Saturday 1 March 2014

ஓங்காரம்(பிரணவம்):

நீண்ட நாள் வாழ்வது எப்படி?


ஒரு மனிதன் ஒரு நிமிடத்திற்கு 15 முறை சுவாசிக்கிறான் (மேலை நாட்டுக் கணக்குப் படி ஒரு நிமிடத்திற்கு 18 முறை). இந்தக் கணக்குப் படி ஒரு மணிக்கு 900 முறை. ஒரு நாளைக்கு 21,600 முறை சுவாசிக்கிறான். இந்த சுவாசத்தை எவ்வளவுக்கு எவ்வளவு குறைக்கிறோமோ அவ்வளவுக்கு அவ்வளவு ஆயுள் கூடும்!

எவ்வளவுக்கு எவ்வளவு கூடுதலாகச் செலவழிக்கிறோமோ, அந்த அளவுக்கு ஆயுள் குறையும். இது ஒரு பாங்கில் பணம் சேமிப்பது போல. பாங்கிலுள்ள பணத்தை விரைவில் செலவழித்தால் என்ன ஆகுமோ அதைப் போலத் தான் உயிர் வாழும் ஆண்டுகளும்.

இந்தத் தத்துவத்தைத் திருமூலர் பாடலிலும் ''கோயில்'' என்ற சொல்லால் பிரபலமான தில்லைச் சிதம்பரத்திலும் காணலாம். சிதம்பரம் கோவிலில் 72,000 ஆணிகள் அறையப் பட்ட 21,600 பொன் தகடுகள் இருந்ததாக அல்லது இருப்பதாகச் சொல்வர். 64 விதமான மரத்தாலான வேலைப்பாடுகளைப் பார்க்கலாம். ஆங்கிலத்தில் "beam" என்று சொல்லப் படும் இவை 64 கலைகளைக் குறிக்கும். 21,600 தங்க ஓடுகள் ஒரு மனிதன் ஒரு நாளில் விடும் 21,600 மூச்சுக் காற்றைக் குறிக்கும். 72,000 ஆணிகள் நம் உடலில் உள்ள நாடி, நரம்புகளையும் நாடித்துடிப்பையும் குறிக்கும்.

திருமூலர் தனது பாடலில்:-

விளங்கிடு முந்நூற்று முப்பத்தோ டொருபான்
தனங்கொளிரட்டிய தாறு நடந்தால்
வணங்கிடு ஆமைம்மலம் வாயுவெழுந்து
விளங்கிடு மவ்வழி தத்துவ நின்றே

விளக்கமிக்க முந்நூறும், முப்பதைப் பத்தினால் பெருக்கிக் கிடைத்த முந்நூறும் சேர்ந்து அறுநூறு ஆகும். இரட்டியதாறு என்பது ஆறும் ஆறும் பெருக்க முப்பத்தாறு ஆகும். இம்முப்பத்தாறை அறுநூறோடு பெருக்க 21,600 ஆகும். இதுவே ஒருநாள் நாம் சுவாசிக்கும் சுவாசங்கள்.

ஆனால் வரவு 7200 சுவாசம் தான். பாக்கி 14,400. இது தான் நம் மொத்த ஆயுளிலிருந்து கழிந்து கொண்டே வரும். இதைத் தடுக்க மூச்சுப் பயிற்சி செய்ய வேண்டும். பிராணாயாமம் (மூச்சுப் பயிற்சி) செய்தால் ஆயுள் விருத்தியாகும்.

ஒரு சுவையான கணக்கைப் பாருங்கள். ஒரு மனிதன் ஒரு நிமிடத்திற்கு 15 முறை சுவாசித்தால் அவனுக்கு விதித்த ஆண்டு 100.

ஒரு நிமிடத்திற்கு ஒரு மனிதன்

18 முறை சுவாசித்தால் அவன் வயது 83 1/3 ஆண்டுகள்
2 முறை சுவாசித்தால் அவன் வயது 750 ஆண்டு
1 முறை சுவாசித்தால் அவன் வயது 1500 ஆண்டு
0 முறை சுவாசித்தால் முடிவேயில்லை

(இது சித்தர்களால் மட்டுமே முடியும்)

ஆமை ஒரு நிமிடத்திற்கு மூன்று முறை தான் சுவாசிக்கிறதாம். ஆயினும் அதற்குப் புற பத்துகள் அதிகம்.

ஒரு மனிதன் ஓம்காரம் சொன்னால் அவனுடய சுவாசத்தின் நீளம் குறைந்து சுவாசம் மிச்சப் படுகிறதாம். ஆகையால் பிரணவ மந்திர (ஓம்) ரகசியம் அறிந்தவர்களும் நீண்ட நாள் வாழலாம்
ஓங்காரம்(பிரணவம்)

எந்த மொழியிலும் எழுத்துகள் பிறப்பதற்கு மூல காரணமாக இருப்பது ஒலியே. அந்த ஒலியே பிரவணம் எனப்படும். வாயைத் திறந்து உள்ளிருக்கும் மூச்சுக் காற்றை வெளியிடும்போது ‘ஓ’ என்ற உருவமற்ற ஒலி பிறக்கின்றது. அவ்வொலியின் கடைசியில் வாயை மூடும்போது ‘ம்’ என்ற ஒலி தோன்றுகிறது.

இந்த ''ஓம் - ஓம்'' என்ற ஒலியையே பிரணவம் என்று கூறுவர்.

ஓம் என்னும் மூலமந்திரம், இறைவனை அம்மையப்பனாக வுணர்த்தும் ஒலிவடிவாகும். அது ஓ என்னும் ஒரே யெழுத்தே. இன்னிசைபற்றி மகர ஈறு சேர்க்கப்பட்டது. ஓங்காரம் எனினும் ஓகார மெனினும் பொருளளவில் ஒன்றே.

உலகம் தோன்றுவதற்கு முன்பு பிரவண ஒலியே நிலவி இருந்தது என்றும், பிரணவத்திலிருந்து விந்துவும், விந்திலிருந்து நாதமும் அதிலிருந்து உலகமும் உயிர்களும் ஒன்றிலிருந்து ஒன்றாகத் தோன்றின எனத் தத்துவ நூல்கள் கூறுகின்றன.

ஓம் என்பது பிரணவ மந்திரமாகும. இது அ + உ + ம் என்ற மூன்றெழுத்தின் இணைப்பே ‘ஓம்’. மனிதனின் உடலும் இறைவனின் இயற்கை வடிவான ஓங்கார வடிவத்துடன் அமைந்திருக்கிறது. மனித வடிவமும் அருள் வடிவம்தான்.

ஓம் என்ற பிரணவன் "அ" என்பது எட்டும் "உ"என்பது இரண்டும் என்ற எண்களின் தமிழ் வடிவம்.
அ என்பது முதல்வனான சிவனையும் உ என்பது உமையவள் எனப்படும் சக்தியினையும், சிவனும் சக்தியும் இணைந்த சிவசக்தியினையும் குறிக்கும்.


இச்சிவசக்திவடிவமே, சொரூபமே வரி வடிவில் " ஓ " என பிள்ளையார் சுழியாகவும், "உ" எனவும் உள்ளது. வழிப்படும் உருவவாக 'சிவலிங்கமும்' ஒலி எழுத்தாக சொல்லும்போது ஓங்காரம் பிரணவம் என்றும் ஆன்றோர்களும், சான்றோர்களும் சொல்கிறார்கள்.
ஓம் என்னும் ஒலியும் பெருவெடிப்பு கொள்கையும்

உலகில் இதுவரை நடந்த பெரும் விஞ்ஞான ஆராய்வுகளில் பெருவெடிப்பு கொள்கையே முக்கியமானது..அதாவது உலகம் எவ்வாறு தோற்றம் பெற்றது.அதன் போது என்ன நிகழ்வு இடம்பெற்றது என்பது பற்றிய ஆராய்வே இது..இதை என்று BIG BANG THEORY ஆங்கிலத்தில் அழைப்பர்.

அந்த பரிசோதனையின் போது ஓம் என்ற ஒலியே தோன்றியதாக விஞ்ஞானிகள் கூறுகின்ரனர் விஞ்ஞானிகள்.. இந்த பிரபஞ்சம் தோன்றும் போது ஓம் என்ற ஒலியுடனேயே தோற்றம் பெற்றது என்கின்றனர்..அதாவது சித்தர்கள் ஓம் என்னும் ஒலியை பரப்பிரம்மம் என்று அழைப்பர்...பரம் என்றால் உலகம்..பிரம்மம் என்றால் உருவாக்கம்...(அதனால்தான் படைப்பவர் பிரம்மா ) எனவே உலக உருவாக்கம் என்பதே ஓம் என்பதன் உட்பொருள்....





படைக்கும் தொழிலை செய்யும் பிரம்மாவுக்கு பிரணவ மந்திரம்(ஓம் என்பதே பிரணவ மந்திரம்) தெரியாத படியால் முருகப்பெருமான் தலையில் குட்டியதாகவும் அதன் பின்பு உபதேசம் செய்ததாகவும் ஒரு நிகழ்வு உண்டு....ஆக உலகம் தோற்றம் பற்றிய விளக்கமே அந்த நிகழ்வு ...அதாவது படைக்கும் பிரம்மாவுக்கு ஓம் என்னும் ஒலியின் விளக்கம் புரியவில்லை ஆக அந்த ஒலியின் விளக்கத்தை முருகபெருமான் சொல்லிகொடுத்தார்........இதையே விஞ்ஞானம் கூறுகின்றது...அதாவது உலகம் தோற்றம்பெற்ற போது(படைத்தல் ) ஓம் என்னும் பிரணவ மந்திரமே ஒலித்தது என்கிறது விஞ்ஞானம்.

சில ஆண்டுகளுக்கு முன்பு டாக்டர் ராபர்ட் வில்சன் என்கிற விஞ்ஞானியும் டாக்டர் பெஞ்சியாஸ் என்கிற விஞ்ஞானியும் மைக்ரோவேவ் ரேடியேசன் என்கிற நுண்கதி இயக்கம் பிரபஞ்சத்தில் எவ்வாறு செயல்படுகிறது என்கிற ஆராய்ச்சியில் ஈடுபட்டார்கள்.அவர்களின் சோதனையின் போது இனம் தெரியாத ரேடியோ அதிர்வுகள் தங்கள் சோதனையில் கிடைப்பதை உணர்ந்தார்கள்.

Cosmology: A Research Briefing, National Research Council, National Academy Press, 1995. என்னும் நூலில் இது பற்றிய குறிப்புக்கள் உண்டு.

இந்த அதிர்வுகள் அவர்களுக்கு புரியவில்லை..தொடர்ந்து அவர்கள் மேற்கொண்ட சோதனைகளின் விளைவாக வெடித்து சிதறி பிரபஞ்சம் தோன்றிய போது உருவான அதிர்வுகலே அவை என்பதை அவர்கள் உணர்ந்து கொண்டர்கள்.அதாவது பிரபஞ்ச சிருஸ்டி தோன்றிய போது ஏற்பட்ட ஓம் என்கிற ஓசைதான் அது என்பது தெளிவாகியது.இதை நம்முடைய முன்னோர்கள் எவ்வாறு அறிந்திருந்தார்கள் என்பது ஆழ்ந்து ஆராயபடவேண்டிய விடயமாகும்

No comments:

Post a Comment