Saturday 8 February 2014

தாமரை தண்டில் நிறைந்துள்ள மருத்துவகுணம்:-

நிறைய பெருக்கு இப்படி ஒன்று இருப்பதே தெரியா வில்லை. இது பற்றி கேள்வி பட்டு இருந்தாலும் இதில் அடங்கி உள்ள சத்துக்கள் ஏறாலம்.

தாமரை ஏரிநீரில் வளர்ந்து பூ மேலே மிதக்கும்.

பூ மேலே மிதந்தாலும் அதன் தண்டு நீருக்குள்ளே இருக்கின்றது.

சீனாவிலே தாமரைக் கிழங்கை பல வகைகளில் சமைத்து சாப்பிடுகிறாங்க.

தாமரைத் தண்டின் சத்துக்கள்:

1. நிறைய தாமரைத் தண்டு தின்றால் நீண்டகாலம் வாழலாம் என்று சொல்லுங்க.

2. பச்சையாகத் தின்னலாம். சமைத்தும் சாப்பிடலாம்.

3. 66 வகை பழங்கள் மற்றும் காய்களை ஆராய்ந்த மருத்துவ நிபுணர்கள் முதுமை அடைவதைத் தடுக்கும் ஆற்றல் தாமரை தண்டில் அதிகம் என்று மதிப்பிட்டுள்ளனர்.

4. தாமரைத் தண்டை உரித்தால் வெள்ளையாக இருக்கும். இது சத்து மிகுந்தது. மாவுச் சத்து புரதம், கனிமம் ஆகியவற்றோடு சில வேதிப் பொருட்களும் உள்ளன.

5. நீருக்கடியில் வளர்வதால் இது குளிர்ச்சியானது. தாமரைத் தண்டை உண்டதும் வயிற்றிலும் ரத்தத்திலும் உள்ள வெப்பம் குறைவதாக சீன மூலிகை மருத்துவம் கூறுகின்றது.

6. மேலும் தாகமும் தணிகிறது. மது குடித்த பின் வாயில் ஏற்படக் கூடிய கசப்பையும் ரத்தவாந்தியையும் தாமரைத் தண்டு கட்டுப்படுத்துகின்றது.

7. பொதுவாக குழந்தை பெற்ற பெண்கள் குளிர்ச்சியாக சாப்பிடக் கூடாது என்பார்கள். ஆனால் தாமரை தண்டு மட்டும் விதிவிலக்கு. இது குழந்தை பெற்ற பிறகு தாயின் வயிற்றில் தங்கிவிட்ட கசடுகளை வெளியேற்றுகின்றது. ஆகவே பச்சை தாமரைத் தண்டை மருந்து என்பார்கள்.

8. குறிப்பாக பெண்கள் தாமரைத் தண்டின் கணுக்களை தின்பது நல்லது . ஏனென்றால் கருப்பையில் இருந்து ரத்தம் கொட்டுவதை இது கட்டுப்படுத்துகின்றது. மேலும் சிறு நீரிலும் மலத்திலும் ரத்தம் கலந்து வருவதும் ரத்த வாந்தியும் நிறுத்துவதற்கு தாமரைக் தண்டின் கணுக்களை வெல்லத்துடன் சேர்த்து முதல் மருந்தாக சீன மூலிகை மருத்துவர்கள் தருகின்றனர்.

இது பச்சையாகத் தின்பதற்கு:

1. பச்சைத் தாமரைத் தண்டை சுத்தம் செய்து தோல் உரித்து சிறிசிறு தண்டுகளாக நறுக்க வேண்டும். பிறகு அதில் வினிகரும் சீனியும் கலந்து சில நிமிடங்கள் ஊற வையுங்கள். புளிப்பும் இனிப்பும் கலந்த தாமரைத் தண்டு சிற்றுண்டி தயார்.

2. வினிகர் இல்லாவிட்டால் புளிக் கரைசல் அல்லது எலுமிச்சம் பழச் சாறு பயன்படுத்தலாம். புளிப்புச் சுவை வேண்டும். அவ்வளவுதான்.

தாமரைத் தண்டை சமைக்கும் முறை:

1.தாமரைத் தண்டை வேகவைக்கும் போது அதில் உள்ள மாவுப் பொருள் நன்கு வெந்து பக்குவமாகிறது. ஆகவே எளிதில் ஜீரணமாகிறது. இதை குழந்தைகளுக்கும் வயதான முதியவர்களும் கொடுப்பதால் ஆபத்து இல்லை.

2. தாமரைத் தண்டை நன்றாக சுத்தம் செய்த பிறகு அதைக் குடைந்து ஓட்டை போட்டு அதற்குள்ளே அரிசியை நன்றாகத் திணித்து இட்லி பாத்திரத்தில் வைத்து ஆவியில் வேகவைக்க வேண்டும்.

3. நன்றாக வெந்ததும் சில நிமிடங்கள் ஆற வைத்து பிறகு கத்தியால் சிறுசிறு துண்டுகளாக அதாவது வட்ட வட்ட வில்லைகளாக நறுக்க வேண்டும். அதன் மீது சிறிது சர்க்கரையும் OSMANTHUS மலரும் தூவினால் தாமரைத் தண்டு சோறு தயார்.

4. இது தென் சீனாவில் புகழ் பெற்ற சிற்றுண்டி. இன்னொரு முறையும் இருக்கின்றது. தாமரைத் தண்டு துண்டுகளுடன் வெள்ளைப் பூண்டு இஞ்சி மிளகாய் ஆகியவற்றைக் கலந்து எண்ணெயில் பொரித்தும் சாப்பிடலாம்.

தாமரை தண்டு குழம்பு

தாமரை தண்டு -ஒரு காணு தோல் நீக்கி
வெங்காயம் - ஒன்று பெரியது
தக்காளி -ஒன்று பெரியது
பச்சை மிளகாய் -இரண்டு பாதியாக கீறி
பூண்டு -இரண்டு பெரிய பல்
கொத்தமல்லி இலை-இரண்டு கீற்று
மஞ்சள் தூள் -1 /2 தேக்கரண்டி
மிளகாய் தூள் -தேவையான அளவு
கரம் மாசாலா தூள் -1 /2 தேக்கரண்டி
தேங்காய் பால் -3 /4 கப்
கசகசா-1 /2 தேக்கரண்டி
எண்ணெய்-சிறிதளவு
கடுகு-1 /2 தேக்கரண்டி
சீரகம்-1 /2 தேக்கரண்டி
பட்டை-ஒரு சிறிய துண்டு
பெருஞ்சீரகம்-1 /2 தேக்கரண்டி
ஏலக்காய்
மிளகு
உப்பு-தேவைக்கேற்ப

எண்ணெய் விட்டு கொதித்ததும் கடுகு உளுத்தம் பருப்பு, சீரகம், பெருஞ்சீரகம், மிளகு, பட்டை, ஏலக்காய், பச்சை மிளகாய், தாளிக்கவும் அடுத்து இஞ்சி பூண்டு, வெங்காயம் ஒவ்வொன்றாக போட்டு நன்றாக வதக்கலாம்.

தக்காளி இட்டு நன்றாக வதங்கிய பின் தாமரை தண்டு நறுக்கியதை போட்டு கிண்டவும். பின்பு மிளகாய் தூள், கரம்மசாலாதூள், மஞ்சள் தூள் அனைத்தையும் சேர்க்கவும்.

நன்றாக மூழ்கும் வரை நீர் இட்டு மெல்லிய எரியில் அவிய விடவும். தேங்காய் பாலுடன் கசகசாவை அரைத்து கறியுடன் சேர்க்கவும். நன்றாக கொதிக்க விடவும். கொதித்ததும் கொத்தமல்லி இலை, அளவான உப்பு சேர்த்து இறக்கவும். தாமரை தண்டு குழம்பு தயார். இதை சப்பாத்தி, பூரியுடன் சாப்பிடலாம்.

No comments:

Post a Comment