Thursday 29 September 2016

நாள் தோறும் நாம் ஊழைத்து தேடி பெற்றுச் செலவு செய்யும் இந்த ரூபாய் நோட்டுக்களில்,நாணயங்களில் உள்ள மதிப்பை நாம் அறிவோம்.
ஆனால் இந்திய ரூபாய் நோட்டுக்களில் 5, 10 என ஒவ்வொரு நோட்டிலும் ஒவ்வொரு புகைப்படங்கள் இடம்பெற்றிருக்கும். அவற்றை நீங்கள் கவனித்துள்ளீர்களா? இந்திய வரலாற்றை பறைசாற்றும் வகையில் எந்தெந்த ரூபாய் நோட்டுக்களில் என்னென்ன புகைப்படங்கள் உள்ளன தெரியுமா..?
ரூபாய் 5 – விவசாயத்தின் பெருமை
ரூபாய் 10 – விலங்குகள் பாதுகாப்பு (புலி, யானை, காண்டாமிருகம்).
ரூபாய் 20 – கடற்கரை அழகு (கோவளம்)
ரூபாய் 50 – அரசியல் பெருமை (இந்திய நாடாளுமன்றம்)
ரூபாய் 100 – இயற்கையின் சிறப்பு (இமயமலை)
ரூபாய் 500 – சுதந்திரத்தின் பெருமை (தண்டி யாத்திரை)
ரூபாய் 1000 – இந்தியாவின் தொழில்நுட்ப மேம்பாடு ஆகியவற்றை குறிக்கும் வகையில் ரூபாய் நோட்டுகளில் அச்சிடப்பட்டிருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
அது போல இந்திய நாணயங்கள் எங்கே தயாரிக்கப்படுகின்றன என்பது தெரியுமா?
டெல்லி, மும்பாய், கொல்கத்தா மற்றும் ஹைதராபாத் ஆகிய நகரங்களில் தயாரிக்கப்படுகின்றன. எந்தக் காசு எந்த நகரத்தில் தயாரிக்கப்பட்டது என்பதற்கும் ஒரு குறி இடப்படுகிறது. நாணயங்களின் அடியில் தயாரிக்கப்பட்ட ஆண்டு குறிப்பிடப்பட்டிருக்கும். அதனைப் பார்த்திருப்பீர்கள்.
அத்துடன் ஒரு குறியும் இடம் பெற்றிருக்கும்.அந்தக் குறியை வைத்து அந்த நாணயம் எந்த ஊரில் தயாரிக்கப்பட்டது என்பதை அறியமுடியும். நாணயத்தில் உள்ள ஆண்டுக்குக் கீழே,
ஒரு புள்ளி இருந்தால் அது டெல்லியிலும்,
டைமண்ட் வடிவம் இருந்தால் அது மும்பாயிலும்,
நட்சத்திர வடிவம் இருந்தால் அது ஹைதராபாத்திலும்,
எந்தக் குறியீடும் இல்லாமல் இருந்தால் அது கொல்கத்தாவிலும்தயாரிக்கப்பட்டது ஆகும்.
சரி...உங்கள் பையில் உள்ள நாணயத்தினை எடுங்கள்; எந்தக் குறி இருக்கிறது என்று பாருங்கள். அது எந்த ஊரில் தயாரானது என்று தெரிந்துவிடும்.
இதுக்கிடையிலே இது வரை நாம் பயன்படுத்திய பணங்கள் காகிதங்களாகவும், நாணயங்களாகவும்தான் பார்த்து இருக்கிறோம் . ஆனால் இப்பொழுதைய நிலையில் பல வெளி நாடுகளில் பிளாஸ்டிக்குகளால் செய்யப்பட்டக் கரன்சிகளும் உலா வரத் தொடங்கிவிட்டன எனது அடிசினல் தகவல்
 — with Praveen Venkatesh.

No comments:

Post a Comment