Thursday 29 September 2016

பயண நிமித்தமாக வெளியூர் விடுதிகளில் தங்க நேரிடும்போது அறையினுள் ஊசிமுனை அளவேயுள்ள கண்ணுக்குப்புலப்படாத ரகசிய கேமராக்கள் பொருந்தியுள்ளதை எளிதாக கண்டறியலாம்....

முதலில் வெளிச்சம் வராமல் அறைக்கதவு, சன்னல்களை அடைத்துவிட்டு உங்கள் மொபைலில் உள்ள கேமராவை ஆன் செய்யுங்கள், மேலும் மொபைலில் புகைப்படம் எடுக்கும்போது வரும் பிளாஷ் வெளிச்சத்தை ஆப் செய்துவிட்டு அறையில்லுள்ள சுவர் மற்றும்
பொருட்களை புகைப்படம் எடுங்கள்....

இப்போது புகைப்படத்தை கவனியுங்கள்.... ஊசிமுனை அளவேயுள்ள ரகசிய கேமரா அறையினுள் பொருத்தப்பட்டிருப்பின் அது இருட்டுப்புகைப்படத்தில் சிகப்பு நிற புள்ளிகளாகத் தெரியும்....

இதைவைத்து அறையினுள் இரகசிய கேமராக்கள் பொருந்தியுள்ளதை அறியலாம்..
நம் அழகை மேம்படுத்த பலவற்றை நாம் செய்கின்றோம். அவற்றில் முக்கிய பங்கு வகிப்பது சிகை அலங்காரம். ஆள் பாதி, ஆடை பாதி என்று சொல்வர். அதே போல் ஒருவருடைய அழகை தீர்மானிப்பதில், தலை முடி சமபங்கு வகிக்கிறது. அப்படிப்பட்ட தலை முடி கொட்டினால் முடி கழிதல் என்பது உலகளாவிய பிரச்சினை ஆகும்.
அதற்கு பத்திய சாப்பாடு, கனிமங்களின் குறைபாடு, பலவித மருந்துகளை உண்ணுதல், மன அழுத்தம், சுகாதார சீர்கேடு மற்றும் மரபியல் போன்ற பல காரணங்கள் உள்ளன.

1.தொப்பி மற்றும் ஹெல்மெட் அணிவதாலும், ஆண்களுக்கு முடிகழியும். இதனால் சிலருக்கு இளமையிலேயே வழுக்கை தலை ஏற்படும் நிலைக்கு ஆளாகின்றனர். இத்தகைய முடி கழிதலை குறைக்க, உங்களுக்காக நாங்கள் கூறும் 20 தீர்வுகள், இதோ இங்கே.

2.மிதமான ஷாம்புவால் சீரான இடைவெளியில் முடியை கழுவவும் சீரான இடைவெளியில் முடியை அலசினால், தலையும் தலைச்சருமமும் சுத்தமாக இருக்கும். அதனால் முடி கழிதலும் குறையும். இது தொற்று மற்றும் பொடுகு பிரச்சினைகளில் இருந்தும் தலையை காப்பாற்றுவதால், முடி உடைதலும், கழிதலும் கணிசமான அளவு குறையும். இது போக சுத்தமான தலை முடி தோற்றத்துக்கு மேலும் பலம் சேர்க்கும்.

3.முடி கொட்டுதலை தடுக்க வைட்டமின்களின் பங்களிப்பு. வைட்டமின்கள் உடல் நலத்தை பேணுவதற்கு மட்டுமல்லாமல் முடி ஆரோக்கியத்துக்கும் உறுதுணையாக இருக்கிறது. வைட்டமின் `ஏ' தலையில் உள்ள மயிரடிச் சுரப்பு வளமாக சுரக்க உதவி புரியும். வைட்டமின் `ஈ', தலைச் சருமத்திற்கு அடியில் ரத்த ஓட்டம் சீராக இருக்க உதவும். இது முடியின் சுரப்பிகள் செழிப்பாக இருக்க உதவும். வைட்டமின் `பி', முடியின் நிறத்தை பேணுவதற்கு பயன்படும்.

4.ஊட்டச்சத்தும் புரதச்சத்தும் நிறைந்த உணவுகள் கொழுப்பில்லா இறைச்சி, மீன்கள் மற்றும் இதர புரதச் சத்துள்ள உணவுகளை உண்ணுவதால் முடி உதிர்தல் குறையும்.

5.முக்கிய எண்ணெய்களை கொண்டு தலைக்கு மசாஜ் செய்தல் பல காலமாக முடி கொட்டும் பிரச்சனை உள்ளவர்கள், தலைக்கு முக்கிய எண்ணெய்களை கொண்டு சில நிமிடம் மசாஜ் செய்ய வேண்டும். இது மயிர்ச்சுரப்பிகள் சுறுசுறுப்பாக இருக்க உதவும். அதிலும் பாதாம் அல்லது நல்லெண்ணெயை பயன் படுத்தலாம்.

6.ஈர முடியை சீவ வேண்டாம். முடி ஈரத்துடன் இருக்கும் போது, வலுவிழந்த நிலையில் இருக்கும். அதனால் ஈர முடியை சீவ முயற்சித்தால் முடி கழிதலுக்கான வாய்ப்புகள் அதிகம். அதிலும் ஈரத்துடன் இருக்கும் போதே முடியை சீவ வேண்டுமானால், அகன்ற பற்களை கொண்ட சீப்பை பயன்படுத்தவும். அதே போல் முடியை அடிக் கடி சீவுவதையும் நிறுத்த வேண்டும். இது முடியை சேதப்படுத்தி கொட்டவும் செய்யும். முடிந்த வரை முடியில் ஏற்படும் சிக்கல்களை கைகளைக் கொண்டே எடுங்கள்.

7.பூண்டுச்சாறு, வெங்காயச் சாறு அல்லது இஞ்சிச்சாறு ஆகியவற்றில் ஏதாவது ஒன்றை தலைச் சருமத்தில் தடவுங்கள். இரவு முழுவதும் அப்படியே விட்டு விடுங்கள். பின் காலையில், முடியை நன்கு அலசுங்கள். இதை வாரம் முழுவதும் தொடர்ந்து செய்தால், நல்ல பலனை காணலாம்.

8.அடிக்கடி தண்ணீர் குடிக்கவும். தலைமுடி தண்டில் நான்கில் ஒரு பகுதி தண்ணீர் உள்ளது. அதனால் தினமும் 48 கப் தண்ணீர் பருக வேண்டும். இது வளமான முடி வளர்ச்சிக்கு உறுதுணையாக இருக்கும்

9.க்ரீன் டீயை தலையில் தடவவும். க்ரீன் டீயை தலையில் தடவினால், முடி கொட்டுதலை தடுக்கலாம் என்று ஆய்வுகள் கூறுகின்றன. ஆகவே இரண்டு க்ரீன் டீ பைகளை எடுத்து, ஒரு கப் தண்ணீரில் ஊற விட்டு, சிறிது நேரம் கழித்து அந்த நீரை தலையில் நன்கு தடவி, ஒரு மணி நேரம் கழித்து முடியை அலச வேண்டும். நல்ல பலனைக் காண, இதனை ஒரு வாரம் முதல் பத்து நாள் வரை தொடர்ந்து செய்ய வேண்டும்.

10.தலைமுடிக்கு எது கேடு விளைவிக்கும் என்பதை தெரிந்து கொள்ளவும். முடியை ஆரோக்கியமாக பாதுகாக்க, அதனை எப்படி பராமரிக்க வேண்டும் என்பதை முதலில் தெரிந்து கொள்ள வேண்டும். முடியை துண்டை வைத்து துவட்டுவதை தவிர்க்கவும். அதற்கு பதில் முடியை இயற்கையாகவே காய விட வேண்டும்.

11.மதுபான வகைகள் பயன்பாட்டை குறைக்க வேண்டும் முடி கொட்டுவதை உணர்ந்தீர்கள் என்றால், மது பயன்பாட்டை குறைத்துக் கொள்ள வேண்டும். ஏனென்றால் மது, முடி வளர்ச்சிக்கு தடை போடும். அதனால் குடி பழக்கத்தை குறைத்தாலோ அல்லது முற்றிலும் நிறுத்தினாலோ, தலை முடி வளர்ச்சியில் முன்னேற்றம் இருக்கும்.
12.புகைப்பிடிக்கும் பழக்கத்தை தவிர்க்கவும். புகைப் பிடித்தால், தலைச் சருமத்திற்கு செல்லும் இரத்த அளவு குறையும். இது முடி வளர்ச்சிக்கு தடையாக நிற்கும்.

13.உடற்பயிற்சியில் ஈடு படவும். தினமும் ஏதாவது ஒரு உடற்பயிர்சியில் ஈடுபட வேண்டும். நடை, நீச்சல் அல்லது பைக் ஓட்டுதல் போன்றவற்றை தினமும் 30 நிமிடங்கள் செய்தால், அது உடலில் ஹார்மோன் அளவை சீராக்கி, மன அழுத் தத்தை குறைத்து, முடி கொட்டுதலையும் குறைக்கும்.

14.மன அழுத்தத்தை குறைக்கவும். மன அழுத்தத்திற்கும், முடி கொட்டுதலுக்கும் நேரடியாக தொடர்பு உள்ளது என்று மருத்துவ சான்றுகளோடு பல ஆய்வுகள் நடத்தப்பட்டுள்ளது. அதனால் மன அழுத்தத்தை வளர விடாமல் தடுக்க வேண்டும். அதற்கு தியானம் கைகொடுக்கிறது. தியானத்தையும், யோகாசனத்தையும் ஒழுங்காக செய்தால், அது ஹார்மோன் அளவையும் சீராக வைத்திருக்கும்

15.ஹேர் ட்ரையரை தவிர்க்கவும். முடியை கருவிகள் மூலம் அடிக்கடி உலர்த்தவோ அல்லது சூடாக்கவோ முயற் சிக்க கூடாது. அடிக்கடி அப்படிச் செய்தால், முடியில் உள்ள புரதச்சத்து வலுவிழந்து போகும். முடியின் சத்தும் குறைந்து, முடி கழிதலுக்கு வழிவகுக்கும்.

16.தலையில் வியர்வை உண்டாகாமல் பார்த்துக் கொள்ளவும். எண்ணெய் பசையுடன் கூடிய முடியை கொண்ட ஆண்களுக்கு, கோடைக்காலத்தில் வியர்வை உண்டாவதால் பொடுகு அதிகரிக்கும். இதுவே முடி கொட்டவும் காரணமாக அமையும். கற்றாழை மற்றும் வேப்ப இலை களைக்கொண்டு செய்யப்பட்ட ஷாம்புவை பயன்படுத்தினால், தலை குளிர்ச்சி யோடு இருப்பதோடு, பொடுகிலிருந்தும் விடுதலை கிடைக்கும்.

17.ஹெல்மெட் அணிவதை தவிர்க்கவும். கோடைக் காலத்தில் ஹெல்மெட் அணியும் ஆண்களுக்கு முடி கொட்டும் பிரச்சனை அதிகமாக உள்ளது. ஹெல்மெட் அணிவதால், வியர்வையானது தலையில் உள்ள துளைகள் வழியாக உள்ளிறங்கும். அதனால் முடியின் வேர்கள் வலுவிழக்கச் செய்து, முடி கொட்ட ஆரம்பித்து விடும். எனவே தலையை சுற்றி ஸ்கார்பை கட்டிக் கொண்டால் முடி உதிர்வு குறையும்.

18.தலை முடியின் ஸ்டைலை மாற்றவும் (ஆண்கள் நீளமான முடியை வளர்க்கலாம்) முடி கழிகிறதா, முடியை தளர்த்திக் கொள்ள வேண்டும். ஏனெனில் போனி டைல், பின்னல் போன்ற ஸ்டைல்கள் முடியை இறுக்கமாக்கி முடியை உதிரச் செய்து சீக்கிரமே வழுக்கையும் விழச்செய்யும்.

19.உடல்நலத்தை பார்த்துக் கொள்ள வேண்டும். உடல்நல கோளாறுகள் முடி உதிர்வுக்கு முக்கிய காரணம். தீராத நோய், கடும் காய்ச்சல் மற்றும் தொற்று போன்றவைகளை ஒழுங்காக கவனித்தால், ஆரோக்கியமான முடியை பாதுகாக்கலாம்.

20.மருந்து உண்ணுதலில் கவனம் தேவை. சில மருந்துகளை சாப்பிடுவதால் பக்க விளைவுகள் ஏற்படும். அதில் ஒன்று தான் முடி உதிர்வு. ஆகவே எப்போதும் மருத்து வரை கலந்தாலோசித்து விட்டு, பக்க விளைவுகளை பற்றி அறிந்து கொண்டு, பின் மருந்துகளை வாங்கவும்.

அப்படி முடியை பாதிக்கும் படி பக்க விளைவு ஏற்பட்டால், மருத்துவரை வேறு மருந்துகளை மாற்றி தரச் சொல்லவும். ரசாயனங்களை விட்டு தள்ளியே இருக்கவும் கடுமையான ரசாயனங்கள் மற்றும் நிரந்தர முடிச்சாயங்கள், முடியின் ஆரோக்கியத்தை பாதித்து விடும். முடிகொட்டும் போது தலை முடிக்கு சாயம் பூசுவதை நிறுத்திக் கொள்ள வேண்டும்.

பிரச்சினையை படம் பிடித்து காட்டும் முடி.......... உடலில் உள்ள பிரச்சி னையை முடியை வைத்தே தெரிந்து கொள்ளலாம். உடலுக்கு தனக்குள் நடப்பவற்றைச் சொல்லத் தெரியாது. ஆனால் உடல் வெளிப்படுத்தும் சிற்சில அறிகுறிகள், மாற்றங்கள், ஆகியவை நமது உடல்நலத்தில் ஏற்படும் மாற்றங்களை நன்கு உணர்த்தும்.
ஆரோக்கியமற்ற தலை முடியானது நமது உடல் நலம் கெட்டுப் போவதை உணர்த்துகின்ற அறிகுறியாகும். தலைமுடி சார்ந்த பிரச்சினைகளான பொடுகு, முடி உதிர்தல், இள நரை ஆகியவை எப்போதுமே சாதாரணமான, முக்கியத் துவமில்லாத பிரச்சினைகளாகவே பார்க்கப்படுகின்றன. தலை முடியில் ஏற்படும் பாதிப்புகள், உடல் நலத்தில் ஏற்படும் பாதிப்புகளை வெளிக்காட்டும் வெளிக்காட்டிகளாகும்.
தலைமுடியில் ஏற்படும் பாதிப்புகளானது, எவ்வாறு உடல் நலத்தின் நிலையை நமக்குக் காட்டுகின்றன என்பதைக் கீழே பார்ப்போம்.

1. முடி உதிர்தல்: சாதாரண மனிதனின் உடலில் இருந்து நாள்தோறும் 90 முதல் 100 முடிகள் வரை உதிர்கின்றன என்று தோல் நோய் நிபுணர்கள் சொல்கிறார்கள். நமது உடலில் உள்ள மயிர்க்கால்களில் 90% மயிர்க்கால்கள் சீராக வளர்ந்து கொண்டு இருக்கும் பொழுது, 10% மயிர்க்கால்கள் மட்டும் உறக்க நிலையை, அதாவது டெலோஜென் நிலையை அடைகின்றனவாம்.

இவ்வாறு டெலோஜென் நிலையை அடைந்த மயிர்க் கால்கள் இறந்து போய் 2 அல்லது 3 மாதங்களுக்கு ஒருமுறை உதிரத் தொடங்கி விடுகின்றனவாம். இவ்வாறு உதிர்ந்த முடிகள் இருந்த இடத்தில், புதிய மயிர்க் கால்கள் உருவாகி, அங்கே புதிய முடிகள் முளைக்கத் தொடங்கும். இந்த சுழற்சியானது சீரான இடைவெளிகளில் நடந்து கொண்டே இருக்கும்.

உணவுப் பழக்கம் ஆரோக்கியமற்றது என்பதை அதிகமாக உதிர்கின்ற முடிகள் வெளிக்காட்டும். தலைமுடி ஆரோக்கியமாகவும், பளபளப்பாகவும் வளர புரோட்டீன், இரும்புச்சத்து, துத்தநாகச் சத்து, வைட்டமின் `ஏ', ஒமேகா3 கொழுப்பு அமிலங்கள் ஆகியவை தேவைப்படுகின்றன.
ஆனால் உணவில் கஞ்சத்தனம் காட்டினால், இச்சத்துக்கள் உணவின் வழியாக கிடைக்காமல் போய்விடும். ஊட்டச்சத்துக்கள் குறைந்தாலோ, உணவுமுறையில் குறை இருந்தாலோ, அதன் விளைவுகள் தலைமுடியில் தெரியும். ஆம், தலைமுடி அதிகமாக உதிரத் தொடங்கிவிடும்.

2. பொடுகு: தலையின் ஸ்கால்ப் எனப்படும் மேல் தோல் வறண்டு காணப்பட்டாலோ, அல்லது அதிகமாக எண்ணெய் பசையுடன் காணப்பட்டாலோ பொடுகு உண்டாகும். ஷாம்புவை அடிக்கடி உபயோகிப்பதாலோ அல்லது தேவையான அளவு உபயோகிக்காமல் இருந்தாலோ, பொடுகு உண்டாகலாம்.
பொடுகானது, பூஞ்சை களால் ஏற்படுகிறது என்று சரும நோய் நிபுணர்கள் கருதுகிறார்கள். பொடுகு இருப்பதால் உடல் நலம் குன்றியுள்ளது என்று பொருளல்ல. ஆயினும், மஞ்சள் பொடுகால் ஏற்படும் செபோரிக் டெர்மா டிடிஸ் எனப்படும், தோலில் காணப்படும் சிவந்த செதில்செதிலான தடிப்புகள், ஹார்மோன் தொடர் புடையவையாக இருக்கக் கூடும் அல்லது பூஞ்சைகளால் ஏற்படக்கூடும் அல்லது குறிப்பிட்ட நரம்பியல் பிரச்சினையாகவும் இருக்கலாம்.

3. இளநரை: தலைமுடி நரைத்தல் என்பது எப்போதுமே முதுமையைக் குறிப்பிடுவதில்லை. சிலருக்கு இளமையிலேயே கூட முடி நரைக்கக்கூடும். இளமை யிலேயே தலைமுடி நரைத்தல் என்பது பரம்பரை சார்ந்த நோயாகவும் இருக்கலாம். இளநரையானது உடல்நலம் குன்றியுள்ளதைக் குறிப்பிடு வதில்லை.
எனினும், ரத்த சோகை, தைராய்டு பிரச்சினைகள், வைட்டமின் பி12 குறைபாடு, தோலில் வெண்புள்ளிகள்/வெண் குஷ்டம்ஆகியவையும் இள நரைக்குக் காரணமாக அமையலாம்.
முதுகுவலி: ஏன் வருகிறது? எப்படி போக்குவது? அறிந்து கொள்வோம் !!

முதுகுவலி முதியவர்களுக்கு மட்டும்தான் வரும் என்றில்லை. இளைஞர்களையும் இப்போது பாடாய்படுத்திக் கொண்டிருக்கிறது. பெண்களும் முதுகுவலி, கழுத்து வலியால் அவதிப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள்.

முதுகின் கட்டமைப்பு எப்படி இருக்கிறது?

முதுகில் வலி உருவாக என்ன காரணம்?

வலி வராமல் தடுப்பது எப்படி, வந்தால் அதை குணப்படுத்துவது எப்படி?

தாய் வயிற்றில் கருவான எத்தனையாவது நாளில் சிசுவுக்கு முதுகெலும்பு உருவாகும்? முதலில் எப்படி தோன்றி, படிப்படியாக வளரும்? முதுகெலும்பின் டிஸ்குகள் மற்றும் அதன் கட்டமைப்பு என்ன?
“முதுகெலும்பும், முதுகுத்தண்டும் கரு உருவான 18-ம் நாளிலிருந்தே உருவாக ஆரம்பிக்கும். முதலில் முதுகெலும்பு உருவாகி திறந்தபடி இருக்கும். கரு உருவான 29-வது நாள் மூடிக்கொள்ளும். அதன் நடு மையத்தில் மூளையின் தொடர்ச்சியான தண்டு வடம், இடுப்பு பகுதி வரையில் நீண்டு இருக்கும்.

முதுகெலும்பு, ஒன்றுடன் ஒன்றாக இணைக்கப்பட்ட 33 சிறு துண்டு எலும்புகளைக் கொண்டது. இதில் முதல் 7 எலும்புகள் கழுத்துப் பகுதியிலும் (செர்வைக்கல்), 12 எலும்புகள் மார்பு பகுதியிலும் (தெராசிக்), 5 எலும்புகள் இடுப்பு பகுதியிலும் (லம்பார்), 5 எலும்புகள் ஒன்றோடு ஒன்று இணைந்த நிலையில் அடி முதுகு பகுதியிலும் (சேக்ரல்), கடைசி 4 எலும்புகள் சேர்ந்து ஒரே எலும்பாய் முதுகின் அடிப்பகுதியிலும் (காக்சிஸ்) அமைந்து உள்ளது. இவற்றில் கடைசி 9 எலும்புகள் அசைவற்றதாகவும், இதர 24 எலும்புகள் அசையக்கூடியதாகவும் இருக் கும். எலும்புகளுக்கிடையில் மெல்லிய ஜவ்வு போன்ற டிஸ்க் பகுதி அமைந்துள்ளது.

இந்த டிஸ்க்குகள் உடலில் ஏற்படும் அதிர்வை தாங்கிக்கொள்ள பயன்படுகிறது. முதுகெலும்பு நேராக இல்லாமல் சில வளைவுகளுடன் இருக்கும். முதுகெலும்பின் நடுவில் இருக்கும் தண்டுவடத்தில் இருந்து 31 ஜோடி நரம்புகள் முதுகெலும்புகளுக்கிடையில் உள்ள துவாரத்தின் வழியாக வெளியேறி உடலின் பல முக்கிய உறுப்புகளுக்கு சென்று செயல்பட வைக்கிறது.”

எத்தனை வயது வரை முதுகெலும்பு வளரும்? வேகமாக வளரும் காலகட்டம் எது?
“குழந்தை பிறந்ததில் இருந்தே எலும்புகளின் வளர்ச்சி வேகமாகவும், சீராகவும் இருக்கும். எலும்பின் வளர்ச்சி 18 வயது வரையில் வேகமாகவும், அதன்பின் 25 வயது வரை மிதமாகவும் இருக்கும்.”

முதுகெலும்பின் அமைப்பில் ஆண்-பெண்ணுக்கு வித்தியாசம் ஏதாவது இருக்கிறதா? “முதுகெலும்பின் அமைப்பிலோ, செயல்பாட்டிலோ ஆணுக்கும்- பெண்ணுக்கும் வித்தியாசம் இல்லை. ஆனால் முதுகெலும்பின் வளைவுகளில் சிறு வித்தியாசம் இருக்கும். வளைவு ஆண்களை விட பெண்களுக்கு சற்று அதிகமாக இருக்கும்.”

வீடு பெருக்குதல், துணி துவைத்தல் போன்ற வேலைகளில் ஈடுபட்டால் அவர்களுக்கு முதுகு வலி ஏற்படுமா?“பெண்கள் 45-50 வயது வரை வீட்டு வேலைகளை செய்வது நல்லது. வீட்டு வேலைகளால் முதுகெலும்பிற்கோ, எலும்புகளின் நடுவில் உள்ள டிஸ்கிற்கோ எந்த பாதிப்பும் வராது. ஆனால் முதுகெலும்பில் ஏதாவது பிரச்சினையோ, நோயோ ஏற்பட்டிருந்தால் கடினமான வேலைகளை செய்யாமல் இருக்கவேண்டும். இடுப்பில் தண்ணீர் குடத்தை தூக்குவதாலும், குழந்தைகளை இடுப்பில் தூக்குவதாலும் பெண்களின் முதுகெலும்பில் பொதுவாக பாதிப்பு ஏற்படுவதில்லை.”

கர்ப்பம், பிரசவத்திற்கு தக்கபடி பெண்களின் முதுகெலும்பு கட்டமைப்பில் ஏதேனும் மாற்றங்கள் இருக்கிறதா? “பெண்களின் அடி முதுகு வளைவு அவர்களது கர்ப்ப காலத்தில் வயிற்றின் முன் பக்க வளர்ச்சிக்கு ஏற்ப, பின்பக்கம் சாய்ந்து கொள்ளக்கூடிய விதத்தில் அமைந்துள்ளது. இதனால் வயிற்றில் குழந்தை வளர வளர முன்பக்க பாரத்திற்கு ஈடுகொடுக்கும் விதத்தில், பின்புறமாக சாய்ந்துகொண்டு கர்ப்பிணிகளால் அன்றாட வேலைகளை செய்ய முடியும். இதற்கு கர்ப்ப காலத்தில் சுரக்கும் ஹார்மோன்களும் உதவி புரிகின்றன.”

முதுகுவலி தோன்ற எத்தனை விதமான காரணங்கள் இருக்கின்றன?“முதுகுவலி தோன்ற கீழ்க்கண்டவை பொதுவான காரணங்களாக இருக்கின்றன.
டிஸ்க் ப்ரொலாப்ஸ்: முதுகெலும்புகளுக்கு இடையில் ஷாக் அப்சர்வர் போல் இயங்கும் `டிஸ்க்’ என்னும் மெல்லிய ஜவ்வு வயதாவதாலோ, காயம் பட்டதினாலோ அல்லது அழற்சியினாலோ தேய்ந்து விடும். அப்போது 2 எலும்புகளுக்கிடையே போதிய இடைவெளி இன்றி டிஸ்க் எலும்பை விட்டு வெளியே பிதுங்கி விடும். இதனால் அதன் அருகில் செல்லும் ரத்தக்குழாயையோ, நரம்பையோ அழுத்தி வலியை உண்டு பண்ணும்.

ஸ்பாண்டிலோசிஸ்: வயதாகி எலும்புகளில் தேய்மானம் ஏற்படுவதாலும், எலும்புகளுக்கிடையே சில தாதுக்கள் படிவதாலும் எலும்புகளுக்கிடையே உராய்வு ஏற்படும். இதனால் அழற்சியோ, கிருமி தொற்றோ ஏற்பட்டு வலி ஏற்படும்.

ஆஸ்டியோபொரோஸிஸ்: உடலின் கால்சியம் சத்துக்களின் அளவு வயதாவதினாலோ, பெண்களுக்கு மாதவிடாய் நின்ற பிறகோ குறைந்து விடலாம். இதனால் எலும்புகளில் போதிய அளவு சுண்ணாம்பு சத்து இல்லாததால் எலும்புகள் வலுவிழந்து, அடர்த்தி குறைவாகிவிடும். இதனாலும் எலும்புகளில் வலியும், எலும்பு முறிவும் ஏற்படலாம்.

ஸ்பான்டிலோலிஸ்தஸிஸ்: முதுகெலும்பு வலுவிழக்கும்போது வரிசையாய் இருக்க வேண்டிய எலும்புகளில் ஒன்றிரண்டு வரிசையிலிருந்து முன்புறமோ பின்புறமோ விலகி விடும். இதனாலும் முதுகுவலியோ, முதுகு தசை பிடிப்போ, மரத்து போதலோ ஏற்படலாம். இது 35 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு ஏற்படுகிறது.

ஆர்த்ரைட்டிஸ்: மூட்டுக்களில் ஏற்படும் அழற்சியே ஆர்த்ரைட்டிஸ். இது ருமடாய்டு ஆர்த்ரைட்டிஸ், ஆன்க்கிலோசில் ஸ்பான்டிலோசிஸ் போன்ற நோய்களின் விளைவால் ஏற்படக்கூடியதாக இருக்கும்.”

மேடு, பள்ளம் நிறைந்த சாலைகளில் இரு சக்கர வாகன பயணம் மேற்கொள்வது முதுகுவலியை ஏற்படுத்துமா?
“முதுகெலும்புகளுக்கு நடுவில் உள்ள டிஸ்க் ஷாக் அப்சர்வர் போல் செயல்பட்டு அதிக பளு தூக்குதல், குனிதல், குதித்தல் போன்ற சமயங்களில் அதிர்வுகளை தாங்கி கொள்ளும். ஆனால் டிஸ்க் தேய்ந்து விட்டாலோ அல்லது எலும்புகளில் வேறு பிரச்சினை இருந்தாலோ மேடு, பள்ளம் நிறைந்த சாலையில் செல்லும்போது டிஸ்க் அழுத்தப்பட்டு, அழுத்தம் தாளாமல் வெளியே பிதுங்கி பக்கத்தில் உள்ள நரம்புகளை அழுத்தும். இதனால் வலி ஏற்படும்.”

முதுகுவலி என்பது கழுத்து வலியும் சேர்ந்ததா? முதுகு வலிக்கும்போது கழுத்தும் சேர்ந்து வலிக்குமா?
“முதுகெலும்பில் எங்கு வேண்டுமானாலும் எலும்பு தேய்மானமோ, அழற்சியோ, டிஸ்க் ப்ரொலாப்ஸோ ஏற்படலாம். இதனால் எங்கு வேண்டுமானாலும் வலி ஏற்படலாம். பொதுவாக கழுத்து எலும்பில் டிஸ்க் ப்ரொலாப்ஸ் என்றால் கழுத்து, தோள்பட்டை, கைகளில் வலி பரவலாம்.

அதே போல் அடி முதுகில் ப்ரொலாப்ஸ் என்றால் அடிமுதுகு, இடுப்பு மற்றும் கால்களில் வலி ஏற்படலாம். இரண்டு வித வலியும் சேர்ந்து இருக்க வேண்டிய அவசியமில்லை.”

முதுகெலும்பின் அடர்த்தி குறைவு மற்றும் பிரச்சினைகளை வலி வரும் முன்பே கண்டுபிடிக்க முடியுமா?“வலியின் அறிகுறி தெரியும் வரை முதுகெலும்பில் டிஸ்க் ப்ரொலாப்ஸ் பிரச்சினையை கண்டுபிடிக்க முடியாது.”

கழுத்து வலி மற்றும் முதுகுவலிக்கு இருக்கும் நவீன சிகிச்சை என்ன?“பேக் அண்ட் நெக் கட்டமைப்பு மருத்துவத்தில், டிஸ்க் ப்ரொலாப்ஸை அறுவை சிகிச்சையின்றி கட்டுப்படுத்தலாம். நவீன மருத்துவ முறையில் வடிவமைக்கப்பட்ட DRX 9000 என்ற கருவி முதுகுவலிக்கும், DRX 9000C என்ற கருவி கழுத்து வலிக்கும் சிகிச்சையளிக்க பயன்படுகிறது. இந்த சிகிச்சை முறை கிட்டத்தட்ட 86 சதவீதம் வரை வலியை குறைத்து நோயாளி தன் இயல்பு வாழ்க்கைக்கு திரும்ப உதவும்.”

உறுப்பு மாற்று ஆபரேஷன் இப்போது பரவலாக இருக்கிறதே. முதுகெலும்புகளை எடுத்து எலும்பு வங்கிகளில் சேகரிக்க முடியுமா? அதை மாற்று ஆபரேஷன் மூலம் பாதிக்கப்பட்டவருக்கு பொருத்த முடியுமா?“எலும்பு வங்கியில் எலும்புகள் சேமித்து வைக்கப்படுகிறது. ஆனால் முதுகெலும்புகள் சேமிக்கப்படுவதில்லை. மேலும் செயற்கை டிஸ்க்குகளை பயன்படுத்தி டிஸ்க் மாற்று அறுவை சிகிச்சை செய்யப்படுகிறது. ஆனால் முதுகெலும்பு மாற்று அறுவை சிகிச்சை இதுவரை செய்யப்படவில்லை.

அதேபோல் தண்டுவட பாதையோ, தண்டு வடமோ வேறொருவரிடம் இருந்து மாற்றாக எடுத்து வைக்கக்கூடிய சாத்தியக்கூறுகள் கிடையாது. இனி எதிர்காலத்தில் இதற்கான புது சிகிச்சை முறைகள் வரலாம்.”
 — with Bala Murugan.

நிலா…பார்க்கப் பார்க்க சலிக்காத யாருக்கும் புரிபடாத விஷயங்களையும் அழகையும் தன்னகத்தே கொண்டது. கவிஞர்கள் கவிதை எழுதுவதற்கும், குழந்தைகளுக்கு சோறு ஊட்டவும் நாம் பயன்படுத்தும் நிலாவில் நம் பூமியை ஒத்த சிகரங்களும், மலைத்தொடர்களும், வளைகுடாக்களும் காணப்படுகின்றன.

அத்தகைய நிலா என்பதே அதிசயமான விஷயம்தான். ஆனாலும் நிலாவில் உள்ள ஏழு அதிசயங்களை விஞ்ஞானிகள் பட்டியலிட்டு உள்ளனர்.

1. மேர் செரினிடேட்டிஸ் ; நம் பூமியில் காணப்படும் கடல் போன்ற அமைப்பு. நீர் இல்லாததால் உலர்ந்து காணப்படுகிறது. சற்றேறக்குறைய 500 மைல்கள் விட்டம் கொண்டது.

2. ஸ்ட்ரெய்ட் சுவர் ; நம் பூமியில் காணப்படும் மலைத்தொடர் போன்ற அமைப்பு கொண்டது நூறுக்கும் மேற்பட்ட கிலோமீட்டர் தொலைவு கொண்டது. இங்கு பல உயரமான சிகரங்கள் காணப்படுகிறது.

3. டேலிமயஸ் பகுதி ; பிரமாண்டமான குழிகள் கொண்டது இப்பகுதி 4. கோப்பர் நிக்கஸ் (நீஷீஜீமீக்ஷீஸீவீநீus) வானியல் அறிஞர் கோபர்நிகஸ் பெயரால் அழைக்கப்படும் இப்பகுதியில் மிக மிக ஆழமுள்ள குழிகள் உள்ளது.

5. க்ளேவிஸ் ; கிண்ண வடிவில் பல குழிகள் காணப்படும் பகுதி. பார்ப்பதற்கு அழகாக இருக்கும் 6.

6. அரிஸ்டார்சஸ் பகுதி ; வித்தியாசமான பல நிலத்தோற்றங்கள் காணப்படும் பகுதி. விஞ்ஞானிகள் தீவிரமாக ஆராயும் பகுதி

7. சைனஸ் இரிடியம் ; பூமியில் காணப்படும் வளைகுடாக்கள் போன்ற பகுதி. என்ன…இந்த அதிசயங்களைப் பார்க்கவேண்டுமானால் செலவுதான் அதிகமாகும்...!
குளிர் காலத்தில் அதிகாலையில் மூச்சுவிட சிரமம் ஏற்படுவது இயல்பு. ஆனால், சிலருக்கு வியர்த்துக் கொட்டும் வெயில் காலத்திலும் கூட காலை வேளையில் மூச்சு திணறல் ஏற்படும். இதை சுவாசக் கோளாறு என எண்ணி சாதாரணமாக இருக்க வேண்டாம், உங்கள் இதயம் பலவீனம் அடைந்து வருகிறது என்பதை வெளிகாட்டும் அறிகுறி இது.
ஆண்களுக்கு ஏற்படும் விறைப்புத் தன்மை குறைபாடு, பெண்களுக்கு முன்கூட்டியே நிற்கும் மாதவிடாய் போன்றவையும் கூட இதயம் பலவீனம் அடைந்து வருகிறது என்பதை வெளிப்படுத்தும் அறிகுறிகள் தான் என மருத்துவர்கள் கூறுகிறார்கள்.
இவை மட்டுமின்றி, கால்களில் வீக்கம், ஈறுகளில் இரத்த கசிவு, குறட்டை என சில வழக்கத்திற்கு மாறான அறிகுறிகள் கூட இதயம் பலவீனம் அடைந்து வருகிறது என்பதற்கான அறிகுறிகளாக தான் தென்படுகிறது….
ஆண்களுக்கு ஏற்படும் விறைப்புத்தன்மை குறைபாடு, தமனி சார்ந்த நோய்களை குறித்து வெளிப்படும் பொதுவான அறிகுறியாக காணப்படுகிறது. நமது உடலின் தமனிகளில் ஏற்படும் ப்ளாக் ஆண்மையை குறைத்து, இதய கோளாறு ஏற்பட காரணியாக இருக்கிறது என கூறப்படுகிறது.
பெண்களுக்கு மாதவிடாய் நிற்கும் காலம் சீக்கிரமாக ஏற்படுவது இதய பாதிப்புகள் ஏற்படுவதற்கான காரணிகளாக கூட இருக்கலாம் என கூறப்படுகிறது. இதனால், இரத்த அழுத்தம், கொலஸ்ட்ரால் அளவு போன்றவை ஏற்படவும் வாய்ப்புகள் இருக்கின்றன.
இன்றைய வாழ்வியல் முறையில் பெண்கள் மத்தியில் உடல் உழைப்பு குறைந்து வருவது தான் இதற்கான பெரிய காரணியாக கருதப்படுகிறது.
மூச்சு திணறல் ஏற்படுவதற்கான பொதுவான காரணி குறட்டை. இரவு முழுவதும் உறங்கியும், காலையில் தூக்கம் வருவது, சில நேரத்தில் உறங்கும் போது சுவாசிப்பதை நமக்கே தெரியாமல் நிறுத்துவது போன்றவை நிறைய உடலியல் மாற்றங்கள் ஏற்படுத்துகிறது. இதனால், இதய நோய் பாதிப்பு ஏற்படும் சதவீதம் அதிகரிக்கிறது.
மேலும், இது இதயத் துடிப்பு விகிதத்தில் குறைபாடு ஏற்பட்டிருக்கிறது என்பதை வெளிபடுத்தும் அறிகுறியாகவும் இருக்கிறது. எனவே, தூக்கத்தில் மூச்சு திணறல் ஏற்படுவதை சாதாரணமாக எண்ண வேண்டாம். உடனே சிகிச்சை மேற்கொள்ள வேண்டியது அவசியம்.
ஈறுகளில் இரதம் கசிவது ஈறு சார்ந்த பிரச்சனையாக மட்டுமின்றி, இதய நலன் குறைபாடாக கூட இருக்கலாம். இரத்தத்தில் ஏற்படும் பாதிப்பு உடல் முழுதும் பிரச்சனை ஏற்படுத்த வல்லது. அதிலும் முக்கியமாக தமனிவழியாக இதய நோய்கள், மாரடைப்பு போன்றவற்றை உண்டாகவும் இது காரணியாக அமையலாம்.
எனவே, ஈறுகள் அல்லது பற்களில் இரத்தம் கசிதல் ஏற்பட்டாலோ, மிகுதியான வலி இருந்தாலோ உடனடியாக மருத்துவரை அணுகி பரிசோதனை செய்துக் கொள்ளுங்கள்.
இதயத்தில் செயல்திறன் குறைபாடு ஏற்பட்டுள்ளது என்பதை வெளிகாட்டும் அறிகுறியாக கூட கால்களில் வீக்கம் தென்படலாம் என மருத்துவர்கள் கூறுகிறார்கள்.
சில சமயங்களில் அதிக நேரம் நின்று கொண்டு வேலை செய்தால் கூட கால் வீக்கம் ஏற்படலாம். ஆனால், அது ஒரே இரவில் சரியாகிவிடும். நாட்கள் செல்ல செல்ல கால் வீக்கம் அதிகரிப்பது இதய செயலிழப்பு ஏற்படுவதற்கான அறிகுறியாகும்.
அனைவருக்குமே இதயத்தின் மீது ஓர் யானை உட்கார்ந்து அழுத்துவது போன்றோ, தோள்பட்டையை யாரோ பிழிந்து எடுப்பது உணர்வு ஏற்படுவதில்லை. ஏனெனில் இது மாரடைப்பு ஏற்படலாம் என்பதற்கான அறிகுறிகள்.
தொடர்ந்து, கழுத்து, தோள்பட்டை பகுதிகளில் வலி இருந்து கொண்டே இருப்பது இதய வலி அல்லது மாரடைப்பிற்கான அறிகுறியாக கூறப்படுகிறது.
மேல் வயிறு பகுதியில் எரிச்சல் அல்லது வலி போன்ற உணர்வு ஏற்படுவது, தொடர்ந்து இரைப்பை அசௌகரியமாக உணர்தல், சில சமயத்தில் ஏன் என்றே தெரியாமல் விக்கல் எடுப்பது போன்றவை கூட இதய வலி அல்லது மாரடைப்பின் அறிகுறியாக இருக்கலாம்.
குமட்டல், வியர்வை, மூச்சு தடைப்படுதல், தலை சுற்றல் போன்றவை ஏற்பட்ட சில மணி நேரத்தில் சிலருக்கு இதய வலி, மாரடைப்பு போன்றவை ஏற்பட்டு மருத்துவமனைக்கு வந்துள்ளதாக மருத்துவர்கள் கூறுகிறார்கள்.
வீட்டிலேயே எளிதாக செய்யக்கூடிய குறிப்புகள் சிலவற்றை பார்ப்போமா….. சந்தனம், முல்தானிமட்டி கலந்த, “பேஸ் பாக்’ உபயோகித்து வர, முகம்
பொலிவாகவும், மிருதுவாகவும் மாறும்.
* கடலைமாவுடன் சிறிது மஞ்சள் தூள், எலுமிச்சை சாறு, ஒரு டேபிள் ஸ்பூன்
பால் கலந்து முகத்தில் தடவி, காய்ந்தவுடன் மிதமான சுடுநீரில் கழுவ, முகம்
மிருதுவாகும்.
* ஆலிவ் எண்ணெயுடன் சர்க்கரை கலந்து உள்ளங்கைகளில் தேய்த்து கழுவ
வேண்டும். இவ்வாறு செய்ய உள்ளங்கைகளின் கடினத் தன்மை மறைந்து மிருதுவாக
மாறும்.
* பச்சை உருளைக்கிழங்கின் சாற்றை முகத்தில் தடவி வர சூரியக் கதிர்களால்
ஏற்படும் கருமை நிறம் மாறும்.
* 2 ஸ்பூன் முள்ளங்கி சாற்றுடன் 2 ஸ்பூன் மோர் சேர்த்து, முகத்தில் தடவி,
ஒரு மணிநேரம் கழித்து, சுடுநீரில் முகத்தை கழுவ வேண்டும். இதை தினசரி
செய்து வர, வெப்பத்தால் முகத்தில் ஏற்படும் தவிட்டு நிறமுள்ள புள்ளி
மறையும்.
* தேங்காய் தண்ணீரை முகத்தில் தொடர்ந்து 6 மாதம் தடவி வர சின்னம்மையால் ஏற்பட்ட வடு மறையும்.
* பூசணிக்காயை சிறு துண்டுகளாக்கி அதை கண்களை சுற்றி வைக்க கண்களைச் சுற்றி ஏற்படும் கருவளையம் மறையும்.
* பப்பாளி பழத்தை அரைத்து, முகத்தில் தொடர்ந்து தடவி வர முகப்பரு,
கரும்புள்ளி ஆகியவை மறையும்.
* புளித்த மோரை முகத்தில் 15 நிமிடம் தடவி, மிதமான சுடுநீரில் கழுவ முகம் பொலிவு பெறும். இதை தொடர்ந்து 15 நாட்களுக்கு செய்து வர நல்ல பலன் கிடைக்கும்.
நேத்துதான் நல்லாப் பேசிட்டு இருந்தார்… அதுக்குள்ள இப்படி ஆயிடுச்சே…” – நெருக்கமான நண்பர்கள் இப்படி வருத்தப்படுவதும், ”ஏற்கெனவே ரெண்டு அட்டாக் வந்திருக்கு. அதைக் கவனிக்காம விட்டிருக்கார். அதான், இப்படியாகிடிச்சு!” என உறவுக்காரர்கள் விளக்கம் சொல்வதையும் பல இடங்களில் காதுபடக் கேட்டு இருக்கிறோம். திடீர் மரணங்களுக்கு மிக முக்கியக் காரணமாக இருப்பது மாரடைப்புதான். நமது நாட்டில் 25 முதல் 69 வயதினருக்கு இடையே ஏற்படும் மரணங்களில் 25 சதவிகிதம் மாரடைப்பால்தான் நிகழ்கின்றன. இதய நோய் வராமல் தடுக்கவும், வந்துவிட்ட நோயில் இருந்து நம்மை நாமே மீட்டெடுக்கவும் பிரான்டியர் லைஃப்லைன் மருத்துவமனையின் தலைவரும் கார்டியோ தொராசிக் நிபுணருமான டாக்டர் கே.எம்.செரியன் சொல்லும் வழிகள் இதோ…

மாரடைப்புக்கான காரணம்

உடல் முழுவதும் ரத்தம் பாய்ச்சும் அதிமுக்கிய வேலையைச் செய்வது நம் இதயம். ‘லப் டப்’ தாள லயத்தோடு இதயம் துடித்து இயங்குவதால்தான், ரத்தத்தில் உள்ள ஆக்சிஜன் திசுக்களுக்கு எடுத்துச் செல்லப்படுகிறது. இப்படி உடல் முழுக்க ரத்தத்தை பம்ப் செய்யும் இதயம் இயங்கவும் ரத்தம் தேவை. இதயத்துக்குத் தேவையான இந்த ரத்தத்தை எடுத்துச் செல்லும் குழாய்களில் அடைப்பு ஏற்படும்போதுதான், மாரடைப்பு ஏற்படுகிறது. ரத்தக் குழாயில் கொழுப்புப் படிவதாலோ அல்லது ரத்தம் உறைந்துபோவதாலோ அடைப்பு ஏற்படலாம். இதனால், இதயத்துக்கு செல்லும் ஆக்சிஜன் நிரம்பிய ரத்த ஓட்டம் தடைப்பட்டு, இதயத் தசைகள் செயல் இழக்கும். இதைத்தான் மாரடைப்பு என்கிறோம்.

மாரடைப்பைத் தவிர்க்க முடியும்!

1உயர் ரத்த அழுத்தம், சர்க்கரை நோய், ரத்தத்தில் கொழுப்பு, புகை பிடித்தல், உணவில் அதிகக் கொழுப்பு, உடல் உழைப்புக் குறைவு, மன அழுத்தம், மரபுரீதியாகக் குடும்பத்தில் யாருக்காவது மாரடைப்பு ஏற்பட்டிருத்தல்…. என கொரனரி (இதய ரத்தக் குழாய் அடைப்பால் ஏற்படும்) மாரடைப்பு ஏற்படுவதற்கு பல காரணங்கள் உண்டு. உங்கள் மருத்துவரை அணுகி உயர் ரத்த அழுத்தம் மற்றும் ரத்தத்தில் சர்க்கரை – கொழுப்பு அளவினைத் தொடர்ந்து பரிசோதனை செய்து, தேவைக்கு ஏற்ப மருத்துவச் சிகிச்சை பெற்றாலே, மாரடைப்பைத் தவிர்க்கலாம்.

2குறைந்தபட்சம் ஆண்டுக்கு ஒரு முறையாவது ரத்த அழுத்தத்தைப் பரிசோதனை செய்துகொண்டால், மாரடைப்பு அபாயத்தை முன்கூட்டியே அறிந்து தடுக்க முடியும். ரத்த அழுத்தம் சராசரிக்கும் அதிகமாக இருந்தால், இந்தப் பரிசோதனைகளை அடிக்கடி மேற்கொள்வது நல்லது. சராசரி ரத்த அழுத்தம் என்பது (ஐடியல் பிளட் பிரஷர்) 130/80 எம்.எம்.எச்.ஜி-க்கும் குறைவாக இருக்கும்படி பார்த்துக்கொள்ள வேண்டும்.

3கொரனரி இதய நோய் வருவதற்கு சர்க்கரை நோய் ஒரு மிக முக்கியக் காரணம். எனவே, குறிப்பிட்ட கால இடைவெளிக்கு ஒரு முறை கட்டாயம் சர்க்கரை நோய் பரிசோதனை செய்துகொள்ள வேண்டும்.

4உங்கள் உடல் எடை அதிகமாக இருந்தால் அல்லது உங்கள் குடும்பத்தில் யாருக்காவது சர்க்கரை நோய் இருந்தால், உடனடியாக சர்க்கரை நோய் பரிசோதனை செய்து, ரத்தத்தில் சர்க்கரையின் அளவு கட்டுக்குள் இருக்கும்படி பார்த்துக்கொள்ளுங்கள்.

5குறைந்தது ஐந்து ஆண்டுகளுக்கு ஒரு முறையாவது ரத்தத்தில் உள்ள கொழுப்பின் அளவைப் பரிசோதனை செய்ய வேண்டும். மாரடைப்புக்கான காரணிகளில் ஏதேனும் ஒன்று இருந்தாலும் கொழுப்புப் பரிசோதனையை டாக்டரின் ஆலோசனைப்படி அவ்வப்போது மேற்கொள்ள வேண்டும்.

உணவுப் பழக்கம்

6மாரடைப்புக்கான அபாயத்தைக் குறைக்க, இதயத்துக்கு ஆரோக்கியம் தரும் உணவு அவசியம். கொழுப்பு, சர்க்கரை, உப்பு ஆகியவற்றின் அளவு குறைவாக இருக்கும் உணவுப் பொருட்களே இதயத்துக்கு நல்லது. அதிக அளவில் பழங்கள், பச்சைக் காய்கறிகள், தானியங்கள், கொழுப்பு குறைவான பால் பொருட்கள் போன்றவை மாரடைப்பு வராமல் தடுக்கும்.

7குறைந்த கொழுப்பு மற்றும் அதிக அளவில் புரதச் சத்து நிறைந்த பீன்ஸ், மாரடைப்புக்கான அபாயத்தைக் குறைக்கிறது. அசைவம் சாப்பிடுபவர்கள், ‘ரெட் மீட்’ என்று சொல்லக் கூடிய ஆடு – மாடு போன்றவற்றின் இறைச்சியைத் தவிர்க்க வேண்டும். ஏனெனில், இவற்றில் அதிக அளவு கொழுப்பு உள்ளது.

8தோல் நீக்கிய கோழி இறைச்சி மற்றும் மீன் போன்றவை ஆரோக்கியமானவை. ஆனாலும், அதிக அளவில் எண்ணெய்விட்டுப் பொரித்துச் சாப்பிடுவது தவறு. முட்டையின் வெள்ளைப் பகுதியில் அதிகப் புரதச் சத்து உள்ளது. ஆனால், அதன் மஞ்சள் கரு அதிகக் கொழுப்பு மிக்கது. எனவே, முட்டையின் மஞ்சள் கருவைத் தவிர்ப்பது மாரடைப்புக்கான வாய்ப்பைக் குறைக்கும்.

9பதப்படுத்தப்பட்ட உணவுகளைத் தவிர்க்க வேண்டும். ஏனெனில், அதில் அதிக அளவில் உப்பு உள்ளது. அது உயர்ரத்த அழுத்தத்தைத் தூண்டி விடும்.

10அதிக அளவில் சர்க்கரை உள்ள உணவுப் பொருட்களையும் தவிர்க்க வேண்டும். அந்த உணவுகள்ரத்தத்தில் சர்க்கரையின் அளவைக் கூட்டிவிடும். இதனால், அதிகப்படியாக உடல் எடையும் கூடும்.

11‘ஒமேகா-3-ஃபேட்டி ஆசிட்’ மாரடைப்பு அபாயத்தைக் குறைக்கும் தன்மை கொண்டது. மேலும், இது உயர் ரத்த அழுத்தத்தையும் கட்டுப்படுத்தும். ஆளி விதை (Flax seed) எண்ணெய், வால்நெட் எண்ணெய், சோயாபீன் எண்ணெய், நல்லெண்ணெய் போன்றவற்றில் இந்த ஒமேகா-3-ஃபேட்டி ஆசிட் உள்ளது. சால்மன் போன்ற சில மீன் வகைகளிலும் இந்த ஒமேகா – 3-ஃபேட்டி ஆசிட் நிறைந்து உள்ளது.

12சேச்சுரேட்டட் கொழுப்பு (Saturated fat) மற்றும் டிரான்ஸ் கொழுப்பு (Trans fat) ஆகியவை (ரத்தத்தில் கொழுப்பு அளவை அதிகரிப்பதன் மூலம்) கொரனரி மாரடைப்பு வருவதற்கான வாய்ப்பை அதிகப்படுத்தும். அதனால், இவற்றையும் தவிர்க்க வேண்டும்.

13இறைச்சி, பால் பொருட்கள், தேங்காய் எண்ணெய், பனை எண்ணெய் ஆகியவற்றில் சேச்சுரேட்டட் கொழுப்பு அதிக அளவில் உள்ளது. பொரிக்கப்பட்ட துரித உணவுகள், பேக்கரி பொருட்கள், அடைக்கப்பட்ட நொறுக்குத் தீனிகளில் அதிக அளவில் டிரான்ஸ் கொழுப்பு உள்ளது என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

14அதிக அளவில் மது அருந்துவது உடல்பருமனுக்கு வழிவகுக்கிறது. மேலும், சர்க்கரை நோய்க்கான வாய்ப்பையும் அதிகரிக்கிறது. எனவே, மது அருந்துவதைத் தவிர்க்க வேண்டும்.

உடற்பயிற்சி

15ஒரு நாளைக்கு குறைந்தது 30 முதல் 45 நிமிடங்களுக்கு உடற்பயிற்சி செய்ய வேண்டும். தொடர் உடற்பயிற்சிகள் மாரடைப்பு அபாயத்தைக் குறைக்கின்றன. உங்களுக்குரிய ஆரோக்கியமான எடையை சரிவரப் பராமரியுங்கள். இதய நோய்களை ஏற்படுத்தும் உயர் ரத்த அழுத்தம், உயர் கொழுப்பு மற்றும் சர்க்கரை அளவுகளைக் கட்டுக்குள் வைத்திருக்க உடற்பயிற்சி அவசியம்; மன அழுத்தத்தைக் குறைக்கவும் உடற்பயிற்சி உதவும்.

16தோட்டப் பராமரிப்பு, வீட்டு வேலைகள், மாடிப்படிகளில் ஏறி இறங்குவது, நடப்பதும் கூட நல்ல உடற்பயிற்சிதான். உங்கள் உடல் ஆரோக்கியமாக இருக்க வேண்டும் என்பதற்காக எப்போதும் உடற்பயிற்சி செய்துகொண்டு இருக்க வேண்டும் என்று இல்லை. யோகா மற்றும் தியானப் பயிற்சி போன்றவை மன அழுத்தம் மற்றும் ரத்த அழுத்தத்தைக் குறைப்பதால், மாரடைப்பு அபாயமும் குறையும்.

ஆரோக்கியமான உடல் எடையைப் பராமரித்தல்

17உங்கள் உடல் எடை ஆரோக்கியமானதுதானா என்பதை பாடி மாஸ் இன்டெக்ஸ் மூலம் கணக்கிடலாம். பி.எம்.ஐ. புள்ளிகள் 25 அல்லது அதற்கு மேல் இருந்தால், உஷாராகிவிட வேண்டும்.

18இடுப்பு அளவைக் கணக்கிடுவதால், வயிற்றுப் பகுதியில் எவ்வளவு கொழுப்பு உள்ளது என்பதைத் தெரிந்துகொள்ள முடிகிறது. ஆண்களுக்கு சராசரி இடுப்பு அளவு என்பது 40 இன்ச் அளவுக்கும் குறைவாக இருக்க வேண்டும். பெண்களுக்கு 35 இன்ச் அளவுக்கும் குறைவாக இருக்கும்படி பார்த்துக்கொள்ள வேண்டும்.

19பெரியவர்களுக்கு உடல் எடை கூடுகிறது என்றால், அது பெரும்பாலும் தசை எடை கூடுதலாக இருக்காது, கொழுப்பு அதிகரிப்பாகத்தான் இருக்கும். அதிக அளவிலான உடல் எடை என்பது உயர் ரத்த அழுத்தம், ரத்தத்தில் கொழுப்பு அளவை அதிகரிப்பது, சர்க்கரை நோய் போன்ற பிரச்னைகளுக்கு வழிவகுப்பதுடன் மாரடைப்புக்கான வாய்ப்பையும் அதிகரிக்கும்.

20குறைந்த அளவிலான உடல் எடைக் குறைப்புகூட மிகப் பெரிய பலனை அளிக்கும். உங்கள் எடையை வெறும் 10 சதவீதம் குறையுங்கள், அது உங்கள் ரத்த அழுத்தத்தைக் குறைப்பதுடன், ரத்தத்தில் கொழுப்பு அளவையும் குறைத்து, சர்க்கரை நோய்க்கான வாய்ப்பையும் குறைக்கிறது.

புகை பிடிக்காதீர்கள்

21புகை பிடிப்பது, புகையிலைப் பொருட்களைப் பயன்படுத்துவதை உடனடியாக நிறுத்துங்கள். மாரடைப்பு ஏற்பட மிக முக்கியக் காரணங்களில் ஒன்றாக இருப்பது புகையிலைப் பழக்கம். சிகரெட் புகையில் உள்ள நிகோடின் என்ற நச்சு ரத்தக் குழாயினை சுருக்கி, இதயத் துடிப்பு எண்ணிக்கை மற்றும் ரத்த அழுத்தத்தை அதிகரிக்கச் செய்கிறது. சிகரெட்டில் உள்ள கார்பன் மோனாக்சைடு ரத்தத்தில் ஆக்சிஜனுக்கு மாற்றாகப் போய் உட்கார்ந்து கொள்கிறது. இதனால், உடலுக்குத் தேவையான போதுமான ஆக்சிஜன் கிடைப்பதற்காக (அதிகம் ரத்தம் செலுத்தும்படி) இதயம் கூடுதலாக வேலை செய்யவேண்டி இருக்கிறது. நீங்கள் புகைப்பதை நிறுத்தினால் அடுத்த ஓர் ஆண்டுக்குள் ஆச்சரியப்படத்தக்க வகையில் இதய நோய்க்கான வாய்ப்புகளும் குறைந்துவிடும். புகைப்பழக்கம் இல்லாத, ஆனால் ஒருவர் புகைத்துவிட்ட காற்றை சுவாசிப்பவருக்கும் கூட பாதிப்பு ஏற்படும். நீங்கள் புகைப்பதால், புகைப்பழக்கமே இல்லாத உங்கள் நண்பர்கள், குடும்பத்தினரும்கூட பாதிப்புக்கு ஆளாகின்றனர்.

மருந்து-மாத்திரைகள்

22உங்களுக்கு உயர் ரத்த அழுத்தம், சர்க்கரை நோய், அதிகக் கொழுப்பு போன்ற பிரச்னைகள் இருந்தால், டாக்டர்கள் பரிந்துரைத்திருக்கும் மருந்து-மாத்திரைகளைத் தவறாமல் எடுத்துக் கொள்ளுங்கள். ஒருவேளை உங்களின் இதய ரத்தக் குழாயில் அடைப்பு ஏற்பட்டு பைபாஸ் அறுவைச் சிகிச்சை அல்லது ஆஞ்சியோபிளாஸ்டி செய்ய வேண்டும் என்று டாக்டர் பரிந்துரைத்தால், உடனடியாக அதைச் செய்து கொள்ளுங்கள். பயம் காரணமாகத் தள்ளிப் போடாதீர்கள்.

23மாரடைப்புக்கான அறிகுறிகள் தென்பட்டால், உடனடியாக மருத்துவமனைக்குச் செல்லுங்கள். மருத்துவமனைக்குச் செல்லும் முன் ஆஸ்பிரின் மாத்திரையைப் பயன்படுத்துங்கள். அது இதயத் தசைப் பாதிப்பைக் குறைக்கும்.

24தொடர் மருத்துவப் பரிசோதனை, ஆரோக்கியமான வாழ்க்கைச் சூழ்நிலை, மாரடைப்புக்கான காரணிகளைக் கட்டுப்படுத்துவது போன்றவை நீண்ட நாள் ஆரோக்கியமாக வாழ வழிவகுக்கும்.

பரிசோதனைகள்

25எளிய ஈ.சி.ஜி. பரிசோதனை மூலம் வலி இன்றி ஒருவரின் இதய மின் செயல்பாட்டைக் கண்டறிய முடியும். இது இதயம் எவ்வளவு வேகமாகத் துடிக்கிறது என்பதைக் காட்டும். இதயம் எந்தளவு பாதிக்கப்பட்டு உள்ளது என்பதை முன்கூட்டியே தெரிந்து கொண்டு உரிய சிகிச்சை அளித்தால், மாரடைப்பு வருவதைத் தடுக்க முடியும்.

உடலில் எங்கு கொழுப்பு அதிகமாக உள்ளது என்பதைக் கண்டறிவது இப்போது எளிமை. சாதாரண சி.டி. ஸ்கேன் எடுத்துப் பார்த்தாலே, கொழுப்பு தோலுக்கு அடியில் உள்ளதா அல்லது வயிற்றுப் பகுதிகளில் உள்ளதா என்பதைத் துல்லியமாகக் கண்டறிந்துவிட முடியும். இதயத் தசைகளுக்குச் செல்லும் ரத்தக் குழாயில் எவ்வளவு கொழுப்பு உள்ளது? எத்தனை ஆண்டுகளாக உள்ளது என்பதை 320 ஸ்லைஸ் சி.டி. ஸ்கேன் மூலம் கண்டறிய முடியும். எதிர்காலத்தில் ஒருவருக்குக் கொழுப்பு அடைப்பு ஏற்படுமா என்பதையும் துல்லியமாகச் சொல்லிவிட முடியும். ரத்தக் குழாயில் 0.5 மி.மீ. அளவுக்குக் கொழுப்பு படிந்திருந்தால் கூட, இந்தப் பரிசோதனை மூலம் கண்டறிந்து அதற்கான சிகிச்சையை மேற்கொள்ளலாம்.
பட்டா: ஒரு நிலம் இன்னார் பெயரில் உள்ளது என்பதை குறிக்கும் வகையில் வருவாய்துறை அளிக்கும் சான்றிதழ்.
சிட்டா: குறிப்பிட்ட நிலத்தின் பரப்பளவு அதன் பயன்பாடு, யாருடைய கட்டுபாட்டில் உள்ளது என்பது தொடர்பான விவரங்கள் அடங்கிய வருவாய்த்துறை ஆவணம்.
அடங்கல்: நிலத்தின் பரப்பு, பயன்பாடு, கிராமத்தின் மொத்த நிலத்தில் இது எந்த பகுதயில் உள்ளது என்ற விவரங்கள் அடங்கிய வருவாய்த்துறை ஆவணம்.
கிராம நத்தம்: ஒவ்வொரு கிராமத்திலும் குடியிருப்பு பயன்பாட்டுக்காக ஒதுக்கப்பட்டுள்ள நிலம்.
கிராம தானம்: கிராமத்தின் பொது பயன்பாட்டுக்காக நிலத்தை ஒதுக்குவது.
தேவதானம்: கோவில் பயன்பாட்டுக்காக குறிப்பிட்ட நிலத்தை தானமாக அளித்தல்.
இனாம்தார்: பொது நோக்கத்துக்காக தனது நிலத்தை இலவசமாக அளித்தவரை குறிக்க பயன்படுத்தும் சொல்.
விஸ்தீரணம்: நிலத்தின் பரப்பளவு. எல்லைகளை குறிப்பது.
ஷரத்து: பிரிவு.
இலாகா: துறை.
கிரயம்: நிலத்தை ஒருவருக்கு விற்பனை செய்வதை ஆவணபடுத்துதல்.
வில்லங்க சான்று: ஒருநிலத்தை ஒருவருக்கு விற்பனை செய்த அதன் உரிமையாளர், அதனை மறைத்துவிட்டு, அதே நிலத்தை வேறு ஒருவருக்கு விற்பனை செய்வது மோசடி. இந்த விவரத்தை அறிந்து கொள்ள உதவும் பதிவுத்துறை ஆவணம்.
புல எண்: நில அளவை எண்.
இறங்குரிமை: வாரிசுரிமை.
தாய்பத்திரம்: ஒரு குறிப்பிட்ட நிலம், இப்போதைய உரிமையாளருக்கு முன்னர் யாரிடம் இருந்தது என்பதை அறிய உதவும் முந்தய பரிவர்த்தன ஆவணங்கள்.
ஏற்றது ஆற்றுதல்: குறித்தவகை பொறுப்பை நிறைவற்றுவதற்கு உறுதி அளித்தல்.
அனுபவ பாத்தியதை: நிலத்தை பயன்படுதிகொள்ளும் உரிமை.
சுவாதீனம் ஒப்படைப்பு: நிலத்தின் மீதான உரிமையை ஒப்படைத்தல்.
ஜமாபந்தி: வருவாய் தீர்வாயம்.
நன்செய்நிலம்: அதிக பாசன வசதி கொண்டநிலம்.
புன்செய்நிலம்: பாசன தேவைக்கு மழையை நம்பியுள்ள நிலம்.
குத்தகை: ஒரு நிலத்தை பயன்படுத்தும் உரிமையை குறிப்பிட்ட காலத்துக்கு சில நிபந்தனைகளுடன் அளிப்பது அல்லது பெறுவது
 — with Manickam.
ஒரு ரூபாய் மட்டுமே செலவு செய்தால் போதும் ஈ.சி எனப்படும் வில்லங்கச் சான்றிதழை ஆன்லைனில் பெற்றுக் கொள்ளலாம். தமிழ்நாடு அரசு பத்திரப்பதிவுத்துறை அதற்கான ஏற்பாடுகளை செய்துள்ளது. பொதுவாகவே ஈ சி (EC - Encumbrance Certificate) எனப்படும் (வில்லங்க சான்றிதழ்) கிடைக்க நிறைய பேருக்கு ஒன்று ஒரு தரகரை நாட வேண்டும் அல்லது ரிஜஸ்டர் ஆபிசுக்கு இரண்டு அல்லது மூன்று முறை நடக்க வேண்டிய கட்டாயம்.

இனிமேல் 1 ரூபாயில் ஆன்லைனில் எடுத்துவிடலாம். அது போக இதை வீட்டுக்கு கொரியர் அல்லது ஸ்பீட் போஸ்ட்டில் கூட அனுப்பி வைக்க இந்த அரசாங்கம் ரெடி நீங்க ரெடியா?

ஈஸி எடுக்க 1 ரூபாய். முதல் வருடத்திற்க்கு 15 ரூபாயும் ஒவ்வொரு வருஷம் கூடுதல் ரெக்கார்ட் பெற 5 ரூபாய், பத்து வருடத்திற்க்கு தோராயமாக 1+15+9 = 61 ரூபாய் தான் செலவு. இதை உங்கள் வீட்டுக்கே கொரியர் செய்ய ரூபாய் 25 தான் செலவு. ஆன்லைனில் நேரடியாக தேடி பிரின்ட் அவுட் செய்து கொள்ள வெறும் 100 ரூபாய் தான் மொத்த செலவு.

இது போக ரெஜிஸ்டர் டாக்குமன்ட் காப்பி, சிட்டா அடங்கல் கூட இங்கு காப்பி கிடைக்கும். சென்னை, கடலூர், கோயம்புத்தூர்,திருச்சி, சேலம், மதுரை, தஞ்சாவூர், வேலூர் நம்ம திருநெல்வேலி அலுவலகங்களுக்கும் இது பொருந்தும். அது போக ஆங்கிலத்திலும், தமிழிலும் ஃபார்ம் ஃபில் செய்யலாம்.

அது போக பதிவு திருமண சான்றிதழ் கூட உங்களுக்கு இங்கே ஆன்லைன் மூலம் டவுன்லோட் செய்யலாம். அதற்கு சார்ஜ் 1ருபாய். கொரியரில் அனுப்ப ஒரு காப்பிக்கு 2 ரூபாய் மற்றூம் கொரியர் சார்ஜ் 25 ரூபாய் மட்டுமே.

அது போக சிட் கம்பெனிகள், சொசைட்டிகளின் டாக்குமென்ட்களை பற்றி தெரிந்து இன்வெஸ்ட் செய்யுங்கள் அது கிடைக்க கூட ஆன்லைன் லின்க் உள்ளது

உங்களின் அரசாங்க லேன்ட் வேல்யு கைட்லைன்ஸ் பெறவும் முடியும். இதனால் நீங்கள் வாங்கும் சொத்துக்கு எவ்வளவு ஸ்டாம்ப் பேப்பர் என முன்னமே திட்டமிட முடியும்.

அதற்கான இணைய தள முகவரிகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

ஈ.சி சர்டிபிகேட் ஆங்கிலத்தில் பெற
http://www.tnreginet.net/igregn/webAppln/EC.asp?tams=0

ஈ.சி சர்டிபிகேட் தமிழில் பெற
http://www.tnreginet.net/igregn/webAppln/EC.asp?tams=1

டாக்குமெண்ட் ரிஜிஸ்ட்ரேசன்
http://www.tnreginet.net/igregn/webAppln/cert_document.asp

திருமணத்தை பதிவு செய்ய
http://www.tnreginet.net/english/smar.asp

சீட்டு கம்பெனி ரிஜிஸ்டர்
http://www.tnreginet.net/english/schit.asp

சொசைட்டி ரிஜிஸ்டர்
http://www.tnreginet.net/english/society.asp

லேண்ட் வேல்யூ சர்டிபிகேட் பெற
http://www.tnreginet.net/Guidelineva…/gvaluemainpage2011.asp

சற்றே சிந்தித்து உங்கள் நண்பர்களுக்கும் பகிருங்கள்...
 — with Poopathy RajaPrince Princeand Prince Prince.
1. அதிகாலையில் நம்மைச் சுற்றி கவனத்தைச் சிதறடிக்கும் நிகழ்ச்சிகள்இருக்காது. ஆகவே படிப்பில் கவன ஈர்ப்பு அதிகமாக இருக்கும். ஞாபகசக்தியும் அதிகமாக இருக்கும்.
2. வெண்டைக்காய், வல்லாரைக் கீரை ஆகியவை ஞாபக சக்தியைஅதிகரிக்கும்.
3. எந்த ஒரு விஷயமுமே நாம் எவ்வளவு நேரம் அதனோடு தொடர்பில் இருக்கிறோமோ அந்த அளவிற்கு அவை நம் ஞாபகத்தில் இருக்கும்,உதாரணமாக நம் பெயர், ஊர் முதலியவை. அப்படித் தொடர்பு நேரத்தைக் கூட்டத்தான் படிக்கும்போதே குறிப்பெடுத்துக் கொள்ள வேண்டுமென்கிறோம். மனதில் திருப்பி ஒருமுறை கொண்டு வந்து சொல்லிப் பார்த்துக் கொள்ள வேண்டுமென்கிறோம். எழுதிப் பார்க்கவேண்டும் என்று கூறுகிறோம்.
4. படங்கள் வரைவது ஞாபக சக்தியைக் கூட்டும். நம் மூளையின் அதிகம் உபயோகப் படுத்தாத ஒரு பகுதி படங்களைச் சேமித்து வைக்கிறது.
5. படிப்பவற்றை ஒரு chart, table, tree diagrams, mnemonics போன்று தயாரித்துப் படிப்பதும் ஞாபக சக்தியைக் கூட்டும். VIBGYOR - mnemonics
6. நடந்த சம்பவங்களோடு அல்லது புத்தகத்திலுள்ள படத்துடன் பாடத்தை தொடர்பு வைத்திருப்பதும் நினைவுத் திறனை மேம்படுத்தும். இந்திய V உருவம், ஸ்ரீலங்கா தேங்காய் உருவம்.
7. வாய்விட்டுப் படித்தால் சுற்றி நடப்பவை எவையும் காதில் விழாது.ஆகவே கவனச் சிதறல் இருக்காது
8. படித்தவற்றை யாருக்கோ விளக்கிச் சொல்வது போல வாய் விட்டுச் சொல்லிப் பார்க்கும்போது, கோர்வையாக வராவிட்டால், மறந்து போனது என்ன என்று கண்டு பிடிக்கலாம். (மற்றவர்கள் என்ன நினைப்பார்கள் என்று கவலைப் படாதீர்கள். மார்க் உங்களது!)
9. மேற்கண்டபடி நன்றாகச் சொல்ல வந்தாலும், எழுதிப் பார்ப்பதுநல்லது. ஏனென்றால் எழுதும்போதுதான் நீங்கள் எதில் குழம்பிப்போயிருக்கிறீர்கள் என்று தெரியும்.
10. ஒன்றரை மணி நேரத்திற்கு மேல் கிரகிக்கும் சக்தி குறைவதால்சிறிது ஓய்வெடுக்க வேண்டும். மேலும் குறைந்தது 6 மணிநேரமாவது தூங்கினால்தான் மூளையும் உடம்பும் புத்துணர்ச்சிபெறும்.
11. குறுக்கெழுத்துபோட்டியும், சுடோக்கும், புதிர்களும் கற்கும் திறனையும் நினைவாற்றலையும் மேம்படுத்தும் (அறிவுத்திறனை விட!).


இருதய இரத்தக் குழாய் அடைப்புகளை திறக்க அருந்தும் பானத்திற்கு உரிய
மூலப்பொருள்கள்:
1 கப் எலுமிச்சை சாறு
1 கப் இஞ்சிச் சாறு
1 கப் பூண்டு சாறு
1 கப் ஆப்பிள் சைடர் விநிகர்.
எல்லாச் சாறுகளையும் ஒன்றாக கலக்குங்கள். இலேசான இளஞ்சூட்டில் (சிம்மரில்) 60 நிமிடம் கொதிக்க வையுங்கள். நான்கு கப் மூன்றாக குறையும். சூடு ஆறியவுடன் சாறு இருக்கும் அளவுக்கு சம அளவு இயற்கைத் தேனை கலந்து ஜாரில் வைத்துக் கொள்ளுங்கள்.
நாள்தோறும் காலை உணவுக்கு முன் ஒரு டீ ஸ்புன் பானத்தை
அருந்துங்கள் மகிழ்ச்சியுடன் பானத்தை அருதுங்கள்….சுவையாகவும் இருக்கும் நீங்களே உங்களை பைபாஸ் அறுவை சிகிச்சையிலிருந்து காப்பாற்றிக் கொள்ளுங்கள்.
 — with Abdur RahmanPoopathy RajaPrince Prince and Prince Prince.
    Kamal Kanna
    Write a comment...