் உபதேசம் செய்கிறாரா ?
சித்து விளையாட்டுக்கள் செய்கிறாரா  ?
மந்திர தீட்சை  செய்கிறாரா ?

இப்படி பல கேள்விகள் நம்முள் எழுவது உண்டு.
இவை அனைத்திற்கும்
"இல்லை"
என்பதே பதில்.

அவர் ஏதும் உபதேசிப்பது  இல்லை.
அவரது மௌனமே உபதேசம் ! 
அவர் ஏதும் சித்துக்கள் செய்வது இல்லை.
அவரது மௌனமே மிகப் பெரிய சித்து !
 அவர் ஏதும் மந்திர தீட்சை அளிப்பது இல்லை.
 அவரது மௌனமே மேலான தீட்சை !


யாருடனும் பேசுவதில்லை.
தன் தேவைகளுக்காகவும் பேசுவதில்லை.
உண்மையில் தேவை என்பது அவருக்கு ஏது ?

குளிப்பது இல்லை
ஆயின் ஒருபோதும் அவரிடம்
 நாற்றம் இல்லை

வெள்ளை வேஷ்டி
வெள்ளை துண்டு
ஜடை முடி
செருப்பில்லா கால்கள்
சதா லயத்தில் ஆழ்ந்த கண்கள்  
கண்களில் ஞான கனல்
இந்த எளிய தோற்றம்தான் 

திண்ணை சித்தர் சுவாமிகள்  

நாடிவருவோர் தரும் பண்டங்களை
ஓரிரு துண்டுகள்  உண்பது உண்டு
எப்போதாவது
அதுவும் அடியவரின் வினை தீர்க்கவே !

ரத வீதிகளில் எப்போதும் ஓயாத நடை.
சிலபோது
 காலியாய் உள்ள   திண்ணைகளில்  ஓய்வு.

" அவரைப்   நான் பார்த்தேன் ,
  அவர் என்னைப் பார்த்தார்,
 எனக்கு இன்ன பலன் ஏற்ப்பட்டது "
 என கூறியபடி நாள்தோறும்
 பெருகும் மக்கள் கூட்டம்

தொலைக் காட்சிகளும்
 பத்திரிக்கைகளும் தொடர்ந்து
 அவரை வெளிபடுத்திக் கொண்டே இருக்கின்றன.

மக்கள் பக்தி உணர்வோடு அவரை நாடினாலும்
அவரது உயர் உணர்விற்கு
ஊரு விளைவிக்காத வண்ணம்
அவரைத்  தொடாமலும் ,
அவரோடு பேசியேத் தீர வேண்டும்
என்று அவரைச்   சுற்றி சுற்றி வராமலும் இருந்தால்
மிகவும் நன்று.

சுவாமிகளின் மகிமைகள் தொடரும் ...

மரண படுக்கையில் இருக்கும் ஒரு பெண் தன் கணவனிடம் கேட்கிறாள்... நான் மரணித்தப் பிறகு நீங்கள் எத்தனை நாட்கள் கழித்து இரண்டாவது திருமணம் செய்துகொள்வீர்கள்?" அதை கேட்க
கணவன் கண் கலங்கியப்படி அழுதுகொண்டே சொல்கிறான்... "உன் கல்லறையின் ஈரம் காயும் வரை!" என்று...
மாதங்கள் பல செல்ல அவன் மனைவி திடீரென இறந்துவிடுகிறாள்... மனைவிக்கு செய்யவேண்டிய எல்லா சடங்கு காரியமும் செய்து அவளை புதைத்த இடத்தில் களி மண்ணால் அழகிய கல்லறை கட்டி விட்டு வீடு திரும்புகிறான்...
தினமும் தன் மனைவியின் கல்லறையை வந்து பார்க்கிறான், கல்லறையின் ஈரம் காயவே இல்லை! ஆறு மாதங்கள் ஓடிப்போன நிலையில் தன் மனைவியின் கல்லறையை மறுபடியும் வந்து பார்க்கிறான், இன்னும் கல்லறையின் ஈரம் காயவே இல்லை!
என்ன இது விந்தை! ஆறுமாத காலம் ஆகியும் இன்னும் கல்லறையின் ஈரம் காயவே இல்லையே! என யோசித்தவன் ஒருவேளை அவள் பேயாக மாறிவிட்டாளோ! என்றெல்லாம் சிந்திக்க ஆரம்பித்தான், இப்படியே ஒரு வருடம் ஓடியது.
ஒருநாள் தன் மனைவியின் முதலாம் ஆண்டு நினைவு தினம் அன்று அவள் கல்லறைக்கு செல்கிறான்,
ஒரு வருட காலம் ஆகியும் அவன் மனைவியின் கல்லறை ஈரம் காயவே இல்லை! ஏதோ இப்போது கட்டிய மண் கல்லறை போல ஈரமாக இருப்பதை கண்டவன் தன் மனைவி தன் மீது வைத்த பாசத்தை நினைத்து தனது மார்பில் அடித்துக்கொண்டு வாய்விட்டு கதறி அழுகிறான்.
அப்போது ஒரு குடம் தண்ணீரோடு இறந்த அவன் மனைவியின் சகோதரன் வருகிறான்... "நீ இங்கு என்ன செய்கிறாய்! குடத்தில் எதற்காக தண்ணீர்.,.!" என்று கேட்கையில் ...
"என் சகோதரி அதாவது உன் மனைவி! அவள் இறக்கும் ஒரு மணி நேரத்திற்கு முன்பு அண்ணா தினமும் காலையிலும் மாலையிலும் என் சமாதியில் தண்ணீர் ஊற்றி அதை ஈரமாக்கிவிடு" என்று கூறி சத்தியம் வாங்கிக்கொண்டாளப்பா!" என கூறி சத்தமாக அழுகிறான்.