Saturday 11 July 2015

விரலை அழுத்தினால் எல்லா நோயும் போச்சு! - இது எப்படி ஏற்படுகிறது?
நம் உடலில், ஏதேனும் ஒரு இடத்தில் வலி ஏற்பட்டால், அப்பகுதியை நம் கையால் அழுத்திவிட்டுக் கொள்கிறோம். அப்படி செய்தால், வலி குறைகிறது. இது எப்படி ஏற்படுகிறது? நம் உடல் முழுவதும் அக்குப்பிரஷர் புள்ளிகள் உள்ளன. நாம் வலியுள்ள பகுதியில் அழுத்தம் கொடுக்கும் போது, அப்பகுதியில் உள்ள அக்குப்பிரஷர் புள்ளிகள் தூண்டப்படுகின்றன. அதனால் வலி குறைகிறது. உடலில் உள்ள சில குறிப்பிட்ட புள்ளிகளில் சில முறைகள் அழுத்தம் கொடுத்து தளர்த்துவதால், நம் நோய்கள் தீருகின்றன.
நோய்கள் வராமல் தடுக்கப்படுகின்றன. சில நோய்களுக்கு அக்குப்பிரஷர் முறையில் தீர்வு காணும் எளிய முறைகளை காணலாம்.
தலைவலி :
நமக்கு பிடிக்காத ஒரு வேலையை பிறர் நம்மை செய்ய சொல்லும் போது, “தலை வலிக்கிறது’ என்று கூறி தப்பித்து கொள்கிறோம். ஆனால், உண்மையில் தலைவலி வந்தால் என்ன செய்கிறோம்? வலி நிவாரணக் களிம்புகள் தடவுகிறோம். அவை கொடுக்கும் வெப்பத்தினால் தலைவலி குறைவது போல் உணர்கிறோம் அல்லது வலி நிவாரண மாத்திரைகள் எடுத்து கொள்கிறோம். அடிக்கடி மாத்திரைகள் எடுத்து கொள்வதால், அசிடிட்டியால் துன்பப்படுகிறோம். மருந்தில்லாமல் தலைவலியை எப்படி போக்குவது? நம் உடலின் அனைத்து உறுப்புகளுக்குமான பிரதிபலிப்பு புள்ளிகள், நம் உள்ளங்கைகளில் உள்ளன.
படத்தில் காட்டியது போல், உள்ளங்கை உடலை குறிக்கும். கட்டை விரல் தலையை குறிக்கும். கட்டை விரலில் நுனியில் உள்ள பக்கவாட்டுப் பகுதி நெற்றிப் பொட்டை குறிக்கும்.படத்தில் காட்டப்பட்டுள்ள கட்டை விரலின் நகத்தினடியில் உள்ள இருபுள்ளிகளை மற்றொரு கையின் கட்டை விரல், ஆள்காட்டி விரல் இவற்றினால் அழுத்தம் கொடுக்க வேண்டும். 14 முறை அழுத்தம் கொடுத்து தளர்த்த வேண்டும். அழுத்தம் கொடுக்கும் போது, மூச்சை உள்ளே இழுக்கவும், தளர்த்தும் போது மூச்சை வெளியே விடவும், 14 முறை முடிப்பதற்கு முன்பே தலைவலி மறைந்துவிட்டால் அத்துடன் நிறுத்தி விடலாம். வலி இன்னும் தொடர்ந்தால், மற்றொரு கை கட்டைவிரலில் 14 முறை அழுத்தம் கொடுக்கவும். அழுத்தம் கொடுத்து முடிப்பதற்குள் தலைவலி போயே போச்சு!
அலர்ஜி, சைனஸ், தும்மல், இருமல் :
ஒவ்வொரு விரல் நுனியிலும், சைனஸ் புள்ளிகள் உள்ளன. விரல்நுனிகளில் அழுத்தம் கொடுத்து தளர்த்தும் போது, அலர்ஜி, சைனஸ், தும்மல், இருமல் இவை வெகுவாக குறைக்கப்படுகின்றன. விரலின் முதல் கோடு வரை, மேலும், கீழுமாக 14 முறைகளும், பக்கவாட்டில் 14 முறைகளும் அழுத்தம் கொடுக்க வேண்டும்.10 விரல்களிலும் இவ்வாறு தினமும் இருமுறைகள் காலையிலும், மாலையிலும் செய்தால் அலர்ஜி, சைனஸ், தும்மல் இவை மறைகின்றன. மீண்டும் வராமல் தடுக்கப்படுகின்றன. ஆஸ்துமா தொல்லை கூட வெகுவாக குறைகிறது.
மலச்சிக்கல், அஜீரணம், அசிடிட்டி, வாயுத்தொல்லை, மூச்சுப்பிடிப்பு:
ஆள்காட்டி விரலையும், கட்டை விரலையும் நெருக்கமாக சேர்க்கும் போது, புறங்கையில் ஒரு கோடு தெரியும். அந்த கோடு முடியும் இடத்தில், ஆள்காட்டி விரல் எலும்பின் கடைசியில் எல்.ஐ.4 என்ற புள்ளி உள்ளது. மேற்கூறிய அனைத்து தொந்தரவுகளையும் நீக்க இப்புள்ளி உதவுகிறது.இப்புள்ளியில் 14 முறைகள் அழுத்தம் கொடுத்து தளர்த்த வேண்டும். (Press & Release) தசையின் மேல் இல்லாமல், எலும்பின் மீது அழுத்தம் கொடுக்க வேண்டாம். பாதிப்பு உள்ளவர்களுக்கு, இப்புள்ளியில் அழுத்தும் போது வலி தெரியும். இரு கைகளிலும் அழுத்தம் கொடுக்கலாம்.மாத்திரை இல்லாமல் மலச்சிக்கல் தீருகிறது. அசிடிட்டிக்கு, “ஆன்டாசிட்’ மருந்து தேவையில்லை. இப்புள்ளியில் அழுத்தம் கொடுக்கும் போது, அதிகமான வாயு வெளியேறுகிறது. மூச்சுப்பிடிப்பு, தசைப்பிடிப்புகளுக்கு, இப்புள்ளி உடனடி நிவாரணம் அளிக்கிறது.
மலச்சிக்கல் :
மலச்சிக்கல் என்பது பல சிக்கல்களை உண்டாக்கும். படத்தில் காட்டப்பட்டுள்ள முகவாயில் உள்ள CV24 என்ற புள்ளி மலச்சிக்கலை தீர்க்க பெரிதும் உதவுகிறது. LI4 என்ற புள்ளியை இரு கைகளிலும் அழுத்தம் கொடுத்த பின், இப்புள்ளியில் 14 முறைகள் அழுத்தம் கொடுத்தால், மலச்சிக்கலை எளிதாக தீர்க்கலாம். கழுத்து வலி : கணினியில் வேலை செய்வதால், கழுத்தில் உள்ள தசைகள் இறுக்கமடைந்து வலியை உண்டாக்குகின்றன. எளிய முறையில் இவ்வலியைப் போக்கலாம். கட்டை விரல் தலையை குறிக்கும். கட்டை விரலின் அடிப்பகுதி கழுத்தை குறிக்கும்.
படத்தில் காட்டப்பட்டுள்ள இப்பகுதியில் உள்ள இருபுள்ளிகளிலும், மற்றொரு கையின் இரு விரல்களினால், 14 முறைகள் அழுத்தம் கொடுக்க வேண்டும்.பின், கட்டை விரலை கடிகாரம் சுற்றும் திசையில், 14 முறையும், எதிர்திசையில், 14 முறையும் சுழற்ற வேண்டும். இரு கைகளிலும் இவ்வாறு செய்யும் போது, கழுத்திலுள்ள தசைகளின் இறுக்கம் வெகுவாக குறைகிறது. கழுத்து வலிக்கு உடனடி நிவாரணம் கிடைக்கிறது.
உயர் ரத்த அழுத்தம் :
உயர் ரத்த அழுத்தம் உள்ளவர்கள், வாழ்நாள் முழுவதும் மாத்திரை எடுத்துக் கொள்ள வேண்டியிருக்கும். அக்குப்பிரஷர் முறையில் கீழ்க்கண்ட புள்ளிகளில் தினமும் அழுத்தம் கொடுக்கும் போது, சிறிது, சிறிதாக மாத்திரையின் அளவை குறைத்து, கடைசியில் முழுவதுமாக நிறுத்தவும் முடியும். நம் கையில் சிறுவிரலின் நகத்திற்கு கீழே உட்புறமாக H9 என்ற புள்ளி உள்ளது. இது, இதய மெரிடியனின் காற்று சக்திப்புள்ளி. இப்புள்ளியில் அழுத்தம் கொடுக்கும் போது, காற்று சக்தி அதிகரித்து, ரத்தக் குழாய்கள் விரிவடைந்து, ரத்த அழுத்தம் குறைகிறது.தலை உச்சியில் GV20 என்ற புள்ளி உள்ளது.
காதுகளிலுருந்து தலைக்கு செல்லும் நேர்கோடும், மூக்கிலிருந்து தலைக்கு செல்லும் நேர்கோடும் சந்திக்கும் இடத்தில் இப்புள்ளி உள்ளது. இப்புள்ளியில் 14 முறைகள் அழுத்தம் கொடுக்கும் போது, டென்ஷன், மன அழுத்தம் இவை குறைவதால், ரத்த அழுத்தம் சீராகிறது.H9 , GV20 இப்புள்ளிகளில், 14 முறைகள் காலையிலும், மாலையிலும் இருவேளைகள் அழுத்தம் கொடுத்து வந்தால், உயர்ரத்த அழுத்தம் சீரடைகிறது.இதை தவிர காலில், பெருவிரல், இரண்டாவது விரல் இவற்றின் இடைவெளியிலிருந்து, மூன்று விரல் தூரத்தில் LIV3 என்ற புள்ளி உள்ளது. இப்புள்ளியில் 7 முறைகள் அழுத்தம் கொடுக்கும் போது, ரத்த அழுத்தம் சீராகிறது. இப்புள்ளியில் ஒரு நாளில் 7 முறைகள் மட்டுமே அழுத்தம் கொடுக்க வேண்டும். அதிக முறைகள் அழுத்தம் கொடுத்தால், ரத்த அழுத்தம் அதிகளவில் குறைய வாய்ப்புள்ளது
{ நமக்குள் உள்ள 6 ஆதாரங்கள் பற்றி சித்தர்களால் உலகுக்கு அளிக்க பட்ட உண்மைகளும் அவற்றின் கட்டமைப்புகளும் . }
குண்டலினி - மூலாதாரம்.
------------------------------------------
மூலாதாரம் என்பது கருவாய்க்கும்,
எருவாய்க்கும் இடையே இருப்பதாக முன்னரே
பார்த்தோம். சித்தர்கள் இந்த மூலாதாரத்தின்
இடத்தினை மிகத் தெளிவாக
விளக்கியிருக்கின்றனர்.
திருமூலர் தனது திருமந்திரத்தில் பின்
வருமாறு விளக்குகிறார்....
நாபிக்குக் கீழே பன்னிரண்டு அங்குலம்
தாபிக்கும் மந்திரம் தன்னை அறிகிலர்
தாபிக்கும் மந்திரம் தன்னை அறிந்தபின்
கூவிக் கொண்டு ஈசன் குடியிருந்தானே
- திருமூலர்.
போகரும் தனது போகர் ஏழாயிரம் நூலில் பின்
வருமாறு விளக்குகிறார்...
அகாரத்தின் மேலாகக் கணேசர் நிற்பார்
அதிலே யோர்கோணத் திலுகாரம் நிற்கும்
உகாரத்தில் வல்லபையாம் சக்தி நிற்பாள்
ஒடுங்கிய தோர்முனை யொன்றில்
கதலிப்பூவாய்
புகாரமாய் முகங்கீழ்க் குண்டலியாம் சக்தி
பெண்பாம்பு போல்சுருட்டிச் சீறிக் கொண்டு
சுகாரமாய்ச் சுழிமுனையூ டுருவி நிற்பாள்
துரியாதீ தம்மென்ற வவத்தை தானே
- போகர்.
மூலாதாரச் சக்கரமானது பிறப்பு
உறுப்பிற்கும் ஆசனவாய்க்கும் இடைப்பட்ட
பகுதியில் உள்ளது. அது இடை, பிங்கலை,
சுழுமுனை என்கிற மூன்று நாடிகள் சேரும்
இடத்தில் உள்ளது. இன்னும் துல்லியமாக
சொல்வதானால் ஆசனத்திற்கு இரண்டு
விரற்கிடை மேலும், பிறப்பு உறுப்புக்கு இரு
விரற்கிடை கீழும் உள்ள நான்கு விரற்கிடை
அளவுள்ள இடத்திலேயே மூலாதார சக்கரம்
இருக்கின்றது.
உடலில் இருக்கும் மற்றச் சக்கரங்களைத்
தாங்குவதால் இதனை ஆதார சக்கரம்
என்கின்றனர். அதாவது மற்றச் சக்கரங்களுக்கு
தேவையான சக்தியைத் தரக் கூடிய
குண்டலினி இச்சக்கரத்தில் தான் சுருண்டு
படுத்துள்ளது. இச்சக்கரத்தில் இருந்து நான்கு
முக்கிய நாடிகள் வெளிக் கிளம்புகின்றன.
அவை தாமரையின் நான்கு இதழ்கள் போல்
தோற்றமளிக்கும். ஒவ்வொரு நாடியின்
அசைவினால் ஏற்படும் சப்தங்கள் "வ ஸ ச
ஷ" என்ற எழுத்துக்களால்
குறிக்கப்படுகின்றன.
அகத்தியர் தனது பாடலில் விவரித்திருக்கும்
மூலாதார சக்கரத்தின் மாதிரி படம் இது.
இந்த நான்கு எழுத்துக்களும் முறையே மனம்,
புத்தி, சித்தம், அகங்காரம் குறிக்கிறது
என்கின்றனர் சித்தர் பெருமக்கள்.
இச்சகக்கரத்தின் மத்தியிலுள்ள யோனிக்கு
“காமம்”என்று பெயர். அதையே சித்தர்கள்
தொழுகிறார்கள். இங்குதான் குண்டலினி
தூங்குவது போல் அசைவற்றுக் கிடக்கிறது.
இச்சக்கரத்தின் அதிதேவன் வினாயகர்,
அதிதேவதை டாகினி/தாகினி என்று
குறிப்பிடப்படுகிறது. இந்த மூலாதார
சக்கரத்தின் பீஜ மந்திரமாக "லம்" என்பது
குறிப்பிடப்படுகின்றது.
பஞ்சபூதங்களில் ஒன்றான பூமி இந்த்
சக்கரத்தின் மூலக்கூறாக கூறப் படுகிறது.
சிறுநீரகம் தொடர்புடைய உறுப்பாக
கூறப்படுகிறது.
குருவருளின் துனையோடும்,
வழிகாட்டுதலோடும் தனிமையான இடத்தில்
அமர்ந்து மூலாதார சக்கரத்தை மனதில்
நிறுத்தி மூல மந்திரத்தை உருவேற்றிட
குண்டலினி விழித்துக் கொள்ளும். இதனை
தன் உணர்வுகளால் மட்டுமே அறிய
முடியும். மூலாதாரத்தில் வெப்பம்
உருவாவது, மூலாதாரத்தில் பரபரவென
எதோவொன்று ஊறும் உணர்வு, உடல்
புல்லரித்தல் போன்ற அனுபவங்களை நான்
உணர்ந்திருக்கிறேன்.
குண்டலினி விழித்துக் கொண்டவர்களுக்கு
கடுமையான பசியும், அதிக தூக்கமும்
உண்டாகும்.
குண்டலினி - சுவாதிஷ்டானம்.
-----------------------------------------------
குண்டலினி பயிற்சியில் இரண்டாவது சக்தி
ஆதார மையமான சுவாதிஷ்டானம் பற்றி
இன்று பார்ப்போம். இதற்கு “நிராகுலம்”
என்றொரு பெயரும் உண்டு. நிராகுலம்
என்றால் துன்பமற்று ஞானமயமாக இருப்பது
என பொருள்படும்.
மூலாதாரத்திற்கு மேலே இருக்கும்
இரண்டாவது சக்கரம் சுவாதிஷ்டானம். நமது
பிறப்பு உறுப்பிற்கு மேலே இது
இருக்கிறதாம். அதாவது மூலாதார சக்கரத்தில்
இருந்து நான்கு விரற்கடை அளவு மேலே
இருப்பதாக கூறியிருக்கின்றனர். இந்த
சக்கரமானது பஞ்சாட்சர எழுத்துக்களான
"சிவயநம" என்னும் எழுத்துகளில் ஒன்றான
"ந" என்னும் எழுத்தையும்,அதன்
தத்துவத்தையும் விளக்குவதாக
அமைகின்றது.
இச்சக்கரத்தினின்று ஆறுமுக்கிய நாடிகள்
வெளிக் கிளம்புகின்றன. அவை தாமரையின்
ஆறு இதழ்கள் போல் உருவகப் படுத்தி
இருக்கின்றனர். ஒவ்வொரு நாடியின்
அசைவினால் ஏற்படும் சப்தங்கள் "ஸ, ஹ, ம்,
ய, ர, ல" என்ற எழுத்துக்களால்
குறிக்கப்படுகின்றன. இதன் மையத்தில்
வளைந்த பிறைச் சந்திரன் ஒன்றும் குறிக்கப்
படுகிறது.
அகத்தியர் தனது பாடலில் விவரித்திருக்கும்
சுவாதிஷ்டான சக்கரத்தின் மாதிரி படம் இது.
சுவாதிஷ்டானத்தின் அதிதேவன் பிரம்ம
தேவர். அதிதேவதை ராகிணி/சாகிணி. பஞ்ச
பூதங்களில் ஒன்றான நீர் இதன் மூலக் கூறாக
கூறப்பட்டிருக்கிறது. சுவாதிஷ்டானமானது
நமது பிறப்பு உறுப்புகள், கருப்பை, குடல்
ஆகிய உறுப்புகளுக்கு தொடர்புடையதாம்.
சுவாதிஷ்டானத்திற்கான மூல மந்திரம் “வம்”
என்பதாகும். சுவாதிஷ்டானத்தை மனதில்
இருத்தி மூலமந்திரத்தை உருவேற்றி வர
குண்டலினி இந்த மையத்தை அடையும். இது
விடாத தொடர் முயற்சி மற்றும்
பயிற்சியினால் மட்டுமே சாத்தியமாகும்.
சித்தர்கள் இந்த சக்கரங்கள் ஒவ்வொன்றையும்
ஆணின் அம்சமாகவே கூறியிருக்கின்றனர்.
குண்டலினி சக்தியை பெண் அம்சமாக
அதாவது வாலையின் அம்சமாய்
உருவகிக்ன்றனர். இந்த சக்கரத்தின் வழியே
குண்டலினி சக்தி பாயும் போது அவை
பூரணத்துவம் அடைந்து மலர்வதே
சித்தியடைதல் எனப் படுகிறது.
இந்த சக்கரம் மலர்வதால் நமது சுய
கட்டுப்பாட்டின் தீவிரம் தூண்டப் பட்டு
விழிப்புணர்வு நிலை மிளிரும். நமது
எண்ணம், செயல், சிந்தனை சார்ந்த
விஷயங்களின் மீதான மேம்பட்ட
பிடிப்புணர்வுக்கு இந்த சக்கரம் தூண்டப்
படுவது அவசியமாகிறது.
குண்டலினி - மணிபூரகச் சக்கரம்.
---------------------------------------------------
மூன்றாவது சக்தி ஆதார மையமான
மணிப்பூரக சக்கரம் பற்றி இன்று பார்ப்போம்.
தாயின் வயிற்றில் இருந்து பிறந்த உடன்
நம்முடைய உடலில் ஒரு முடிச்சு இடப்
படுகிறது. அது தொப்புள் கொடியாகும்.
இந்த உடல் உருவாகி, உயிராகத் தேவையான
பிராணன் இந்த கொடியின் வழியேதான்
நமக்குள் அடைக்கப் படுகிறது என சித்தர்
பெருமக்கள் கூறுகின்றனர். இவ்வாறு
அடைக்கப் பட்ட பிராணன் தொப்புளைச் சுற்றி
குடி கொண்டிருப்பதாக குறிப்பிடுகின்றனர்.
இந்த சக்தி மையத்தையே நாம் மணிப்பூரகம்
என்கிறோம். இது சுழிமுனை நாடியில்
அமைந்திருக்கிறது. இது நமது வயிறு,
சிறுகுடல், மண்ணீரல், கல்லீரல் போன்ற
உறுப்புகளுடன் தொடர்புடையதாக கூறப்
படுகிறது. இதன் மூலக்கூறு நெருப்பு
ஆகும். மணிப்பூரகத்தில் தகித்துக்
கொண்டிருக்கும் இந்த நெருப்பு மங்கி
அணையும் போதுதான் நம் உடல் நோய்வாய்ப்
பட்டு பலவீனம் அடைந்து பின்னர் உயிர்
பிரிவதாகவும் ஒரு கருத்தாக்கம்
கூறப்பட்டிருக்கிறது.
இந்த சக்கரத்திலிருந்து தாமரை இதழ் போன்ற
பத்து யோக நாடிகள் கிளம்புகின்றன. இதன்
அசைவுகளால் ஏற்படும் சப்தங்களை டட,
ணத, தத, தந, பப என்ற எழுத்துக்களால்
குறிப்பிடுகின்றனர். மணிப்பூரகத்தின்
அதிதேவன் விஷ்ணு, அதிதேவதை லக்குமி/
லாகிணி. இதற்கான மூல மந்திரம் “ரம்”
அகத்தியர் தனது பாடலில் விவரித்திருக்கும்
மணிபூரகச் சக்கரத்தின் மாதிரி படம் இது.
மணிப்பூரக சக்கரத்தின் நடுவே முக்கோண
வடிவம் ஒன்று உள்ளது. இது நெருப்பினை
அடையாளப் படுத்துகிறது. இந்த
சக்கரமானது “சிவயநம” என்னும்
எழுத்துக்களில் ஒன்றான “ம்” என்பதன்
தத்துவத்தை விளக்குவதாக
அமைந்திருக்கிறது.
மணிப்பூரகத்தை மனதில் இருத்தி, இதன்
மூல மந்திரத்தினை உருவேற்ற
சுவாதிஷ்டானத்திலிருந்து
குண்டலினியானது எழும்பி மணிப்பூரகத்தை
வந்தடையுமாம். இது மிகக் கடுமையான
பயிற்சி மற்றும் முயற்சியினால் மட்டுமே
சாத்தியமாகும்.
முறையான பயிற்சி மற்றும் அனுபவம்
வாய்ந்த குருவின் வழிகாட்டுதல்
இல்லையெனில் இந்த நிலையை தாண்டுவது
மிகக் கடினம். ஏனெனில் முறையற்ற பயிற்சி
உடலில் தேவையற்ற பக்க விளைவுகளை
உருவாக்கிடும். இதை என்னுடைய சொந்த
அனுபவத்திலும் உணர்ந்திருக்கிறேன். எனவே
தக்க வழிகாட்டுதலுடன் பயில
வேண்டுகிறேன். இதனை ஒரு எச்சரிக்கையாக
எடுத்துக் கொண்டாலும் சரிதான்.
முறையாக பயிற்சி செய்து
சுவாதிஷ்டானத்தில் மலர்ந்திருக்கும்
குண்டலினி மணிப்பூரகத்தை அடைந்தால்,
நமது உயிர் சக்தி தூண்டப் பட்டு உடலின்
உறுதி மற்றும் உடல் நலம் மேம்படும்.
இத்தகைய சக்கரம் தூண்டப் பட்டவர்கள்
கடுமையான உழைப்புக்கும்
அஞ்சாதவர்களாய் மாறிவிடுவர்.
குண்டலினி - அனாகதம்.
---------------------------------------
நமது உடலில் இருக்கும் நான்காவது ஆதார
சக்கரமான அனாகதம் பற்றி இன்று பார்ப்போம்.
அநாகதம் என்றால் உருவமற்ற அல்லது
உருவகிக்க இயலாத ஒலி என்பதாகும்.
இந்த ஆதார மையமானது நமது கழுத்திற்கு
கீழே இதயத்திற்கும், நுரையீரலுக்கும்
நடுவில் சுழிமுனை நாடியில்
அமைந்திருக்கிறது.
இதனை அகத்தியர்
பின்வருமாறு விளக்குகிறார்.
பாரப்பா பூரகத்தின் மேலேகேளு
பாடுகிறோ மெட்டங்குலந்தா
னனாகததின்வீடு
தேர்ந்தயிதழ் பன்னிரெண்டாய் சுற்றிநிக்கும்
ஏரப்பா தேயுவது யிருப்பிடமாய் நிற்க்கும்
பிருப்பிடத்தில் சிகாரமென்ற எழுத்தாமே
எழுத்தான பூதமதின் பீஜங் கேளு
இயம்புவேன் யமதுவும் மிடமேயாகும்
செத்தான அவ்வெழுத்தில்
ருத்ரன்காகினிதானே.
-அகத்தியர்.
இந்த அனாகத சக்கரம் இதயத்தோடு
தொடர்புடையதாக கூறப் படுகிறது. இதன்
மூலக்கூறு காற்று. அதிதேவன் ருத்ரன்,
அதிதேவதை காகினி. இதன் மூல மந்திரம்
“யம்” என்பதாகும். இந்த சக்கரமானது
பஞ்சாட்சர எழுத்துக்களான "சிவயநம"
என்னும் எழுத்துகளில் ஒன்றான "சி" என்னும்
எழுத்தையும் அதன் தத்துவத்தையும்
விளக்குவதாக அமைகின்றது.
அகத்தியர் தனது பாடலில் விவரித்திருக்கும்
அனாகதச் சக்கரத்தின் மாதிரி படம் இது.
இந்த சக்கரத்தில் இருந்து பன்னிரெண்டு யோக
நாடிகள் தாமரை இதழ் போல வெளிக்
கிளம்புகின்றன. இவற்றின் அசைவுகளால்
உண்டாகும் சப்தங்களை சித்தர் பெருமக்கள்
பின் வரும் எழுத்துக்களால் குறிக்கின்றனர்.
அவை சங, கக, கக, டட, ஞஜ, ஜச என்பதாகும்.
சக்கரத்தின் மையத்தில் சப்த பிரம்மத்தின்
நாதமான, அனாகத சப்தம் கேட்கும்.
அனாகத சக்கர இடத்தை மனதில் இருத்தி
மூல மந்திரத்தை தொடர்ந்து உருவேற்றி வர
மணிப்புரக சக்கரத்திலிருந்து குண்டலினி
எழும்பி, அனாகதம் வந்தடையும். இந்த சித்தி
சில நாட்களிலும் வாய்க்கும், சமயங்களில்
சில வருடங்கள் கூட ஆகலாம். இது முழுக்க
சாதகனின் பொறுமை மற்றும் கவனக்
குவிப்பை பொறுத்தது.
மூலாதார சக்கரத்தில் இருந்து எழுப்பப் பட்ட
குண்டலினியானது அனாகத சக்கரத்தை
வந்தடையும் போது அதற்கு “அக்கினி
குண்டலினி” என்று பெயராகிறது. இப்படி
அனாகத சக்கரம் மலர்ந்த நிலையில்,
சாதகனின் உள்ளத்தில் கருணை, அன்பு,
இரக்கம் போன்ற சாத்வீக குணங்கள்
மேம்படும். படைப்பாற்றலின் ரகசியமும்
புரியவரும்.
குண்டலினி - விசுத்தி.
--------------------------------
மூலாதாரத்திலிருந்து ஐந்தாவது சக்கரமான
விசுத்தி பற்றி இன்று பார்ப்போம்.
இதைப் பற்றி அகத்தியர் பின் வருமாறு விளக்குகிறார்.
ஆச்சப்பா வனாகததி னொடுக்கஞ்சொன்னோம்
அறையுகிறேன் விசுத்தியி னடவைக்கேளு
மாச்சப்பா வதற்க்குமேல் பன்னிரெண்டங்குலம்
பாச்சப்பா பதினாறு யிதழ்தா னாகும்
பாலகனே அட்சரந்தான் வகாரமாகும்
வதுநடுவில் சதாசிவனும் சாகினியுமாமே.
- அகத்தியர்.
இந்த சக்தி ஆதார மையமானது நமது
தொண்டையின் அடிப்பாகத்தில் சுழுமுனை
நாடியில் அமைந்து இருப்பதாக
குறிப்பிடுகின்றனர். நமது குரல்வளை,
மூச்சுக் குழாய், தையராய்டு சுரப்பிகள்,
நுரையீரல், கைகள் போன்ற உறுப்புகளுடன்
விசுத்தி சக்கரம் தொடர்புடையதாக
குறிப்பிடப் படுகிறது.
பஞ்சாட்சர எழுத்துக்களான "சிவயநம"
என்னும் எழுத்துகளில் ஒன்றான "வ" என்னும்
எழுத்தையும், அதன் தத்துவத்தையும்
விசுத்தி சக்கரம் விளக்குவதாக அமைகின்றது.
இச்சக்கரத்தின் அதிதேவன் சதாசிவன், அதி
தேவதை சாகினி. பஞ்ச பூதங்களில் ஒன்றான
ஆகாசம் இதன் மூலக்கூறு. இதன் மூல
மந்திரம் “ஹம்” எனப்படுகிறது.
இந்த சக்கரத்திலிருந்து தாமரை இதழ் போன்ற
பதினாறு யோக நாடிகள் கிளம்புகின்றன.
அவற்றின் அசைவுகளால் ஏற்படும்
சப்தங்களை லுரூ, ருஊ, வஈ, இஆ, அஅ,
அம்ஔ, ஓஐ, ஏலூ என்ற எழுத்துக்களால்
குறிக்கப்படுகின்றன. இந்த தாமரை இதழ்களின்
எண்ணிக்கையில் ஒரு சூட்சுமம் அடங்கி
இருக்கிறது. இந்த தொடரின் முடிவில் அது
என்ன என்பதை பகிர்ந்து கொள்கிறேன்.
அகத்தியர் தனது பாடலில் விவரித்திருக்கும்
விசுத்திச் சக்கரத்தின் மாதிரி படம் இது.
இந்த சக்கர இடத்தை மனதில் நிறுத்தி, மூல
மந்திரத்தினை உருவேற்றி வர அனாகத
சக்கரத்தில் நிலை கொண்டிருக்கும் அக்கினி
குண்டலினியானது மேலெழும்பி விசுத்தி
சக்கரம் வந்தடையும். இந்த தியானத்தினை
“ஆகாச தாரணை” என்கின்றனர் சித்தர்
பெருமக்கள்.
இந்த சக்கரம் மலர்வதன் மூலம் தீமையை
உருவாக்கும் அல்லது விளைவிக்கும்
எண்ணங்கள், உணர்வுகள் எல்லாம் சாதகனை
விட்டு நீங்கிடும். இதனால் எதனையும்
விருப்பு வெறுப்போ அல்லது பற்றுதலோ
இல்லாது சாட்சி நிலையில் இருந்து கவனிக்க
முடியும். நான் என்கிற அகந்தை அழிந்து
அன்பும், கருணையும் மிளிர்ந்தவனாகிடுவான்
என்கின்றனர்.
இதுவரை நாம் பார்த்த இந்த ஐந்து
சக்கரங்களும் ஆகாச தத்துவ ஞானம் என்ற
வகையில் அடங்கும். இதற்குமேல் வரும்
மற்ற இரண்டு சக்கரங்களும் மனஸ தத்துவ
வகையை சார்ந்தவை.
குண்டலினி - ஆக்ஞா.
----------------------------------
மூலாதாரத்திலிருந்து ஆறாவது சக்தி ஆதார
மையமாய் குறிக்கப்படும் ஆக்ஞா சக்கரம்
பற்றி இன்று பார்ப்போம்.
இதனை அகத்தியர்
பின்வருமாறு விளக்குகிறார்.
ஆள்வாயே யாதாரஞ் சொச்சங்கேளு
அருளினோம் விசுத்தி யாக்கினையைகேளு
பாள்வாயே இதற்க்குமேல்
பதினாறங்குலந்தான்
பாலகனே கண்டமார் புருவமாகும்
மாள்வாயே மளவாகி யளவாக்லோங்கி
மகத்தான யிரண்டிதளாய் பிரிந்தே நிற்கும்
யேள்வாயே வட்சரந்தான் னிரண்டதாகும்
இதனடுவில் யகார மாக்கினை வீடாமே.
- அகத்தியர்.
இந்த சக்கரம் நமது புருவ மத்திக்கு நேராக
மூளையில் அமைந்திருப்பதாக குறிப்பிடப்
படுகிறது. இன்னும் சரியாக சொல்வதெனில்
நமது நெற்றியில் உள்ள பள்ள முடிச்சுக்கு
இனையாக இருக்கிறது. இதற்குத் 'திரிகூடம்"
என்றும் பெயர். இந்த ஆக்ஞா சக்கரமும் மற்ற
சக்கரங்களைப் போல சுழுமுனை நாடியில்
அமைந்துள்ளது.
பஞ்சாட்சர எழுத்துக்களான "சிவயநம"
என்னும் எழுத்துகளில் ஒன்றான "ய" என்னும்
எழுத்தையும் அதன் தத்துவத்தையும்
விளக்குவதாக இது அமைகின்றது. இதன்
மூலக்கூறு நெருப்பு. கண்கள், நெற்றி
போன்றவை தொடர்புடைய உறுப்புகளாகும்.
அக்ஞா சக்கரத்தில் இரண்டு தாமரை
இதழ்களை போல் இருபக்கமும் எதிரெதிரே
இரண்டு யோக நாடிகள் உள்ளன. இவற்றை
சூரிய சந்திர அம்சமாக உருவகம்
செய்திருக்கின்றனர். இதன் அசைவுகளால்
ஏற்படும் சப்தங்களை ஹ, ள என்ற
எழுத்துக்களால் குறிக்கப்படுகின்றன.
அகத்தியர் தனது பாடலில் விவரித்திருக்கும்
ஆக்ஞா சக்கரத்தின் மாதிரி படம் இது.
இந்த சக்கரத்தின் அதிதேவன் பரமசிவன், அதி
தேவதை வாகினி. மூல மந்திரம் "ஓம்".
அக்ஞா சக்கர இடத்தை மனதில் நிறுத்தி, மூல
மந்திரத்தை உருவேற்றி வர விசுத்தி
சக்கரத்தில் இருக்கும் குண்டலினியானது
மேலேறி அக்ஞா சக்கரத்தை வந்தடையும்.
ஆக்ஞா சக்கரம் மலர்வதையே நெற்றி கண்
திறப்பதாக பொதுவில் குறிப்பிடுகின்றனர்.
இத்தகைய மலர்ச்சி நிலையில் சாதகனின்
கவனக்குவிப்பு, விழிப்புணர்வு,
நினைவாற்றல் போன்றவை பல மடங்கு
அதிகரிக்கும். வாழ்வின் ஞானத்தை எல்லாம்
தன்னகத்தே ஈர்த்துக் கொண்ட உயரிய நிலை
இது.
குண்டலினி - துரியம்.
----------------------------------
மூலாதாரத்தில் துவங்குகிற குண்டலினியின்
பயணத்தின் உச்ச நிலையான துரியம் பற்றி
இன்று பார்ப்போம். இதற்கு சகஸ்ரதளம்
என்கிற மற்றொரு பெயரும் உண்டு.
மூலாதாரத்தில் இருந்து விழித்தெழுந்த
குண்டலினி அனாகத சக்கரத்தை அடையும்
போது அதனை அக்னி குண்டலினி என்றும்,
அனாகதத்தில் இருந்து எழுந்து மேலேறி
ஆக்ஞா சக்கரத்தை மலர்த்திய நிலையில்
அதனை சூரிய குண்டலினி என்றும், ஆக்ஞா
சக்கரத்தை கடந்து துரியத்தை நோக்கி
பயணிக்கும் போது அதனை சந்திர
குண்டலினி என்றும், துரியம் மலர்ந்த
நிலையில் அதனை துரிய குண்டலினி
என்றும் அழைக்கின்றனர்.
துரியம் பற்றி போகர் பின் வருமாறு
விளக்குகிறார்.
தானென்ற ஆக்ஞையை தாண்டி அப்பால்
தனிததோர் எட்டுவிரல் மேலே கேளு
கோனான குருபத்ந்தான் கூடிப்பாரு
குறிப்பான இதழ்தான் ஓர்ஆயியிரதெட்டு
ஆசான நடுமையம் ஐங்கோணமாகும்
அகாரமொடு உகாரமொடு மகாரமாகும்
நானான நாதமொடு விந்து ஐந்தும்
நலத்தஐங் கோணத்தில் நிற்கும்பாரே .
- போகர்.
ஆக்ஞா சக்கரத்தில் இருந்து எட்டு விரற்கடை
மேலே நமது தலையின் உச்சியில் இந்த சக்தி
ஆதார மையம் அமைந்திருக்கிறது. நமது
மூளை இதற்கு தொடர்பான உறுப்பாக
கூறப்பட்டிருக்கிறது.இந்த சக்கரமானது
ஆயிரம் இதழ்களைக் கொண்ட தாமரை மலரை
போன்றது என்கின்றனர்.அதாவது ஆயிரம்
யோக நாடிகள் இந்த சக்கரத்தில் இருந்து
வெளிக் கிளம்புகின்றன.
போகர் தனது பாடலில் விவரித்திருக்கும்
துரிய சக்கரத்தின் மாதிரி படம் இது.
ஆக்ஞா சக்கரத்தில் இருந்து துரிய நிலைக்கு
குண்டலினியை எழுப்புவது என்பது
குண்டலினி யோகத்தின் மிக உயரிய
செயல்பாடு. இதற்கென பிரத்யேக பயிற்சிகள்
கூறப் பட்டிருக்கின்றன. அவ்வாறு உயர்த்தப்
பட்ட சந்திர குண்டலினி மலர்த்திய
துரியசக்கரம் தரும் அனுபவத்தை நம் போன்ற
சாமான்யர்களின் வார்த்தைகளால் விவரிக்க
இயலாது. பரவச நிலை என்பதே நமது ஆகக்
கூடிய வ்ருணனையாக இருக்கும்.
கவனத்தை குவித்து, அந்த கவனத்தையே
கவனிக்கிற பயிற்சியின் உச்சத்தில் அந்த
கவனமே கரைந்து போய்விட்டால்.....
சித்தர்களோ இதனை நிலையற்ற நிலை
என்கின்றனர். அதாவது நம்முடைய விழிப்பு
நிலை, கனவு நிலை, முழுமை நிலை என்கிற
மூன்றும் ஒன்றில் ஒன்றாய் குவிந்து,
கரைந்து போகிற நான்காவது பரவச நிலை.
இந்த நிலையில் தானே தேடுகிறவனாகவும்,
தானே தேடலாகவும், தானே தேடு
பொருளாகவும் இருப்பதையே துரிய நிலை
அல்லது சமாதி நிலையாக சித்தர் பெருமக்கள்
குறிப்பிடுகின்றனர்.
ஔவையாரும் கூட இந்த அனுபவத்தை
இப்படி கூறுகிறார்....
சொற்பதம் கடந்த துரியமெய்ஞ் ஞான
அற்புதம் நின்ற கற்பகக் களிறே!
குண்டலினி.... நாடிகளின் சூட்சுமம்!!
---------------------------------------------------------
குண்டலினி தொடரின் நெடுகே ஒவ்வொரு
சக்தி ஆதார சக்கரங்களில் இருந்து தாமரை
இதழைப் போல வெளிக் கிளம்பும் நாடிகளைப்
பற்றி பார்த்தோம்.
இதன் பின்னே இருக்கும் சூட்சுமத்தை
தொடரின் இறுதியில் பகிர்வதாக
கூறியிருந்தேன். தொடரின் போக்கில் இந்த
குறிப்பை அவதானிக்க தவறி விட்டேன்.
நிறைய நண்பர்கள் இதைக் குறிப்பிட்டு
மின்னஞ்சல் அனுப்பி இருந்தனர்.
சுட்டிக் காட்டியமைக்கு நன்றி....
குண்டலினி யோகத்தின் போது
மூலாதாரத்தில் நான்கு இதழ்களும்,
சுவாதிஷ்டானத்தில் ஆறு இதழ்களும்;
மணிபூரகத்தில் பத்து இதழ்களும்,
அநாகதத்தில் பன்னிரெண்டு இதழ்களும்,
விசுத்தியில் பதினாறு இதழ்களும்,
ஆக்ஞையில் இரண்டு இதழ்களும் வெளிக்
கிளம்புவதைப் பார்த்தோம். இந்த நாடிகள்
அதிரும் போது ஒலி உருவாவதையும்
பார்த்தோம்.
சித்தரியலில் பஞ்சாக்கர எழுத்துக்கள் என்பது
மிக நுட்பமானது, சூட்சுமம் நிறைந்ததும்
கூட. பஞ்சாக்கரம் என்பது ஐம்பத்தியோரு
தமிழ் எழுத்துக்களையே குறிக்கிறது.
”சிதம்பர சக்கரம்” எனப்படும் திருவம்பலச்
சக்கரத்தின் உயிர் நாடியாகவும் இந்த
எழுத்துக்களே விளங்குகிறது.
அகத்தியர் துவங்கி திருமூலர், பட்டினத்தார்,
சிவவாக்கியார், கோரக்கர் போன்ற பல சித்தர்
பெருமக்கள் இந்த ஐம்பத்தி ஒன்று
எழுத்த்துக்களின் மகத்துவத்தை
பாடியுள்ளனர்.
திருமூலர் தனது திருமந்திர மாலை என்னும்
நூலில் பின்வருமாறு குறிப்பிடுகிறார்.
"பெறுதியில் அம்முதல் பேசும்க்ஷவ் வீறாய்
அறிவதெழுத்தைம்பத் தொன்றுமங் கானதே"
- திருமூலர்.
மேலும் திருமூலரே தனது திருமந்திரம்
என்னும் நூலிலும் பஞ்சாக்கரம் பற்றி
இவ்வாறு குறிப்பிடுகிறார்.
அடையும் மகாரத்தில் அந்தமாம் க்ஷவ்வும்
அடைவின் எழுத்துஐம் பத்தொன்றும்
அமர்ந்ததே.
- திருமூலர்.
அருணகிரி நாதரும் தனது திருப்புகழில்
பஞ்சாக்கரத்தை இவ்வாறு குறிப்பிடுகிறார்.
"அகர முதலென உரைசெய்
ஐம்பத்தோரட்சரமும்"
-அருணகிரிநாதர்.
இப்படி இன்னும் எத்தனையோ சித்தர்களின்
பாடல்களை பஞ்சாக்கரத்திற்கு எடுத்துக்
காட்டாய்ச் சொல்லலாம். இவற்றின் படி, இந்த
ஐம்பத்தி ஒரு எழுத்துக்களையும் மிக
முக்கியமானதாகவும், உயர்
தனித்துவமானவை என்று போற்றியுள்ளமை
குறிப்பிடத்தக்கது.
இப்போது மீண்டும் குண்டலினிக்கு
வருவோம். குண்டலினி யோகத்தில் ஏழு
முக்கிய ஆதாரங்களில் இருந்து
வெளிக்கிளம்பும் நாடிகளின் அதிர்வுகளால்
ஏற்படும் ஒலிகளை தமிழ் எழுத்துக்களாக
குறித்திருப்பது உங்களுக்கு இப்போது
நினைவுக்கு வரலாம்.
நண்பர்களே, குண்டலினி யோகத்தில்
ஒவ்வொரு ஆதார மையமும் சித்திக்கும்
போது உருவாகும் அதிர்வுகள் எழுப்பும்
ஓசையைத்தான் சித்தர்கள் பஞ்சாக்கர
எழுத்துக்கள் என குறிப்பிட்டிருக்கின்றனர்.
ஆறு ஆதார சக்கரத்தில் இருந்து எழும்பும்
ஐம்பது நாடிகளின் சப்பதங்கள் அய்ம்பது
எழுத்துக்களாகவும், துரிய நிலை சித்திக்கும்
போது உருவாகும் உருவாகும்
பேசாமொழியான ஓரெழுத்தும் சேர
ஐம்பத்தியோரு எழுத்துக்கள் ஆகின்றன. இந்த
பேசா மொழியைப் பற்றி முந்தைய பதிவு
ஒன்றில் பகிர்ந்திருக்கிறேன். இதனை
நாயோட்டு மந்திரம் என்றும் அழைப்பர்.
வேறெந்த மொழிக்கும் இல்லாத சிறப்பு இது.
இதனை மனதில் கொண்டே நம் பெரியவர்கள்
தமிழை அழுத்தம் திருத்தமாய் உச்சரித்து
பேசினாலே உடல்நலம், ஆன்மநலம் சிறக்கும்
என கூறியிருக்கின்றனர். நாம்தான் அதனை
மனதில் கொள்ளாமல் பிறமொழி மோகத்தில்
உழன்று கொண்டிருக்கிறோம்.
குண்டலினி என்கிற மகா சமுத்திரத்தில் நான்
உணர்ந்த ஒன்றிரண்டு துளிகளை மட்டுமே
இதுவரை உங்களோடு
பகிர்ந்திருக்கிறேன்.இந்த தொடரில்
பிழையேதும் இருப்பின் அதைப் பொறுத்து
என்னை திருத்திட வேண்டுகிறேன்.
குண்டலினி பற்றி ஒருவர் முழுமையாக
அறியவும், புரியவும் பல காலம் பிடிக்கும்.
தொடர்ச்சியான தேடுதல் மட்டுமே நம்மை
சரியான இடத்திற்கு கொண்டு சேர்க்கும்.
எதிர்காலத்தில் குருவருள்
அனுமதிக்குமானால் இந்த தொடரின்
இரண்டாம் பகுதியாக இதனுள்
உறைந்திருக்கும் நுட்பங்களையும் அதனை
கையாளும் வகைகளையும் பகிர்ந்திட
முயற்சிக்கிறேன். இனிவரும் நாட்களில் இந்த
தொடரினை மின்னூலாக்கி இங்கே பொதுவில்
பகிர்ந்து கொள்கிறேன்.
எல்லாம் வல்ல குருநாதரின் அருளினாலே
இது சாத்தியமாயிற்று. அவரின் பாத
கமலத்தில் இந்த முயற்சியை சமர்ப்பித்து
பாகத்தை நிறைவு செய்கிறேன.

Friday 26 June 2015


விரலை அழுத்தினால் எல்லா நோயும் போச்சு! - இது எப்படி ஏற்படுகிறது?
நம் உடலில், ஏதேனும் ஒரு இடத்தில் வலி ஏற்பட்டால், அப்பகுதியை நம் கையால் அழுத்திவிட்டுக் கொள்கிறோம். அப்படி செய்தால், வலி குறைகிறது. இது எப்படி ஏற்படுகிறது? நம் உடல் முழுவதும் அக்குப்பிரஷர் புள்ளிகள் உள்ளன. நாம் வலியுள்ள பகுதியில் அழுத்தம் கொடுக்கும் போது, அப்பகுதியில் உள்ள அக்குப்பிரஷர் புள்ளிகள் தூண்டப்படுகின்றன. அதனால் வலி குறைகிறது. உடலில் உள்ள சில குறிப்பிட்ட புள்ளிகளில் சில முறைகள் அழுத்தம் கொடுத்து தளர்த்துவதால், நம் நோய்கள் தீருகின்றன.
நோய்கள் வராமல் தடுக்கப்படுகின்றன. சில நோய்களுக்கு அக்குப்பிரஷர் முறையில் தீர்வு காணும் எளிய முறைகளை காணலாம்.
தலைவலி :
நமக்கு பிடிக்காத ஒரு வேலையை பிறர் நம்மை செய்ய சொல்லும் போது, “தலை வலிக்கிறது’ என்று கூறி தப்பித்து கொள்கிறோம். ஆனால், உண்மையில் தலைவலி வந்தால் என்ன செய்கிறோம்? வலி நிவாரணக் களிம்புகள் தடவுகிறோம். அவை கொடுக்கும் வெப்பத்தினால் தலைவலி குறைவது போல் உணர்கிறோம் அல்லது வலி நிவாரண மாத்திரைகள் எடுத்து கொள்கிறோம். அடிக்கடி மாத்திரைகள் எடுத்து கொள்வதால், அசிடிட்டியால் துன்பப்படுகிறோம். மருந்தில்லாமல் தலைவலியை எப்படி போக்குவது? நம் உடலின் அனைத்து உறுப்புகளுக்குமான பிரதிபலிப்பு புள்ளிகள், நம் உள்ளங்கைகளில் உள்ளன.
படத்தில் காட்டியது போல், உள்ளங்கை உடலை குறிக்கும். கட்டை விரல் தலையை குறிக்கும். கட்டை விரலில் நுனியில் உள்ள பக்கவாட்டுப் பகுதி நெற்றிப் பொட்டை குறிக்கும்.படத்தில் காட்டப்பட்டுள்ள கட்டை விரலின் நகத்தினடியில் உள்ள இருபுள்ளிகளை மற்றொரு கையின் கட்டை விரல், ஆள்காட்டி விரல் இவற்றினால் அழுத்தம் கொடுக்க வேண்டும். 14 முறை அழுத்தம் கொடுத்து தளர்த்த வேண்டும். அழுத்தம் கொடுக்கும் போது, மூச்சை உள்ளே இழுக்கவும், தளர்த்தும் போது மூச்சை வெளியே விடவும், 14 முறை முடிப்பதற்கு முன்பே தலைவலி மறைந்துவிட்டால் அத்துடன் நிறுத்தி விடலாம். வலி இன்னும் தொடர்ந்தால், மற்றொரு கை கட்டைவிரலில் 14 முறை அழுத்தம் கொடுக்கவும். அழுத்தம் கொடுத்து முடிப்பதற்குள் தலைவலி போயே போச்சு!
அலர்ஜி, சைனஸ், தும்மல், இருமல் :
ஒவ்வொரு விரல் நுனியிலும், சைனஸ் புள்ளிகள் உள்ளன. விரல்நுனிகளில் அழுத்தம் கொடுத்து தளர்த்தும் போது, அலர்ஜி, சைனஸ், தும்மல், இருமல் இவை வெகுவாக குறைக்கப்படுகின்றன. விரலின் முதல் கோடு வரை, மேலும், கீழுமாக 14 முறைகளும், பக்கவாட்டில் 14 முறைகளும் அழுத்தம் கொடுக்க வேண்டும்.10 விரல்களிலும் இவ்வாறு தினமும் இருமுறைகள் காலையிலும், மாலையிலும் செய்தால் அலர்ஜி, சைனஸ், தும்மல் இவை மறைகின்றன. மீண்டும் வராமல் தடுக்கப்படுகின்றன. ஆஸ்துமா தொல்லை கூட வெகுவாக குறைகிறது.
மலச்சிக்கல், அஜீரணம், அசிடிட்டி, வாயுத்தொல்லை, மூச்சுப்பிடிப்பு:
ஆள்காட்டி விரலையும், கட்டை விரலையும் நெருக்கமாக சேர்க்கும் போது, புறங்கையில் ஒரு கோடு தெரியும். அந்த கோடு முடியும் இடத்தில், ஆள்காட்டி விரல் எலும்பின் கடைசியில் எல்.ஐ.4 என்ற புள்ளி உள்ளது. மேற்கூறிய அனைத்து தொந்தரவுகளையும் நீக்க இப்புள்ளி உதவுகிறது.இப்புள்ளியில் 14 முறைகள் அழுத்தம் கொடுத்து தளர்த்த வேண்டும். (Press & Release) தசையின் மேல் இல்லாமல், எலும்பின் மீது அழுத்தம் கொடுக்க வேண்டாம். பாதிப்பு உள்ளவர்களுக்கு, இப்புள்ளியில் அழுத்தும் போது வலி தெரியும். இரு கைகளிலும் அழுத்தம் கொடுக்கலாம்.மாத்திரை இல்லாமல் மலச்சிக்கல் தீருகிறது. அசிடிட்டிக்கு, “ஆன்டாசிட்’ மருந்து தேவையில்லை. இப்புள்ளியில் அழுத்தம் கொடுக்கும் போது, அதிகமான வாயு வெளியேறுகிறது. மூச்சுப்பிடிப்பு, தசைப்பிடிப்புகளுக்கு, இப்புள்ளி உடனடி நிவாரணம் அளிக்கிறது.
மலச்சிக்கல் :
மலச்சிக்கல் என்பது பல சிக்கல்களை உண்டாக்கும். படத்தில் காட்டப்பட்டுள்ள முகவாயில் உள்ள CV24 என்ற புள்ளி மலச்சிக்கலை தீர்க்க பெரிதும் உதவுகிறது. LI4 என்ற புள்ளியை இரு கைகளிலும் அழுத்தம் கொடுத்த பின், இப்புள்ளியில் 14 முறைகள் அழுத்தம் கொடுத்தால், மலச்சிக்கலை எளிதாக தீர்க்கலாம். கழுத்து வலி : கணினியில் வேலை செய்வதால், கழுத்தில் உள்ள தசைகள் இறுக்கமடைந்து வலியை உண்டாக்குகின்றன. எளிய முறையில் இவ்வலியைப் போக்கலாம். கட்டை விரல் தலையை குறிக்கும். கட்டை விரலின் அடிப்பகுதி கழுத்தை குறிக்கும்.
படத்தில் காட்டப்பட்டுள்ள இப்பகுதியில் உள்ள இருபுள்ளிகளிலும், மற்றொரு கையின் இரு விரல்களினால், 14 முறைகள் அழுத்தம் கொடுக்க வேண்டும்.பின், கட்டை விரலை கடிகாரம் சுற்றும் திசையில், 14 முறையும், எதிர்திசையில், 14 முறையும் சுழற்ற வேண்டும். இரு கைகளிலும் இவ்வாறு செய்யும் போது, கழுத்திலுள்ள தசைகளின் இறுக்கம் வெகுவாக குறைகிறது. கழுத்து வலிக்கு உடனடி நிவாரணம் கிடைக்கிறது.
உயர் ரத்த அழுத்தம் :
உயர் ரத்த அழுத்தம் உள்ளவர்கள், வாழ்நாள் முழுவதும் மாத்திரை எடுத்துக் கொள்ள வேண்டியிருக்கும். அக்குப்பிரஷர் முறையில் கீழ்க்கண்ட புள்ளிகளில் தினமும் அழுத்தம் கொடுக்கும் போது, சிறிது, சிறிதாக மாத்திரையின் அளவை குறைத்து, கடைசியில் முழுவதுமாக நிறுத்தவும் முடியும். நம் கையில் சிறுவிரலின் நகத்திற்கு கீழே உட்புறமாக H9 என்ற புள்ளி உள்ளது. இது, இதய மெரிடியனின் காற்று சக்திப்புள்ளி. இப்புள்ளியில் அழுத்தம் கொடுக்கும் போது, காற்று சக்தி அதிகரித்து, ரத்தக் குழாய்கள் விரிவடைந்து, ரத்த அழுத்தம் குறைகிறது.தலை உச்சியில் GV20 என்ற புள்ளி உள்ளது.
காதுகளிலுருந்து தலைக்கு செல்லும் நேர்கோடும், மூக்கிலிருந்து தலைக்கு செல்லும் நேர்கோடும் சந்திக்கும் இடத்தில் இப்புள்ளி உள்ளது. இப்புள்ளியில் 14 முறைகள் அழுத்தம் கொடுக்கும் போது, டென்ஷன், மன அழுத்தம் இவை குறைவதால், ரத்த அழுத்தம் சீராகிறது.H9 , GV20 இப்புள்ளிகளில், 14 முறைகள் காலையிலும், மாலையிலும் இருவேளைகள் அழுத்தம் கொடுத்து வந்தால், உயர்ரத்த அழுத்தம் சீரடைகிறது.இதை தவிர காலில், பெருவிரல், இரண்டாவது விரல் இவற்றின் இடைவெளியிலிருந்து, மூன்று விரல் தூரத்தில் LIV3 என்ற புள்ளி உள்ளது. இப்புள்ளியில் 7 முறைகள் அழுத்தம் கொடுக்கும் போது, ரத்த அழுத்தம் சீராகிறது. இப்புள்ளியில் ஒரு நாளில் 7 முறைகள் மட்டுமே அழுத்தம் கொடுக்க வேண்டும். அதிக முறைகள் அழுத்தம் கொடுத்தால், ரத்த அழுத்தம் அதிகளவில் குறைய வாய்ப்புள்ளது

Thursday 11 June 2015

நெற்றியில் புருவமத்தியில் மூளையின் முன்புறமாக, பைனீயல் க்ளாண்ட் என்ற சுரப்பி அமைந்துள்ளது. இதை, யோக சாஸ்திரத்தில் ஆக்ஞா சக்ர ஸ்தானம் என குறிப்பிட்டுள்ளனர். மூன்றாவது கண், ஞானக்கண் என்றும் இதற்குப் பெயருண்டு. சிவபெருமானுக்கு ஆக்ஞா சக்கரமே நெற்றிக்கண்ணாக இருப்பதைக் காணலாம். திபெத்தில் லாமாக்கள் ஞானக்கண் திறப்பது என்றொரு சடங்கு செய்கின்றனர். இதன் சிறப்பை உணர்வதற்காகவே நெற்றியில் குங்குமம் இடுகிறோம். பெண்கள் மட்டுமின்றி, ஆண்களும் குங்குமம் வைக்க வேண்டும். உடல் முழுவதும் மின்காந்த சக்தி வெளிப்பட்டாலும், நெற்றியில் புருவமத்தியிலுள்ள நுண்ணிய பகுதியில் அதன் சக்தி அதிகமாக வெளிப்படுகிறது. இதன் காரணமாகத்தான், மனக்கஷ்டம் வந்தாலோ, ஏதாவது ஒன்றை தீவிரமாக சிந்தித்தாலோ அந்த இடம் உஷ்ணமடைந்து தலைகனம், தலைவலி போன்ற பிரச்னை உண்டாகிறது. இதை தவிர்த்து, குளிர்ச்சியை உண்டாக்கவே சந்தனம், குங்குமம் போன்றவற்றை நெற்றியில் இடுகிறோம். இதனால், உடல், மனோசக்தி வீணாகாமல் பாதுகாக்கப்படுகிறது. முகம் களையோடு பிரகாசமாகத் திகழ்கிறது. பொட்டு வைப்பது என்பது அலங்காரத்திற்காகவும், ஆன்மிக காரணத்திற்காகவும் மட்டுமல்ல... ஆரோக்கியத்திற்காகவும் நம்  பெரியவர்கள் இப்பழக்கத்தை ஏற்படுத்தினர்

Sunday 8 February 2015

எந்தவொரு சூழ்நிலையிலும் ஆனந்தமாக இருக்க
ஓஷோ சொல்லும் வழிமுறை :-
அந்தக் கிராமத்தின் ஓய்வு விடுதியில், ஒரு நாள் இரவு ஓஷோவும் மாநில அமைச்சர் ஒருவரும் அடுத்தடுத்த அறைகளில் தங்கி இருந்தனர். இரவு முழுவதும் முப்பது அல்லது நாற்பது நாய்கள் அந்த விடுதியைச் சுற்றி குரைத்துக் கொண்டே இருந்தன. அமைச்சரால் தூங்கவே முடியவில்லை.
அவர், அன்று காலை முழுவதும் பயணம் செய்திருந்தார்.மறுநாளும் அலைச்சல் இருக்கிறது. அதை நினைக்க நினைக்க அமைச்சருக்குக் கோபம் அதிகமானது. நாய்களோ வெறித் தனமாகக் குரைத்து, இரவின் அமைதியைக் கெடுத்தன. ஆனால், இத்தனைக்கும் மத்தியில் ஓஷோ அடுத்த அறையில் நிம்மதியாக உறங்கிக் கொண்டிருந்தார்.
ஓஷோவை எழுப்பிய அமைச்சர், ''என்ன மனிதர் நீங்கள்... இவ்வளவு சத்தத்துக்கு மத்தியில் உங்களால் எப்படி உறங்க முடிகிறது?'' என்று புலம்பினார்.
ஓஷோ, தனது வழக்கமான கிண்டலுடன் கூறினார்: ''அந்த நாய்கள், உங்களுக்கு ஆதரவாகவோ அல்லது எதிராகவோ இங்கு கூடவில்லை; கோஷமிடவில்லை! பாவம், அந்த நாய்களுக்கு... இங்கு ஒரு மந்திரி தங்கி இருப்பது தெரியாது. அவை, பத்திரிகை படிப்பதில்லை. அவற்றுக்கு அறிவும் கிடையாது. அந்த நாய்களுக்கும் உங்களுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை.
அவை, தங்களுக்கே உரிய குரைக்கும் வேலையைப் பார்க்கின்றன. நீங்கள், தூங்குகிற வேலையைப் பாருங்கள்!'' என்றார்.
''நாய்கள் இப்படி ஓயாமல் குரைத்தால், நான் எப்படி தூங்க முடியும்?'' என்றார் அமைச்சர்.
உடனே ஓஷோ, ''நீங்கள், அவை குரைப்பதை எதிர்த்துப் போராடுகிறீர்கள். அப்படிப் போராடாதீர்கள். பிரச்னை குரைப்பொலி அல்ல... உங்கள் எதிர்ப்பு உணர்வு. நீங்கள், சத்தத்துக்கு எதிராக இருக்கிறீர்கள்;இந்த நாய்கள் குரைப்பதை நிறுத்தினால்தான் தூங்க முடியும் என்று ஒரு நிபந்தனை ஏற்படுத்தி விட்டீர்கள். நாய்கள் உங்களது நிபந்தனையைக் கவனிக்கப் போவது இல்லை.
நீங்களும் உங்கள் நிபந்தனையை விலக்கப் போவது இல்லை. ஆனால், நிபந்தனையை விலக்கினால் மட்டுமே நிம்மதி பெற முடியும். நடைமுறைக்குச் சாத்தியமானதும் அதுதான்!
நாய்களின் குரைப்பை ஏற்றுக் கொள்ளுங்கள். இந்த இரவிலும் எவ்வளவு சக்தியுடன் அவை குரைக்கின்றன...பார்த்தீர்களா? ஏற்பு உணர்ச்சியுடன் கவனித்தால், குரைப்புச் சத்தமும் ஒருவகை மந்திரம்தான்!''என்றார் ஓஷோ.
'உதவாக்கரை யோசனை!' என்று மனதுக்குள் பழித்தபடி போனார் மந்திரி. ஆனால் காலையில், மிகுந்த மகிழ்ச்சியுடன் வந்து ஓஷோவைச் சந்தித்தார் அமைச்சர்!
''ஆச்சரியம்தான்! எனது எதிர்ப்பு உணர்ச்சியை விலக்கிக் கொண்டு, நாய்கள் குரைப்பதைக் கவனித்தேன். ஆழ்ந்து ரசிக்கவும் தொடங்கினேன். அப்படியே உறங்கிப் போனேன்'' என்றார் அமைச்சர்.
ஓஷோ நமக்குச் சொல்கிறார்: ''இதை, நீ ஞாபகத்தில் வைத்துக் கொள். உன்னைச் சுற்றி இருப்பவற்றால் நீ எரிச்சல் அடைந்தால், உன் முகத்தை உள்முகமாகத் திருப்பு. எரிச்சலுக்கான காரணம் நீயாகத்தான் இருப்பாய். உனது எதிர்பார்ப்பு அல்லது ஆசை வேறாக இருந்திருக்கும். அல்லது ஏதோ ஒரு நிபந்தனையை உனக்குள் நீ விதித்திருப்பாய். அதுதான் உனது எரிச்சலுக்குக் காரணம். உலகத்தை நமக்கேற்ப நிர்ப்பந்தப்படுத்த முடியாது. அதை எதிர்த்துப் போராடும்போது நீ வெறுப்படைகிறாய்'' என்கிறார்.
--- ஓஷோ --
ஓஷோ கதைகள்..........
மதவாதிகள் ,, போதனை செய்வோர் செய்யும் சதியை
ஓஷோ விளக்குகிறார் ஆழ்ந்து , கவனமாக படியுங்கள்
நாய் ஒன்று தன் இன நாய்களுக்கு போதனை செய்து வந்தது.
கடவுள் தன் வடிவில் நாயைப் படைத்தார் என்று அது சொல்வதுண்டு.
எல்லா நாய்களுக்கும் அதன் மீது ஒரு குருவுக்குள்ள மரியாதை உண்டு.
அந்த நாய் மற்ற நாய்களிடம் எப்போதும் குரைக்கக் கூடாது என்று போதனை செய்து வந்தது.
எந்த நாய் குரைப்பதைக் கண்டாலும்
அந்த இடத்திலேயே அது குரைப்பது ஒரு பயனற்ற செயல்
என்று போதிக்க ஆரம்பித்துவிடும்.
இந்த போதனை செய்பவர்களே இப்படித்தான்!
எது ஒன்றை தவிர்க்க முடியாதோ அதைத்தான் செய்யக்கூடாது என்று வலியுறுத்துவார்கள்.
மற்ற நாய்களும் குரைப்பதைத் தவிர்க்க முயற்சித்தும் அவற்றால் முடியவில்லை.
எனவே குற்ற உணர்வுடன் அவை ஒருநாள் ஒரு இடத்தில் கூடியபோது ஒரு நாய்
,''நமது குரு சொல்வது உண்மை.
குரைப்பது ஒரு தேவையற்ற செயல் அது நம் மரியாதையைக் குறைக்கிறது.
எனவே நாம் நாளை ஒரு நாள் எங்காவது ஒரு மூலையில் முடங்கிக் கிடந்தாவது நாளை முழுவதும் குரைக்காமல் இருப்போம்,
''என்று கூற அனைத்து நாய்களும் அதை ஆமோதித்தன.மறுநாள் சொன்னதுபோல நாய்கள் தங்களை கட்டுப்படுத்திக் கொண்டு குரைக்காமல் இருந்தன.
அப்போது அந்த குரு நாயானது வெளியே வந்தது.
அதற்கு ஒரே அதிசயம்.எங்குமே குரைப்பு சப்தம் கேட்கவேயில்லை.
அதற்கு தெரிந்து விட்டது,
தமது சொல்லுக்கு எல்லா நாய்களும் மதிப்புக் கொடுத்துள்ளனவென்று.
அதே சமயம் அதற்கு ஒரு பயமும் வந்துவிட்டது.
எல்லா நாய்களும் குரைக்கவில்லை என்றால் தனக்கு வேலை எதுவும் இருக்காதே,
யாருக்கும் ஆலோசனை கூற முடியாதே , தனக்கு மதிப்பு கிடைக்காதே என்ற அச்சம் ஏற்பட்டது.
அப்போது தனக்கே குரைக்கவேண்டும்போலத் தோன்றியது.
அருகில் நாய் எதுவும் இல்லாததால் தைரியமாக அது குரைத்தது.
அவ்வளவுதான்.
அடக்கிக் கொண்டிருந்த நாய்கள் அவ்வளவும் தங்களுக்குள் யாரோ கட்டுப் பாட்டை மீறி விட்டார்கள் என்ற தைரியத்தில்
எல்லாம் ஒன்று சேரக் குரைத்தன.
இப்போது குருவான நாய்க்கும் மகிழ்ச்சி,இனிமேல் எல்லோருக்கும் புத்திமதி சொல்லலாம்
நமக்கு மரியாதை கிடைக்கும் என்று.
இப்படி சமயவாதிகள் மனிதனுக்கு எதுவெல்லாம் இயல்பானதோ
அதை எல்லாம் உன்னை குற்றவுணர்வுடன் அதை
செய்யும்படி ஆக்கிவிட்டனர் .. காதல், காமம் , கோபம் ,
இன்னும் உன் இயல்பான தன்மைகளை எல்லாம்
இப்படி போதனை கொடுத்து , அவன் வாழ்வதற்கு ,
உன்னை உறிஞ்சி அவன் வாழ்வதற்கு
உன்னை , உன் சுயதன்மையை பலிகடா ஆக்கிவிட்டான் .
--- ஓஷோ --
உடலில் ஏற்படும் சூட்டை வெறும் 2 நிமிடத்தில் போக்கும் ரகசிய மற்றும் சக்தி வாய்ந்த எளிய வழி..
நண்பர்களே இந்த செய்தியை நீங்கள் படித்தது மட்டுமின்றி மற்ற (குழந்தை இல்லாதவர்கள், உஷ்ண உடம்பால் பாதிக்க பட்டவர்களும்) பயன் பெற இந்த செய்தியை பகிர்ந்து உதவுங்கள்.
தற்போது நிலவி வரும் பருவ நிலா மாற்றத்தால் நம்மில் பலருக்கு உடலில் அதிக உஷ்ணம்(வெப்பம்) ஏற்படுகிறது,
இது முக்கியமாக அதிக நேரம் வெளியில் பயணங்கள் மேற்கொள்வோருக்கும், அதிக நேரம் நாற்காலி, சோபா மீது உட்கார்ந்திருப்பதாலும் ஏற்படுகிறது, இதனால் நம் தலை முடி முதல் கால் வரை உள்ள அனைத்தும் ஆரோக்கியத்தை இழக்கிறது,
இதனால் ஏற்படும் நோய்கள் முக்கியமாக முகப்பரு, தோல் வியாதிகள், தலை முடி உதிர்தல், வாயிற்று வலி, உடல் எடை குறைதல் போன்ற எரிச்சலூட்டும் நிகழ்வுகள் நிகழ்கிறது, இதனை சரி செய்ய நம் சித்த பெருமைக்க அன்றைய காலகட்டத்திலேயே ஒரு எளிய மற்றும் ரகசியமான வழியை உங்களுக்காக கொடுக்கிறோம்.
தேவையான பொருள்கள் :
1.நல்லெண்ணெய்
2.பூண்டு
3.மிளகு
செய்முறை:
நல்லெண்ணையை ஒரு குழி கரண்டியில் தேவையான அளவு எடுத்து கொண்டு அதனை மிதமான சூட்டில் சூடு படுத்தவும், எண்ணெய் காய்ந்ததும் அதில் மிளகு மற்றும் தோல் உரிக்காத பூண்டை போட்டு சில நிமிடத்தில் சூடானதும் அடுப்பில் இருந்து இறக்கி, சூடு ஆறினதும் எண்ணையை காலின்(இரு கால்) பெருவிரல் நகத்தில் மட்டும் பூசி விட வேண்டும், 2 நிமிடங்கள் கழித்து உடனே காலை கழுவி விட வேண்டும், இதனை செய்யும் போதே உங்கள் உடம்பு குளிர்ச்சி அடைவதை உணர முடியும், 2 நிமிடத்திற்கு மேல் இதனை விரலில் வைத்திருக்க கூடாது, சளி ஜுரம் உள்ளவர்கள் இதனை முயற்சி செய்ய வேண்டாம், மிகுந்த மன அழுத்தம் , உஷ்ண உடம்பு உள்ளவர்கள் இதனை கட்டாயம் செய்து பயன்பெறுங்கள்.
இதன் வாசனை தெய்வீக தன்மை கொண்டதாக இருக்கும்.
அந்த காலத்தில் சித்தர்கள், குழந்தை இல்லாத ஆண்கள் தங்களிடம் குழந்தை வேண்டும் என்று வந்தால் மேல் குறிப்பிட்ட மருத்துவ முறையையே சொல்வார்களாம்.
ஏனெனில் இதனை செய்வதன் மூலம் ஆண்களின் விந்து விருத்தி அடைந்து மூன்று மாதத்தில் குழந்தை பிறக்குமாம், இதனை IT (18 வயதுக்கு மேல்) துறையில் வேலை செய்பவர்கள் தினமும் காலை குளிக்க போகும் முன் 1 நிமிடத்திற்கு எண்ணையை தடவினால் மன அழுத்தம் நீங்கும். மேலும் சிறியவர்களாக இருந்தால் வாரத்தில் இருமுறை இதனை செய்யலாம்.
நண்பர்களே இந்த செய்தியை நீங்கள் படித்தது மட்டுமின்றி மற்ற (குழந்தை இல்லாதவர்கள், உஷ்ண உடம்பால் பாதிக்க பட்டவர்களும்) பயன் பெற இந்த செய்தியை பகிர்ந்து மகிழுங்கள்.
சர்க்கரை என்பது ஒரு நோய் அல்ல! :-
+++++++++++++++++++++++++++++++
உண்மையில் சர்க்கரை என்பது ஒரு நோய் அல்ல.
ஆனால் எந்த நோய்க்கும் மூல காரணம் தெரியாத ஆங்கில மருத்துவம்
ஒவ்வொரு நோய்க்கும் ஏதோ ஒரு காரணத்தை முன்வைக்கிறது.
நாமும் சற்றும் சிந்திக்காமல் அதை அப்படியே ஏற்றுக்கொள்கிறோம்.
முதலில் சர்க்கரை என்பது நோய் அல்ல என்றால்
உடலில் ஏன் சர்க்கரை அதிகரிக்கிறது என்ற கேள்வி வரும்.
சர்க்கரை என்பது நாம் உண்ட உணவு நன்கு செரிமானம் ஆகி
அதில் இருந்து நமக்கு கிடைக்கும் எரிபொருள் ஆகும்.
இதனை குளுகோஸ் என்றும் சொல்கிறோம்
.இந்த குளுகோஸ் நாம் உண்ட உணவில் இருந்து நமக்கு கிடைத்தது என்றும், அதுதான் நமது உடலுக்கு சக்தியும் என்பதில் தெளிவாக இருப்போம்.
இவ்வாறு நாம் உண்ட உணவில் இருந்து கிடைத்த ,நமக்கு சக்தி கொடுக்கும் இந்த குளுக்கோஸை நமது உடலின் அனைத்து செல்களுக்கும் இரத்தம் மூலம் கொண்டு செல்லப்படுகிறது.
இப்படி எடுத்து செல்லப்பட்ட குளுக்கோஸ்
உடலின் தேவைக்கு போக மீதி இருந்தால்
அதனை கிளைகோஜன் ஆக மாற்றி கல்லீரல் சேமித்து வைத்துக்கொள்ளும்.
நன்றாக கவனியுங்கள்,
தசை,தசை நார் ஆகியவைளை பராமரிப்பதும் கல்லீரலின் பல வேலைகளில் ஒன்று. கல்லீரல் இந்த கிளைகோஜனை தனது பராமரிப்பில் இருக்கும் தசை மற்றும் தசை நார்களில் கொண்டு சேமிக்க்த்து வைக்கிறது. பின்பு எப்போதாவது உங்கள் உடலுக்கு தேவைப்படும் சமயத்தில் அந்த கிளைகொஜன் மீண்டும் சர்க்கரையாக மாற்றப்பட்டு உடலுக்கு பயன்படுத்தபடுகிறது.
இதில் அதிக சர்க்கரை உடலால் எப்படி பயன்படுத்தப்படுகிறது என பார்த்தோம். மேலும் பார்ப்போம்.
இங்கே ஆங்கில மருத்துவம் சொல்லும் சராசரி என்பது மிகவும் தவறானது.
அதன் அடிப்படையில் செல்வது என்பது உடலை பல பாதிப்புகளுக்கு ஆளாக்கிவிடும்.
அதைப்பற்றியும் நாம் இப்போது பார்ப்போம்
அதாவது இரத்ததில் சர்க்கரையின் அளவு இவ்வளவுதான் இருக்க வேண்டும் என்பது ஏன்?
என்ற கேள்வியை எழுப்பினால் அங்கே பதில் இருக்காது.
அவர்களுக்குத்தான் எந்த நோய்க்கும் காரணாம் தெரியாது,
அதை குணப்படுத்தவும் முடியாதே.
ஒரு மனிதரை போல் இன்னொருவர் இருப்பது என்பது நடக்காது.
உயரம், நிறம், உருவம், தன்மை,பருமன் என எதுவுமே ஒருவரைபோல் ஒருவர் அச்சு அசலாக இருக்க முடியாத சூழலில்
இரத்தத்தில் சர்க்கரையின் அளவு மட்டும்
எப்படி ஒரு குறிப்பிட்ட அளவில் இருக்கவேண்டும் என்பது?
நாம் காலையில், இட்லி சாப்பிட்டால்
அதில் இருந்து நமக்கு கிடைக்கும் சர்க்கரையின் அளவும்,
சப்பாத்தி சாப்பிட்டால் அதில் இருந்து நமக்கு கிடைக்கும் சர்க்கரையின் அளவும் , சர்க்கரை பொங்கல் சாப்பிட்டால்
நமக்கு கிடைக்கும் சர்க்கரையின் அளவும் மாறுபடுகிறது அல்லவா?
அப்படி இருக்க ஒவ்வொரு மனிதனும் அவரவர் சூழ்நிலைக்கு ஏற்ப
அவர்கள் உண்ணும் உணவும், அளவும் மாறுபடும் என்பது உண்மைதானே. அவ்வாறு இருக்க சர்க்கரை மட்டும்
அமெரிக்கா முதல் ஆண்டிப்பட்டி வரைஎப்படி ஒரே அளவாக இருக்க முடியும்? ஆக இரத்ததில் சர்க்கரையின் அளவு
இவ்வளவுதான் இருக்க வேண்டும் என்று ஏதும் கட்டுப்படு கிடையாது.
உடலின் தேவையை பொறுத்து சர்க்கரையின் அளவு மாறுபடும் என்பதே உண்மை.
உங்களுக்கு தேவைப்படும் சர்க்கரையின் அளவௌ உங்கள் உடல் தீர்மானம் செய்து , நீங்கள் உண்ட உணவில் இருந்து சர்க்கரையை தயாரித்துக்கொள்ளும். அதை நீங்கள் கட்டுப்படுத்தினால்
உங்கள் உடலுக்கு தேவையான அளவு சர்க்கரை கிடைக்காமல்
உடல் பலவீனம் அடையும் இதனை நீங்கள் சர்க்கரைக்கு தொடர்ந்து மருந்துகள் சாப்பிட்டு வருபவர்களிடம் பார்த்தே தெரிந்துகொள்ளலாம்.
ஆங்கில மருந்துகள் பக்கவிளைவுகள் உடையது ,
நான் சித்தா , மூலிகை மருந்துகளைதானே எடுத்துக்கொள்கிறேன் என்றாலும் இரத்ததில் உள்ள,உடல் தனக்கு தேவை என்று தயாரித்துவைத்திருக்கும் சர்க்கரையின் அளவை கட்டுப்படுத்தினால் நிச்சயம் உடல் பலகீனம் அடையும்.
மனதில் பயம், படபடப்பு எற்படும் போது
உங்கள் சிறுநீரகத்தில் உள்ள அட்ரீனல் சுரப்பியில் இருந்து,அட்ரீனலின் வெளிப்படும்
என்பது எல்லோருக்கும் தெரிந்ததே.
அப்போது கணையம் அதன் இன்சுலினை நிறுத்திவிடும்.
மீண்டும் உங்கள் மனநிலை இயல்பு நிலைக்கு மாறும்போது
கணையம் மீண்டும் இன்சுலினை கொடுக்க ஆரம்பிக்கும்.
இபோதும் சர்க்கரையின் அளவு அதிகமாக காண்பிக்கும்.
இது நிரந்தரமான நிலை இல்லை.
தற்காலிகமானதே.
உடலில் எந்தமாதிரியான தொந்திரவுகள் எற்பட்டாலும்
உடலே அதை சரி செய்துகொள்ளும்.
அந்த சுழலில் உடலின் பாதிக்கப்பட்ட பகுதியை சரி செய்ய
இரத்ததில் சர்க்கரையின் அளவு அதிகரிக்கும்
. காரணம் சர்க்கரை என்பது உடலின் செல்களுக்கான சக்தி என்று பார்த்தோமே.பாதிக்கப்பட்ட பகுதியை சரி செய்ய தேவையான சர்க்கரையை உடல் உற்பத்தி செய்யும்.
அதை எந்த நோய்க்கும் மூலகாரணாம் தெரியாத ஆங்கில மருத்துவம்
சர்க்கரை என்று பயமுறுத்தி அதை கட்டுப்படுத்தி
நம்மை மேலும் மேலும் பலகீனம் அடைய செய்கிறது
என்பதை மட்டும் தெரிந்து கொள்ளுங்கள். சரிங்க சார் ,
நீங்க சொல்வது சரி. ஆனால் அதிகமாக சிறுநீர் கழிகிறதே?
இங்கேதான் நாம் ஒன்றை புரிந்துகொள்ள வேண்டும்.
உடல் தனக்கு தேவை இல்லாதவற்றை உடலில் வைத்துக்கொள்ளாது.
நல்லவைகளை தன்னுள் வைத்துக்கொள்ளும்.
இந்த தன்மையான உடல் எப்படி அதிகமாக இருந்த குளுக்கோஸை கிளைகோஜனாக மாற்றி தன்னுள் சேகரித்துவைத்ததோ ,
அதனை அவசர காலங்களில் பயன்படுத்திக்கொள்கிறதோ
அதுபோல, இதே குளுகோஸின் தரத்தை அறிந்து
அதை சிறுநீர் மூலம் வெளியேற்றும்.
குளுக்கோளில் தரமா?
என்றால் , ஆம். தரம் என்று ஒன்று உண்டு.
நமது உடலில் சக்தி குறையும்போது அதனை ஈடு செய்ய
உடலானது நமக்கு பசி என்ற உணர்வை கொடுக்கிறது.
அந்த சமயத்தில் நாம் உடலுக்கு நல்ல உணவுகளை கொடுத்து,
வாயால் நன்றாக அரைத்து
உமிழ்நீருடன் கலந்து
வயிற்றுக்குள் அனுப்பினால், அ
ங்கே அதை செரிமானம் செய்யும்
மற்ற திரவங்களும் கலந்து
நன்றாக செரிமானம் நடந்து
அதில் இருந்து எடுக்கப்படும் சர்க்கரை
தரமான குளுக்கோஸ்.
இதனை உடல் ஏற்றுக்கொள்ள,
தரத்தை நிர்ணயம் செய்ய
கணையம் இன்சுலினை உற்பத்தி செய்கிறது.
இந்த குளுக்கோஸ் உடல் முழுதும் எடுத்து செல்லப்பட்டு
பயன்படுத்தப்படுகிறது
.மீதமானவை கிளைகோஜனாக மாற்றப்பட்டு
உடலில் சேகரிக்கிறது.
அதேபோல் முறையான பசி இல்லாத போது, நாம் எடுத்துக்கொள்ளும் உணவு, நன்றாக வாயில் அரைக்கப்படாமல், நன்கு உமிழ்நீருடன் நன்றாக கலக்காமல் வயிற்றுக்குள் அனுப்பப்படும்போது
அங்கே, செரிமாண சுரபிகளில் இருந்து கிடைக்கும் சுரப்புகளும் கிடைக்காமல் உருவாகும் குளுக்கோஸ்
தரம் குறைந்த குளுக்கோஸ். இதனால் உடலுக்கு தீங்கு என்பதால்
உடலே அதனை சிறுநீர்மூலம் வெளியேற்றுகிறது.
இதற்கும் நாம் பயம் கொள்ள வேண்டியது இல்லை.
ஆனால் இவ்வாறு தரம் குறைந்த குளுக்கோஸ்
நமது உடலில் இருந்து வெளியேரும் போது
உடலுக்கு சரியான குளுகோஸ் கிடைக்காமல் பலவினம் அடையும்.
அதனால் ஏற்படும் தொந்திரவுகளுக்கு நாம் அலோபதியை நாடும்போதும் அவர்கள் சர்க்கரையின் அளவை பார்த்து
அதை கட்டுப்படுத்துகிறோம் என்ற பெயரில்மருந்துகளை கொடுத்து
உடல் வெளியேற்றும் கழிவான தரம் குறைந்த குளுக்கோஸை
உடலிலேயே தங்க செய்கிறது.
இது மேலும் உடல் பலவீனம் அடையும். அதுபோல் இந்த மருந்துகள்
கணையத்தை தட்டிதட்டி அதில் இருந்து இன்சுலினை வலுக்கட்டாயமாக எடுப்பதால், கணையம் நிரந்தரமாக செயலிழக்கிறது.இதுவரை தேவைக்கு ஏற்ப இன்சுலினை வழங்கிவந்த கணையம்பாதிக்கபட்டபின் ,இன்சுலின் ஆனது ஊசிமூலம் கொடுக்கப்படுகிறது. இது மிண்டும் நமது உடலின் உறுப்புகளை பதம்பார்க்கிறது.
முதலில் உடலின் தேவைக்காக
அதிகரிக்கும் சர்க்கரையை மாத்திரைகள் மூலம் கட்டுப்படுத்துகிறோம்.
அதனால் உடலுக்கு தேவைப்படும் சக்தி கிடைகாமல்
நமது உடலும், உடல் உறுப்புகளும் பலவீனம் அடைந்து
தொடர்ந்து உடல் மோசமாகும்.
தேவை இல்லை என்ற கழிவை உடலில் இருந்து உடல் வெளியேற்றுவதையும்
உடலில் தங்கச்செய்து மீண்டும் உடலை பலவினப்படுத்துவதும் தவறு.
சரி என்ன செய்ய?எப்போது பசி எடுக்கிறதோ,அப்போது உங்கள் மனதிற்கு பிடித்த உணவுகளை நன்றாக ருசித்து, மென்று, உமிழ்நீருடன் கலந்து சாப்பிடுங்கள்.தாகம் எடுக்கும்போது நன்றாக சப்பி உதடும்,நாக்கும் நனையுமாறு நீர் பருகுங்கள்.உடல் ஓய்வுகேட்கும்போது ஓய்வும், தூக்கம் கேட்கும்போது தூக்கமும் கொடுங்கள். உடல் ஆரோக்கியமாக இருக்கும்.
விஷ உணவுகளுக்கு விடை கொடுப்போம் !
பாரம்பரிய உணவுகளுக்கு உயிர்கொடுப்போம் !!
சற்றே சிந்தித்து உங்கள் நண்பர்களுக்கும் பகிருங்கள்.
பொது நலனில் அக்கறை கொண்ட உங்கள் கடலூர் அரங்கநாதன்.

சிவன் எப்படி குருவானார்?!
சிவன் - என்றுமே நிரந்தர Fashion! - பகுதி 3
சிவனின் தீவிரத்தைக் கண்டு, அவர் உணர்ந்ததை தாங்களும் உணர வேண்டும் என்று, அவர் எத்தனை புறக்கணித்த போதும், அவர் பின்னே சென்று கொண்டிருந்தவர்கள் ஏழ்வர் மட்டுமே. அவர்களை அவ்வளவு எளிதில் சிஷ்யர்களாக ஏற்கவில்லை சிவன். எண்பத்தி நான்கு ஆண்டுகள் காக்க வைத்து, அதன் பின்னேயே அவர்களை மனமுவந்து சிஷ்யர்களாக ஏற்றார்