Thursday 28 April 2016

தொழில் செய்யும் இடங்களிலும் பண்டிகை நாட்களிலும் சேட்டு மார்வாடி நகை கடைகளிலும் இந்த ஸ்வஸ்திக் சின்னத்தை பார்த்திருப்பீர்கள் ஆனால் அதன் பயன் என்ன என்று பல பேருக்கு தெரியாது அதற்கான பதிவுதான் இது
இந்த ஸ்வஸ்திக் சின்னம் இருக்கும் இடங்களில் கணபதி எழுந்தருள்வதாக ஐதீகம்
ஸ்வஸ்திக் சின்னத்தின் இடையே உள்ள நான்கு புள்ளிகள் நான்கு தேவதைகளை குறிக்கிறது அவை கௌரி, பிருதிவி,கூர்மா மற்றும் ஆமை அவதாரத்தை குறிக்கும்
ஸ்வஸ்திக் இருக்குமிடத்தில் தீய சக்தி விலகி நல்ல சக்திகள் குடிபுகுந்து அந்த இடத்தில் அமைதியும் முன்னேற்றமும் உண்டாகும் என்பதை அதற்குன்டான மந்திரத்தின் மூலம் அறியலாம்
ஸ்வஸ்திந இந்த்ரே வ்ரித்ஷ்ரவாஹ
ஸ்வஸ்திந புஷ விஷ்வதே தேவாஹ்
ஸ்வஸ்தி நாஸ்த ரக்ஷோ அரிஷ்ட்நேமி
ஸ்வஸ்திநோ ப்ருஹஸ்பதிர்தது
அதாவது நான்கு கரங்களில் அமர்ந்திருக்கும் கணபதி இந்திரன் கருடன் ப்ருஹஸ்பதி ஆகியோர் நான்கு மடங்கு சக்தியையும் ஆசிர்வாதத்தையும் கொடுக்கின்றனர் என்றும் ஸ்வஸ்திக் இருக்குமிடத்தில் அன்பு அமைதி சந்தோஷம் அர்ப்பணிப்பு நல்ல உடல் நலம் தரித்திரம் விலகி பொருளாதார முன்னேற்றம் சகலத்திலும் வெற்றி மற்றும் நீண்ட ஆயுள் பெருவார்கள் என்று கூறுகிறது எனவே இந்த ஸ்வஸ்திக் சின்னத்தை உங்கள் வாழ்க்கையில் எல்லா இடங்களிலும் முடிந்தளவு பயன்படுத்தி வெற்றி வாய்ப்பை உருவாக்கி கொள்ளுங்கள்
நான் இந்த ஸ்வஸ்திக் சின்னத்தின் மூலமாக பல நன்மைகள் பெற்றதால் இந்த பதிவை எழுதியுள்ளேன்
நோட்டு புத்தகம் மற்றும் பூஜையறை வாசல்கதவு ஆகிய இடங்களில் பயன்படுத்தி கொள்ளுங்கள்
சுபம் லாபம்
Like
Comment
Comments
Thirunavukarasu Natarajan 👌👌👌👌👌👌👏👏👏👏👏👏👏👍👍👍👍👍👍

No comments:

Post a Comment