Sunday 8 February 2015

எந்தவொரு சூழ்நிலையிலும் ஆனந்தமாக இருக்க
ஓஷோ சொல்லும் வழிமுறை :-
அந்தக் கிராமத்தின் ஓய்வு விடுதியில், ஒரு நாள் இரவு ஓஷோவும் மாநில அமைச்சர் ஒருவரும் அடுத்தடுத்த அறைகளில் தங்கி இருந்தனர். இரவு முழுவதும் முப்பது அல்லது நாற்பது நாய்கள் அந்த விடுதியைச் சுற்றி குரைத்துக் கொண்டே இருந்தன. அமைச்சரால் தூங்கவே முடியவில்லை.
அவர், அன்று காலை முழுவதும் பயணம் செய்திருந்தார்.மறுநாளும் அலைச்சல் இருக்கிறது. அதை நினைக்க நினைக்க அமைச்சருக்குக் கோபம் அதிகமானது. நாய்களோ வெறித் தனமாகக் குரைத்து, இரவின் அமைதியைக் கெடுத்தன. ஆனால், இத்தனைக்கும் மத்தியில் ஓஷோ அடுத்த அறையில் நிம்மதியாக உறங்கிக் கொண்டிருந்தார்.
ஓஷோவை எழுப்பிய அமைச்சர், ''என்ன மனிதர் நீங்கள்... இவ்வளவு சத்தத்துக்கு மத்தியில் உங்களால் எப்படி உறங்க முடிகிறது?'' என்று புலம்பினார்.
ஓஷோ, தனது வழக்கமான கிண்டலுடன் கூறினார்: ''அந்த நாய்கள், உங்களுக்கு ஆதரவாகவோ அல்லது எதிராகவோ இங்கு கூடவில்லை; கோஷமிடவில்லை! பாவம், அந்த நாய்களுக்கு... இங்கு ஒரு மந்திரி தங்கி இருப்பது தெரியாது. அவை, பத்திரிகை படிப்பதில்லை. அவற்றுக்கு அறிவும் கிடையாது. அந்த நாய்களுக்கும் உங்களுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை.
அவை, தங்களுக்கே உரிய குரைக்கும் வேலையைப் பார்க்கின்றன. நீங்கள், தூங்குகிற வேலையைப் பாருங்கள்!'' என்றார்.
''நாய்கள் இப்படி ஓயாமல் குரைத்தால், நான் எப்படி தூங்க முடியும்?'' என்றார் அமைச்சர்.
உடனே ஓஷோ, ''நீங்கள், அவை குரைப்பதை எதிர்த்துப் போராடுகிறீர்கள். அப்படிப் போராடாதீர்கள். பிரச்னை குரைப்பொலி அல்ல... உங்கள் எதிர்ப்பு உணர்வு. நீங்கள், சத்தத்துக்கு எதிராக இருக்கிறீர்கள்;இந்த நாய்கள் குரைப்பதை நிறுத்தினால்தான் தூங்க முடியும் என்று ஒரு நிபந்தனை ஏற்படுத்தி விட்டீர்கள். நாய்கள் உங்களது நிபந்தனையைக் கவனிக்கப் போவது இல்லை.
நீங்களும் உங்கள் நிபந்தனையை விலக்கப் போவது இல்லை. ஆனால், நிபந்தனையை விலக்கினால் மட்டுமே நிம்மதி பெற முடியும். நடைமுறைக்குச் சாத்தியமானதும் அதுதான்!
நாய்களின் குரைப்பை ஏற்றுக் கொள்ளுங்கள். இந்த இரவிலும் எவ்வளவு சக்தியுடன் அவை குரைக்கின்றன...பார்த்தீர்களா? ஏற்பு உணர்ச்சியுடன் கவனித்தால், குரைப்புச் சத்தமும் ஒருவகை மந்திரம்தான்!''என்றார் ஓஷோ.
'உதவாக்கரை யோசனை!' என்று மனதுக்குள் பழித்தபடி போனார் மந்திரி. ஆனால் காலையில், மிகுந்த மகிழ்ச்சியுடன் வந்து ஓஷோவைச் சந்தித்தார் அமைச்சர்!
''ஆச்சரியம்தான்! எனது எதிர்ப்பு உணர்ச்சியை விலக்கிக் கொண்டு, நாய்கள் குரைப்பதைக் கவனித்தேன். ஆழ்ந்து ரசிக்கவும் தொடங்கினேன். அப்படியே உறங்கிப் போனேன்'' என்றார் அமைச்சர்.
ஓஷோ நமக்குச் சொல்கிறார்: ''இதை, நீ ஞாபகத்தில் வைத்துக் கொள். உன்னைச் சுற்றி இருப்பவற்றால் நீ எரிச்சல் அடைந்தால், உன் முகத்தை உள்முகமாகத் திருப்பு. எரிச்சலுக்கான காரணம் நீயாகத்தான் இருப்பாய். உனது எதிர்பார்ப்பு அல்லது ஆசை வேறாக இருந்திருக்கும். அல்லது ஏதோ ஒரு நிபந்தனையை உனக்குள் நீ விதித்திருப்பாய். அதுதான் உனது எரிச்சலுக்குக் காரணம். உலகத்தை நமக்கேற்ப நிர்ப்பந்தப்படுத்த முடியாது. அதை எதிர்த்துப் போராடும்போது நீ வெறுப்படைகிறாய்'' என்கிறார்.
--- ஓஷோ --
ஓஷோ கதைகள்..........
மதவாதிகள் ,, போதனை செய்வோர் செய்யும் சதியை
ஓஷோ விளக்குகிறார் ஆழ்ந்து , கவனமாக படியுங்கள்
நாய் ஒன்று தன் இன நாய்களுக்கு போதனை செய்து வந்தது.
கடவுள் தன் வடிவில் நாயைப் படைத்தார் என்று அது சொல்வதுண்டு.
எல்லா நாய்களுக்கும் அதன் மீது ஒரு குருவுக்குள்ள மரியாதை உண்டு.
அந்த நாய் மற்ற நாய்களிடம் எப்போதும் குரைக்கக் கூடாது என்று போதனை செய்து வந்தது.
எந்த நாய் குரைப்பதைக் கண்டாலும்
அந்த இடத்திலேயே அது குரைப்பது ஒரு பயனற்ற செயல்
என்று போதிக்க ஆரம்பித்துவிடும்.
இந்த போதனை செய்பவர்களே இப்படித்தான்!
எது ஒன்றை தவிர்க்க முடியாதோ அதைத்தான் செய்யக்கூடாது என்று வலியுறுத்துவார்கள்.
மற்ற நாய்களும் குரைப்பதைத் தவிர்க்க முயற்சித்தும் அவற்றால் முடியவில்லை.
எனவே குற்ற உணர்வுடன் அவை ஒருநாள் ஒரு இடத்தில் கூடியபோது ஒரு நாய்
,''நமது குரு சொல்வது உண்மை.
குரைப்பது ஒரு தேவையற்ற செயல் அது நம் மரியாதையைக் குறைக்கிறது.
எனவே நாம் நாளை ஒரு நாள் எங்காவது ஒரு மூலையில் முடங்கிக் கிடந்தாவது நாளை முழுவதும் குரைக்காமல் இருப்போம்,
''என்று கூற அனைத்து நாய்களும் அதை ஆமோதித்தன.மறுநாள் சொன்னதுபோல நாய்கள் தங்களை கட்டுப்படுத்திக் கொண்டு குரைக்காமல் இருந்தன.
அப்போது அந்த குரு நாயானது வெளியே வந்தது.
அதற்கு ஒரே அதிசயம்.எங்குமே குரைப்பு சப்தம் கேட்கவேயில்லை.
அதற்கு தெரிந்து விட்டது,
தமது சொல்லுக்கு எல்லா நாய்களும் மதிப்புக் கொடுத்துள்ளனவென்று.
அதே சமயம் அதற்கு ஒரு பயமும் வந்துவிட்டது.
எல்லா நாய்களும் குரைக்கவில்லை என்றால் தனக்கு வேலை எதுவும் இருக்காதே,
யாருக்கும் ஆலோசனை கூற முடியாதே , தனக்கு மதிப்பு கிடைக்காதே என்ற அச்சம் ஏற்பட்டது.
அப்போது தனக்கே குரைக்கவேண்டும்போலத் தோன்றியது.
அருகில் நாய் எதுவும் இல்லாததால் தைரியமாக அது குரைத்தது.
அவ்வளவுதான்.
அடக்கிக் கொண்டிருந்த நாய்கள் அவ்வளவும் தங்களுக்குள் யாரோ கட்டுப் பாட்டை மீறி விட்டார்கள் என்ற தைரியத்தில்
எல்லாம் ஒன்று சேரக் குரைத்தன.
இப்போது குருவான நாய்க்கும் மகிழ்ச்சி,இனிமேல் எல்லோருக்கும் புத்திமதி சொல்லலாம்
நமக்கு மரியாதை கிடைக்கும் என்று.
இப்படி சமயவாதிகள் மனிதனுக்கு எதுவெல்லாம் இயல்பானதோ
அதை எல்லாம் உன்னை குற்றவுணர்வுடன் அதை
செய்யும்படி ஆக்கிவிட்டனர் .. காதல், காமம் , கோபம் ,
இன்னும் உன் இயல்பான தன்மைகளை எல்லாம்
இப்படி போதனை கொடுத்து , அவன் வாழ்வதற்கு ,
உன்னை உறிஞ்சி அவன் வாழ்வதற்கு
உன்னை , உன் சுயதன்மையை பலிகடா ஆக்கிவிட்டான் .
--- ஓஷோ --
உடலில் ஏற்படும் சூட்டை வெறும் 2 நிமிடத்தில் போக்கும் ரகசிய மற்றும் சக்தி வாய்ந்த எளிய வழி..
நண்பர்களே இந்த செய்தியை நீங்கள் படித்தது மட்டுமின்றி மற்ற (குழந்தை இல்லாதவர்கள், உஷ்ண உடம்பால் பாதிக்க பட்டவர்களும்) பயன் பெற இந்த செய்தியை பகிர்ந்து உதவுங்கள்.
தற்போது நிலவி வரும் பருவ நிலா மாற்றத்தால் நம்மில் பலருக்கு உடலில் அதிக உஷ்ணம்(வெப்பம்) ஏற்படுகிறது,
இது முக்கியமாக அதிக நேரம் வெளியில் பயணங்கள் மேற்கொள்வோருக்கும், அதிக நேரம் நாற்காலி, சோபா மீது உட்கார்ந்திருப்பதாலும் ஏற்படுகிறது, இதனால் நம் தலை முடி முதல் கால் வரை உள்ள அனைத்தும் ஆரோக்கியத்தை இழக்கிறது,
இதனால் ஏற்படும் நோய்கள் முக்கியமாக முகப்பரு, தோல் வியாதிகள், தலை முடி உதிர்தல், வாயிற்று வலி, உடல் எடை குறைதல் போன்ற எரிச்சலூட்டும் நிகழ்வுகள் நிகழ்கிறது, இதனை சரி செய்ய நம் சித்த பெருமைக்க அன்றைய காலகட்டத்திலேயே ஒரு எளிய மற்றும் ரகசியமான வழியை உங்களுக்காக கொடுக்கிறோம்.
தேவையான பொருள்கள் :
1.நல்லெண்ணெய்
2.பூண்டு
3.மிளகு
செய்முறை:
நல்லெண்ணையை ஒரு குழி கரண்டியில் தேவையான அளவு எடுத்து கொண்டு அதனை மிதமான சூட்டில் சூடு படுத்தவும், எண்ணெய் காய்ந்ததும் அதில் மிளகு மற்றும் தோல் உரிக்காத பூண்டை போட்டு சில நிமிடத்தில் சூடானதும் அடுப்பில் இருந்து இறக்கி, சூடு ஆறினதும் எண்ணையை காலின்(இரு கால்) பெருவிரல் நகத்தில் மட்டும் பூசி விட வேண்டும், 2 நிமிடங்கள் கழித்து உடனே காலை கழுவி விட வேண்டும், இதனை செய்யும் போதே உங்கள் உடம்பு குளிர்ச்சி அடைவதை உணர முடியும், 2 நிமிடத்திற்கு மேல் இதனை விரலில் வைத்திருக்க கூடாது, சளி ஜுரம் உள்ளவர்கள் இதனை முயற்சி செய்ய வேண்டாம், மிகுந்த மன அழுத்தம் , உஷ்ண உடம்பு உள்ளவர்கள் இதனை கட்டாயம் செய்து பயன்பெறுங்கள்.
இதன் வாசனை தெய்வீக தன்மை கொண்டதாக இருக்கும்.
அந்த காலத்தில் சித்தர்கள், குழந்தை இல்லாத ஆண்கள் தங்களிடம் குழந்தை வேண்டும் என்று வந்தால் மேல் குறிப்பிட்ட மருத்துவ முறையையே சொல்வார்களாம்.
ஏனெனில் இதனை செய்வதன் மூலம் ஆண்களின் விந்து விருத்தி அடைந்து மூன்று மாதத்தில் குழந்தை பிறக்குமாம், இதனை IT (18 வயதுக்கு மேல்) துறையில் வேலை செய்பவர்கள் தினமும் காலை குளிக்க போகும் முன் 1 நிமிடத்திற்கு எண்ணையை தடவினால் மன அழுத்தம் நீங்கும். மேலும் சிறியவர்களாக இருந்தால் வாரத்தில் இருமுறை இதனை செய்யலாம்.
நண்பர்களே இந்த செய்தியை நீங்கள் படித்தது மட்டுமின்றி மற்ற (குழந்தை இல்லாதவர்கள், உஷ்ண உடம்பால் பாதிக்க பட்டவர்களும்) பயன் பெற இந்த செய்தியை பகிர்ந்து மகிழுங்கள்.
சர்க்கரை என்பது ஒரு நோய் அல்ல! :-
+++++++++++++++++++++++++++++++
உண்மையில் சர்க்கரை என்பது ஒரு நோய் அல்ல.
ஆனால் எந்த நோய்க்கும் மூல காரணம் தெரியாத ஆங்கில மருத்துவம்
ஒவ்வொரு நோய்க்கும் ஏதோ ஒரு காரணத்தை முன்வைக்கிறது.
நாமும் சற்றும் சிந்திக்காமல் அதை அப்படியே ஏற்றுக்கொள்கிறோம்.
முதலில் சர்க்கரை என்பது நோய் அல்ல என்றால்
உடலில் ஏன் சர்க்கரை அதிகரிக்கிறது என்ற கேள்வி வரும்.
சர்க்கரை என்பது நாம் உண்ட உணவு நன்கு செரிமானம் ஆகி
அதில் இருந்து நமக்கு கிடைக்கும் எரிபொருள் ஆகும்.
இதனை குளுகோஸ் என்றும் சொல்கிறோம்
.இந்த குளுகோஸ் நாம் உண்ட உணவில் இருந்து நமக்கு கிடைத்தது என்றும், அதுதான் நமது உடலுக்கு சக்தியும் என்பதில் தெளிவாக இருப்போம்.
இவ்வாறு நாம் உண்ட உணவில் இருந்து கிடைத்த ,நமக்கு சக்தி கொடுக்கும் இந்த குளுக்கோஸை நமது உடலின் அனைத்து செல்களுக்கும் இரத்தம் மூலம் கொண்டு செல்லப்படுகிறது.
இப்படி எடுத்து செல்லப்பட்ட குளுக்கோஸ்
உடலின் தேவைக்கு போக மீதி இருந்தால்
அதனை கிளைகோஜன் ஆக மாற்றி கல்லீரல் சேமித்து வைத்துக்கொள்ளும்.
நன்றாக கவனியுங்கள்,
தசை,தசை நார் ஆகியவைளை பராமரிப்பதும் கல்லீரலின் பல வேலைகளில் ஒன்று. கல்லீரல் இந்த கிளைகோஜனை தனது பராமரிப்பில் இருக்கும் தசை மற்றும் தசை நார்களில் கொண்டு சேமிக்க்த்து வைக்கிறது. பின்பு எப்போதாவது உங்கள் உடலுக்கு தேவைப்படும் சமயத்தில் அந்த கிளைகொஜன் மீண்டும் சர்க்கரையாக மாற்றப்பட்டு உடலுக்கு பயன்படுத்தபடுகிறது.
இதில் அதிக சர்க்கரை உடலால் எப்படி பயன்படுத்தப்படுகிறது என பார்த்தோம். மேலும் பார்ப்போம்.
இங்கே ஆங்கில மருத்துவம் சொல்லும் சராசரி என்பது மிகவும் தவறானது.
அதன் அடிப்படையில் செல்வது என்பது உடலை பல பாதிப்புகளுக்கு ஆளாக்கிவிடும்.
அதைப்பற்றியும் நாம் இப்போது பார்ப்போம்
அதாவது இரத்ததில் சர்க்கரையின் அளவு இவ்வளவுதான் இருக்க வேண்டும் என்பது ஏன்?
என்ற கேள்வியை எழுப்பினால் அங்கே பதில் இருக்காது.
அவர்களுக்குத்தான் எந்த நோய்க்கும் காரணாம் தெரியாது,
அதை குணப்படுத்தவும் முடியாதே.
ஒரு மனிதரை போல் இன்னொருவர் இருப்பது என்பது நடக்காது.
உயரம், நிறம், உருவம், தன்மை,பருமன் என எதுவுமே ஒருவரைபோல் ஒருவர் அச்சு அசலாக இருக்க முடியாத சூழலில்
இரத்தத்தில் சர்க்கரையின் அளவு மட்டும்
எப்படி ஒரு குறிப்பிட்ட அளவில் இருக்கவேண்டும் என்பது?
நாம் காலையில், இட்லி சாப்பிட்டால்
அதில் இருந்து நமக்கு கிடைக்கும் சர்க்கரையின் அளவும்,
சப்பாத்தி சாப்பிட்டால் அதில் இருந்து நமக்கு கிடைக்கும் சர்க்கரையின் அளவும் , சர்க்கரை பொங்கல் சாப்பிட்டால்
நமக்கு கிடைக்கும் சர்க்கரையின் அளவும் மாறுபடுகிறது அல்லவா?
அப்படி இருக்க ஒவ்வொரு மனிதனும் அவரவர் சூழ்நிலைக்கு ஏற்ப
அவர்கள் உண்ணும் உணவும், அளவும் மாறுபடும் என்பது உண்மைதானே. அவ்வாறு இருக்க சர்க்கரை மட்டும்
அமெரிக்கா முதல் ஆண்டிப்பட்டி வரைஎப்படி ஒரே அளவாக இருக்க முடியும்? ஆக இரத்ததில் சர்க்கரையின் அளவு
இவ்வளவுதான் இருக்க வேண்டும் என்று ஏதும் கட்டுப்படு கிடையாது.
உடலின் தேவையை பொறுத்து சர்க்கரையின் அளவு மாறுபடும் என்பதே உண்மை.
உங்களுக்கு தேவைப்படும் சர்க்கரையின் அளவௌ உங்கள் உடல் தீர்மானம் செய்து , நீங்கள் உண்ட உணவில் இருந்து சர்க்கரையை தயாரித்துக்கொள்ளும். அதை நீங்கள் கட்டுப்படுத்தினால்
உங்கள் உடலுக்கு தேவையான அளவு சர்க்கரை கிடைக்காமல்
உடல் பலவீனம் அடையும் இதனை நீங்கள் சர்க்கரைக்கு தொடர்ந்து மருந்துகள் சாப்பிட்டு வருபவர்களிடம் பார்த்தே தெரிந்துகொள்ளலாம்.
ஆங்கில மருந்துகள் பக்கவிளைவுகள் உடையது ,
நான் சித்தா , மூலிகை மருந்துகளைதானே எடுத்துக்கொள்கிறேன் என்றாலும் இரத்ததில் உள்ள,உடல் தனக்கு தேவை என்று தயாரித்துவைத்திருக்கும் சர்க்கரையின் அளவை கட்டுப்படுத்தினால் நிச்சயம் உடல் பலகீனம் அடையும்.
மனதில் பயம், படபடப்பு எற்படும் போது
உங்கள் சிறுநீரகத்தில் உள்ள அட்ரீனல் சுரப்பியில் இருந்து,அட்ரீனலின் வெளிப்படும்
என்பது எல்லோருக்கும் தெரிந்ததே.
அப்போது கணையம் அதன் இன்சுலினை நிறுத்திவிடும்.
மீண்டும் உங்கள் மனநிலை இயல்பு நிலைக்கு மாறும்போது
கணையம் மீண்டும் இன்சுலினை கொடுக்க ஆரம்பிக்கும்.
இபோதும் சர்க்கரையின் அளவு அதிகமாக காண்பிக்கும்.
இது நிரந்தரமான நிலை இல்லை.
தற்காலிகமானதே.
உடலில் எந்தமாதிரியான தொந்திரவுகள் எற்பட்டாலும்
உடலே அதை சரி செய்துகொள்ளும்.
அந்த சுழலில் உடலின் பாதிக்கப்பட்ட பகுதியை சரி செய்ய
இரத்ததில் சர்க்கரையின் அளவு அதிகரிக்கும்
. காரணம் சர்க்கரை என்பது உடலின் செல்களுக்கான சக்தி என்று பார்த்தோமே.பாதிக்கப்பட்ட பகுதியை சரி செய்ய தேவையான சர்க்கரையை உடல் உற்பத்தி செய்யும்.
அதை எந்த நோய்க்கும் மூலகாரணாம் தெரியாத ஆங்கில மருத்துவம்
சர்க்கரை என்று பயமுறுத்தி அதை கட்டுப்படுத்தி
நம்மை மேலும் மேலும் பலகீனம் அடைய செய்கிறது
என்பதை மட்டும் தெரிந்து கொள்ளுங்கள். சரிங்க சார் ,
நீங்க சொல்வது சரி. ஆனால் அதிகமாக சிறுநீர் கழிகிறதே?
இங்கேதான் நாம் ஒன்றை புரிந்துகொள்ள வேண்டும்.
உடல் தனக்கு தேவை இல்லாதவற்றை உடலில் வைத்துக்கொள்ளாது.
நல்லவைகளை தன்னுள் வைத்துக்கொள்ளும்.
இந்த தன்மையான உடல் எப்படி அதிகமாக இருந்த குளுக்கோஸை கிளைகோஜனாக மாற்றி தன்னுள் சேகரித்துவைத்ததோ ,
அதனை அவசர காலங்களில் பயன்படுத்திக்கொள்கிறதோ
அதுபோல, இதே குளுகோஸின் தரத்தை அறிந்து
அதை சிறுநீர் மூலம் வெளியேற்றும்.
குளுக்கோளில் தரமா?
என்றால் , ஆம். தரம் என்று ஒன்று உண்டு.
நமது உடலில் சக்தி குறையும்போது அதனை ஈடு செய்ய
உடலானது நமக்கு பசி என்ற உணர்வை கொடுக்கிறது.
அந்த சமயத்தில் நாம் உடலுக்கு நல்ல உணவுகளை கொடுத்து,
வாயால் நன்றாக அரைத்து
உமிழ்நீருடன் கலந்து
வயிற்றுக்குள் அனுப்பினால், அ
ங்கே அதை செரிமானம் செய்யும்
மற்ற திரவங்களும் கலந்து
நன்றாக செரிமானம் நடந்து
அதில் இருந்து எடுக்கப்படும் சர்க்கரை
தரமான குளுக்கோஸ்.
இதனை உடல் ஏற்றுக்கொள்ள,
தரத்தை நிர்ணயம் செய்ய
கணையம் இன்சுலினை உற்பத்தி செய்கிறது.
இந்த குளுக்கோஸ் உடல் முழுதும் எடுத்து செல்லப்பட்டு
பயன்படுத்தப்படுகிறது
.மீதமானவை கிளைகோஜனாக மாற்றப்பட்டு
உடலில் சேகரிக்கிறது.
அதேபோல் முறையான பசி இல்லாத போது, நாம் எடுத்துக்கொள்ளும் உணவு, நன்றாக வாயில் அரைக்கப்படாமல், நன்கு உமிழ்நீருடன் நன்றாக கலக்காமல் வயிற்றுக்குள் அனுப்பப்படும்போது
அங்கே, செரிமாண சுரபிகளில் இருந்து கிடைக்கும் சுரப்புகளும் கிடைக்காமல் உருவாகும் குளுக்கோஸ்
தரம் குறைந்த குளுக்கோஸ். இதனால் உடலுக்கு தீங்கு என்பதால்
உடலே அதனை சிறுநீர்மூலம் வெளியேற்றுகிறது.
இதற்கும் நாம் பயம் கொள்ள வேண்டியது இல்லை.
ஆனால் இவ்வாறு தரம் குறைந்த குளுக்கோஸ்
நமது உடலில் இருந்து வெளியேரும் போது
உடலுக்கு சரியான குளுகோஸ் கிடைக்காமல் பலவினம் அடையும்.
அதனால் ஏற்படும் தொந்திரவுகளுக்கு நாம் அலோபதியை நாடும்போதும் அவர்கள் சர்க்கரையின் அளவை பார்த்து
அதை கட்டுப்படுத்துகிறோம் என்ற பெயரில்மருந்துகளை கொடுத்து
உடல் வெளியேற்றும் கழிவான தரம் குறைந்த குளுக்கோஸை
உடலிலேயே தங்க செய்கிறது.
இது மேலும் உடல் பலவீனம் அடையும். அதுபோல் இந்த மருந்துகள்
கணையத்தை தட்டிதட்டி அதில் இருந்து இன்சுலினை வலுக்கட்டாயமாக எடுப்பதால், கணையம் நிரந்தரமாக செயலிழக்கிறது.இதுவரை தேவைக்கு ஏற்ப இன்சுலினை வழங்கிவந்த கணையம்பாதிக்கபட்டபின் ,இன்சுலின் ஆனது ஊசிமூலம் கொடுக்கப்படுகிறது. இது மிண்டும் நமது உடலின் உறுப்புகளை பதம்பார்க்கிறது.
முதலில் உடலின் தேவைக்காக
அதிகரிக்கும் சர்க்கரையை மாத்திரைகள் மூலம் கட்டுப்படுத்துகிறோம்.
அதனால் உடலுக்கு தேவைப்படும் சக்தி கிடைகாமல்
நமது உடலும், உடல் உறுப்புகளும் பலவீனம் அடைந்து
தொடர்ந்து உடல் மோசமாகும்.
தேவை இல்லை என்ற கழிவை உடலில் இருந்து உடல் வெளியேற்றுவதையும்
உடலில் தங்கச்செய்து மீண்டும் உடலை பலவினப்படுத்துவதும் தவறு.
சரி என்ன செய்ய?எப்போது பசி எடுக்கிறதோ,அப்போது உங்கள் மனதிற்கு பிடித்த உணவுகளை நன்றாக ருசித்து, மென்று, உமிழ்நீருடன் கலந்து சாப்பிடுங்கள்.தாகம் எடுக்கும்போது நன்றாக சப்பி உதடும்,நாக்கும் நனையுமாறு நீர் பருகுங்கள்.உடல் ஓய்வுகேட்கும்போது ஓய்வும், தூக்கம் கேட்கும்போது தூக்கமும் கொடுங்கள். உடல் ஆரோக்கியமாக இருக்கும்.
விஷ உணவுகளுக்கு விடை கொடுப்போம் !
பாரம்பரிய உணவுகளுக்கு உயிர்கொடுப்போம் !!
சற்றே சிந்தித்து உங்கள் நண்பர்களுக்கும் பகிருங்கள்.
பொது நலனில் அக்கறை கொண்ட உங்கள் கடலூர் அரங்கநாதன்.

சிவன் எப்படி குருவானார்?!
சிவன் - என்றுமே நிரந்தர Fashion! - பகுதி 3
சிவனின் தீவிரத்தைக் கண்டு, அவர் உணர்ந்ததை தாங்களும் உணர வேண்டும் என்று, அவர் எத்தனை புறக்கணித்த போதும், அவர் பின்னே சென்று கொண்டிருந்தவர்கள் ஏழ்வர் மட்டுமே. அவர்களை அவ்வளவு எளிதில் சிஷ்யர்களாக ஏற்கவில்லை சிவன். எண்பத்தி நான்கு ஆண்டுகள் காக்க வைத்து, அதன் பின்னேயே அவர்களை மனமுவந்து சிஷ்யர்களாக ஏற்றார்
அல்லது குறிப்பிட்ட செயல்களைச் செய்வது என்று அர்த்தமல்ல. நீங்கள் எங்கிருந்தாலும் உங்களை முழுமையாகக் கொடுக்க முடியும்.எங்கிருந்தாலும் நீங்கள் ஈஷாவை உணர முடியும். ஈஷா என்றால் எல்லையில்லாத இறைத்தன்மை என்றுதான் அர்த்தம். நீங்கள் குடும்ப சூழ்நிலையில் இருந்தாலும் அதையும் நீங்கள் உங்கள் இறைத்தன்மையை உணர்வதற்கு பயன்படுத்திக் கொள்ள முடியும். அல்லது வியாபாரத்தில் இருக்கிறீர்கள் என்றால், அந்த சூழ்நிலையையும் நீங்கள் உங்கள் இறைத்தன்மையை உணர்வதற்கு பயன்படுத்திக் கொள்ள முடியும்.
இப்படி உங்கள் வாழ்வில் ஒவ்வொன்றும், உங்கள் குடும்பம், உங்கள் வேலை, உங்கள் வாழ்க்கை போன்ற எல்லாமும் உங்கள் உணர்தலை நோக்கியே இருக்கும் என்றால், பிறகு நீங்கள் உங்களை ஈஷாவிற்கு அர்ப்பணித்ததாகக் கொள்ளலாம். இன்று ஆன்மீகத்தில் ஆர்வம் கொண்டிருப்பீர்கள், நாளை வேறு மாதிரி இருப்பீர்கள் என்றால், பிறகு வாழ்க்கை என்பது என்ன என்பதை நீங்கள் புரிந்து கொள்ளவில்லை என்றே பொருள்.
-சத்குரு
கடவுள் ஒரு நபர் அல்ல.
நீங்கள் கடவுளை வழிபட முடியாது.
நீங்கள் தெய்வ நிலையில் வாழலாம்,
ஆனால் நீங்கள் தெய்வத்தை வழிபட முடியாது.
வழிபடுவதற்கு ஒருவரும் அங்கில்லை.
உங்கள் எல்லா வழிபாடுகளும் வெறும் மடத்தனம்.
உங்கள் எல்லா கடவுளின் உருவங்களும்
உங்களுடைய படைப்பே.
அந்த வகையில் தெய்வம் கிடையாது.
ஆனால் கண்டிப்பாக தெய்வீகம் உண்டு-
பூக்களில், பறவைகளில்,
விண்மீன்களில், மக்களின் கண்களில்,
இதயத்தில்,
ஒரு பாடல் எழும்போது,
கவிதை உங்களை சூழ்ந்து கொள்ளும் போது.....
இவையெல்லாம் கடவுளே.
கடவுளே என்று சொல்லும்போது கடவுள் தன்மையே ..
கடவுள் ஒரு நபர் அல்ல .
--- ஓஷோ -
உடல் சூட்டைத் தணிக்கும் பேரிக்காய் !
பழங்களில் அதிக சத்து நிறைந்த பேரிக்காயில், ஏ, பி, பி2 என வைட்டமின்கள் நிறைந்துள்ளன. இரும்பு சத்து, சுண்ணாம்புச் சத்து ஆகியவை கணிசமான அளவு உள்ளது.பேரிக்காயை சாப்பிட்டால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகம் கிடைக்கும்.இதனை நாட்டு ஆப்பிள் என்று அழைப்பார்கள்.
இந்த பழத்தை சாப்பிடுவதன் மூலம் கிடைக்கும் நன்மைகள் :
1. இதயப் படபடப்பு உள்ளவர்கள் தினமும் இருவேளை ஒரு பேரிக்காய் வீதம் சாப்பிட்டு வந்தால் இதயப் படபடப்பு நீங்கும்.
2. வயிற்றில் புண் இருந்தால் தான் வாயில் புண் ஏற்படும். இந்த வாய்ப் புண்ணையும், வயிற்றுப் புண்ணையும் ஆற்றும் சக்தி பேரிக்காய்க்கு உண்டு.தினமும் ஒரு பேரிக்காய் வீதம் சாப்பிட்டு வந்தால் வாய்ப்புண், வயிற்றுப்புண் விரைவில் குணமாகும்.
3. உண்ணும் உணவின் அலர்ஜி காரணமாக சிலருக்கு வயிற்றுப் போக்கு உண்டாகும். மேலும் சிலருக்கு பாக்டீரியாக்களால் வயிற்றுப் போக்கு உண்டாகும். தினமும் பேரிக்காய் ஒன்று சாப்பிட்டு வந்தால் வயிற்றுப் போக்கு நீங்கும்.
4. இரத்தத்தில் இருந்து பிரிந்த தாது உப்புக்கள் சிறுநீரகத்தில் படிந்து அவை கல்லாக மாறுகின்றன. இவற்றைப் உடைத்து வெளியேற்ற தினமும் இரண்டு பேரிக்காய் சாப்பிட்டு வருவது நல்லது.
5. உடல் சூட்டைத் தணிக்கும்.
6. கண்கள் ஒளிபெறும்.
7. நரம்புகள் புத்துணர்வடையும்.
8. தோலில் ஏற்பட்ட பாதிப்புகளை குணப்படுத்தும்.
9. குடல், இரைப்பை இவைகளுக்கு நல்ல பலம் கிடைக்கும். உடலை வலுவாக்கும்
ால் வயிற்று வலி மாயமாய் மறைந்துவிடும்.
• உடல் பருமனைக் குறைக்க இரவு ஒரு ஸ்பூன் ஓமத்தைத் தண்ணீரில் போட்டு, காலையில் வடிகட்டி ஒரு ஸ்பூன் தேனுடன் கலந்து குடித்து வந்தால் போதும்.
• அவரை இலையை அரைத்து தினமும் காலையில் முகத்தில் தடவி வந்தால், முகத்தில் இருக்கும் தழும்புகள், முகப்பருக்கள் நீங்கிவிடும்.
• பால் கலக்காத தேநீரில் தேன் விட்டுக் குடித்தால் தொண்டைக்கட்டு சரியாகும்.
• சுக்கைத் தூளாக்கி எலுமிச்சைச் சாறில் கலந்து தின்றால் பித்தம் குறையும்.
• மூட்டு வலியா? தேங்காய் எண்ணெய் - எலுமிச்சைச் சாறை கொதிக்கவிட்டு ஆறியபின் மூட்டுக்களில் தேய்த்தால் நிவாரணம் கிடைக்கும்.
• துளசி இலை போட்ட நீரை தினசரி குடித்து வந்தால் ஞாபகமறதி நீங்கி மூளை பலம் பெறும்.
• மிளகுத் தூளுடன் நெய், வெல்லம் கலந்து உருண்டையாக்கி சாப்பிட்டுவர தொண்டைப்புண் குணமாகும்.
• வெங்காயத்தை சிறு துண்டுகளாக நறுக்கி, பனங்கற்கண்டு சேர்த்து வதக்கி காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட்டுவர நரம்புத் தளர்ச்சி நீங்கும்.
• பொடித்த படிகாரத்தை தூள் செய்து அதைக் கொண்டு வாரம் மூன்று முறை பல் தேய்த்து வந்தால் பற்களின் கறை, இரத்தம் வடிதல், வாய் துர்நாற்றம் நீங்குவதோடு பல் ஈறுக்கும் வலு கொடுக்கும்.
• வயிற்றுப் போக்கு அதிகமாக இருந்தால் ஜவ்வரிசியை சாதம் போல வேகவைத்து மோரில் கரைத்து உப்பு போட்டு சாப்பிட்டால் வயிற்றுப்போக்கு நின்றுவிடும். வயிற்றில் வலியும் இருக்காது.
• உடலில் நோய் எதிர்ப்பு சக்தி இல்லாதவர்கள், தினசரி ஒரு ஸ்பூன் தேன் சாப்பிட்டு வந்தால் உடம்பு பலம் பெறும்.
• வாயில் புண் இருந்தால் வயிற்றிலும் இருக்கலாம். தினமும் காலையிலும் மாலையிலும் தேங்காய் பாலில் தேனை விட்டுச் சாப்பிட்டால் புண் ஆறிவிடும்.
• அஜீரணத்திற்கு இரண்டு ஸ்பூன் கருவேப்பிலைச்சாறை ஒரு டம்ளர் மோரில் கலந்து குடித்தால் அஜீரணம் நீங்கும்.
• அதிக தலைவலி இருக்கும்போது ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி மூடிக் கொதிக்க வைத்து இறக்கி இரண்டு ஸ்பூன் காபி பவுடர் போட்டு ஆவி பிடித்தால் தலைவலிக்கு உடனடி நிவாரணம் கிடைக்கும்
அன்பிற்குரிய குருவே பல திருமணங்கள் முடிந்த பின்பு
ஏன் முன்பு கொண்ட அன்பு அழிந்து போகிறது ?
ஓஷோ பதில் :
திருமணம் எப்படி அன்பை அழிக்கும்?
ஆமாம்,அது திருமணத்தில் அழிகிறது.
"உன்னால்தான் அழிக்கப்படுகிறதே தவிர திருமணத்தால் அல்ல"
துணை சேரும் இருவரும் சேர்ந்துதான் அதை அழிக்கிறார்கள்.
திருமணம் எப்படி அன்பை அழிக்கும்?நீதான் அதை அழிக்கிறாய்,ஏனெனில் அன்பு என்றால் என்ன என்று உனக்குத் தெரியாது.
நீ தெரிந்தாற் போல் நடிக்கிறாய்.தெரியும் என்று நம்புகிறாய்.தெரியும் என்று கனவு காண்கிறாய்.ஆனால்,அன்பு நேசம் என்றால் என்ன என்று உனக்குத் தெரியாது.
உள்ளத்திலேயே மிகச்சிறந்த கலை அது.
நேசத்தைக் கற்றுத்தான் தெரிந்து கொள்ளவேண்டும்.
தூய்மையான நேசத்தை நீ கற்றுக்கொள்ளவில்லை என்றால்
நீங்கள் செய்யும் ஒவ்வொரு திருமணமும் தோல்வியில் தான்
முடியும் .
திருமணம் ஆனந்தமாக இருக்க வேண்டுமென்றால்
அதற்கு நீ நிபந்தனையற்ற அன்பை முழுமையாக செலுத்த வேண்டும் ..
அன்பை எப்படி பெறுவதில் என்பதில் உன் கவனம் இருக்க
கூடாது . அன்பை எந்த வகையில் செலுத்தலாம் என்பதில்
உன் கவனம் இருக்க வேண்டும் .. அப்படி இருந்தால்
நீ செய்யும் திருமணத்தால் உன் வீட்டிலயே சொர்க்கம்
உண்டாகும் .
--- ஓஷோ -
மதுரை மீனாட்சி அம்மன் ஆலயத்திற்கு சாா்லஸ் டபிள்யூ லட் பீட்டா் என்பவா் ஒரு முறை வருகை தந்தாா்.
அவருக்கு மீனாட்சி சன்னிதியில்் குங்கும பிரசாதம் கொடுக்கப்பட்டது.
ுந்தரேசா் சன்னிதியில் விபூதி பிரசாதம் கொடுக்கப்பட்டது.
இந்தியா்கள் இதை ஏன் நெற்றியில் பூசிக் கொள்கிறாா்கள் என்பதை அறிய அவருக்கு ஆவல்.
உடனே பிரசாதங்களை பாிசோதனை செய்தாா்.
அதில் காந்த சக்தி வெளிப்படுவதை உணா்ந்தாா்.
இது என் வாழ்வில் நான் கண்ட அதிசயம் என்று தான் எழுதிய இன்னா் லைப் என்ற புத்தகத்தில் எழுதினாா்.
இப்படி ஒரு அதிசயத்தை எந்த நாட்டிலும் கண்டதில்லை என்றும் எழுதி வைத்திருந்தாா்.
நாமோ இவற்றின் மகத்துவம் தொியாமல் மீனாட்சி குங்குமத்தை கோவில் தூண்களில் கொட்டி வைத்து பாழாக்கிக் கொண்டிருக்கிறோம்.
இனிமேலாவது அன்னையின் குங்குமத்தை அளவோடு எடுத்து பூஜையரையில் பத்திரமாக வைப்போம்.
அன்னையின் அருட் கடாட்சத்தை என்றும் நிலைத்திருக்க செய்வோம்.
ஸ்ாீ லங்கா ஹிந்து சுவாிலிருந்து
திருமணத்தின் போது இந்த சடங்குகளை ஏன் செய்கின்றோம்.....?
திருமணத்தில் அரசாணிக்கால் நடுதல் ஏன் ?
---------------------------------------------------------------
ரச மரத்தின் வேரில் பிரம்மதேவனும், அடியில் திருமாலும், நுனியில் சிவமூர்த்தியும் இருக்கிறார்கள்.
அரசமரம் மும்மூர்த்தி ஸ்வரூபம். அதனால், சுமங்கலிகள் அரசமரத்தின் கிளயப் பாலும் பன்னீரும் விட்டுப் பூசித் மும்மூர்த்திகளயும் அங்கு எழுந்தருளச் செய்கின்றார்கள்.
கும்பம்:
கங்க புனிதமான. எல்லாவற்றயும் தூய்ம செய்வ தண்ணீர்.
நீரின்றி அமயா உலகு? என்ப பொய்யாமொழி. தண்ணீரால் பயிரும், உயிரும் தழக்கின்றன. ஆகயால், மணவறயில் கும்பத்தில் நீர் வத் வழிபட வேண்டும்.
ஓமம்: அனத்க்கும் அக்னியே சாட்சி. ?
நீயே உலகுக்கொரு காட்சி? என்று சீதாதேவியார் கூறுகின்றார். அக்னியால் உலகமும் உயிரும் வாழ்கின்றன. நம் உடம்பில் சூடு இல்லயானால் உயிர் நிலபெற மாட்டா. இதனால் அக்னிய வழிபட வேண்டும்.
ஓமப்புக ஆயுளயும் வளர்க்கும்.
நவகோள் வழிபாடு:
ஞாயிறு முதலிய நவகோள்கள் இந்த உலக இயக்குகின்றன. அதனால், நவகோள்கள வழிபட வேண்டும். மணமக்களுக்கு நவகோள்களின் நல்லருள் ண செய்யும்.
தாலி:
பழங்காலத்தில் அணிகலன்கள் செய்யும் நாகரிகம் இல்லாதிருந்தபோ ஒழுக்கம் மட்டும் உயர்ந்திருந்த. ?தாலம்? என்ப பனயோலயக் குறிக்கும். அந்தப் பனயோலய ஒழுங்கு செய் மஞ்சள் தடவி, அதில் பிள்ளயார் சுழியிட்டு ?
இன்னாருடய மகள, இன்னாருடய மகன் மணந் கொண்டார். வாழ்க? என்றெழுதி, அதச் சுருட்டி மஞ்சள் கயிற்றிலே கோர்த் மணமகள் கழுத்திலே தரிப்பர். தால ஓலயில் எழுதிக் கட்டியதனால் அதற்குத் தாலி என்ற பெயர் வந்தது . நாகரிகம் வளர்ந்த பிறகு (பனயோல தண்ணீர் பட்டு நந் போவதால்) தாலியத் தங்கத்தினால் செய் தரித்க் கொண்டனர். மனைவிக்கு மணவாளனே தெய்வமாதலின் கணவருடய இரு பாதங்கள் போல் திருமாங்கல்யத்தச் செய் மார்பில் தரித்க் கொண்டனர்.
பெண்களுக்குத் திருமாங்கல்யம் என்ற அந்த மங்கலநாண் உயிரினும் சிறந்த. பெண்கள் எந்த அணிகலன்கள நீக்கினாலும், திருமாங்கல்யத்தக் கழற்றக் கூடா.
சீதா தேவியார் இராவணனால் கவரப்பட்ட பொழு, எல்லா அணிகலன்களயும் சுழற்றி எறிந்தனள். திருமாங்கல்யம் மட்டும் அவள் கழுத்தில் அணி செய் கொண்டிருந்த.
அட்சத:
திருமாங்கல்ய தாரணம் முடிந்தம் அட்சத தெளிப்பார்கள்.
க்ஷதம் என்றால் குத்வ என்று பொருள்: அகரம் அண்மப் பொருளத் தெரிவிக்கிற. அட்சத என்றால் உலக்கயால் குத்தப்படாத என்று பொருள். குத்தப்படாத அரிசியில் முளக்கும் ஆற்றல் உள்ள. திருமணத்க்கு முன்பே நெல்லப் பக்குவமாக உரித், முறயோடு அதில் பன்னீர் தெளித், மஞ்சள்பொடி தூவி, அந்த அட்சதய மணமக்கள் தலயிலே இறவனுடய மந்திரங்களச் சொல்லித் தெளித்தால் ஜீவகளயுண்டாகும்.
அம்மி மிதித்தல்: மணமக்கள் அக்னிய வலமாக வருகிறபோ வலப்பக்கத்திலே ஒரு கல் இருக்கும்.
மணமகளின் பாதத்த அந்தக் கல்லின் மீ வக்குமாறு மணமகன் செய்வான். அதன் பொருள் ??இந்தக் கல்லப்போல் உறுதியாக இரு?? என்பதாகும். தன்மேல் வக்கும் பாரம் அதிகமானால் இரும்பு வளயும். ஆனால், கல் வளயா; பிளந் போகும்.
மணமகளே! கற்பில் நீ கல்லப்போல் உறுதியாக இரு.
அந்தக் கற்பில் கொஞ்சம் உறுதி தளர்ந்த அகலிகயக் கல்லாயிருக்கச் சொன்னார் கௌதமர். அதனாலே தான் ?
நீ கல்லப் போல் உறுதியாக இரு? என்று, கணவன் கூறும் பாங்கில் மனவியின் காலப் பற்றி அந்த அம்மிமேலே வப்ப.
அம்மி மிதித் அருந்ததிய வணங்குவார்கள்.
அருந்ததி =
அ+ருந்ததி (கணவனின் சொல்லுக்குக் குறுக்கே நில்லாதவள் என்று பொருள்)
மணமகனுக்கு:
புதிய வாழ்வில் அடியெடுத் வக்கும் பு மணமகனே, உன் வாழ்வு புனிதமாகவும் புத்தமுதம் போலவும் இனிமயுடன் விளங்குவதாக. உன் மனவிய அடிமபோல் எண்ணி அடக்கியாளக் கூடா. மனைவி மலருக்கு நிகராவாள்.
அதனால் மலரிடம் பழகுவபோல் மனவியிடம் மெத்தென்று பழக வேண்டும். உன் மனைவி உன் வீட்டுக்கு வந்த ராஜலட்சுமியாகும்.
அவள் திருமணமான அன்றே பெற்ற தாய்_தந்தயரயும், உடன் பிறந்தாரயும், பழகிய வீட்டயும், எல்லாவற்றயும் துறந்து உன்ன நாடி வந்திருக்கிறாள்.
சுருங்கச் சொன்னால், தன் பெயரயே றந் விடுகின்றாள்.
ஆதலால், மனவியிடம் அன்பாகப் பழக வேண்டும்.
நீ வீட்டிற்கு வரும்பொழு வன் சொற்கள் என்றுமே பேசக் கூடா.
மனவியின் அன்பப் பெற வேண்டுமானால், மாமனார் மாமியார உயர்த்திப் பேச வேண்டும். பெண் உருவத்டன் கூடிய காலண்டரக் கூட உற்றுப் பார்க்கக் கூடா.மனவியின் சுகக்கத்தில் நீ பங்குபெற வேண்டும். மனவிய நீ உன் உயிர் போல் நேசிக்க வேண்டும். மனவி ஏதாவ சிறுகுற்றம் செய்தால் அதனப் புறங்காத்தல் அமதிக்கும் அன்பு பெருகவும் வசதி செய்யும்.
மணமகளுக்கு:
புதிய வாழ்வில் அடியெடுத்து வைக்கும் மணமகளே, உன் கணவனைத் தெய்வமாக எண்ணி பணி விடை செய்ய வேண்டும். எப்போதும் கணவரைப் பார்த்து சிரித்த முகத்துடன் வரவேற்க வேண்டும். கணவனார் வீட்டிற்குள் நுழயும்போது முகத்தை வாழப்பூ மாதிரி வைத்துக் கொள்ளக் கூடாது. சிரித்த முகமாக இருந்தால் அழகாக இருக்கும். மாமனார், மாமியார் மற்றும் உறவினர்கள் அனவரிடமும் அன்பாக நடக்க வேண்டும். மாமன் மாமியார்க்கு காலம் தவறாமல் உணவு அளிக்க வேண்டும்.
கால் முகங்கழுவி நெற்றிக்குப் பொட்டு இட்டுக் கொண்டு மகாலட்சுமியப் போல் விளங்க வேண்டும்.
அடிக்கடி அக்கம்பக்கம் போய் ஊர்க்கதய உழக்கில் அளக்கக் கூடா.
இவள் நமக்கு மருமகளாக வந்தாளே என்று உள்ளம் குளிர மாமியார் மெச்சிய மருமகளாக இருக்க வேண்டும்.
இந்த உத்தமி நமக்கு மனவியாக வந்தாளே என்று எண்ணுந்தோறும் கணவன் உள்ளம் உவக்குமாறு நடக்க வேண்டும்.
பெண்குலத்திர்க்குப் பெருமை தேடிக் கொடுக்க வேண்டும்.
பெண்களுக்கு இந்த ஆறு குணங்கள் இருந்தால் குடும்பம் மகிழ்ச்சியாகும்!
அன்ன தயயும்:
தாய் எப்படிச் சேயிடம் கருணயுடன் இருப்பாளோ, அதைப் போலவே கணவனிடம் அந்த மனைவி இருக்க வேண்டும்.
அடியாள் பணியும்:
ஒரு வேலக்காரி போல கணவனுக்குக் கங்கர்யம் செய்ய வேண்டும்.
மலர்ப் பொன்னின் அழகும்:
செந்தாமரயில் வீற்றிருக்கும் இலட்சுமியப் போல, எப்போம் அழகாக இருக்க வேண்டும்.
புவிப்பொறயும்:
கணவனார் கொஞ்சம் கோபித்தாலும் பூமாதேவியப் போல பொறுமயுடனிருக்க வேண்டும்.
வேசித்யிலும்:
இருமனப் பெண்டிர் எப்படி தன்ன நாடி வருபவர்க்கு அன்பு செய்வார்களோ, அப்படிக் கணவனிடத்தில் அன்பு காட்ட வேண்டும்.
விறல் மந்திரி மதியும்:
கணவனாருக்கு அப்போதக்கப்போ மந்திரியப் போல, நல்ல ஆலோசனகளச் சொல்ல வேண்டும்.?
திருமுருககிருபானந்த வாரியார்
கொத்தமல்லித் துவையல் -தொப்பை குறையும்
500 கிராம் கொத்தமல்லித்தழை, 100 கிராம் கருவேப்பிலை இரண்டையும் கழுவி, பொடியாக நறுக்கி, சிறிது தண்ணீர்விட்டு அரைக்கவும். இதனுடன் 2 மூடி தேங்காய் துருவல், கழுவிய 2 குடமிளகாய் சேர்த்து அரைத்து சிறிது பிளாக் சால்ட், மிளகுத்தூள் சேர்க்கவும்.
பலன்கள்: மூட்டுவலி, வாயுப் பொருமல் சரியாகும். அதிக உடல் எடை இருப்பவர்கள், நீரழிவு நோயாளிகள் தினமும் சாப்பிடலாம். தொப்பை குறையும். தேமல் மறையும். நெஞ்செரிச்சல், வயிற்றுவலி, அஜீரணம், பித்த நோய்கள் குறையும். ரத்தம் விருத்தியடையும்