Monday 3 February 2014

நல்ல குருவைக் கொள்ளாமையால் கேடே வரும்..!

"குருட்டினை நீக்கும் குருவினைக் கொள்ளார்
குருட்டினை நீக்காக் குருவினைக் கொள்வர்
குருடும் குருடும் குருட்டாட்டம் ஆடிக்
குருடும் குருடும் குழிவிழும் ஆறே"


மக்கள் அஞ்ஞானத்தை நீக்கும் குருவைத் தேடி அடையார்.
அஞ்ஞானத்தைப் போக்காத குருவைத் தான் அடைவர் .
அவர்கள் செயல் பிறவிக் குருடாக இருக்கும்.
இரண்டு குருடர்கள் கண்மூடி ஆடும் ஆட்டம் ஆடிப்
பள்ளத்தில் விழுதலுக்கு ஒப்பாவர்.
குருட்டாட்டம் என்பது சிறு பிள்ளைகள் தம் கண்ணைத்
துணியால் மறைத்துக் கொண்டு, எதிரிலுள்ள
பிள்ளைகளைத் தொட முயற்சி செய்தல்.

No comments:

Post a Comment