Friday 29 April 2016

உடலின் 72000 நாடிகளையும்
வளப்படுத்தும் குசா தோப்புக் கரணம்
கிழக்கு அல்லது வடக்கு திசை நோக்கி நின்று கொள்ளவும். வலது காலை இடது காலுக்கு முன்னோ அல்லது இடது காலை வலது காலுக்கு முன்னோ வைத்துக் கொள்ளலாம். இரண்டு கைகளால் இரண்டு காதுகளைப் பிடித்துக் கொள்ளவும். இந்நிலையில் மெதுவாக நன்றாக அமர்ந்து, எழுந்து தோப்புக் கரணம் இடவும். கால்கள் முழுவதுமாக மடங்கும் அளவிற்கு அமர வேண்டியது முக்கியம். குறைந்தது மூன்று தோப்புக் கரணம் இடவும். முடிந்தால் 12, 24, 36 என 108 தோப்புக் கரணங்களோ அதற்கு மேலும் இடலாம். உடல், மனம், உள்ளத்தை அற்புத நிலையில் வைத்திருக்க உதவும் ஓர் ஒப்பற்ற வழிபாட்டு முறை. ஒவ்வொரு தோப்புக் கரணத்திற்கும் ஒரு இறை நாமத்தையோ, 108 அஷ்டோத்திர சத நாமாவளிகளில் ஒன்றையோ அல்லது தங்கள் பெயரையோ கூறவும். இது மிக முக்கியமான விதி முறையாகும். இறை நாமத்துடன் கூடி வராத எந்த ஆசனமும் வழிபாடாக அமையாது. வெறும் உடல் பயிற்சியில் கிட்டும் ஆரோக்யம் ஆடு, மாடுகளைப் போல் நம்மை நீண்ட நாள் உயிருடன் வைத்திருக்கும். அவ்வளவே. உடம்பை இறை நினைவுடன் வளர்த்தலே உண்மையான யோகாசனப் பயிற்சி ஆகும். உடலுடன் உயிரையும் வளர்ப்பதே இறைவனின் திருநாமம். இதை நன்றாக நினைவில் கொள்ளுங்கள். தோப்புக் கரணம் இட்ட பின் மூச்சுக் காற்று சகஜ நிலை அடையும் வரை சற்று நேரம் ஓய்வெடுத்துக் கொள்ளவும்.
சாதாரணமாக, கால்கள் இரண்டையும் ஒன்றொக்கொன்று இணையாக வைத்தே தோப்புக் கரணம் இடுவார்கள். ஆனால், இங்கு குறிப்பிட்டதுபோல் ஒரு காலுக்கு முன் அடுத்த காலை வைத்து தோப்புக் கரணம் இடுதல் குசா முறையில் அமைந்த தோப்புக் கரணம் ஆகும். சாதாரண தோப்புக் கரணத்தைப் போல் குறைந்தது 100 மடங்கு பலன் தரக் கூடியதே சித்தர்கள் அருளிய இந்தக் குசா தோப்புக் கரணம் ஆகும்.
வலது காலை முன் வைத்தோ அல்லது இடது காலை முன் வைத்தோ இந்தப் தோப்புக் கரணத்தைப் போடலாம். பெண்கள் ஆண்கள் இருபாலரும் இந்தத் தோப்புக் கரணத்தால் அற்புத பலன் பெறலாம். சிறப்பாக கர்ப்பமுற்று இருக்கும் பெண்களுக்கு இந்தத் தோப்புக் கரணம் ஒரு வரப் பிரசாதமாகும். பிரசவம் சிரமமின்றி ஆவதுடன் பிறக்கும் குழந்தகளுடம் பூரண உடல் ஆரோக்கியத்தையும் சிறந்த மன வளத்தையும் பெற்றிருக்கும் என்பது உறுதி.
அவ்வாறு பிரவத்திற்கு முன் இந்தத் தோப்புக் கரணம் போடாதவர்களும் பிரசவத்திற்குப் பின் இந்தத் தோப்புக் கரணத்தை போட்டு வந்தால் வயிறு, முதுகு தசைகள் இறுகி அறுவை சிகிச்சையின் போது அளித்த மயக்க மருந்துகளால் ஏற்பட்ட வேதனைகள் குறையும்.
LikeShow more reactions
Comment
5 நிமிடத்தில் சுந்தர காண்டம்
சம்ஸ்கிருத மூலமும் அதன் உரை விளக்கங்களுடன்முழுமையான சுந்தர காண்டம் 28 பாகங்களாக உள்ளது நாம் வாழ்க்கையில் எதிர்கொள்ளும் பிரச்சினைகளை எல்லாம்தவிடு பொடியாக்கி மங்களம் தரும் ஒரு பாராயணத்தை நமது முன்னோர் வழி வழியாகச் செய்து பலனை அனுபவித்து வந்திருக்கின்றனர். அப்படிப்பட்ட அற்புதமான பாராயணம் ராமாயணத்தில் ஐந்தாவது காண்டமாக அமைந்துள்ள சுந்தர காண்டம் பாராயணம் ஆகும்.சுந்தர காண்டம் அனுமனின் செயல் திறத்தைச் சொல்லும் அற்புத காண்டம். இதில் பேசப்படும் அனைத்துமே சுந்தரமான விஷயங்கள்.24,000 சுலோகங்கள் கொண்ட ராமாணத்தில் சுந்தரகாண்டத்தில் மட்டும் 2885 சுலோகங்கள் 68 அத்தியாயங்களில் இடம் பெறுகின்றன.வேத மந்திரங்கள் தரும் அனைத்து மங்களத்தையும் தரவல்லது சுந்தரகாண்ட பாராயணம்.68 அத்தியாயங்கள் உடைய இந்த காண்டத்தை ஒரே நாளில் படித்து முடிப்பதிலிருந்து ஒரு நாளைக்கு ஒரு சுலோகம் என்பது வரை படிக்க முன்னோர்கள் அனுமதி அளித்துள்ளனர். என்றாலும் கூட ஒரு நாளைக்கு 7 அத்தியாயங்கள் வீதம் இதை 68 நாட்களில் ஏழு முறை படிக்கக்கூடிய 7 அத்தியாய பாராயணம் எல்லா நலன்களையும் விரைவில் அளிக்கவல்லது.பாராயணம் ஆரம்பிக்கும் முன்னர் படிக்க வேண்டிய சுலோகங்களைப் படித்து ஏழு அத்தியாயங்கள் படித்து முடிந்தவுடன் இறுதியில் படிக்க வேண்டிய சுலோகங்களையும்அன்றாடம் படிப்பது வழக்கமாக இருக்கிறது.ஒருமுறை 68 அத்தியாயங்கள் படித்து முடிக்கும் போது யுத்த காண்டத்தின் 131-வது அத்தியாயமான ராம பட்டாபிஷேகஅத்தியாயத்தையும் படிக்க வேண்டும் என்பது மரபாகும்.ஜாதகத்தில் உள்ள தோஷங்களைப் போக்க தகுந்தபடி சுந்தரகாண்ட பாராயணம் செய்ய வேண்டும். அப்படி செய்வதன் மூலம் தோஷ நிவர்த்தி பெறுவதோடு நலன்களையும் பெற முடியும்.ஒவ்வொரு நலனைப் பெறவோ அல்லது ஒவ்வொன்றாக தோஷத்தை நீக்கவோ முயற்சி செய்வதை விட தினசரி சுந்தர காண்ட பாராயணம் செய்தால் நமது தோஷங்கள் எல்லாம் தாமாகவே விலகுவதோடு நாம் கேட்காமலேயே அனைத்து பலன்களும் நலன்களும் தாமாக நம்மை வந்து அடையும்.
எனவே,சுந்தரகாண்ட பாராயணத்தைஎளிய வழியில் தினமும் முழுமையாக வாசித்து பலன் பெற, இதோ… இந்த எளிய பாடலைப் படித்து மகிழுங்கள்.சுந்தரகாண்ட பாராயணம்மனதுக்கு நிம்மதி, தைரியம் தரும்.நோயுற்றவர்கள், குழந்தைகளின் திருமணச் செலவு போன்ற இக்கட்டான நிலையில் உள்ளவர்களும், வரன் தேடுபவர்களும் இதைப் படித்தால் உரிய பலன் கிடைக்கும்.
5 நிமிடத்தில் சுந்தர காண்டம்.
ஸ்ரீ ராம ஜெயம்சுந்தரகாண்டம் என்றும் பெயர் சொல்லுவார்இதை சுகம் தரும் சொர்க்கம் என்று மனதில் கொள்வார் கண்டேன் சீதையை என்று காகுஸ்தனிடம் சொன்னகருணைமிகு ஸ்ரீராம பக்த ஆஞ்சநேயர் பெருமையிது அஞ்சனை தனயன் அலைகடல் தாண்டவே ஆயத்தமாகி நின்றான் இராமபாணம் போல் இராட்சசர் மனை நோக்கி இராஜகம்பீரத்தோடு இரமாதூதன் சென்றான்.அங்கதனும், ஜாம்பவானும் அனைத்து வானரங்களும்அன்புடன் விடை கொடுத்து வழியனுப்பினரே!வானவர்கள் தானவர்கள் இந்திராதி தேவர்கள்வழியெல்லாம் சூழ நின்று பூமாரி பொழிந்தனரே!மைநாக பர்வதம் மாருதியை உபசரிக்கமகிழ்வுடன் மாருதியும் மைநாகனைத் திருப்தி செய்துசரசையை வெற்றிகண்டு சிம்ஹியை வதம் செய்துசாகசமாய் சமுத்திரத்தை தாண்டியே இலங்கை சென்றான்.இடக்காக பேசிய இலங்கையின் தேவதையை இடக்கையால் தண்டித்தவன் இதயத்தை கலக்கினான் அழகான இலங்கையில் அன்னை ஜானகியை அங்குமிங்கும் தேடியே அசோகவனத்தில் கண்டான். சிம்சுபா மரத்தடியில் ஸ்ரீ ராமனை தியானம் செய்யும்சீதாபிராட்டியைக் கண்டு சித்தம் கலங்கினான்ராவணன் வெகுண்டிட ராட்சசியர் அரண்டிடவைதேகி கலங்கிட வந்தான் துயர் துடைக்க !கணையாழி கொடுத்து ஜெயராமன் சரிதம் சொல்லிசூடாமணி பெற்றுக் கொண்ட சுந்தர ஆஞ்சநேயர் அன்னையின் கண்ணீர் கண்டு அரக்கர் மேல் கோபம் கொண்டுஅசோகவனம் அழித்து அனைவரையும் ஒழித்தான். பிரம்மாஸ்திரத்தினால் பிணைந்திட்ட ஆஞ்சநேயர்பட்டாபிராமன் தன் பெருமையை எடுத்துரைக்க வெகுண்ட இலங்கைவேந்தன் வையுங்கள் தீ வாலுக்கென்றான் வைத்த நெருப்பினால் வெந்ததே இலங்கை நகர்.
அரக்கனின் அகந்தையை அழித்திட்ட அனுமானும்அன்னை ஜானகியிடம் அனுமதி பெற்றுக் கொண்டான்.ஆகாய மார்க்கத்தில் ஆஞ்சநேயன் தாவி வந்தான்அன்னையைக் கண்டுவிட்ட ஆனந்தத்தில் மெய் மறந்தான்.ஆறாத சோகத்தில் ஆழ்ந்திருந்த ராமனிடம்ஆஞ்சநேயர் கைகூப்பி வணங்கிகண்டேன் சீதையைஎன்றான்.வைதேகி வாய்மொழியை அடையாளமாகக் கூறிசொல்லின் செல்வன் சுந்தர ஆஞ்சநேயர் சூடாமணியை அளித்தான்.மனம் மகிழ மாருதியை மார்போடணைத்துராமர் மைதிலியை சிறை மீட்க மறுகணம் சித்தமானான்.ஆழ்கடலில் அற்புதமாய் அணைகட்டி படைகள் சூழஅனுமானும் இலக்குவனும் உடன்வர புறப்பட்டான்.அழித்திட்டான் இராவணனை ஒழித்திட்டான் அதர்மத்தைஅன்னை சீதாபிராட்டியை சிறை மீட்டு அடைந்திட்டான்.அயோத்தி சென்று ராமர் அகிலம் புகழ ஆட்சி செய்தார்அவனை சரணடைந்தோர்க்கு அவனருள் என்றென்றும் உண்டு...
(எங்கெங்கு ரகுநாத கீர்த்தனமோஅங்கங்கு சிரம்மேல் கரம் குவித்து மனம் போல நீர் சொரிந்துஆனந்தத்தில் மூழ்கிக் கேட்கும் பரிபூரண பக்தனே ஸ்ரீ ஆஞ்சநேயனேஉனை பணிகின்றோம் பலமுறை)ஸ்ரீமத் ராமாயணம்/ சுந்தர காண்டம் பாராயணம் செய்யும்போது, அருகில் ஒரு ஆசனத்தை (சிறிய பலகை/ சுத்தமான விரிப்பு) போட்டு வைக்க வேண்டும். ‘ராம’ நாமம் எங்கு ஒலித்தாலும் ஆஞ்சநேயர் அங்கே பிரஸன்ன மாவார் என்பது ஐதிகம். அவர் அமருவதற்காகத்தான் அந்த ஆசனம்
LikeShow more reactions
Comment
வியாபாரத்தில் செல்வம் கொழிக்க வைக்கும் வாலை சக்கரம்
இன்றைய கால கட்டத்தில் வியாபாரம் செய்வது என்பது மிகவும் கடுமையான ஒரு செயல் ஆகிவிட்டது. ஒன்று பல போட்டியாளர்களும், அந்த வியாபார போட்டியல் வாடிக்கையாளர்களை கவர விலை குறைப்பும், பல சலுகைகளும் பரிசுப்பொருட்களை வாடிக்கையளர்களுக்கு அள்ளி வழங்குவதும் போன்ற காரணங்களாலும், செய்யும் வியாபாரங்களில் நல்ல லாபத்தினை நாம் அடைவது என்பது சாத்தியமில்லை. மேலும் நமது ஜாதகங்களில் உள்ள தோஷங்களும், கிரகங்களின் கோட்சாரமும், திசை - புத்தியால் நமக்கு உண்டாகும் பலன்களும் அதாவது நமது கர்மவினை பலன்களும் நம்மை நாம் செய்யும் வியாபாரத்தில் பெரும் இலாபத்தினை வெற்றிகளை வளர்ச்சியினை பாதிக்கும் அம்சங்களாக விளங்குகின்றன.
சரி இந்த நிலை மாற நாம் தெய்வ அருளினை தான் நாட வேண்டி இருக்கிறது, நாம் நேரடியாக தெய்வ அருளினை பெறுவது இயலாத காரியம் என்பதை அறிந்த முன்னோர்களும் சித்தர்களும் நாமும் வளமுடன் வாழ என்ற நோக்கிலேயே அருளி சென்றவை தான் எந்திரங்களும் அதற்க்கு உண்டான மந்திரங்களும் அதற்கென உடன் வைக்கும் வசிய மூலிகைகளும் ஆகும். அவ்வகையில் வியாபாரிகள் வியாபாரங்களில் வெற்றி மேல் வெற்றி அடையவும், செல்வங்கள் அடையவும், வாடிக்கையாளர்கள் பெருகவும் சொல்லி சென்ற எந்திரமே "வியாபாரத்தில் செல்வம் கொழிக்க வைக்கும் வாலை சக்கரம்" ஆகும்.
கேட்ட வரங்களை தரும் மரகத லிங்கம்
நவகிரகங்களில் புதனுக்கு உரிய ரத்தினமாக மரகதம் கருதப்படுகிறது. எனவே, மரகத லிங்கத்தை வழிபடுவதன் மூலம் கேட்ட வரத்தை, கேட்டவுடன் பெற முடியும் என சில ஆன்மிக நூல்களில் கூறப்பட்டுள்ளது. சில குறிப்பிட்ட ரத்தினங்களுக்கு ஆக்ரஷ்ன சக்தி உண்டு. அந்த வகையில் புதனுக்கு உரிய மரகதத்தை, லிங்க வடிவில் வழிபடுவதன் மூலம் கேட்ட வரத்தைப் பெறலாம். கல்வி, ஆரோக்கியம், அரசருக்கு நெருக்கமான பதவிகளில் அமரும் யோகத்தை மரகத லிங்கம் தரக்கூடிய வல்லமை படைத்தது. இதுமட்டுமின்றி வியாபாரத்தில் விருத்தி அம்சம் பெறவும் மரகத லிங்கத்தை வணங்கலாம். இவற்றையெல்லாம் விட முக்கியமான விசயம், மரகத லிங்கத்தை வணங்குவதன் மூலம் சகல விதமான தோஷங்களில் இருந்தும் நிவர்த்தி பெற முடியும் என்பது குறிப்பிடத்தக்கது
இந்த மரகத கல்லை லிங்கமாகசெய்து வழிபடலாம் .புதனுக்கு உரிய மரகதத்தை, லிங்கவடிவில் வழிபடுவது மிக சிறந்தபலனை அளிக்கும் என்று புராணங்கள் கூறுகின்றன.
மரகத லிங்கத்தை இந்திரன் வழிப்பட்டதாக புராணங்கள் கூறுகின்றன.இவ்வாறு மரகதலிங்கத்தை வழிபட்டால் தீராத வியாதிகள் குணமடையும் என்பது முன்னோர் வாக்கு.
மரகதலிங்கத்தை வணங்குவதால் கல்வி,பதவி,போன்றவற்றில் சிறந்து விளங்கலாம் .சகல தோஷங்களும் இவ்வழிபாட்டினால் நீங்கும் .மரகதலிங்களுக்கு செய்யப்படும் பால்அபிஷேகம் மிகச்சிறந்த மருத்துவ சக்தியைக் கொண்டது. ஏழு மரகதலிங்கங்கள் இந்திரன் மூலம் முசுகுந்த சோழச்சக்ரவர்த்திக்குக் கிடைத்தாக சொல்லப்படுகிறது. இந்த மரகதலிங்கங்களை இந்திரனே பூஜித்து வந்தாராம். முசுகுந்த சக்ரவர்த்தி 12 ஆம் நூற்றாண்டில் வேதாரண்யம்,திருக்குவளை,திருக்கரவாசல், திருவாரூர்,திருநள்ளாறு, நாகப்பட்டினம்,திருவாயுமூர் ஆகிய ஏழு இடங்களில்உள்ள சிவன் கோவில்களுக்கு (சப்த விடங்க தலங்கள்) விலைமதிப்பில்லாத மரகதலிங்கங்களை மக்கள் வழிப்பாட்டிற்காக அமைத்துக் கொடுத்துள்ளார்.சப்தவிடங்கத தியாகத் தலங்களில் மரகதலிங்களுக்கு செய்யப்படும் பால் அபிஷேகம் மிகச்சிறந்த மருத்துவ சக்தியைக் கொண்டது. இரவில்
மரகதலிங்களின் மேல் சாற்றி காலையில் வழங்கப்படும் சந்தனமும் மிகச்சிறந்த
மருத்துவ சக்தி வாய்ந்தது.
விபரம் பெற
சர்வசக்தி விருட்சபீடம்",
26/6, கிச்சகதியூர்,
இலுப்பாபளையம் (அஞ்சல்),
சிறுமுகை - 641302.
செல் : 99440 99980, 85260 74891.
whats app no : 99440 99980).
வீடு மனை பூமீ வாகன யோகம் தரும் எந்திரம்
ஒவ்வொரு மனிதனுக்கும் வாழ்க்கையில் மிக முக்கியமான தேவைகளில் ஒன்று வீடு, மனை(காலி இடம்), பூமீ,வாகனம் ஆகியவை. இந்த அத்யாவஸ்ய தேவைகளை அடைய வாழ்வில் பல போராட்டங்களை சந்திக்கிறான். வீடு, மனை(காலி இடம்), பூமீ, வாகனம் ஆகியவற்றை அடைந்திட தன் வாழ்நாளில் ஒரு பகுதியை உழைப்பிலேயே கழிக்கிறான். உழைத்து உழைத்து ஓடாய் தேய்ந்தும் வீடு, மனை(காலி இடம்), பூமீ, வாகனம் வாங்க முடியாமல் தன் ஆசை வெறும் கனவாய், கைக்கு எட்டா கனியாய் போகிறது என்று மனம் நொந்து வாழ்பவர்கள் எத்தனை பேர்? வீடு, மனை(காலி இடம்), பூமீ, வாகனம் எனக்கும் கிடைக்க என்ன பரிகாரம் செய்வது? என கேட்டு ஜோதிடர்களை நாடுபவர்கள் எத்தனை பேர்? உன்னையே நம்பி தினமும் உருகி தொழுது வழிபடுகிறேனே எனக்கு ஏன் வீடு, மனை(காலி இடம்), பூமீ, வாகனம் வாங்கும் யோகத்தை தர மறுக்கிறாய் உன்னையே கதி என்னும் என்னை சோதிக்கலாமா என்று தெய்வத்திடம் முறையிடுபவர்கள் எத்தனை பேர்?
இவ்வாறு வாழ்வில் தான் நினைக்கும் வசதியில் வீடு, மனை(காலி இடம்), பூமீ, வாகனம் வாங்கவைக்கும் அற்புத எந்திரம் தான் நம் முன்னோர்கள் அருளிச் சென்ற வீடு மனை பூமீ வாகன யோகம் தரும் எந்திரம். எவ்வளவு ஏழ்மை நிலையில் இருப்பவரையும் ஒரே வருடத்திற்குள் வீடு, மனை(காலி இடம்), பூமீ, வாகனம் வாங்க வைக்கும் அற்புத எந்திரம் தான் வீடு மனை வாகன யோகம் தரும் எந்திரம்
விபரம் பெற
சர்வசக்தி விருட்சபீடம்",
26/6, கிச்சகதியூர், இலுப்பாபளையம் (அஞ்சல்),
சிறுமுகை - 641302.
செல் : 99440 99980, 85260 74891. (whats app no : 99440 99980).
LikeShow more reactions
Comment
தொட்டதெல்லாம் பொன்னாக்கும் கரு மஞ்சள்
தொட்டதெல்லாம் பொன்னாக்கும் கரு மஞ்சள் அற்புத பலனைப் பற்றி பார்க்கவிருக்கிறோம். மஞ்சள் வகைகளிலே அபூர்வமாக கிடைக்ககூடியதான ஒன்று தான் தொட்டதெல்லாம் பொன்னாக்கும் கருமஞ்சள் ஆகும் இந்த அபூர்வ கருமஞ்சள் இமயமலை மற்றும் இந்தோனேசியா பகுதியில் விளைபவை ஆகும். பல அறிய மருத்துவ குணங்களை தன்னகத்தே கொண்டது கருமஞ்சள்.
தொட்டதெல்லாம் பொன்னாக்கும் கரு மஞ்சளில் காளியும், பைரவரும் வசிக்கிறார்கள் என்று சாஸ்திரங்கள் உரைக்கின்றன. இந்த கரு மஞ்சளை சிவப்பு பட்டு துணியில் கட்டி கழுத்தில் அணிந்திருந்தால் நாம் செய்யும் செயல்களில் எல்லாம் எதிர்பாராத வெற்றிகளை கொடுக்கும், வாழ்வில் எதிர்பாராத முன்னேற்றங்களை கொடுக்கும், எதிர்பாராத தன வரவுகளையும் பொருள் வரவுகளையும் உண்டாக்கும், இதுவரை வெளியில் கொடுத்து திரும்பி வராத பணம் திடீரென எதிர்பாராமல் நல்லபடியாக வந்து சேரும், அற்புதமான முன்னேற்றத்தையும் பண வரவுகளையும் தருவதால் வியாபாரிகள் கட்டாயம் அணியவேண்டியது கருமஞ்சள் ஆகும். வாழ்வில் எதிர்பாராத வெற்றிகளை கருமஞ்சள் பெற்றுத்தரும். ஆகையால் வாழ்வில் வெற்றியையும் முன்னேற்றத்தையும் விரும்பும் அனைவரும் கருமஞ்சள் அணியலாம்.
கருமஞ்சளின் மருத்துவ குணங்களை பார்க்கும்போது AIDS, HIV, CANCER, ASTHMA உள்ளிட்ட கொடிய நோய்களை குணப்படுத்த கூடியது, ஏழரை சனி, அஷ்டம சனி மற்றும் கெடுதலான திசை புத்திகள் நடந்தாலும் மற்றும் மாந்த்ரீக பாதிப்புகளால் நீங்கள் துன்பப்பட்டுக் கொண்டு இருந்தாலும் கருமஞ்சள் அணிவதால் நிச்சயம் வெற்றிகள் உண்டாகும்
விபரம் பெற
சர்வசக்தி விருட்சபீடம்",
26/6, கிச்சகதியூர், இலுப்பாபளையம் (அஞ்சல்), சிறுமுகை - 641302.
செல் : 99440 99980,
85260 74891.
(whats app no : 99440 99980).
LikeShow more reactions
Comment
ஜீவ சஞ்சீவி வசிய எண்ணை
இங்கே அற்புதமான ஒரு வசியத்தை பற்றி பேசவிருக்கிறோம். நீங்கள் மேலே பார்த்த படத்தில் இருப்பது ஜீவ சஞ்சீவி மற்றும் ஜீவ சஞ்சீவி வசிய எண்ணை, இந்தியாவில் கிடைக்கும் ஜீவ சஞ்சீவி பழுப்பு நிறத்தில் இருக்கும் ஆனால் மேலே படத்தில் இருப்பது கருப்பு நிறம் உடைய ஜீவ சஞ்சீவி ஆகும். இதில் ஆண் பெண் இரண்டும் உண்டு, ஆண் பெண் இரண்டையும் ஒன்று சேர்த்து வைத்தால் தான் வேலை செய்யும், இந்த ஜீவ சஞ்சீவி வேரை சந்தனாதி தைலம் அல்லது அல்ககால் கலக்காத வாசனை திரவியத்தில் போட்டு வைத்துக்கொண்டு அந்த வாசனை திரவியத்தை உங்கள் வலது கை மோதிர விரலால் தொட்டு நெற்றியில் பொட்டிட்டு கொண்டு இரண்டு புருவங்களிலும் வைத்துக்கொண்டு வெளியில் சென்றால் உங்களை பார்பவர்கள் எல்லாம் வசியமாவார்கள், பெண் வசியம், வியாபார வசியம் உண்டாகும். உங்கள் முகத்தை கண்டவர்கள் உங்களுக்கு வசியமாவர்கள், செய்யும் தொழிலில் முன்னேற்றம் உண்டாகும், வியாபாரிகளுக்கு வாடிக்கையாளர்களை வசீகரித்து கொடுத்து வியாபாரத்தில் இலாபத்தை அதிகரிக்கும், எதிர்பாராத அதிஷ்டங்களை உண்டாக்கும்
விபரம் பெற
சர்வசக்தி விருட்சபீடம்",
26/6, கிச்சகதியூர், இலுப்பாபளையம் (அஞ்சல்), சிறுமுகை - 641302.
செல் : 99440 99980,
85260 74891.
(whats app no : 99440 99980).
LikeShow more reactions
Comment
ஸ்ரீ சக்கரம்:
(ஶ்ரீ சக்கரம் இருக்கும் இடத்தில் லட்சுமி கடாட்சம் உண்டு)
ஓம் நமோ பகவதி சர்வ மங்களதாயினி
சர்வயந்த்ர ஸ்வரூபிணி சர்வமந்திர ஸ்வரூபிணி
சர்வலோக ஜனனீ சர்வாபீஷ்ட ப்ரதாயினி
மஹா த்ரிபுரசுந்தரி மஹாதேவி
சர்வாபீஷ்ட சாதய சாதய
ஆபதோ நாசய நாசய
சம்பதோ ப்ராபய ப்ராபய
சஹகுடும்பம் வர்தய வர்தய
அஷ்ட ஐஸ்வர்ய சித்திம் குருகுரு
பாஹிமாம் ஸ்ரீதேவி துப்யம் நமஹ
பாஹிமாம் ஸ்ரீதேவி துப்யம் நமஹ
பாஹிமாம் ஸ்ரீதேவி துப்யம் நமஹ
LikeShow more reactions
Comment
சகல கோடி தெய்வங்களுக்கும் ஒரே மந்திரம்
ஶ்ரீ சக்கரத்தில் அஷ்ட லட்சுமிகளும் சகல கோடி தேவதைகளும் தெய்வங்களும் அன்னை பராசக்தி, புவனேஸ்வரி, ராஜராஜேஸ்வரி, காஞ்சி காமாட்சி காசி விசாலாட்சி மதுரை மீனாட்சி திரிபுர சுந்தரி என பல தெய்வங்களுக்கு பல ஆயிரம் மந்திரங்களும் பல ஆயிரம் பூஜை முறைகளும் உள்ளன இந்த பூஜை முறைகளை நம்மால் கடைபிடிக்க முடியுமா என்று மலைத்து நிற்பவர்களுக்கு ஒரு எளிய வழி உண்டு
ஶ்ரீ சக்கர யந்திரத்தில் பல கோடி தெய்வங்கள் இருந்தாலும் அவர்கள் அனைவரையும் ஒரே ஒரு எளிய மந்திரத்தின் மூலம் வழிபட முடியும் இந்த மந்திரம் ஶ்ரீ ஸூக்த பாடலின் வரியில் உள்ளது
ஶ்ரீ சக்கரத்திற்கு பூ வைத்து பொட்டு வைத்து ஊதுபத்தி ஏற்றி நெய் விளக்கு ஏற்றிய பிறகு சொல்ல வேண்டிய மந்திரம்
ஓம் ஶ்ரீ சக்கர சஞ்சாரினியை நமஹ
(108 அல்லது 1008 தடவை சொல்லி எளிய முறையில் வழிபட்டால் சகல கோடி தெய்வங்களின் ஆசிர்வாதமும் வந்து சேரும்
ஒரே கல்லில் பல கோடி மாங்காய் விழுந்தால் வேண்டாம் என்றா சொல்வீர்கள்)
மஹா சுதர்ஸன மஹாமந்திரம்
ஆபத்துக்கள் விலக:
சுதர்சன மஹாமந்திரத்தை தினமும் காலையில் சொன்னால், அஞ்ஞான இருள் விலகும். எல்லா பிரச்சனைகளும் மறைந்து போகும். ஆபத்து நீங்கும். பயம் விலகும்.
தைரியம் பிறக்கும். சந்தோஷம் நிலைக்கும்.
விடியற்காலையில் சூரிய உதயத்திற்கு முன்பு குளித்து, சுத்தமான உடை அணிந்து கிழக்கு நோக்கி அமர்ந்து, கண்ணை மூடிக்கொண்டு குறைந்தபட்சம் ஒன்பதுதடவை - கூடிய பட்சம் 108 தடவை பாராயணம் செய்தால் அவர்களுக்கு பீடைகள் ஒழியும் சௌபாக்கியம் பிறக்கும்.
மஹா சுதர்ஸன மஹாமந்திரம்:
ஓம் க்லீம் க்ருஷ்ணாய கோவிந்தாய கோபிஜனவல்லபாய
ஓம்பராய பரமபுருஷாய
பரகர்ம மந்த்ர தந்த்ர யந்த்ர ஔஷதாஸ்த்ர சஸ்த்ராணி
ஸம்ஹர ஸம்ஹர ம்ருத்யோர் மோசய மோசய ஓம்
நமோபகவதே மஹா சுதர்சனயா தீப்த்ரே ஜ்வாலப்ரிதாய
ஸர்வ திக் க்ஷோபண கராய ஹூம் பட் பரம் ப்ரஹ்மணே
பரஞ்ஜோதிஷே சஹாஸ்ரார ஹூம்பட் சுவாஹா :
நைவேத்தியம் :-லட்டு, வெண்பொங்கல், புளியோதரை, அக்கார வடிசல், தயிர் சாதம், கதம்பசாதம்.
LikeShow more reactions
Comment
அஷ்டமா சித்திகளும் மூலாதார சக்கரங்களும்
பட்டினத்தார் பாடல்
மனித உடலில் 7 வகையான சக்கரங்கள் உள்ளன அவையாவன, மூலாதாரம், சுவதிஷ்ட்டானம், மணிபூரகம், அனாகதம், விசுத்தி, ஆக்ஞை, சகஸ்காரம். மனிதனுக்கு ஆறறிவு படைத்த இறைவன் மனித உடலிலும் ஆறு சக்கரங்களையே படைத்தான் - 7 வது சக்கரமான சகஸ்காரம் என்பது மனித உடலை தாண்டியே அமைந்துள்ளது, ஆறு சக்கரங்களை அடைந்தாலே மனிதன் நினைத்ததை எல்லாம் அடைய முடியும், இந்த ஆறு சக்கரங்களை அடைவதே மிகவும் கடினம், இந்த ஆறு அல்ல எட்டு சக்கரங்களை அடைவதே அஷ்டமா சித்தி இதனை சித்தர்கள் மட்டுமே எட்டியுள்ளனர். இதில் எட்டாவது சக்கரம் எனப்படுவது அண்டவெளி ஆகும்.
இந்த சக்கரங்களின் மகிமையை அறியாமல் தான் என்ன பாடுபட்டேன் என்பதை பட்டினத்தார் அழகாக எழுதி உள்ள பாடலின் வாயிலாக காண்போம்.
மூலத்து உதித்து எழுந்த முக்கோண சக்கரத்துள்
வாலை தன்னை போற்றாமல் மதிமறந்தேன் பூரணமே !
உந்தி கமலத்தில் உதித்து நின்ற பிரம்மாவை
சந்தித்து காணாமல் நட்டழிந்தேன் பூரணமே !
நாபிக் கமல நடு நெடுமால் காணாமல்
ஆவிகெட்டு நானும் அறிவழிந்தேன் பூரணமே !
உருத்திரன் இருதயத்தை உண்மையுடன் பாராமல்
கருத்து அழிந்து நானும் கலங்கினேன் பூரணமே !
விசுத்தி மகேசுரனை விழிதிறந்து பாராமல்
பசித்து உருகி நெஞ்சம் பதறினேன் பூரணமே !
நெற்றி விழிஉடைய நிர்மல சதாசிவத்தை
புத்தியுடன் பாராமல் பொறி அழிந்தேன் பூரணமே !
நாத விந்து தன்னை நயம் உடனே பாராமல்
போதை மயக்கிப் பொறி அழிந்தேன் பூரணமே !
உச்சி வெளியை உறுதியுடன் பாராமல்
அச்சமுடன் நானும் அறிவு அழிந்தேன் பூரணமே !
இடைபிங்கலை இனிய இயல்பு அறியமாட்டாமல்
தடை உடனே நானும் தயங்கினேன் பூரணமே !
ஊனுக்குள் நீ நின்று உலாவினதை காணாமல்
நான் என்று இருந்து நலம் அழிந்தேன் பூரணமே !
உடலுக்குள் நீ நின்று உலாவினதை காணாமல்
காடுமலை தோறும் திரிந்து காலுழந்தேன் பூரணமே !
என்னை அறியாமல் எனக்குள்ளே நீயிருக்க
உன்னை அறியாமல் உடல் அழிந்தேன் பூரணமே !
ஐந்து பொறியை அடக்கி உன்னை போற்றாமல்
நயந்து உருகி நெஞ்சம் நடுங்கினேன் பூரணமே !
வாசி தன்னைப் பார்த்து மகிழ்ந்து உனைதான் போற்றாமல்
காசிவரை போய் திரிந்து காலுழந்தேன் பூரணமே !
எனக்குள்ளே நீ இருக்க உனக்குள்ளே நான் இருக்க
மனக்கவலை தீர வரம் அருள்வாய் பூரணமே !
பட்டினத்தார் பாடிய இந்த பாடலில் உடலில் உள்ள சக்கரங்கள் பற்றியும், அதில் உறையும் தெய்வங்களை பற்றியும் அதை அறியாமல் தான் அனுபவித்த துன்பங்களை பற்றியும் விரிவாக சொல்லியுள்ளார். மனிதர்களாகி துன்ப கடலில் சிக்கி உழலும் நாம் இனியாவது இறைவன் நம் உள்ளே தான் இருக்கிறார் என்பதனை உணர்ந்து அவரை கண்டு உணரும் பாக்கியத்தையும், இன்ப பெரு வாழ்வு என்னும் பேற்றையும் பெற்று உயவோம்மாக...
இனி கடவுளை தேடி கோவில் கோவிலாக அலைவதை விட்டு விட்டு நம்முள்ளே கடவுளை தேடுவோமாக
LikeShow more reactions
Comment
செல்வ வளம் பெருகி நிலைக்க
இன்றைய வாழ்க்கை சூழலில் செல்வத்தினை சேர்க்க போராடும் மனிதர்களே நாம் அனைவரும், செல்வத்தினை தேடி ஓடாத மனிதர்களே இந்த உலகத்தில் இல்லை, திரைக்கடல் ஓடியும் திரவியம் தேடு என்பது முதுமொழி. நாமும் செல்வத்தினை சேர்க்க அரும்பாடு படுகிறோம், செல்வத்தினை சம்பாதிப்பதும், அதனை நம்மிடம் நிலைக்க வைப்பதும் வாழ்வில் ஒரு மிகப்பெரிய சவாலாகவே விளங்குகிறது. அந்த நிலையினை மாற்றவே சில எளிய தாந்த்ரீக முறைகளை இங்கே தெளிவுபடுத்துகிறேன்.
1. இலவங்கப்பட்டையை பொடி செய்து சிறிது எடுத்து ஒரு பச்சை நிற துணியில் மடித்து பச்சை நூலால் கட்டி மணிபர்சிலோ அல்லது சட்டைப்பையிலோ எப்பொழுதும் வைத்துக்கொள்ளவும்.
2. பசுமையான வெற்றிலை ஒன்றை எந்த நல்ல காரியங்கள், பணசம்பந்தமான காரியங்கள் போன்றவற்றிக்கு செல்லும் போதும் உடன் வைத்துக்கொள்ளவும்.
3. நிலக்கரி தனாகர்ஷண ஷக்தி உடையது அதனை ஒரு சிறு துண்டு எப்போதும் உடன் வைத்துக்கொள்ளவும்.
4. ரூபாய்த்தாளை எப்பொழுதும் சுருளாக கட்டியே பணப்பெட்டியில் வைத்துக்கொள்ள வேண்டும். ( சுழற்சி சக்தி உண்டாகி செல்வமானது பெருகி தங்கும் ).
5. தினமும் ஏதேனும் ஒரு நாணயத்தை இரண்டு கைகளிலும் பிடித்தபடி உங்கள் தேவையினை மனமார வேண்டி - அந்த காசுகளை சேமித்து வந்து மாதக்கடைசியில் சேமித்த பணத்தில் வாழைப்பழம் வாங்கி பாசுமாட்டிற்கு தானமாக வழங்கவும்.
6. எந்த விசயத்திற்காக பணத்தினை செலவிட்டாலும், செலவிடும் பணத்தினை கையில் வைத்து நெஞ்சிற்கு நேராக பிடித்து பிறர் அறியாதவாறு "ஓம் ஸ்ரீம் நமஹ இலட்சமாக திரும்பிவா வசி வசி" என்று ஐந்து முறை கூறி செலவிடவும்.
7. முக்கியமான காரியங்கள், பணசம்பந்தமான விஷயங்களுக்கு செல்லும்போது எலுமிச்சம் பழம் ஒன்றை "ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் ஸ்ரீம் சக்தியே அருள்வாய் போற்றி ஓம்" என ஆறு முறை உச்சரித்து உடன் வைத்துக்கொள்ளவும்.
8. மாதச்சம்பளமாகட்டும், சுயத்தொழில், வியாபாரம் செய்பவர்கள் யாராகினும் வருவாயில் முதல் செலவாக உப்பு, மல்லிகைபூ இரண்டையும் வாங்குவதே முதல் செலவாக இருக்க வேண்டும்.
( பணவருவாய் பலவகையிலும் பெருகும் ).
9.பணப்பெட்டி தென்மேற்கு மூலையில் இருக்கவேண்டும், அதில் எப்போதும் மல்லிகைபூ போட்டு வைக்கவேண்டும்.
10. பணப்பெட்டியில் பெரிய தொகைகளை வைக்கும்போது ஆறு வெற்றிலைகள், முன்று பாக்குகள் சேர்த்து வைக்கவும்.
11. மகாலக்ஷ்மி படத்திற்கு தினமும் காலை, மாலை நெய், தேங்காய் எண்ணை, நல்லெண்ணெய் ஏதாவதொன்றில் இரண்டு திரி போட்டு விளக்கு ஏற்றி வீடு, கடை முழுவதும் சாம்பிராணி புகை காட்டிவருவது பண விஷயத்தில் மிகசிறந்த வசியமாகும்.
12. குழந்தைகள் வளரும்போது விழும் முதல் பல்லை பால் பற்கள் என்கிறோம், அவ்வாறான பால் பற்களில் ஏதேனும் ஒன்று பையிலோ பணப்பெட்டியிலோ வைத்தால் செல்வம் பெருகும்.
13. வடகிழக்கு மூலையில் குடிக்கும் நீரைவைத்து அதில் எலுமிச்சை ஒன்றை போட்டு வைக்கவும், தொடர்ந்து இரண்டு மாதங்கள் செய்து வந்தால் பற்றாக்குறை நீங்கி செல்வம் கொழிக்கும்.
14. கல் உப்பை வீட்டில் வியாபார ஸ்தலங்களில் எல்லா மூலைகளிலும் சிறிது போட்டு வைத்தால் தீய சக்திகள் ஓடும், பணம் பெருகும்.
15. பணப்பெட்டி சந்தனப்பெட்டியாக இருந்தால் அதிர்ஷ்டம் பெருகும். வசதி இல்லையேல் பச்சை நிற பட்டுத்துணியில் பணப்பை செய்து அதனுள் சிறிய சந்தனக்கட்டை ஒன்றை அதனுள் போட்டு வைக்கவும், சந்தனம் இருப்பதை வளர்க்கும் சக்தி உடையது.
16. வருமானத்தில் ஐந்து சதவீதத்தை தானதிற்கென போட்டு வையுங்கள், மாதம் ஒருநாள் அதை தானமாக கொடுங்கள், கொடுப்பது பெருகும்.
17. முக்கியகாரியமாக தொழில் விஷயமாக வெளியே செல்லும்போது அருகம்புல் நுனி ஒன்றையோ, திருநீற்றுப்பச்சிலை ஒன்றையோ பறித்து பையில் வைத்துச்செல்ல சென்ற காரியம் நிச்சயம் வெற்றியே.
18. சாம்பிராணியும், மருதாணி விதையும், வெண்கடுகும் கலந்து வீட்டில், வியாபார ஸ்தலத்தில் தூபமிட தீய சக்திகள், கண்திருஷ்டி, தோஷங்கள் நீங்கி தொழில் முன்னேற்றம் அடையும், மகாலக்ஷ்மி நம்மிடத்தில் நடமாடுவாள்.
LikeShow more reactions
Comment
தேவைப்படுபவர்களுக்கு இது உதவும்
என்பதால் ஒரு தகவலாக மட்டுமே இங்கு பதிவிடுகிறேன்
இதில் குறிப்பிட்டுள்ள சர்வ சக்தி விருட்ச பீடத்திற்கும் எனக்கும் எந்த தொடர்பும் இல்லை மேலதிக விவரங்கள் பெற குறிப்பிட்டுள்ள முகவரியை பயன்படுத்தி கொள்ளவும்
விதியை வெல்லும் தாந்த்ரீக முறை
நமது முன்னோர்கள் நாம் வளமுடனும் நலமுடனும் சர்வ சித்திகளையும் பெற்று வாழ அரிய பல கலைகளை அருளிச் சென்றுள்ளனர். அந்த வகையில் மந்திர சாஸ்திரத்தின் ஒரு அங்கமாக விளங்குவது தாந்த்ரீக கலையாகும். மாந்த்ரீக கலையில் மந்திரங்களை ஆயிரம், இலட்சம், கோடி என்ற எண்ணிக்கைகளில் உருவேற்ற வேண்டும். அப்பொழுதுதான் நாம் நினைத்த காரியம் சித்தியடையும், ஆனால் தாந்த்ரீகம் என்பது மிகவும் எளிமையானது, ஒரு சில நாட்களிலேயே பலன் தரக்கூடியது, பொருள் செலவும் மிகவும் குறைவு, பூஜை செய்யும் நேரமும் மிகவும் குறைவு அதாவது பூஜை நேரம் நிமிடங்களில் அடங்கும். சிவன் - பார்வதியிடம் இருந்து ஞான பழத்தினை அடைவதற்காக முருகப்பெருமான் உலகையே வலம் வந்தார், ஆனால் விநாயக பெருமானோ தாய் - தந்தையே வலம் வந்து ஞான பழத்தினை எளிமையாக பெற்றார். இந்த புராணத்தை உற்று பார்த்தோமானால் முருகபெருமான் உலகையே வலம் வந்த செய்கையை போல கடினமானது மாந்த்ரீகம். ஆனால் தாய் - தந்தையையே வலம் வந்து விரைவாக எளிமையாக ஞான பழத்தினை பெற்றது போல எளிமையானது தந்த்ரீகம். இந்த தாந்த்ரீக முறையின் மூலமாக நம் வாழ்வில் தோன்றும் அனைத்து விதமான பிரச்சனைகளுக்கும் உடனடி தீர்வினை காணலாம். இந்த தாந்த்ரீக முறைகளை தகுந்த தாந்த்ரீக குருவிடம் கேட்டறிந்து, தாந்த்ரீக குருவின் ஆசியும் பெற்று, நம் காரியங்களுக்கு உண்டான தாந்த்ரீக முறைகளை செய்து உடனடி பலன் பெறலாம், இந்த தாந்த்ரீக முறையின் மூலமாக எந்தெந்த காரியங்களை நாம் சாதித்து கொள்ள இயலும் என்ற பட்டியலை இங்கே விரிவாக காணலாம்.
1. செல்வவளம் பெருகி நிலைக்க,
2. எண்ணியதெல்லாம் கிடைக்க,
3. தேகசக்தி - ஆயுள் விருத்தி பெற,
4. விதியையும் சாதகமாக்க நவகிரக பூஜை,
5. சர்வ தெய்வ, தேவதை, யட்சணி வசியம்,
6. செல்வந்தராக்கும் மகாலட்சுமி உபாசனை,
7. வீடு வாகன யோகம் பெற,
8. நல்ல வேலை, பதவி உயர்வு, சம்பள உயர்வு பெற,
9. செல்வம் தரும் அதிர்ஷ்ட்ட மணிபர்ஸ்,
10. ஆண் - பெண் தகாத உறவுகளை துண்டிக்க,
11. விபத்து கண்திருஷ்ட்டியில் இருந்து பாதுகாப்பு பெற,
12. அதிர்ஷ்டம் பெருக,
13. சர்வ லோக வசியம்,
14. சர்வ லோக வசிய விபூதி,
15. காரிய சித்தி பெற விபூதி,
16. முகராசி பெற,
17. செய்தொழில், வியாபாரத்தில் பணம் கொழிக்க,
18. செய்தொழிலில் பணம் கொழிக்க தனவசிய பிரயோகம்,
19. சகல காரிய சித்திக்கும் சர்வ வசிய விபூதி,
20. செல்வ செழிப்புக்கு மணிப்ளாண்ட் முறை,
21. கண்திருஷ்டி, தீயசக்திகளை விரட்ட,
22. எதிரிகளை நம் வழிக்கே வராமல் விரட,
23. பகையான உறவை நட்பாக மாற்ற,
24. கொடிய எதிரிகளை அழிக்க,
25. கொடிய நோய்களில் இருந்து விடுபட,
26. தீய எதிரிகளை குடுவைக்குள் அடைக்க,
27. ஏவல், பில்லி, சூனியம், செய்வினைகளை வைத்தவர்களுக்கே திருப்பிவிட,
28. சத்ருவை தாந்த்ரீகத்தால் கட்ட,
29. பூத, பிரேத, ஏவல்களை விரட்ட,
30. அடகு நகையை மீட்க,
31. கல்வி, கேள்விகளில் அறியாததை உணர,
32. ராகு - கேது, காலசர்ப்ப தோஷம், நாக தோஷத்தில் இருந்து விடுபட,
33. புத்திர தோஷம் நீங்கி புத்திர பாக்கியம் அடைய,
34. ஆண் - பெண் வசிய பெ,
35. கல்வியில், போட்டி தேர்வுகளில் வெற்றி அடைய,
36. திருமண தடை நீங்கி உடனே திருமணம் நடைபெற,
37. நினைத்தது நிறைவேற,
38. வாரக்கடனும் வர,
39. கணவன் - மனைவி வசியம் பெற்று வாழ,
40. நினைத்த வசதிகளை அடைய,
41. அதிர்ஷ்ட தேவதை வசிய தைலம்,
42. எண்ணியது கிடைக்க,
43. விரும்பிய ஆண் - பெண் வாரிசு பெற,
44. விவசாயத்தில் விளைச்சல் பெருக,
45. வழக்குகள் நமக்கே வெற்றியாக,
46. அரசியலில் வெற்றி அடைய,
47. அரசியலில் உயர்பதவி பெற,
48. பிரிந்த கணவன் - மனைவி ஒன்று சேர,
49. வசிய இடுமருந்தை முறிக்க,
50. போதை அடிமைகளை முற்றிலும் திருத்த,
51. நினைத்த நாட்டுக்கு வேலைக்கு செல்ல,
52. கடன் தொல்லையில் இருந்து விடுபட,

போன்ற நம் வாழ்வில் சந்திக்கும் பிரச்சனைகளுக்கு தாந்த்ரீக முறையில் எளிய தீர்வினை அடைய நமது சர்வ சக்தி விருட்ச பீட குருஜி ஸ்ரீ லக்ஷ்மி தாச ஸ்வாமிகளை தொடர்பு கொள்ளவும்.
முகவரி :
ஸ்ரீ லக்ஷ்மி தாச ஸ்வாமிகள்,
சர்வ சக்தி விருட்ச பீடம்,
26/6, கிச்சகதியூர்,
இலுப்பாபாளையம் (அஞ்சல்),
சிறுமுகை - 641302,
கோயம்புத்தூர் (மாவட்டம்).
செல் : 85260 74891,
99440 99980
LikeShow more reactions
Comment
சூரியஒளி சந்திரஒளி ரகசியம்
ஒளிகிரகமான சூரிய ஒளி நேரத்தை விட சந்திரஒளி நேரமே சிறந்தது என சித்தர்கள் சில கணக்கை வைத்து வழிபாடு செய்தார்கள்,
பகலான சூரிய நேரம் - சிவநேரமாகவும். இரவான சந்திர நேரம் - விஷ்ணுநேரமாகவும் கருத்தில் கொண்டார்கள், விஷ்ணு நேரம் வசியநேரமாக கணக்கில் கொண்டார்கள், இதில் சூரிய உதயத்திற்கு முன்பும். சூரிய மறைவிற்கு பின்பும் உள்ள சில நாழிகைகளை பிரம்ம வேளை எனவும். உற்பத்தி வேளை எனவும் பலன் கூறினார்கள், நாளடைவில் பிரம்ம முகூர்த்தம் என்றானது , இது சகல காரியத்திற்கும் வெற்றி தரும் நேரமாக உள்ளது , ஆக நாம் அறிய வேண்டியது என்னவெனில் சந்திரவேளையான இரவு பொழுது நமக்கு ஞான சக்தியை பெருக்க வழி செய்கிறது என்பதை அறிய வேண்டும்,
ஒரு ரகசியத்தை தெரிந்து கொள்ளுங்கள் சித்த ஞானிகள். தவசிகள் பகல் உச்சிவேளையில் இளைப்பாறுவார்கள், வெளியில் அதிகம் நடக்க மாட்டார்கள், காரணம் அறிவீராக உச்சி சூரியவேளை ருத்ரவேளை எனக் கூறுவார்கள், அந்த வேளையில் நாம் சூரியைனை கண்டால் நீர்சக்தி. வாசிசக்தி. தீய சக்தியோடு வசிய சக்தியையும் எடுத்து விடும் ஆற்றல் ருத்ர சூரியனுக்கு உண்டு, அதனால் உச்சிவேளையில் சூரியனை காணமாட்டார்கள், ஆனால் சந்திர உச்சி வேளை (இரவு) மாற்றாக செயல்நடக்கும், சந்திரன் உடலுக்கும். மனதிற்கும் சக்தியை கொடுப்பார், அதனால்தான் சித்தர்கள் பகலில் வெளியில் வராமல் குகையிலேயே இருந்தார்கள், (கண்பார்வை பலத்தையும் இரவு விழிப்பதற்காக பயிற்சி செய்து பலப்படுத்தினார்கள்,) இரவில் வந்து பூஜை முடித்து காலை உதயசூரியனை மட்டும் பாதிகண்கள் மூடிய நிலையில் தரிசனம் செய்து குருவணக்கம் செய்திருக்கிறார்கள்,
இவ்விடம் ஒன்றை அறிக சந்திர வேளைக்கு சக்தி இருப்பது போல் சூரியனுக்கு சக்தி இல்லையா என தவறாக எண்ணக்கூடாது ஆத்ம சக்தி பெருக்கமும். செயல்பாடும் சூரியனே செய்து கொடுப்பார் என்பதை அறிக,
சக்தியை பெருவது இரவிலும். சக்தியை செயல்படுத்துவது பகலிலும் என்பதை தெரிந்து கொள்ளுங்கள், நடுநிசி சூரியனுக்கும் உண்டு, சந்திரனுக்கும் உண்டு 12 பர் 1 சூரியனுக்கும். இரவு 12 பர் 1 சந்திரனுக்கும். உச்சிவேளையாகும், இதில் சந்திர உச்சி நேரத்தை சித்தர்கள் தங்கள் யாகத்திற்கும் ஞான பயிற்சிக்கும் பயன்படுத்தினார்கள், சந்திர வேளையில் எவ்வளவு பயிற்சி செய்தாலும் நன்மையே, இன்னொரு ரகசியத்தையும் தெரிந்து கொள்ளுங்கள், புதிதாக மாந்திரீக சித்து பயிற்சி செய்பவர்கள் பௌர்ணமி ஒளியில் முதன் முதலில் தொடங்குவதும் இதற்குத்தான், சித்தர்களும் கிரியில் அமர்ந்து தியானிப்பதும். யாகம் நிகழ்த்துவதற்கும் சந்திர ஈர்ப்பே காரணமாகும், மனித உயிர்களுக்கு மனவேகத்தை உந்துதல் சக்தி . ஈர்ப்பு சக்தி இவைகளை தருவதே சந்திர ஒளி என்பதை அறிந்திருந்ததால் அந்த சந்திரவேளையை தேர்ந்தெடுத்தார்கள், வளர்பிறையை நாமும் முகூர்த்தமாக விரும்புவதும் இதற்குத்தான், சந்திரவளர்ச்சியை போல் நம் வாழ்வும் வளரும் என நம்பிக்கை மட்டும் அல்ல , மேற்க்கண்ட உண்மையும் கூட, அசுபத்தை தேய்பிறையில் செய்யலாம், பரிகாரத்தையும் தேய்பிறையில் செய்யலாம்.சுபநிகழ்வை வளர்பிறையில் செய்ய சொன்னது சுபம் வளர்வதற்குத்தான், ஆக ஞானசித்தி புத்தி சந்திர வேளையில் தான் பெறலாம், பெறவும் முடியும், எனவே மந்திர சித்துகளுக்கு இரவு பொழுது சிறந்தது , அதற்காக சூரியனுக்கு சக்தியில்லை என தப்பு கணக்கு போடக்கூடாது , சந்திரன் சக்தி பெறுவதும். மனிதன் மற்றும் ஏனைய உயிர்கள் சக்தி பெறுவதும் சூரியனிடமிருந்துதான் என்பதே உண்மை, சந்திரனும். மரமும் மற்றும் மூலிகைகளும் சூரியனிடமிருந்து பெற்ற சக்தியோடு தன் சக்தியையும் இரவில் உமிழ்வார்கள் அதை மனிதன் எளிமையாக பெறமுடியும், மனதை அடக்கி. வாசியை நிலை நிறுத்தினால் எளிமையாக பெறலாம், ஞானிகள் மரத்தடியில் வாழ்ந்த ரகசியமும் இதற்குத்தான், புத்தருக்கு கூட அரச மரத்தடியில் தான் ஞானம் கிடைத்தது என்று வரலாறு கூறுகிறது , சித்தர்கள் சந்திர தரிசனம் சிவனாக நினைத்து செய்ததும் இதற்குத்தான் ஒவ்வொரு பிறையும் ஒவ்வொரு தெய்வமாக பாவித்து வணங்குவதும் இதற்குத்தான், எனவே சந்திரவேளையை நிச்சயம் பயன்படுத்துங்கள், முன்னோடிகள் பலனை பெற்றது அப்படித்தான், நிம்மதி மட்டுமே இரவில் என நினைக்காதீர்கள், ஞானமும் தான் கிடைக்கும்
LikeShow more reactions
Comment