Sunday 5 June 2016

ஆன்மீகத்தில் உயர்வும் நோய் தீர்க்கும் சக்தியும் தரும் ஸ்ரீ தத்தாத்ரேய மந்திரம்
மும்மூர்த்தி ஸ்வரூபமான ஸ்ரீ தத்தாத்ரேயர் அவதூத சத்குருவாவார். யோக மற்றும் ஞான நிலையில் உயர்வு பெற விரும்புபவர்கள் ,ஆன்மீக,தியான பயிற்சிகளில் ஈடுபடுபவர்கள் இவரை வழிபட்டு வர ஆன்மீகப்பாதையில் நிறைவான விரைவான முன்னேற்றம் காணலாம்.
ஓம் ஹ்ராம் ஹ்ரீம் ஹ்ரூம் குரு தத்தாத்ரேயாய நமஹ
இந்த மந்திரத்தைக் வடக்கு நோக்கி அமர்ந்து பிரம்ம முஹூர்த்தம் அல்லது இரவு 11:30 முதல் 12:30 மணிக்குள் குறைந்தது 108 தடவை ஜெபித்து வர விரைவில் சித்தியாகும்.
ரெய்கி,ப்ராணிக் ஹீலிங் போன்ற வைத்திய முறைகளின் மூலம் சிகிச்சை அளிப்பவர்கள் மற்றும் வைத்தியத்தைத் தொழிலாகக் கொண்டவர்களும் இந்த மந்திரத்தை ஜெபித்து வர அவர்களின் குணமளிக்கும் சக்தி அதிகரிக்கும் நோயாளிகளின் வியாதி நமக்குப் பரவாமல் காக்கும்.
Like
Comment

No comments:

Post a Comment