Thursday 28 April 2016

தீய சக்தியை விரட்ட வழிகள்
1 .ஓடும் தண்ணீரை தீய சக்தியால் தாண்ட முடியாது,
2 .நம் சிறுநீரகத்தால் போட்ட கோட்டை நம்மை தாக்க வரும் தீயசக்தி தாண்ட முடியாது.
3 . கமண்டலத்தில் உறுஏற்றி வைத்துள்ள மந்திர தண்ணீரை சிறிது வலது கை உள்ளங்கையில் ஊற்றி நமக்கு சித்தியான மந்திரத்தை மனதிற்குள் மனம் ஒன்றி கூறி நம் முன் தெளித்தால் தீயசக்தி விலகிவிடும்.
4 . அக்னி வளர்த்து நம் தேவதையை நினைவுகூர்ந்தாலும் தீயசக்தி விலகி ஓடிவிடும்.
5 .இருபக்கமும் மூச்சு காற்றை நன்கு இழுத்து வேகமாக வெளியேற்றினால் தீயசக்தி ஓடிவிடும்,
6 .வலது காலை அழுத்தமாக பூமியில் உதைத்தாலும் தீயசக்தி விலகிவிடும்.
7 .வலதுகால் இடதுகால் பெருவிரலை பூமியில் அழுத்தி நின்றாலும் தீயசக்தி விலகிவிடும்.
8 . வலதுகை மணிகட்டில் ஒரு கயிரினை இருக்க மந்திரம் ஓதி கட்டினாலும் தீயசக்தி விலகிவிடும்.
9 .பாதிக்கப்பட்டவர் முகத்தில் மந்திரம் ஓதிய நீரை தெளித்தாலும்,
10 .வேப்பிலை இலையை கையில் வைத்திருந்தாலும்,
11 .மயில் இறகை கையில் வைத்திருந்தாலும்,
12 .எதாவது ஒரு உலோகத்தை கையில் வைத்திருந்தாலும்ம தீயசக்தி அணுகாது. தீயது இருந்தாலும் விலகிவிடும்.
13 .எலுமிச்சை கனியை கையில் வைத்திருந்தாலும் அல்லது தலையில் வைத்து சிறிதுநேரம் பொருத்து அதை காலால் நசுக்கி வீசிவிட்டு காலை கழுவிக்கொண்டாலும் தீயசக்தி விலகிவிடும்.
14 .உப்பு தண்ணீரில் நின்றாலும், மஞ்சள் கலந்த தண்ணீரில் நின்றாலும் தீயசக்தி விலகிவிடும், அண்டாது.
15 .துளசி செடி இருக்கும் அருகில் தீயசக்தி அறவே வராது. (அதனால் தான் காட்டில் குடில் அமைத்து வாழ்ந்த தவசிகள் துளசி செடியை வளர்த்து வழிபட்டனர்.)
16 .ஐவகை எண்ணெய் சேர்த்து எரியவிடும் தீபத்தின் அருகில் தீயசக்தி விலகிவிடும்.
17 .நாய் உடன் இருந்தாலும் தீயசக்தி அண்டாது.
18 .பசுவின் சாணம் பட்ட இடத்திலும் தீயசக்தி அண்டாது, பசுவின் ஜலம் பட்ட இடத்திலும் தீயசக்தி விலகிவிடும்,
19 .நமக்கு மிக நம்பிக்கையான தெய்வத்தை நினைத்து செப்பு தகட்டில் ஒரு சூலம் வரைந்து உடலில் எங்காவது தாயத்து இட்டு அணிந்து கொண்டாலும் தீயசக்தி அண்டாது விலகிவிடும்,
20 .பௌர்ணமி இரவு முழுக்க தூங்காமல் இருந்து அரசமரத்தை வலம் வந்தால் விரும்பியதை அடையலாம். தீயசக்தியும் விலகிவிடும்.
21 .அமாவாசை இரவில் அகண்ட தீபம் ஏற்றி அதன் அருகில் தூங்காமல் தீபத்தையே உற்று பார்த்துக் கொண்டிருந்தாலும் விருப்பம் நிறைவேற வழிபிறக்கும் தீயசக்தியும் விலகிவிடும்.
22 .மிருதங்கம், உடுக்கை, சங்கு போன்ற இசையை உற்று நோக்கினாலும் தீயசக்தி அண்டாது விலக வழிகிடைக்கும்.
23 .இடதுகால் மணிக்கட்டில் கருப்பு கயிறில் மந்திரம் ஓதி மூன்று முடிச்சிட்டு கட்டிக்கொண்டாலும் தீயசக்தி விலகிவிடும் .
24 .கல்யாண பூசணியோ அல்லது எலுமிச்சை கனியையோ கத்தியால் சரிபாதியாக வெட்டி குங்குமம் தடவி அமரும் இருபக்கமும் வைத்தாலும் அல்லது வீட்டின் தலைவாயிற்படி இருபக்கமும் வைத்தாலும் தீயசக்தி விலகிவிடும்.
25 .நம் கையால் பெரிய அளவு உள்ள தேங்காயை நன்கு சிதறும்படி உடைத்தாலும் தீய சக்தி விலகிவிடும்.
26 .நெய், வெண்ணெய், பால் உணவு சாப்பிட்டு அது செரிக்கும் வரை தீய சக்தி அண்டாது. நெய்தீபம் எரியும் இடத்திலும் தீயசக்தி விலகி நிற்கும்.
27 .சுத்த சந்தனம் நெற்றியில் வைத்துக்கொண்டாலும் தீயசக்தி அண்டாது விலகிவிடும். 28 .வாசியை உயர்த்தும் பயிற்சி கொண்டவர்களுக்கும், வெளி இடங்களில் தூங்காதவருக்கும், நெற்றிக்கண்ணை கூர்ந்து கவனிப்பவருக்கும், மந்திரம் செபிப்பவருக்கும், சித்தனை அறிவு உள்ளவருக்கும் தீயசக்தி அண்டாது.
மெய்அன்பர்களே இங்கொரு விஷயத்தை கவனத்தில் வைக்கவும். திருஷ்டி மற்றும் திட்டமிட்டு செய்யும் சூன்யம் வைப்பு போன்றவை எவரையும் தாக்கிவிடும். தீய எண்ணத்தாக்கம் கொண்ட உணவை உண்டாலும் உணவு விஷமாகிவிடும். அதனால்தான் விரோதி வீட்டில் கை நனைக்காதே என்பார்கள். எனவே இதுபோன்ற பாதிப்பு உள்ளவர்கள் தகுந்த எச்சரிக்கையுடன் இருப்பது அவசியம். மந்திர உபாசனை செய்பவராகட்டும் சாமான்யராகட்டும் வெளியில் செல்லும்போது காலணி அணிந்து செல்லுங்கள். கால்அடிகளை பதிப்பதனால் அது ஆலயத்தின் உள்ளே மற்றும் விருட்சத்தின் அடியில் இருக்கலாம். கண்ட இடங்களில் கால் அடியை பதித்தால் அதன்மூலம் மண்ணெடுத்து சூன்யம் செய்ய மற்றவருக்கு வாய்ப்புள்ளது.
தலைமுடியை கண்ட இடங்களில் போடவேண்டாம். முடிவெட்டும்போது முடி விழத்தான் செய்யும். ஆனால் அங்கு வேறொருவரின் முடியுடன் நம் முடி கலந்துவிட்டால் சூன்யம் வேளை செய்யாது. உங்கள் அழுக்கு துணியை பத்திரமாக வைத்து துவைத்து விடவும். விரோதி கையில் சிக்கும்படி வைக்காதீர்கள். உங்கள் அழுக்கு துணி மற்றவர் வியர்வையில்பட்டால் கூட நீங்கள் வசியமாகிவிடுவீர்கள் கவனம். வெளியில் சாப்பிடாதீர்கள். வாராவாரம் திருஷ்டி சுற்றிப் போட்டுக்கொள்ளுங்கள், தெய்வ பிராத்தனையை எப்பொழுதும் கைவிடாதீர்கள். இவைகளையெல்லாம் கடைபிடித்தும் மேற்படி உங்களிடம் தீயசக்தி உள்ளதாக உணர்ந்தால் மந்திர சித்தியான மாந்திரீகரிடம் சென்று நிவாரணம் பெறுங்கள்.
உடற்கட்டு மந்திரம் போட்டுக்கொண்டவரை எந்த தீயசக்தியும், திருஷ்டியும், வைப்பும் அணுகாது. உணவு மூலம் விஷயம் ஏறினால்தான் உண்டு. எனவே உடற்கட்டு காபந்து உள்ளவராயினும், உணவு விஷயத்தில் கவனமாக இருங்கள். சூரியசக்தியை உடலில் பெருக்கிக் கொள்கிறவர்களுக்கு திருஷ்டி சூன்யம் அண்டாது. யார் தொடுத்தாரோ அவரையே திருப்பி தாக்கிவிடும். அதனால்தான் சூரியன் அம்சமான சிம்மராசி லக்கணம் மற்றும் சூரிய நட்சத்திரக்காரர்களை எவர் ஒருவர் திருஷ்டி சூன்யம் வைப்பு செய்தாலும் வைத்தவரையே திருப்பி தாக்கிவிடும் என்பர் இது முற்றிலும் உண்மையே.
பிரம்ம ரிஷிகளான துர்வாசர், விசுவாமித்திரர், வசிஸ்டர் போன்ற ரிஷிகளின் ஆசியால் அரிய சக்தி கொண்டவர்களை தாக்குபவர்கள் அவர்களையே பன்மடங்கு தாக்கிக் கொண்டதற்கு சமமான கெடுபலன் விளையும் என ஆசி வழங்கியுள்ளதால் சூரியசக்திக்கு எதிர்சக்தி இல்லாமல் போனது. (சூரிய சக்திகாரர்கள் தன் வினையில் மட்டுமே தன்னை அழித்துக்கொள்ள முடியும்.) எனவே மெய்அன்பர்களே சூரிய வழிபாட்டின் மூலம் சூரியசக்தியை பெருக்கிக் கொள்ளுங்கள்.
செம்பு பாத்திரத்தில் தண்ணீர் குடியுங்கள். எல்லாம் நலமாய் அமையும். தீயசக்திகளை பிறருக்கு விரட்ட செப்பு தகட்டில் கோரப்பல் தெய்வங்களின் மந்திரத்தை மனதால் தியானித்து ஒரு முக்கோணம் கீறி முக்கோண மூன்று முனைகளிலும் சூலம் கீறி முக்கோண மத்தியில் தெய்வத்தை நினைத்து ஓம் என்று எழுதி அதை தாயத்தில் அடைத்து பாதிக்கப்பட்டவரை கட்டிக்கொள்ள சொன்னாலே போதும் தீயசக்தி விலகிவிடும். அல்லது மேற்படி முதலில் கூறிய சில வழிமுறைகளை கடைபிடிக்கச் சொன்னாலே போதும்
LikeShow more reactions
Comment

No comments:

Post a Comment