Sunday 5 June 2016

கடன் தீர உதவும் ஆன்மீக ரகசியங்கள்
கடன் தீர்க்கும் கணபதி மந்திரம்
ஓம்| கணேசாய | ருணம் சிந்தி வரேண்யம் | ஹூம் நம பட் ||
இந்த மந்திரத்தை ஜெபிக்கும் முன்னர் தலை உச்சியில் முத்திரை போட்டு ''ஓம் ஸ்ரீ கனகரிஷியே நமஹ'' என்று 3 தடவை சொல்லி மந்திரம் பலிக்க வேண்டிக்கொள்ளவும்.
கிழக்கு முகமாக அமர்ந்து குறைந்தது 27 தடவை அதிகபட்சமாக எவ்வளவு முடியுமோ அவ்வளவு ஜெபிக்கலாம்.
பிரயோகம் :-
இரவில் அல்லது பகலில் யாரும் பாராமல் இருந்து விளக்கேற்றி இந்த மந்திரத்தை 108 தடவை ஜெபித்து விளக்கின் பாதத்தில் குங்குமம் இட்டு அந்தக் குங்குமத்தை அணிந்து வர விரைவில் மந்திர சித்தியாகும்.
எண்ணிக்கை கூடக்கூட கடன் தீர்ந்து எல்லா நிலைகளிலும் விருத்தி உண்டாகும்.
90 நாட்களுக்கு குறைந்தது 108 தடவை ஜெபித்து வரவும்.90 நாட்கள் கழித்து கணபதி ஹோமம் செய்து கொள்ளவும்.
கணபதி ஹோமம் முடிந்ததும் கணபதி ஹோமம் செய்யப்பட்ட ஹோமச் சாம்பலை வெற்றிலையில் நெய் விட்டு தர்ப்பையை கருக்கி வைத்த மையை அணிந்து வரவும்.
2.ஸ்ரீ சங்கடஹர கணபதி பிரயோகம் :-
சங்கடஹர சதுர்த்தி அன்று அருகில் உள்ள விநாயகர் ஆலயம் சென்று அருகம்புல் மாலை சார்த்தி அர்ச்சகரிடம் சொல்லி மறுநாள் அந்த மாலையில் கொஞ்சம் வேண்டும் என்று வாங்கி அந்த அருகம்புல்லில் கொஞ்சம் மட்டும் எடுத்து ஒரு செம்பு பாத்திரத்தில் நீர் நிரப்பி இந்த மந்திரத்தை 108 தடவை ஜெபித்து அந்த நீரை வீட்டில் உள்ளோர் முகத்தில் தெளித்து பின்னர் வீடு முழுவதும் தெளித்து விட்டு மீதம் உள்ள அருகம்புல்லை வெள்ளை அல்லது மஞ்சள் பட்டு துணியில் சுற்றி வீடு,அலுவலகம் ,கடைகளில் சாமிபடத்தின் முன்னால் அல்லது ஈசான்ய மூலையில் வைக்கத் தரித்திரம், பீடை, காரியத்தடை விலகி சுபிட்சம் உண்டாகும்.
ஸ்ரீ சங்கடஹர கணபதி மந்திரம் :-
ஒம் நமோ ஹேரம்ப மதமோதித |
மம சர்வ சங்கடம் நிவாரய நிவாரய|
ஹூம் பட் ஸ்வாஹா ||
சங்கடஹர சதுர்த்தி அன்று விரதம் இருந்து இந்த மந்திரத்தை 108 தடவை ஜெபித்து வரவும்.
3.ஸ்ரீ பைரவ மந்திரம்
தேய்பிறை அஷ்டமி தோறும் சிவாலயத்தில் உள்ள பைரவருக்குப் பாலாபிசேகம் செய்து அந்த ஆலயத்தில் வடக்கு முகமாக அமர்ந்து கீழ்க்கண்ட மந்திரத்தில் ஏதேனும் ஒன்றை ஜெபிக்கத் தொடங்கவும்.
ஸ்ரீ ஸ்வர்ணாகர்ஷன பைரவ மந்திரம்
ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் க்லீம் ஸ்வர்ணாகர்ஷன பைரவாய ஹூம் பட ஸ்வாஹா
ஸ்வர்ணாகர்ஷன பைரவயந்திரத்தை வெண்ணிற அல்லது செந்நிறப் பூக்களால் அர்ச்சிக்கவும். மந்திரத்தைத் தினமும் குறைந்தது 108 தடவை ஜெபித்து வரவும்.
செவ்வாய்க்கிழமை மதியம் 12 முதல் 1:30 மணிக்குட்பட்ட நேரத்தில் கடன் தொகையில் ஒரு சிறு பகுதியையாவது திரும்பச் செலுத்தவும்.விரைவில் கடன் தீரும்.
செவ்வாய்க்கிழமை அன்று ஒரு பச்சை நிற பட்டுத் துண்டு வாங்கி பன்னீர் கலந்த தண்ணீரில் அலசிக் காயவைக்கவும்.மறுநாள் புதன்கிழமை அதிகாலை 6 முதல் 7 மணிக்குள் அந்தத் துண்டில் சிறிது கிழித்து அல்லது வெட்டி அதில் சிறிது வெந்தயம் போட்டுப் பணம் வைக்கும் இடத்தில் வைக்கவும். தொடர்ந்து பணவரவு உண்டாகும்
Like
Comment
ஆன்மீகத்தில் உயர்வும் நோய் தீர்க்கும் சக்தியும் தரும் ஸ்ரீ தத்தாத்ரேய மந்திரம்
மும்மூர்த்தி ஸ்வரூபமான ஸ்ரீ தத்தாத்ரேயர் அவதூத சத்குருவாவார். யோக மற்றும் ஞான நிலையில் உயர்வு பெற விரும்புபவர்கள் ,ஆன்மீக,தியான பயிற்சிகளில் ஈடுபடுபவர்கள் இவரை வழிபட்டு வர ஆன்மீகப்பாதையில் நிறைவான விரைவான முன்னேற்றம் காணலாம்.
ஓம் ஹ்ராம் ஹ்ரீம் ஹ்ரூம் குரு தத்தாத்ரேயாய நமஹ
இந்த மந்திரத்தைக் வடக்கு நோக்கி அமர்ந்து பிரம்ம முஹூர்த்தம் அல்லது இரவு 11:30 முதல் 12:30 மணிக்குள் குறைந்தது 108 தடவை ஜெபித்து வர விரைவில் சித்தியாகும்.
ரெய்கி,ப்ராணிக் ஹீலிங் போன்ற வைத்திய முறைகளின் மூலம் சிகிச்சை அளிப்பவர்கள் மற்றும் வைத்தியத்தைத் தொழிலாகக் கொண்டவர்களும் இந்த மந்திரத்தை ஜெபித்து வர அவர்களின் குணமளிக்கும் சக்தி அதிகரிக்கும் நோயாளிகளின் வியாதி நமக்குப் பரவாமல் காக்கும்.
Like
Comment
மூலிகை சாப நிவர்த்தி மற்றும் பிராண பிரதிஷ்டை மந்திரங்கள்
மூலிகைகள் தெய்வீக சக்தி கொண்டவை.அதுவும் நமது ஹிந்து தர்மத்தில் மூலிகை,செடி,மரம் இவை தெய்வ அம்சமாகவே பார்க்கப்படுகின்றன.
உதாரணம் :-
விநாயகர் - அருகம்புல்
சிவபெருமான் - வில்வம்
அம்மன் - வேம்பு
விஷ்ணு - துளசி
ஹனுமான் - வெற்றிலை,துளசி
துர்க்கை - வன்னிமரம்
அரசமரம் - விநாயகர்,திரிமூர்த்தி ஸ்வரூபம்
அந்த அந்த தெய்வங்களின் அருள் பெற குறிப்பிட்ட தெய்வத்திற்கு இஷ்டமான மரம்,செடியின் அருகில் தேவைக்கேற்ப திசை நோக்கி அமர்ந்துமந்திரம் ஜெபித்து அந்த செடியின் வேரடி மண்ணை பயன்படுத்திப் பல காரியங்களில் வெற்றி பெறலாம். (இந்த சக்தி வாய்த்த பிரயோகம் பற்றி எழுதினால் அதிகம் நீளும் என்பதால் இத்துடன் முடிக்கிறேன்)
பல மூலிகைகள் அஷ்ட கர்மம் எனப்படும் மாந்திரீக வேலைகளுக்கும் தவறாகப் பயன்படுவதால் சித்தர்கள் ,ரிஷிமார்கள்,தெய்வங்களின் சாபம் மூலிகைகளுக்கு உண்டு. எனவே எந்த மூலிகையை பறிக்கும் போதும் அவர்களின் சாபம் தீர்க்கும் மந்திரம் ஜெபித்த பின்னரே பறிக்கவேண்டும்.
மூலிகை பிடுங்கும் முன்னர் கன்னிப்பெண் நூற்ற நூல் கொண்டு அல்லது மஞ்சள் தடவிய வெள்ளை நூல் கொண்டு காப்பு கட்டி எலுமிச்சம்பழம் படைத்துக் குறைந்தது 3 நாட்கள் கழித்துப் பறிக்க சிறப்பு என்று மந்திர சாஸ்திரம் கூறுகிறது.சில குறிப்பிட்ட பிரயோகங்களுக்குக் குறிப்பிட்ட நாள்,நட்சத்திரம்,திதி , பட்சி எல்லாம் பார்த்துச் செய்ய வேண்டும்.இங்கு நான் பொதுவான காரியங்களுக்குப் பயன்படுத்துவது பற்றி எழுதியுள்ளேன்.
குறிப்பிட்ட மூலிகையின் முன் கிழக்கு முகமாக நின்று கொண்டு கீழே உள்ள சாபநிவர்த்தி மந்திரத்தை 3 தடவை சொல்லிக் கொஞ்சம் விபூதியை அந்த மூலிகையின் மேல் போட்டு வணங்க வேண்டும்.
.
மூலிகை சாபநிவர்த்தி மந்திரம்
ஆனைமுகனை அனுதினம் மறவேன்
அகஸ்தியர் சாபம் நசி நசி
பதினென் சித்தர் சாபம் நசி நசி
தேவர்கள் சாபம் நசி நசி
மூவர்கள் சாபம் நசி நசி
மூலிகை சாபம் முழுவதும் நசி நசி
பின்னர் கீழே உள்ள ப்ராணப்ரதிஷ்டை மந்திரம் 3 தடவை ஜபித்து சிறிது அருகம்புல்லை மூலிகையின் மேல் போட்டு வணங்கி எடுக்க வேண்டும்.அப்பொழுது மட்டுமே மூலிகை மண்ணில் உயிர்ப்புடன் இருந்த போது உள்ள அதே சக்தியுடன் .விளங்கும்.சோதனை செய்து பாருங்கள். சாதாரணமாகப் பறிக்கும் மூலிகையை விட சாபநிவர்த்தி மற்றும் ப்ராண ப்ரதிஷ்டை மந்திரம் ஜெபித்து எடுக்கப்பட்ட மூலிகை நீண்ட நேரம் ,நாட்கள் வாடாமல் இருக்கும்.
ப்ராண பிரதிஷ்டை மந்திரம் :-
ஓம் மூலி மகாமூலி ஜீவமூலி உன்னுயிர் உன் உடலில் நிற்க சிவா
Like
Comment
ஸ்ரீ கருட மந்திரம் :- சர்ப்ப தோஷம் நீங்க,விஷம் நீங்க
ஸ்ரீ கருட காயத்ரி
ஓம் தத்புருஷாய வித்மஹே|
ஸ்வர்ண பக்ஷாய தீமஹி
தன்னோ கருட ப்ரசோதயாத் ||
ஸ்ரீ கருடன் பகவான் ஸ்ரீ மன் நாராயணனின் வாகனமாவார்.பெரிய திருவடி என்றும் சுபர்ணன் என்றும் அழைக்கப்படுகிறார்.
கேரளாவில் இவரை மட்டுமே உபாசனா தெய்வமாக வழிபடுபவர்கள் பலர். ஆனால் சுத்த சாத்வீகம் அவசியம்.அசைவ உணவு உண்பவர்களுக்கு இவரது மந்திரம் சித்திக்காது.எதிர்மறையான விளைவுகளை ஏற்படுத்தும்.
ஸ்ரீ கருடனின் கதையை விளக்கினால் அதிகம் நீளும்.எனவே நேரே விஷயத்திற்கு வந்து விடுகிறேன்.
இவர் ஆவணி மாதம் வளர்பிறைப் பஞ்சமி திதியும் சுவாதி நட்சத்திரமும் கூடிய அன்று அவதரித்தார்.
சோதிட சாஸ்திரம் சுவாதி நட்சத்திரத்தைப் பற்றி மிக உயர்வாகக் குறிப்பிடுகிறது.
ப்ரகலாதப்ரியன் பகவான் ஸ்ரீ நரசிம்மரும் ,பெரியாழ்வாரும் அவதரித்தது சுவாதி நட்சத்திரத்தன்று தான் .
ஸ்ரீ கருடபகவானுக்கு இரண்டு மனைவியர் அவர்கள் ருத்ரா மற்றும் சுகீர்த்தி.
ஸ்ரீ ரங்கத்தில் ஸ்ரீ கருடபகவான் நின்ற திருக்கோலத்தில் நாமக்கல் ஆஞ்சநேயரைப்போல மிகப் பிரம்மாண்டமாக காட்சியளிக்கிறார்.
கருட உபாசனை பற்றியும் அவரது பிரபாவம் பற்றியும் மிகச் சிலரே அறிவர்,கருட உபாசனை அஷ்டமா சித்துக்களைத் தரவல்லது என்றால் ஆச்சர்யம் அடைவீர்கள் ஆம் கருட உபாசானையின் பலன்களுள் அதுவும் ஒன்று.
ஸ்ரீ கருட பகவானுக்கு சிவந்த பட்டு வேஷ்டி சார்த்தி மல்லி,மரிக்கொழுந்து, சண்பக மலர்களால் அர்ச்சிக்க வரங்களை மகிழ்ந்து அருள்வார்.
கருட மந்திரங்கள் பல உள்ளன.அதில் மிக எளியதும் மிக வலிமையானதும் காருடப் பிரம்ம வித்யா என்றழைக்கப்படும் கருட பஞ்சாக்ஷரி மந்திரம் தான்.
கருட பஞ்சாக்ஷரி மந்திரம் :-
ஓம் க்ஷிப ஸ்வாஹா
ஒரு வளர்பிறைப் பஞ்சமி அன்று ஜபத்தை தொடங்கி 90 நாட்களில் அல்லது 90 நாட்களுக்குள் லக்ஷம் உரு ஜெபித்தால் மந்திரம் சித்தியாகும். பின்னர் விஷம் தீண்டியவர்களுக்கு நீரில் 108 உரு மந்திரம் ஜெபித்து அருந்தச் செய்தாலும், பிரம்பு அல்லது கத்தி கொண்டு மந்திரித்தாலும் விஷம் நீங்கும்.
கிரஹண காலத்தில் நீரில் நின்று ஜெபிக்க நிறைவான சித்தி கிடைக்கும்.
பயந்த சுபாவம் கொண்டவர்கள் கருடனை வழிபட்டு வர மனோதிடம் உண்டாகும்.
கருடனுக்கு 8 விதமான திருஷ்டிகள் (பார்வை) உண்டு.
கருட த்ருஷ்டிகளும் அவற்றின் விதமும்:-
1.விசாலா -புன்னகை பூத்த பார்வை
2.கல்யாணி - மான் போன்ற பார்வை
3.தாரா - குருக்குப்பார்வை
4.மதுரா - அருளும் பிரேமையும் வழங்கும் பார்வை
5.போகவதி -தூக்ககலக்கமான பார்வை
6.அவந்தீ - பக்க வாட்டுப் பார்வை
7.விஜயா - கணவன் மனைவியிடையே நேசத்தைப் பூக்கச் செய்யும் பார்வை
8.அயோத்யா - வெற்றியைத் தரும் பார்வை
இவ்வளவு சிறப்புகள் உள்ள கருட பகவானைப் பற்றி அறியாமல் இருப்பது சரிதானா?
முற்காலத்தில் சன்யாசிகள்,சாதுக்கள் கிடைத்ததை உண்டு எங்காவது தங்கி தேசம் முழுவதும் சஞ்சாரம் செய்வார்கள் .அவர்கள் தங்கள் கையில் ஒரு பிரம்பு அல்லது கம்பு வைத்திருப்பார்கள் .கருட மந்திரத்தை லக்ஷம் உருவேற்றி அதன் சக்தியை அந்த கம்பில் இறக்கி வைத்திருப்பார்கள்.இரவில் உறங்கும் தாங்கள் படுக்கும் இடத்தில் அந்த கம்பினால் கருட மந்திரம் ஜெபித்தபடி ஒரு வட்டம் போட்டு அதனுள் உறங்கி விடுவார்கள்.அந்த வட்டத்திற்குள் எந்த விஷ ஜந்துக்களும் தீய சக்திகளும் வராது.யாரையேனும் விஷ ஜந்துக்கள் தீண்டினாலும் அந்த கம்பு கொண்டு மந்திரித்து விஷத்தை நீங்கச் செய்வார்கள்.
ஜன்ம ஜாதகத்தில் ராகு,கேது என்ற சர்ப்ப கிரகங்களின் அமைப்பு கெடுபலங்களைச் செய்யும் அமைப்பு உள்ளவர்கள் ஸ்ரீ கருட பகவானை வழிபட்டு வரக் கெடுபலன்கள் குறையும்.கால சர்ப்ப தோஷ பாதிப்புகள் குறைய ஸ்ரீ கருட உபாசனை செய்து வரலாம்.
தோல் வியாதி கொடிய கர்ம வினையினால் வருவதே என்று சாஸ்திரங்கள் கூறுகின்றன.சில சித்தர் நூல்கள் தோல் வியாதி உள்ளவர்களுக்கு மருத்துவம் செய்தால் அந்த கர்மா நம்மைப் பாதிக்கும் என்று சொல்கின்றன.தோல் வியாதி உள்ளவர்கள் குளிக்கும் பொது கிழக்கு நோக்கி நின்று கொண்டு கருட மந்திரத்தை 108 ஜெபித்து அதன் சக்தி நீரில் இறங்கட்டும் என சங்கல்பம் செய்து குளித்து வர தோல் வியாதிகள் நீங்கும்
LikeShow more reactions
Comment
செல்வவளம் பெருகி நிலைக்க
இன்றைய வாழ்க்கை சூழலில் செல்வத்தினை சேர்க்க போராடும் மனிதர்களே நாம் அனைவரும், செல்வத்தினை தேடி ஓடாத மனிதர்களே இந்த உலகத்தில் இல்லை, திரைக்கடல் ஓடியும் திரவியம் தேடு என்பது முதுமொழி. நாமும் செல்வத்தினை சேர்க்க அரும்பாடு படுகிறோம், செல்வத்தினை சம்பாதிப்பதும், அதனை நம்மிடம் நிலைக்க வைப்பதும் வாழ்வில் ஒரு மிகப்பெரிய சவாலாகவே விளங்குகிறது. அந்த நிலையினை மாற்றவே சில எளிய தாந்த்ரீக முறைகளை இங்கே தெளிவுபடுத்துகிறேன்.
1. இலவங்கப்பட்டையை பொடி செய்து சிறிது எடுத்து ஒரு பச்சை நிற துணியில் மடித்து பச்சை நூலால் கட்டி மணிபர்சிலோ அல்லது சட்டைப்பையிலோ எப்பொழுதும் வைத்துக்கொள்ளவும்.
2. பசுமையான வெற்றிலை ஒன்றை எந்த நல்ல காரியங்கள், பணசம்பந்தமான காரியங்கள் போன்றவற்றிக்கு செல்லும் போதும் உடன் வைத்துக்கொள்ளவும்.
3. நிலக்கரி தனாகர்ஷண ஷக்தி உடையது அதனை ஒரு சிறு துண்டு எப்போதும் உடன் வைத்துக்கொள்ளவும்.
4. ரூபாய்த்தாளை எப்பொழுதும் சுருளாக கட்டியே பணப்பெட்டியில் வைத்துக்கொள்ள வேண்டும். ( சுழற்சி சக்தி உண்டாகி செல்வமானது பெருகி தங்கும் ).
5. தினமும் ஏதேனும் ஒரு நாணயத்தை இரண்டு கைகளிலும் பிடித்தபடி உங்கள் தேவையினை மனமார வேண்டி - அந்த காசுகளை சேமித்து வந்து மாதக்கடைசியில் சேமித்த பணத்தில் வாழைப்பழம் வாங்கி பாசுமாட்டிற்கு தானமாக வழங்கவும்.
6. எந்த விசயத்திற்காக பணத்தினை செலவிட்டாலும், செலவிடும் பணத்தினை கையில் வைத்து நெஞ்சிற்கு நேராக பிடித்து பிறர் அறியாதவாறு "ஓம் ஸ்ரீம் நமஹ இலட்சமாக திரும்பிவா வசி வசி" என்று ஐந்து முறை கூறி செலவிடவும்.
7. முக்கியமான காரியங்கள், பணசம்பந்தமான விஷயங்களுக்கு செல்லும்போது எலுமிச்சம் பழம் ஒன்றை "ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் ஸ்ரீம் சக்தியே அருள்வாய் போற்றி ஓம்" என ஆறு முறை உச்சரித்து உடன் வைத்துக்கொள்ளவும்.
8. மாதச்சம்பளமாகட்டும், சுயத்தொழில், வியாபாரம் செய்பவர்கள் யாராகினும் வருவாயில் முதல் செலவாக உப்பு, மல்லிகைபூ இரண்டையும் வாங்குவதே முதல் செலவாக இருக்க வேண்டும்.
( பணவருவாய் பலவகையிலும் பெருகும் ).
9.பணப்பெட்டி தென்மேற்கு மூலையில் இருக்கவேண்டும், அதில் எப்போதும் மல்லிகைபூ போட்டு வைக்கவேண்டும்.
10. பணப்பெட்டியில் பெரிய தொகைகளை வைக்கும்போது ஆறு வெற்றிலைகள், முன்று பாக்குகள் சேர்த்து வைக்கவும்.
11. மகாலக்ஷ்மி படத்திற்கு தினமும் காலை, மாலை நெய், தேங்காய் எண்ணை, நல்லெண்ணெய் ஏதாவதொன்றில் இரண்டு திரி போட்டு விளக்கு ஏற்றி வீடு, கடை முழுவதும் சாம்பிராணி புகை காட்டிவருவது பண விஷயத்தில் மிகசிறந்த வசியமாகும்.
12. குழந்தைகள் வளரும்போது விழும் முதல் பல்லை பால் பற்கள் என்கிறோம், அவ்வாறான பால் பற்களில் ஏதேனும் ஒன்று பையிலோ பணப்பெட்டியிலோ வைத்தால் செல்வம் பெருகும்.
13. வடகிழக்கு மூலையில் குடிக்கும் நீரைவைத்து அதில் எலுமிச்சை ஒன்றை போட்டு வைக்கவும், தொடர்ந்து இரண்டு மாதங்கள் செய்து வந்தால் பற்றாக்குறை நீங்கி செல்வம் கொழிக்கும்.
14. கல் உப்பை வீட்டில் வியாபார ஸ்தலங்களில் எல்லா மூலைகளிலும் சிறிது போட்டு வைத்தால் தீய சக்திகள் ஓடும், பணம் பெருகும்.
15. பணப்பெட்டி சந்தனப்பெட்டியாக இருந்தால் அதிர்ஷ்டம் பெருகும். வசதி இல்லையேல் பச்சை நிற பட்டுத்துணியில் பணப்பை செய்து அதனுள் சிறிய சந்தனக்கட்டை ஒன்றை அதனுள் போட்டு வைக்கவும், சந்தனம் இருப்பதை வளர்க்கும் சக்தி உடையது.
16. வருமானத்தில் ஐந்து சதவீதத்தை தானதிற்கென போட்டு வையுங்கள், மாதம் ஒருநாள் அதை தானமாக கொடுங்கள், கொடுப்பது பெருகும்.
17. முக்கியகாரியமாக தொழில் விஷயமாக வெளியே செல்லும்போது அருகம்புல் நுனி ஒன்றையோ, திருநீற்றுப்பச்சிலை ஒன்றையோ பறித்து பையில் வைத்துச்செல்ல சென்ற காரியம் நிச்சயம் வெற்றியே.
18. சாம்பிராணியும், மருதாணி விதையும், வெண்கடுகும் கலந்து வீட்டில், வியாபார ஸ்தலத்தில் தூபமிட தீய சக்திகள், கண்திருஷ்டி, தோஷங்கள் நீங்கி தொழில் முன்னேற்றம் அடையும், மகாலக்ஷ்மி நம்மிடத்தில் நடமாடுவாள்
LikeShow more reactions
Comment
வாஸ்து & பெங்சுயி ரகசியங்கள் 1
பஞ்ச பூத இயற்கை சக்திகளை சமன்படுத்தல்,பரவ விடுதல்,ஈர்த்தல் இவைகளின் மூலம் நமது வீடு,கடை மற்றும் வசிப்பிடத்தை ஆரோக்யமானதாகவும் வளம் தருவதாகவும் வைத்துக்கொள்ள உதவும் முறைகளைக் கூறுவது வாஸ்து மற்றும் சீன பெங்சுயி சாஸ்திரம் .
வாஸ்து மற்றும் சீன பெங்சுயி சாஸ்திரம் பற்றிய பல ரகசிய விபரங்களை இன்று முதல் பார்க்கலாம்.
வாஸ்து பகவான் காயத்ரி
ஓம் அனுக்ரஹ ரூபாய வித்மஹே
பூமி புத்ராய தீமஹி
தன்னோ வாஸ்து புருஷ ப்ரசோதயாத்
வீடு, கடை ,தொழிற்சாலை பீடைகளும் திருஷ்டிகள் ஆபத்துக்கள் நீங்க
1.பயன்படுத்தாத, உடைந்த, செயல்படாத பொருள்களை அகற்றவும்.
2.ஒரு எச்சில் செய்யாத பாத்திரத்தில் நீர் நிரப்பி அதில் கருந்துளசி அல்லது செந்துளசி இலைகளைப் பறித்து 1:30 மணிநேரம் கழித்து அந்த நீரை வீடு முழுவதும் வீட்டில் உள்ளோர் மீதும் தெளித்து வர எல்லாப் பீடைகளும் நீங்கி நலமும் வளமும் உண்டாகும்.கடை,தொழிற்சாலை இவைகளானால் கடை,அல்லது தொழிற்சாலையில் தெளித்து கடை ,தொழிற்சாலையின் வாசல் முகப்பு பகுதியிலும் முதலாளி,மேனேஜர் அறைக,காசாளர் அறை மற்றும் முக்கியமான பகுதிகளிலும் தெளிக்கவும்.
இதை மாதம் ஒரு முறை செவ்வாய்க்கிழமை அன்று செய்யவும்
வாஸ்து & பெங்சுயி ரகசியங்கள் 2
தென்மேற்குத் திசை - மண் தத்துவத்தைக் குறிக்கும்.இந்திய வாஸ்து சாஸ்திரத்தின் படி இத்திசை திருமண காரியம் மற்றும் அது தொடர்பான செயல்பாடுகளை குறிக்கும்.
இத்திசையில் பசுமையான செடி,மரங்கள் வளர்க்கக்கூடாது.அவ்வாறு வளர்ந்தால் திருமணத்தடை கணவன் மனைவிக்குள் பிரச்சனைகள் ஏற்படும்.
இத்திசையில் அளங்கார மின்விளக்குகள் இருப்பது அதிர்ஷ்டத்தைத் தரும். குறிப்பாகத் தகுந்த வாழ்க்கை துணை அமைய உதவும். குறைந்தது மாலையில் 2 அல்லது 3 மணிநேரமாவது எறிந்தால் நல்ல பலன்களைத் தரும்.பெரிய அளவில் இல்லாவிட்டாலும் சிறிய அழங்கார மின்விளக்குகள் வைத்தல் நலம்.தூசு படியாமால் அவ்வப்போது துடைத்து வைக்க வேண்டும்.
தெற்குத்திசை - நீர்தத்துவத்தை குறிக்கிறது.இத்திசையில் மண்,களிமண், ஸ்படிகம்,கண்ணாடியினால் ஆன பொருட்களை வைக்கக்கூடாது.அவ்வாறு வைத்தால் அது தொழில்,வேலையில் பிரச்சனைகளை உண்டாக்கும்.
பெங்சுயி சாஸ்திரப்படி பொருளாதாரம் என்ற பணம் நீர் தத்துவத்தோடு தொடர்புடையது.தேவையின்றி நீரை வீணாக்குவது,நீர்க்குழாய்களில் நீர் வீணாய்க் கசிவது பண விரயத்தை ,பண வரவில் தடையை உண்டாக்கும்
வாஸ்து & பெங்சுயி ரகசியங்கள்:- 3
காசாளர் அறை (CASH COUNTER) அமைப்பு :-
கடை ,தொழிற்சாலைகளின் மைய நோக்கம் லாபமும் ,பணத்தைப் பெருக்குவதுமே. அதற்கு முக்கியமாக காசாளர் அறை அல்லது கேஷ் கவுன்டரின் அமைப்பு சரியாக இருக்கவேண்டும்.
குறிப்பு :
1.உள்ளே வரும் வாடிக்கையாளர்களைக் காசாளர் எளிதில் காணும் வண்ணம்
கேஷ் கவுன்டர் இருக்கவேண்டும்.
2.கடையின் மையப்பகுதியில் காசாளர் அறை அல்லது கேஷ் கவுன்டர் இருந்தால் விற்பனை அதிகரிக்கும்.
3.குறிப்பாக காசாளர் அறை அல்லது கேஷ் கவுன்டரை பிற கவுன்டர்களில் இருந்து தனித்து இருக்கும் படி சிறிது தள்ளி அமைப்பது நல்லது.
4.காசாளரின் பின்புறம் ஒரு கண்ணாடி வைத்தால் நிரந்தர பணப்புழக்கம், விற்பனை அதிகரிப்பு ஏற்படும்
வாஸ்து & பெங்சுயி ரகசியங்கள்:- 4
டாய்லெட் அமைப்பு :-
பெங்சுயி வாஸ்துவில் பணம்ஜலத் தத்துவத்தோடு தொடர்புடையது.எனவே கடை,வீடு,தொழிற்சாலைகளில் தேவையின்றி நீர் செலவாகாமல் பார்த்துக் கொள்ளவேண்டும்.குழாய்கள்,தொட்டிகளில் லீக்கேஜ் இருந்தால் அவற்றை உடனே சரிசெய்ய வேண்டும்.
குளியல் அறை மற்றும் டாய்லெட் இவற்றில் நீர் தொடர்ந்தும் அதிகமாகவும் வெளியேறுவதால் டாய்லெட்டை பீரோ,பணப்பெட்டி ,அடுப்பறை,ஸ்டோர் ரூம் இவற்றின் அருகில் அமைக்கக்கூடாது .
டாய்லெட் வீட்டின் பிரதான நுழைவாயிலின் அருகிலும் அமைக்கக்கூடாது. அவ்வாறு அமைத்தால் அடிக்கடி உடல் நலக்குறைவு,தீரா நோய்கள் ,கையிருப்புக் குறைவு ,பணப்புழக்கம் இன்மை ஏற்படும்.
மாடிப்படியின் கீழும் அமைக்கக்கூடாது .அவ்வாறு அமைத்தால் அடிக்கடி வயிற்றில் நோய்,வலி உண்டாகும்
வாஸ்து & பெங்சுயி ரகசியங்கள்:- 5
சமையல் அறை அமைப்பு:-
நமது சமையல் அறையின் அமைப்பு நிதிநிலையின் தன்மையில் குறிப்பிடத்தகுந்த மாற்றங்களை ஏற்படுத்துகிறது.
பிரதான வாசலுக்கு நேர் எதிரே சமையல் அறை அமைக்கக்கூடாது. ஏனென்றால் பிரபஞ்ச சக்தி பிரதான நுழைவு வாயில் வழியாகவே வீட்டினுள் வருகிறது.எனவே மேற்கண்டபடி சமையல் அறை அமைந்தால் பிரபஞ்ச சக்தி நெருப்பில் கலந்து கரைந்து விடும்.செல்வம் சந்ததி என எல்லா நிலைகளிலும் விருத்திக் குறைவு ஏற்படும்.
வீட்டின் மையப் பகுதியில் சமையல் அறை அமைந்தால் குடும்ப உறுப்பினர்களின் ஆரோக்யத்தைக் கெடுக்கும்.
அடித்தளத்தில் (BASEMENT) அமைந்தால் பெண்களின் உடல்நிலையைப் பாதிக்கும்.
தவிர்க்கமுடியாத காரணத்தினால் அல்லது இடமின்மையால் மேற்கண்டவாறு சமையல் அறை அமைந்திருந்தால் சமையல் அறையில் கதவு ஜன்னல்களில் திரைச்சீலையும், 5 குழல்களால் ஆன காற்று மணியும் WIND CHIME தொங்கவிடவும்(படம் இணைக்கப்பட்டுள்ளது) அமைக்கவும்.இது எதிர்மறையானபாதிப்புகளைக் குறைக்கும்.
அடுப்பு - சமையல் அறையின் பிரதான வாயிலை நோக்கியபடி எளிதில் பார்வையில் படும் வண்ணமும் வைக்கப்படவேண்டும்.
சிங் மற்றும் காஸ் சிலிண்டர் ஒரே திசையில் அருகருகே வைக்கப்படக் கூடாது.சிங் சமையல் அறையின் வடக்கு பக்கம் வைக்கப்படவேண்டும்.அப்படி இயலாத பட்சத்தில் தெற்குத் திசை தவிர மற்ற திசையில் அமைக்கலாம்.
காஸ் சிலிண்டர் - அக்னி தத்துவத்தின் திசையான தெற்குத் திசையில்வைக்கப்படவேண்டும்.
டைனிங் டேபிள் - சமையல் அறையின் தெற்குப்பக்கம் இருக்கவேண்டும்.
கண்ணாடி மற்றும் உலோகத்தினால் ஆனதைவிட மரத்தினால் செய்யப்பட்ட டைனிங் டேபிள் சிறந்தது.அது வட்டம் ,சதுரம்,செவ்வகம் என ,இருக்கலாம்.
உத்தரத்தின் கீழ் அமைக்கக்கூடாது
வாஸ்து & பெங்சுயி ரகசியங்கள் : 6
அலுவலகம் அமைப்பு :-
அலுவலகத்தின் அமைப்பு நல்ல முறையிலும் அழகாகவும் இருந்தாலும் கூட நிறுவனத்தின் முக்கியப் பொறுப்பு வகிக்கும் முதலாளி,மேனேஜிங் டைரக்டர்,மேனேஜர் போன்றோர் அமரும் விதம் சரியாக இல்லையென்றால் நிறுவனம் தொடர்ந்த சரிவையே சந்திக்கும்.
இதைச் சரி செய்ய பெங்சுயி கூறும் வழிமுறைகள் இதோ:- இவை நம்நாட்டு வாஸ்து குறிப்பு போலவே உள்ளது.
பிரதான வாசலுக்கு நேர் எதிரே அலுவலக அறை ( OFFICE ROOM ) இருக்கக் கூடாது.இப்படியான அமைப்பு அதில் அமரும் நபரையும் அவரது நிர்வாகத் தன்மையையும் பாதிக்கும்.எனவே ,பிரதான வாசலில் இருந்து தூரத்தில் அல்லது சற்றுத் தள்ளி ஏதேனும் ஒரு மூலையில் அமைக்கப்படவேண்டும்.
மேலும்,அமர்பவரின் பின்னால் ஜன்னல் (WINDOW) இருக்கக்கூடாது.அவ்வாறு இருந்தால் அமர்பவரின் நிலை அடிக்கடி மாறுதலைச் சந்திக்கும்படியும், நிலையற்றதாகவும் இருக்கும்.பின்னால் சுவர் இருந்தால் நல்லது.
உள்ளே வருபவர்களைத் தான் இருக்கும் இடத்தில் இருந்து பார்க்கும் வண்ணமும் அலுவலக அமைப்பு இருக்கவேண்டும்
வாஸ்து & பெங்சுயி ரகசியங்கள் : 7
செல்வம் ஈர்க்க ,பணவரவு நிலைக்க வாஸ்துக் குறிப்புகள்
1.வீட்டின் முன்னர் ஒரு துளசிச் செடி நட்டு வளர்க்கவும்.அல்லது ஒரு பூந்தொட்டியில் வைத்து வீட்டு முன் வளர்க்கவும். தினமும் கிழக்கு நோக்கி நின்று செடிக்குத் தண்ணீர் விடவும்.
2.வீட்டில் எப்பொழுதும் துடைப்பம்,டஸ்டர்,பிரஷ்,குப்பைகள் போட்டு வைக்கும் பக்கெட்டுகள் மற்றும் வீட்டைச் சுத்தம் செய்யும் பொருட்கள் அனைத்தும் வீட்டில் நுழைபவர்கள் பார்வையில் எளிதில் படும்படி வைக்கக் கூடாது.
3.பணம் வைக்கும் பீரோ.லாக்கர்,கபோர்டில் பெங்சுயி அதிர்ஷ்ட(வளம்பெருக்கும்) சிம்பலை ஒட்டி வைக்கவும்
LikeShow more reactions
Comment
கர்ப்பிணிகளின் பாதுகாப்பிற்கு கர்ப்ப ரக்ஷா மந்திரம் :-
அடிக்கடி கர்ப்பம் கலைந்து விடுதல்,குறைப்பிரசவம் ,ஊனம் மற்றும் ஆயுள் குறைவான குழந்தைப் பிறப்பு இவை நீங்கக் கீழே சொல்லியுள்ள மந்திரப்பிரயோகத்தைச் செய்து வர நல்ல பலன் உண்டாகும்.
கர்ப்ப ரக்ஷா மந்திரம் :-
ஓம் பரப்ரம்ம பரமாத்மனே |
மம கர்ப்ப தீர்க்க ஜீவி சுதே க்குரு க்குரு ஸ்வாஹா||
இதைக் கர்ப்பமான பின்னர் வரும் முதல் மாத பௌர்ணமி அன்று ஆரம்பிக்கவும்.ஜபம் ஆரம்பிக்கும் முன்னர் ஒரு புதுப் பாத்திரம் அல்லது கிண்ணத்தில் கொஞ்சம் தண்ணீர் விட்டு சிறிது மஞ்சள் பொடி போட்டுக் கலந்து அதில் ஒரு பருத்தி நூலை நனைத்து (இடுப்பில் கட்டும் அளவு) வைத்துக்கொள்ளவும். பின்னர் இந்த மந்திரத்தை மேற்கு முகமாக அமர்ந்து 1008 தடவை ஜெபித்து அந்த நூல் கயிற்றைக் கர்ப்ப ஸ்தீரியின் இடுப்பில் கட்டிக்கொள்ளச் செய்யவும்.கரு கலையாமல் பாதுகாக்கப்படும்.
மேலும் இந்த மந்திரத்தைத் தினமும் 3 தடவை சொல்லி வயிற்றைக் கடிகாரச்சுற்றில் 3 தடவை சுற்றித் தடவிக் கொள்ளவும்.
நைவேத்தியம் -
வெற்றிலை, பாக்கு, பழங்கள், பால்,பாயசம்
Like
Comment