Sunday 26 January 2014

வணங்கத் தலைவைத்து வார்கழல்வாய் வாழ்த்தவைத்து இணங்கத்தன் சீரடியார் கூட்டமும்வைத்து எம்பெருமான் அணங்கொடு அணிதில்லை அம்பலத்தே ஆடுகி்ன்ற குணங்கூரப் பாடிநாம் புாவல்லி கொய்யாமோ. வணங்குவதற்குத் தலையினையும் நீண்ட திருவடிகளை வாழ்த்துவதற்கு வாயினையும் ,செர்ந்து பழகுவதற்கு இணக்கம் உடைய அடியார் கூட்டத்தினையும் தந்து, எம்பெருமான் உமையோடு அழகிய தில்லை அம்பலத்தில் மூத்துநிகழ்த்தகிறான் அவனது குணச்சிறப்புக்களைப் பாடி நாம் புாவினைப் பறிப்போமாக. திருச்சிற்றம்பலம் திருவாசகம்.திருப்புாவல்லி.பா.எ-7
Like ·  ·  · 4 minutes ago · 
செய்வினை நீக்கும் எளிய பரிகாரமுறை இக்காலத்தில் பொறாமை, வஞ்சனை கொண்ட மனிதர்கள் தமது எதிரிகளை நேரடியாக எதிர்க்க துணிவில்லாமல் மறைமுகமாக தாக்கி அழிக்கவே ஏவல், பில்லி, சூனியம் மற்றும் செய்வினை இவற்றை செய்கின்றனர். இப்படிப்பட்ட செய்வினை, ஏவல், பில்லி, சூனியம், கண்திருஷ்டி மற்றும் பிற தீயசக்திகளும் எதிர்மறை சக்திகளும் அழிந்தோட ஒரு எளிய முறை உண்டு. இதோ அதன் செய்முறை…! பொருட்கள் அளவு: 1. வெண்கடுகு - 250 கிராம் 2. நாய்க்கடுகு - 250 கிராம் 3. மருதாணி விதை - 250 கிராம் 4. சாம்பிராணி - 250 கிராம் 5. அருகம்புல் பொடி - 50 கிராம் 6. வில்வ இலை பொடி - 50 கிராம் 7. வேப்ப இலை பொடி - 50 கிராம் இவை அனைத்தும் நாட்டு மருந்து கடைகளில் வெகு எளிதாக கிடைக்கக்கூடியவை. சாம்பிராணியை மட்டும் பொடி செய்து கொண்டு மீதமுள்ள 6 பொருட்களுடன் சேர்த்து ஒரு கலனில் அடைக்கவும். இவ்வாறு தயாரிக்கப்பட்ட பொருட்களின் கலவையை செவ்வாய், வியாழன் மற்றும் ஞாயிறு கிழமைகளில் அடுப்புக்கரி நெருப்பில் தூவி தூபம் போடவும். தி்னமும் செய்தால் தவறில்லை. 48 நாட்களுக்குள் நிச்சயம் பலனுண்டாகும். ஏவல், பில்லி, சூனியம், செய்வினை, எதிர்மறை மற்றும் தீய சக்திகள் அனைத்தும் நிச்சயம் நீங்கும். குடும்பத்தில் அமைதி உண்டாகும். குடும்பத்தின் உறுப்பினர்களிடையே ஒற்றுமை உண்டாகும். லட்சுமி கடாட்சம் உண்டாகும். மேற்கண்ட கலவையை நெருப்பில் தூவும் போது கீழே சிந்தாமல் கவனித்துக் கொள்ளவும். ஏனெனில் மேற்கண்ட 7 பொருட்களும் தெய்வத்தன்மை பொருந்தியவை. யார் காலிலும் படக்கூடாது. மேற்கண்ட முறையை பயன்படுத்தி மாந்திரீக கோளாறுகளிலிருந்து பாதிக்கப்பட்ட குடும்பங்களை காப்பாற்ற எல்லாம் வல்ல இறைவன் அருள் துணை நிற்கும் என்பதில் எவ்வித ஐயமும் இல்லை.

Saturday 25 January 2014

அலோபதி: சொந்தமாகப் பெயர் கூட இல்லாத மருத்துவமுறை! ம.செந்தமிழன் சித்த மருத்துவம், மூலிகை மருத்துவம், இயற்கை மருத்துவம், ஆயுர்வேதம், ஓகமுறை மருத்துவம் (யோகா சிகிச்சை) அக்குபஞ்சர், தொடு சிகிச்சை (அக்குபிரஷர்), யுனானி, ஓமியோபதி உள்ளிட்ட பல மருத்துவமுறைகள் இந்தியாவில் நடைமுறையில் உள்ளன. இவை அனைத்திற்கும் தனித்தனியாக பெயர்கள் உள்ளன அல்லவா. அலோபதி என நாம் இன்று அழைக்கும் முறைக்கென சொந்தமான பெயர் எதுவும் இல்லை என்பதை உங்களால் நம்ப முடிகிறதா? அலோபதி (Allopathy) எனும் சொல் – ’மாறுபட்ட / வேறான’ என்ற பொருள் கொண்டது. ஓமியோபதியின் தந்தை டாக்டர்.ஹானிமன், தாம் உருவாக்கிய மருத்துவமுறைக்கு ‘ஓமியோபதி’ (Homeopathy) எனப் பெயரிட்டார். அவர் காலத்தில் வளர்ச்சியடைந்த நிலையில் இருந்த மருத்துவ முறைக்கென ஒரு பெயரிட்டார், அதுவே ‘அலோபதி’ எனும் சொல். ஓமியோபதி என்றால், நோய்க்குறியீடுகளுக்கு ஒத்த தன்மையிலான சிகிச்சை அளிக்கும் மருத்துவம் என்று பொருள். அலோபதி என்றால், நோய்க் குறியீடுகளுக்கு மாறுபாடான, வேறுபட்ட தன்மையில் சிகிச்சை அளிக்கும் மருத்துவமுறை என்று பெயர். ஒருவகையில், கேலியாக டாக்டர். ஹானிமன் சூட்டிய பெயர்தான் அலோபதி என்பது. தனக்கென சொந்தமாக பொருத்தமான பெயர்கூட இல்லாதமுறைதான் இன்றைய ‘அலோபதி’ ஆகும். ஆகவே இதனை வசதியாக, நவீன மருத்துவ முறை (modern medicine system) என்று அழைப்பதுண்டு. இதுவும் பெயர் அல்ல, ஒரு பொது அடையாளம். அவ்வளவே. ஆனால், இந்த மருத்துவத்துறை, நோய்களுக்குப் பெயர் சூட்டுவதில் வல்லமை பெற்றது. காய்ச்சல் என்றால் அதற்குப் பலவிதமான பெயர்க்ளைச் சூட்டுவார்கள். மஞ்சள் காமாலை என்றால் அதில் பலவகைகளை அடுக்குவார்கள். சர்க்கரை நோய் என்றால், அதில் பல வித நிலைகளைக் குறிப்பிட்டு அவற்றிற்கெல்லாம் பெயர் வைத்து அழகுபார்ப்பார்கள். உண்மையில், மஞ்சள் காமாலை, சர்க்கரை உள்ளிட்ட எண்ணற்ற நோய்களுக்கு அலோபதியில் ‘குணப்படுத்தும்’ மருந்தே இல்லை. இதைத்தான் மரபு மருத்துவ வல்லுனர்கள் கூறுகிறார்கள். இந்திய மருந்து மற்றும் அழகுப் பொருட்கள் சட்டமும் இதையே பட்டியலிட்டுக் காட்டுகிறது. ’’நோயைத் தீர்த்து மனிதர்களை நலமடையச் செய்ய இயலாத நிலையில், நோய்களுக்கு விதவிதமான பெயர்களை மட்டும் சூட்டுவதில் என்ன பயன்?’’ என்பதே மக்களாகிய நாம் முன் வைக்க வேண்டிய கேள்வி. மஞ்சள் காமாலையைச் சான்றுக்கு எடுத்துக்கொள்வோம். அலோபதி இதை Hepatitis என்ற பொதுப் பெயரால் அழைக்கிறது. இதோடு நில்லாமல், ஐந்து வகைகளையும் பட்டியலிடுகிறது. அவை – HAV, HBV, HCV, HDV, HEV ஆகும். அதாவது – ஹெபடைடிஸ் A வைரஸ் (Hpetaitis A virus), B virus, C virus, D virus, E virus ஆகியன. சமீபத்தில், G virus என்பதையும் கண்டறிந்துள்ளனராம். ஆக, மஞ்சள்காமாலையில் 6 வகைகள் இருப்பதாக அலோபதி கூறுகிறது. இவை ஒவ்வொன்றுக்கும் தனித்தன்மைகளும், சில பொதுத்தன்மைகளும் குறிப்பிடப்படுகின்றன. எல்லாம் சரி. மஞ்சள் காமாலைக்கு அலோபதியில் ‘குணமாக்கும்’ மருந்து உண்டா என்றால், இல்லை! என்ன ஒரு வினோதமான மருத்துவமுறை இது! இந்திய மருந்து மற்றும் அழகுப் பொருள் சட்டத்தின் அட்டவணை J பட்டியலிட்டலில், மஞ்சள் காமாலை 33 வது இடத்தில் உள்ளது. அதாவது, இந்த நோய்க்கும் ’குணப்படுத்தும் மருந்து இருப்பதாக அலோபதி மருத்துவத்துறை எந்தவிதக் கருத்தையும் உருவாக்குவது தடை செய்யப்பட்டுள்ளது’. இதுதான் சட்டம். இதுதான் நடைமுறையும் கூட. நாம் மஞ்சள் காமாலைக்கு என்ன சிகிச்சை எடுத்துக் கொள்கிறோம் எனச் சிந்தியுங்கள். ஏராளமான நாட்டு மருந்துகள் வழியாகத்தான் அந்த நோயை நாம் விரட்டி நலம் அடைகிறோம். அலோபதி மருத்துவர்களில் பலர், கீழாநெல்லி கலந்த ஆயுர்வேத, சித்த மருந்துகளைப் பரிந்துரை செய்வதையும் அனுபவத்தில் காண்கிறோம் அல்லவா. அவர்கள் அவ்வாறு பரிந்துரைப்பது நல்ல நோக்கில்தான் என்பதால், அது வரவேற்கத்தக்கதே. ஏனெனில், ஒரு மருத்துவ முறையில் மருந்து இல்லை என்றால், நோயாளியை பரிசோதனை எலியாக்கி, விளையாடுவதைவிட, பிற முறைகளில் உள்ள மருந்துகளைப் பரிந்துரைப்பதே மனிதநேயம் மிக்க செயல். டெங்கு காய்ச்சல் மற்றுமொரு சான்று. டெங்கு எனப் பெயரிட்டார்களே தவிர, அந்த நோயை முற்றிலும் குணமாக்கும் அலோபதி முறையிலான மருந்து கண்டறியப்படவில்லை. மக்கள் செத்து விழுந்துகொண்டிருக்கையில், பெரும் பீதியில் சமூகம் பதட்டமடைந்து கொண்டிருந்த நிலையில் கூட அலோபதி மருத்துவத் துறை, அதற்கான ‘குணப்படுத்தும்’ மருந்தைக் கண்டறியவில்லை. தமிழக அரசு டெங்கு காய்ச்சலுக்கு சித்த மருத்துவத்தைப் பரிந்துரைத்தது. இது குறித்து முதல்வர் ஜெயலலிதா விடுத்த அறிக்கையில்: ’’டெங்கு காய்ச்சல் கொசுக்களின் மூலமாக பரவுகிறது. இந்த காய்ச்சல் வந்தால், கடுமையான உடல் வலியும், உடலில் உள்ள இரத்த தட்டுக்களின் அளவு குறைந்தும் காணப்படும். டெங்கு காய்ச்சலுக்கு ஆங்கில மருத்துவத்தில் சிறப்பு சிகிச்சைகள் எதுவும் இல்லை. காய்ச்சலை குறைப்பது, ரத்ததட்டு அணுக்கள் குறைவதை தடுப்பது போன்றவைகளுக்கு பொதுவான சிகிச்சை வழங்கப்படுகிறது. டெங்கு காய்ச்சலினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு, ரத்த தட்டு அணுக்கள் அழிப்பதால், ரத்த கசிவு ஏற்பட்டு இறப்பு ஏற்படுகிறது. சித்த மருத்துவத்தின், பப்பாளி இலை சாறு குடித்தால், ரத்த தட்டு அணுக்கள் அதிகரிக்கும், நிலவேம்பு குடிநீர் டெங்கு வைரசை அழித்து, காய்ச்சலை குணப்படுத்தும். மலைவேம்பு இலை சாறு டெங்கு வைரசை எதிர்க்கும் சக்தி கொண்டது. எனவே, இவைகள் மூலம் தமிழகத்தில் டெங்கு காய்ச்சலை ஒழிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து டெங்கு காய்ச்சலினால் பாதிக்கப்பட்டவர்களை குணப்படுத்தவும், டெங்கு காய்ச்சல் வராமல் தடுக்கவும் தமிழ்நாட்டில் உள்ள அரசு மருத்துவமனைகளில் இலவசமாக சித்தமருந்துகளை விநியோகம் செய்ய தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது’ என்று குறிப்பிட்டிருந்தார். இந்த நடவடிக்கைதான் டெங்கு காய்ச்சலில் இருந்து மக்களைக் காத்தது. சித்த மருத்துவம்தான் டெங்குவை விரட்டியது. அம்மை எனப்படும் உடல் தொந்திரவுக்கும் இதே நிலைதான். நம் மரபு மருத்துவத்தில், அம்மை வந்தால், உணவுக் கட்டுப்பாடு, சுகாதாரமான சூழல் ஆகியவற்றுடன், சில பத்திய மருந்துகள் கொடுக்கப்படுகின்றன. வேப்பிலைகளைப் பரப்பி அதன் மீது அம்மை தாக்கியவரைப் படுக்க வைத்து, அம்மைப் புண்கள் ஆறும்போது, வேப்பிலை நீரில் மூன்று முறை குளிக்கச் செய்வதே சிகிச்சை முறை. இதை நாம் அனைவரும் அறிவோம். இந்த முறையில்தான் பல்லாயிரம் ஆண்டுகளாக, நம் சமூகம் வாழ்ந்து வந்தது, உடல் நலத்துடன். அலோபதியில் இதற்கும் ஒரு பெயர் வைத்திருக்கிறார்கள். Chicken pox என்பதுதான் அது. இது ஒரு விநோதமான பெயர். இந்தப் பெயருக்கான காரணம் குறித்து ஏராளமான ஊகங்கள் மட்டுமே உள்ளன. துல்லியமான ஒரே காரணம் இதுவரை கூறப்படவில்லை. சரி, இது மிக நல்ல பெயராகவே இருக்கட்டும். இதற்கு என்ன ‘குணப்படுத்தும்’ மருந்து உள்ளது அலோபதியில்? இல்லை என்பதுதான் விடை. பிரிட்டன் அரசின் மருத்துவ இணையதளம் அம்மை பற்றிப் பின்வருமாறு உரைக்கிறது: ’ There is no cure for chickenpox, and the virus usually clears up by itself without any treatment.’ (http://www.nhs.uk/Conditions/Chickenpox/Pages/Treatment.aspx) அதாவது, ’அம்மையை குணமாக்க இயலாது. இதை உருவாக்கும் வைரஸ் கிருமி எந்த சிகிச்சையும் இல்லாமலேயே தம்மைத்தாமே அழித்துக் கொள்கிறது’ என்கிறது, அலோபதியின் தலைநகரம் போல் விளங்கும் பிரிட்டனின் அரசு. பிற அலோபதி வல்லுனர்களும் இதைத்தான் கூறுகிறார்கள். நம் மரபு மருத்துவம் இந்த உண்மையைப் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே உணர்ந்ததால்தான், அம்மை தாக்கியவருக்கு மருந்து தராமல், சிகிச்சை அளிக்கும் முறையை உருவாக்கியது. கூடுதலாக, வேப்பிலையும் பத்திய உணவும் சேர்ந்து, விரைவில் நலமடைய உதவுகின்றன. சர்க்கரை நோயும் இவற்றைப்போல, குணமாக்கக் கூடிய நோய்தான் என்பதை நாம் புரிந்துகொள்ள வேண்டும். அலோபதி மருத்துவத்துறையினால் அதை குணப்படுத்த முடியாது. அவ்வளவுதான். சர்க்கரையிலும் பல நிலைகளைப் பிரித்து அவற்றுக்கெல்லாம் பெயர் இட்டு அழகு பார்க்கிறது, அலோபதி மருத்துவம். வழக்கமான கேள்வியைத்தான் நாம் இதற்கும் கேட்க வேண்டும், ‘பெயர் வைப்பது, வகைப் பிரிப்பது எல்லாம் சரிதான். நோயை குணப்படுத்த உங்களிடம் மருந்து இருக்கிறதா?’ சித்த மருத்துவம், தொடு சிகிச்சை, ஓமியோபதி, ஆயுர்வேதம், ஓக சிகிச்சை உள்ளிட்ட பல முறைகள் சட்டப்படி அங்கீகரிக்கப்பட்டவை. ஏதோ, அலோபதி மட்டும்தான் இந்த நாட்டின் ஒரே சிறந்த, அங்கீகாரம் பெற்ற, சட்டப் பாதுகாப்பு பெற்ற மருத்துவமுறை எனும் மாயை இங்கு கட்டமைக்கப்பட்டுள்ளது. முதலில் அதை உடைக்க வேண்டும். சித்த மருத்துவம் உள்ளிட்ட பல மரபு மருத்துவங்களில் ’சர்க்கரை நோயை குணப்படுத்த மருந்துகள் உள்ளன’ என்பது சட்டப்படியான, நடைமுறைப்படியிலான, மரபுவழிப்பட்ட உண்மை ஆகும். இந்த உண்மையை நாம் ஒருபோதும் விட்டுக் கொடுக்கக் கூடாது. இனிப்பு ஆவணப்படத்தில், இந்த உண்மைகளைத்தான் பதிவு செய்கிறேன்.
700 வோல்ட் மின்சாரத்தை உற்பத்தி செய்யும் விலாங்கு மீன் உருண்டு, நீண்ட உடலுடன் காணப்படும் விலாங்கு மீனைப் பத்தி தெரிந்திருக்கும் . பார்ப்பதற்கு பாம்பு போன்று இந்த மீன் இருக்கும். விலாங்கு மீனில் பல வகையான வினோதங்கள் உண்டு. அதில் எலக்ட்ரோபோரஸ் எலக்ட்ரிக்கஸ்' என்ற விலாங்கு மீன் ஒன்று உண்டு . இந்த விலாங்கு மீன் மின்சாரத்தை உற்பத்தி செய்கிற திறன் படைத்தது.!? இதனுடைய மேற்புறம் கரும் சாம்பல் நிறத்துலயும், அடிவயிறு மஞ்சம் நிறத்துலயும் இருக்கும். சேத்துக்கு அடியில வாழ விரும்புற இந்த மீன், வெளிக்காற்றையும் சுவாசிக்கும். அதாவது, 10 நிமிடங்களுக்கு ஒருமுறை தண்ணீருக்கு மேல வந்து காற்றைச் சுவாசித்து விட்டு, மறுபடியும் சேத்துக்கு அடியில போயிடும். 'ஜிம்னோடிடே' குடும்பத்தைச் சேர்ந்த இது, சுமார் 2.5 மீட்டர் நீளத்துக்கு வளரும். பொதுவா, ஒரு மீட்டர் நீளமுடைய மீன்கள் தான் அதிகமா இருக்கும். சுமார் 20 கிலோ எடை வரைக்கும் இந்த மீன் வளரும். இந்த மீன், ஷாக் அடிக்குற அளவுக்கு ஏறக்குறைய 700 வோல்ட் மின்சாரத்தை உற்பத்தி செய்கிறது . இதற்காகவே அதோட உடம்புல 5 ஆயிரம் முதல் 6 ஆயிரம் வரை மின்சாரத்தை உற்பத்தி செய்யும் எலக்ட்ரோபிளேட்டுகள் இருக்கிறது. இந்த மின்சாரத்தை பயன்படுத்தி தனக்கு வேண்டிய உணவு மீனை அதிர்ச்சியடைய வைத்து உணவு மீனை செயல் இழக்க வைத்து பிடிக்கும், எதிரி மீன்கிட்ட இருந்து தற்காத்துக்கவும் மின்சாரத்தை பயன்படுத்துகிறது
ஜலதோசம், மூக்கடைப்பு எந்தவிதமான பக்க விளைவுகளும் மாத்திரைகளும் இல்லாமல் உடனடி நிவாரணம் . . . உலகிலே மிகப்பெரிய நோய் என்று சொல்லக்கூடிய நோய்களில் ஒன்று தான் ஜலதோசம், மூக்கில் இருந்து தண்ணீர் வடிந்து கொண்டே இருக்கிறது அதோடு தலைவலி, மூக்கடைப்பு என அனைத்தும் இருக்கிறது இதற்கு சித்த மருத்துவத்தில் உடனடியாக தீர்வு காண பல மருந்துகள் புத்தகத்தில் படித்தாலும் எந்த மருந்துமே உடனடியாக வேலை செய்யவில்லை என்று பலர் இமெயிலில் தெரியப்படுத்தி இருந்தனர். மிக மிக உடனடியாக ஜலதோசத்தை குணப்படுத்தும் மருந்துகள் குருநாதர் அகத்தியரில் நூலில் நிறைந்து கிடைக்கிறது. உதாரணமாக நூலில் இருந்து ஒரு மருந்தை எடுத்து 10 பேருக்கு கொடுத்து பார்த்தோம் உடனடியாக தீர்வு கிடைத்தது. முதலில் ஜலதோசம் ஏன் வருகிறது என்று பார்த்தால் குறிப்பிட்ட வைரஸால், தலையில் ( மண்டையில் ) நீர் சேர்வதால் வருகிறது, ஜலதோசம் வருவது நல்லது தான் மண்டையில் இருக்கும் நீரை மூக்கின் வழியாக வெளியே தள்ளிக்கொண்டே இருக்கிறது, தொடர்ந்து சளி பிடித்து தும்மல் வருவதாலும், மூக்கில் இருக்கும் நீரை பல முறை வெளியே சிந்துவதாலும் மூக்கில் வலியும் தொண்டையில் வேதனையும் தான் அதிகமாகிறது. ஜலதோசம் வரும் முன்னே நமக்கு தெரிந்துவிடும் எப்படி என்றால் தொண்டையில் சற்று வலி போன்று எரிச்சல் ஏற்படும் இதிலிருந்தே நமக்கு ஜலதோசம் வரப்போகிறது என்பதை கண்டுபிடிக்கலாம். இந்த நேரத்தில் நாம் 13 மிளகு எண்ணி எடுத்து மென்று சாப்பிட வேண்டும். தூசு குப்பையினால் மூக்கில் ஏற்படும் அலர்ஜி (Dust allergy) போன்றவைகளினால் வரும் ஜலதோசம் மிளகு சாப்பிட்ட 15 நிமிடத்திற்குள்ளே குணமாகும். மஞ்சள் பொடி மற்றும் சுண்ணாம்பு மண்டையில் நீர் சேர்ந்திருப்பதால் ஏற்படும் ஜலதோசம் மிளகு சாப்பிட்டால் கட்டுக்குள் வருமே தவிர முழுமையான குணம் கிடைக்காது.தலையில் சேர்த்திருக்கும் நீரை எடுப்பதற்கான மருந்தை சற்றுவிரிவாகத் தெரியப்படுத்துகிறோம். அகத்தியர் தன் நூலில் அக்கினிசேகரத்தையும் வெள்ளை-யையும் சேர்த்தால் இரத்தம் வரும் இதை பூசினால் உடனடியாக குணம் கிடைக்கும் என்று தெரியப்படுத்தி இருந்தார். வெளியே இருந்து பார்ப்பதற்கு ஏன் இப்படி குழப்பி இருக்கிறார் என்று நினைக்கத்தோன்றும் ஆனால் உண்மையில் சந்தேகத்திற்கு இடமே இல்லாமல் இந்த எளியவனுக்கும் தெரியப்படுத்திவிட்டார் என்றே தோன்றியது. அக்கினிசேகரம் என்றால் மஞ்சளையும், வெள்ளை என்றால் வெற்றிலைக்கு வைக்கும் சுண்ணாம்பு -ஐ குறிக்கும். இரண்டும் சேர்த்தால் இரத்தமான சிகப்பு வண்ணத்தில் கிடைக்கும். மருந்து கிடைத்தாச்சு ஆனால் எந்த மருந்தையும் சோதிக்காமல் வெளியே தெரியப்படுத்தியது கிடையாது. ஜலதோசத்துடன் யாராவது வந்தால் சோதித்து பின் தெரியப்படுத்தலாம் என்று வைத்துவிட்டோம். இரண்டு நாள் கழித்து நம் நண்பர் ஒருவர் ஜலதோசத்திற்கு ஏதாவது மருந்து இருக்கிறதா என்று தாமாக வந்து கேட்டார். உடனடியாக நாம் அவர் வீட்டிற்கு வெற்றிலைக்கு வைக்கும் சுண்ணாம்பு ஒரு சிறிய பாக்கெட் வாங்கிக்கொண்டு சென்றோம். அவர் அம்மாவிடம் மஞ்சள் பொடி எடுத்து வரச்சொன்னோம். (சிறிய ஸ்பூன் ) இரண்டு ஸ்பூன் மஞ்சள் பொடி 1/4 ஸ்பூன் அளவு சுண்ணாம்பு எடுத்து சிறிது தண்ணீர் விட்டு பூசுவதற்கு தகுந்தாற்போல் கலந்தோம்.(படத்தில் மேலே காட்டப்பட்டுள்ளது) மண்ண்டையைச்சுற்றி நெற்றியிலும் மூக்கின் மேலும் இதை பூச வேண்டும் என்று சொல்லி அவங்க அம்மாவிடம் கொடுத்தோம். அவர்கள் முதலில் கேட்டது சுண்ணாம்பு தேய்ப்பதால் நெற்றி புண்ணாகிவிடுமோ என்ற பயம் இருக்கிறது என்றார், மஞ்சள் சேர்வதால் உங்களுக்கு பயமே வேண்டாம் எக்காரணம் கொண்டும் புண்ணாகாது என்று சொல்லி பூசக்கூறினோம். நண்பரின் நெற்றி முழுவதும் மற்றும் மூக்கிலும் இந்தக்கலவையை அவர் அம்மாவே பூசிவிட்டார். 1 மணி நேரம் நன்றாக தூங்க சொல்லிவிட்டு பிறகு வந்து பார்ப்பதாக கூறிவிட்டு சென்றோம். சரியாக மூன்று மணி நேரம் நன்றாக அசந்து தூங்கியுள்ளார் அதன் பின் நேரடியாக நம் வீட்டிற்கு வந்தார் ஜலதோசம் சளி பிடித்தற்கான எந்த அறிகுறியும் இல்லை. மண்டையில் இருக்கும் அத்தனை நீரையும் சுண்ணாம்பு எடுத்துவிட்டது என்று மகிழ்ச்சியுடன் கூறி விட்டு சென்றார். குருநாதாரின் அன்பை என்ன சொல்வேன். நன்றியை அப்படியே குருநாதருக்கு சமர்பித்தோம். சில நாட்கள் கழித்து இவரின் தெருவில் 10 வயதுள்ள ஒரு சிறுவன் இதே போல் நெற்றியில் நம் சுண்ணாம்பு கலவை பூசிக்கொண்டு செல்வதைக்கண்டு அவனை அழைத்து ஏன் நெற்றியில் ஏதோ பூசி இருக்கிறாயே என்று கேட்டோம் அவன் உடனே நம் நண்பரின் வீட்டை காட்டி அவர் தான் பூசிவிட்டார் என்று கூறினார். உடனடியாக நம் நண்பரை அழைத்து எத்தனை பேருக்கு இதே போல் பூசிவிட்டாய் என்று கேட்டோம். அவர் கொஞ்சம் காத்திருக்குமாறு கூறிவிட்டு வெளியே சென்று 10 நபர்களை அழைத்து வந்தார் இத்தனை பேருக்கும் ஜலதோசத்திற்கு மருந்து கொடுத்து உடனடி குணம் கிடைத்தது என்றார். 10 பேரிடமும் தனித்தனியாக விசாரித்ததில் கிடைத்த சில தகவல்கள் மருந்து பூசிய பின் தூக்கம் வருகிறது, நாம் தூங்கினால் தான் மண்டையில் இருக்கும் நீரை சுண்ணாம்பு முழுமையாக எடுக்கிறது என்றும், அத்துடன் இரவு படுக்கப்போகும் முன்னும் இதே போல் பூசிவிட்டு படுக்கலாம் என்றும், ஒரே நாளில் இரண்டு முறை பயன்படுத்தினாலும் எந்தப்பக்கவிளைவுகளும் இல்லை என்றும் தெரிவித்தனர். சித்த மருத்துவத்தை சோதித்து பார்க்கவிரும்பும் நபர்கள் கூட இந்த மருந்தை பயன்படுத்திப் பார்த்து தங்கள் அனுபவத்தை மறக்காமல் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேரையர் அருளிய தாதுபுஷ்டி லேகியம்:- தாது என்றால் நமது உடலில் உள்ள நரம்பு ஆகும். ஆணின் சுக்கிலத்தையும்(விந்து) தாது எனச் சொல்வதுண்டு. தாது புஷ்டி லேகியம் என்பதை நரம்புகளை வலிவாக்கி உடல் உறுப்புகளை பொலிவாகவும் மிளிரச் செய்யும் மருந்து என பொருள் கொள்ளலாம். நவீன அலோபதி மருத்துவத்தில் உள்ள வைட்டமின் மற்றும் நோய் எதிர்ப்பு மாத்திரைகளைப் போல ஒன்றுதான் இந்த தாது புஷ்டி லேகியம். இதனை ஆண்,பெண் இருபாலாரும் பயன்படுத்தலாம். தாம்பத்திய உறவு சிறக்க, குழந்தைப் பேறு கிடைக்க இந்த தாது புஷ்டி லேகியம் வாராது வந்த மாமருந்து என்பது மாதிரியான விளம்பரங்களை இன்றைக்கும் நாளிதழ்களில் நாம் பார்க்கக் கூடியதாய் இருக்கிறது.உடலை உறுதி செய்து உவப்புடன் வாழ்ந்திட நமது முன்னோர்கள் உருவாக்கிய இந்த மருந்தினைக் குறித்த இது மாதிரியான பல தவறான கருத்தாக்கஙக்ள் நம்மிடையே இருப்பது வருத்தமான உண்மை. எனவே இந்த தாது புஷ்டி லேகியத்தை நம் உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் ஒரு மருந்து என்கிற வகையில் அணுகுவதே சரியானதாக இருக்கும். தாது புஷ்டி லேகியம் பற்றி பல் வேறு சித்தர் பெருமக்கள் குறிப்பிட்டிருக்கின்றனர். அதன் தயாரிப்பு முறைகளும் அவர்களின் பாடல்களில் காணக் கிடைக்கிறது. இவை ஒவ்வொன்றும் தனித்துவமானவை, வேறுபட்டவை. அவரவரின் உடலின் தன்மை மற்றும் குறைபாடுகளைப் பொறுத்து இந்த லேகியத்தின் தயாரிப்பு முறைகள் மாறுபடும். இன்றைய பதிவில் தேரையர் அருளிய ஒரு முறையினை பார்க்க இருக்கிறோம். இந்தத் தகவல் தேரையர் அருளிய “தேரையர் வைத்திய சாரம்” எனும் நூலில் இருந்து சேகரிக்கப் பட்டது. காத்திடுவாய் கருவேலின்பசை தானுங்கொள் கைமுறையாய்ச் சொல்கிறேன் பலமிரண்டு பாத்திடுவாய் சுக்கொடு சர்க்கரை பேரீச்சம்பழம் பாகுவெந்தயம் கொப்பரைத் தீக்காட்டி சேத்திடுவாய் வகையொன்று பலமே யொன்று திறமாக வடிசெய் கோதுமைப் பொரிமா யேத்திடுவாய் பலமெட்டு பனைவெல்லம்தான் யெட்டுப் பலம் பாகுபிடித் தூளைப்போடே. போட்டடா லேகியம் போலக் கிண்டி புகழான ஆவின்நெய் பலம்நால் விட்டு ஆட்டடா எலுமிச்சங்காய் போலந்தி அப்பனே மண்டலமோ ரரைதான் கொள்ளு ஓட்டடா கிரந்தி வெள்ளை யிடுப்பு நோய்தான் உத்தமனே தாதுபுஷ்டி மிகவுண்டாகும் மாட்டடா நெய்யன்னம் வெல்லத்தோ டுண்ணு மாதர் மயக்கம் புளிமண்டலமே தள்ளு. கருவேலம் பிசின் இரண்டு பலம், சுக்கு, சர்க்கரை, பேரீச்சம் பழம், வெந்தயம், கொப்பரைத் தேங்காய் ஆகியவற்றில் வகைக்கு ஒரு பலம் வீதம் எடுத்து, அவற்றை ஒன்று சேர்த்து கல்வத்தில் இட்டு நன்கு இடித்துத் தூளாக்கி துணியில் சலித்து எடுத்துக் கொள்ளவேண்டுமாம் (இதுவே சூரணம் எனப்படும்). பிறகு ஒரு மண் பானையில் எட்டு பலம் பனைவெல்லத்தையும் இட்டு அடுப்பில் வைத்து எரிக்க பனைவெல்லம் உருகி பாகு பத்தில் வருமாம். அப்போது முன்னர் சலித்து எடுத்து வைத்த சூரணத்தை சிறிது சிறிதாக பானையில் போட்டு கிண்ட வேண்டுமாம். அது சற்று இறுகிய நிலையில் வந்ததும் அதனுடன் பசுவின் நெய் நான்கு பலம் விட்டுக் கிண்டி அடுப்பில் இருந்து இறக்கி ஆறவைத்து, சேமித்துக் கொள்ளவேண்டுமாம். இதுவே தேரையர் அருளிய தாது புஷ்டி லேகியம்.இந்த தாதுபுஷ்டி லேகியத்தில் எலுமிச்சம் காய் அளவுக்கு எடுத்து காலை மாலை என்று இரு வேளையாக, தொடர்ந்து இருபத்தி நான்கு நாட்கள் சாப்பிட்டு வரவேண்டுமாம். இதனால் தாதுபுஷ்டி உண்டாகுமாம். அது தவிர கிரந்தி, வெள்ளை, இடுப்பு நோய் போன்றவைகளும் குணமாகும். பத்தியமாக சாதத்தில் நெய், வெல்லம் சேர்த்து சாப்பிடவும். புளியையும், பெண் சேர்க்கையும் மருந்துண்ணும் நாட்களில் இருந்து நாற்பத்தெட்டு நாட்கள் நீக்கிவிடவேண்டும் என்கிறார். குறிப்பு :- ஒரு பலம் என்பது தற்போதைய அளவுகளில் 35 கிராம் ஆகும். =உணவே மருந்து -- | Read | Like | Share | நன்றி:- எழுத்தாளர் தோழி
மனிதன் இறந்து 36 மணி நேரத்தில் நடப்பது என்ன ? மனிதன் இறந்து 36 மணி நேரத்தில் ஈக்கள் முட்டை இடுகின்றன உடலில் 60 மணி நேரத்தில் லார்வாக்கள் தோன்றுகின்றன. 3 நாட்களில் நகங்கள் கழன்று விடுகின்றன. 4 நாட்களில் ஈறுகள் தொலைகின்றன. 5 நாட்களில் திரவமாய் உருகுகிறது மூளை. 6 நாட்களில் வாயுக்களால் வெடிக்கிறது வயிறு. 2 மாதங்களில் உடல் உருகி திரவமாகின்றது. இறந்த பிறகு இப்படி மனிதனின் உடல் பாகங்கள் சிதைந்து போக, எதற்கு இந்த தலைகணம், கோபம், ஆணவம், ஆடம்பரம், கொலை வெறி,கௌரவம், ஜாதி மத சண்டைகள் …??? மனித பிறப்பு மிக .அறியப் பிறப்பு ..அதை வாழும் காலத்தில் அனைவரிடமும் அன்புடனும் பண்புடனும் ஆதரவுடனும் நடந்து கொள்வோமே