Tuesday 26 April 2016

5 நிமிடத்தில் சுந்தர காண்டம்
சம்ஸ்கிருத மூலமும் அதன் உரை விளக்கங்களுடன்முழுமையான சுந்தர காண்டம் 28 பாகங்களாக உள்ளது நாம் வாழ்க்கையில் எதிர்கொள்ளும் பிரச்சினைகளை எல்லாம்தவிடு பொடியாக்கி மங்களம் தரும் ஒரு பாராயணத்தை நமது முன்னோர் வழி வழியாகச் செய்து பலனை அனுபவித்து வந்திருக்கின்றனர். அப்படிப்பட்ட அற்புதமான பாராயணம் ராமாயணத்தில் ஐந்தாவது காண்டமாக அமைந்துள்ள சுந்தர காண்டம் பாராயணம் ஆகும்.சுந்தர காண்டம் அனுமனின் செயல் திறத்தைச் சொல்லும் அற்புத காண்டம். இதில் பேசப்படும் அனைத்துமே சுந்தரமான விஷயங்கள்.24,000 சுலோகங்கள் கொண்ட ராமாணத்தில் சுந்தரகாண்டத்தில் மட்டும் 2885 சுலோகங்கள் 68 அத்தியாயங்களில் இடம் பெறுகின்றன.வேத மந்திரங்கள் தரும் அனைத்து மங்களத்தையும் தரவல்லது சுந்தரகாண்ட பாராயணம்.68 அத்தியாயங்கள் உடைய இந்த காண்டத்தை ஒரே நாளில் படித்து முடிப்பதிலிருந்து ஒரு நாளைக்கு ஒரு சுலோகம் என்பது வரை படிக்க முன்னோர்கள் அனுமதி அளித்துள்ளனர். என்றாலும் கூட ஒரு நாளைக்கு 7 அத்தியாயங்கள் வீதம் இதை 68 நாட்களில் ஏழு முறை படிக்கக்கூடிய 7 அத்தியாய பாராயணம் எல்லா நலன்களையும் விரைவில் அளிக்கவல்லது.பாராயணம் ஆரம்பிக்கும் முன்னர் படிக்க வேண்டிய சுலோகங்களைப் படித்து ஏழு அத்தியாயங்கள் படித்து முடிந்தவுடன் இறுதியில் படிக்க வேண்டிய சுலோகங்களையும்அன்றாடம் படிப்பது வழக்கமாக இருக்கிறது.ஒருமுறை 68 அத்தியாயங்கள் படித்து முடிக்கும் போது யுத்த காண்டத்தின் 131-வது அத்தியாயமான ராம பட்டாபிஷேகஅத்தியாயத்தையும் படிக்க வேண்டும் என்பது மரபாகும்.ஜாதகத்தில் உள்ள தோஷங்களைப் போக்க தகுந்தபடி சுந்தரகாண்ட பாராயணம் செய்ய வேண்டும். அப்படி செய்வதன் மூலம் தோஷ நிவர்த்தி பெறுவதோடு நலன்களையும் பெற முடியும்.ஒவ்வொரு நலனைப் பெறவோ அல்லது ஒவ்வொன்றாக தோஷத்தை நீக்கவோ முயற்சி செய்வதை விட தினசரி சுந்தர காண்ட பாராயணம் செய்தால் நமது தோஷங்கள் எல்லாம் தாமாகவே விலகுவதோடு நாம் கேட்காமலேயே அனைத்து பலன்களும் நலன்களும் தாமாக நம்மை வந்து அடையும்.
எனவே,சுந்தரகாண்ட பாராயணத்தைஎளிய வழியில் தினமும் முழுமையாக வாசித்து பலன் பெற, இதோ… இந்த எளிய பாடலைப் படித்து மகிழுங்கள்.சுந்தரகாண்ட பாராயணம்மனதுக்கு நிம்மதி, தைரியம் தரும்.நோயுற்றவர்கள், குழந்தைகளின் திருமணச் செலவு போன்ற இக்கட்டான நிலையில் உள்ளவர்களும், வரன் தேடுபவர்களும் இதைப் படித்தால் உரிய பலன் கிடைக்கும்.
5 நிமிடத்தில் சுந்தர காண்டம்.
ஸ்ரீ ராம ஜெயம்சுந்தரகாண்டம் என்றும் பெயர் சொல்லுவார்இதை சுகம் தரும் சொர்க்கம் என்று மனதில் கொள்வார் கண்டேன் சீதையை என்று காகுஸ்தனிடம் சொன்னகருணைமிகு ஸ்ரீராம பக்த ஆஞ்சநேயர் பெருமையிது அஞ்சனை தனயன் அலைகடல் தாண்டவே ஆயத்தமாகி நின்றான் இராமபாணம் போல் இராட்சசர் மனை நோக்கி இராஜகம்பீரத்தோடு இரமாதூதன் சென்றான்.அங்கதனும், ஜாம்பவானும் அனைத்து வானரங்களும்அன்புடன் விடை கொடுத்து வழியனுப்பினரே!வானவர்கள் தானவர்கள் இந்திராதி தேவர்கள்வழியெல்லாம் சூழ நின்று பூமாரி பொழிந்தனரே!மைநாக பர்வதம் மாருதியை உபசரிக்கமகிழ்வுடன் மாருதியும் மைநாகனைத் திருப்தி செய்துசரசையை வெற்றிகண்டு சிம்ஹியை வதம் செய்துசாகசமாய் சமுத்திரத்தை தாண்டியே இலங்கை சென்றான்.இடக்காக பேசிய இலங்கையின் தேவதையை இடக்கையால் தண்டித்தவன் இதயத்தை கலக்கினான் அழகான இலங்கையில் அன்னை ஜானகியை அங்குமிங்கும் தேடியே அசோகவனத்தில் கண்டான். சிம்சுபா மரத்தடியில் ஸ்ரீ ராமனை தியானம் செய்யும்சீதாபிராட்டியைக் கண்டு சித்தம் கலங்கினான்ராவணன் வெகுண்டிட ராட்சசியர் அரண்டிடவைதேகி கலங்கிட வந்தான் துயர் துடைக்க !கணையாழி கொடுத்து ஜெயராமன் சரிதம் சொல்லிசூடாமணி பெற்றுக் கொண்ட சுந்தர ஆஞ்சநேயர் அன்னையின் கண்ணீர் கண்டு அரக்கர் மேல் கோபம் கொண்டுஅசோகவனம் அழித்து அனைவரையும் ஒழித்தான். பிரம்மாஸ்திரத்தினால் பிணைந்திட்ட ஆஞ்சநேயர்பட்டாபிராமன் தன் பெருமையை எடுத்துரைக்க வெகுண்ட இலங்கைவேந்தன் வையுங்கள் தீ வாலுக்கென்றான் வைத்த நெருப்பினால் வெந்ததே இலங்கை நகர்.
அரக்கனின் அகந்தையை அழித்திட்ட அனுமானும்அன்னை ஜானகியிடம் அனுமதி பெற்றுக் கொண்டான்.ஆகாய மார்க்கத்தில் ஆஞ்சநேயன் தாவி வந்தான்அன்னையைக் கண்டுவிட்ட ஆனந்தத்தில் மெய் மறந்தான்.ஆறாத சோகத்தில் ஆழ்ந்திருந்த ராமனிடம்ஆஞ்சநேயர் கைகூப்பி வணங்கிகண்டேன் சீதையைஎன்றான்.வைதேகி வாய்மொழியை அடையாளமாகக் கூறிசொல்லின் செல்வன் சுந்தர ஆஞ்சநேயர் சூடாமணியை அளித்தான்.மனம் மகிழ மாருதியை மார்போடணைத்துராமர் மைதிலியை சிறை மீட்க மறுகணம் சித்தமானான்.ஆழ்கடலில் அற்புதமாய் அணைகட்டி படைகள் சூழஅனுமானும் இலக்குவனும் உடன்வர புறப்பட்டான்.அழித்திட்டான் இராவணனை ஒழித்திட்டான் அதர்மத்தைஅன்னை சீதாபிராட்டியை சிறை மீட்டு அடைந்திட்டான்.அயோத்தி சென்று ராமர் அகிலம் புகழ ஆட்சி செய்தார்அவனை சரணடைந்தோர்க்கு அவனருள் என்றென்றும் உண்டு...
(எங்கெங்கு ரகுநாத கீர்த்தனமோஅங்கங்கு சிரம்மேல் கரம் குவித்து மனம் போல நீர் சொரிந்துஆனந்தத்தில் மூழ்கிக் கேட்கும் பரிபூரண பக்தனே ஸ்ரீ ஆஞ்சநேயனேஉனை பணிகின்றோம் பலமுறை)ஸ்ரீமத் ராமாயணம்/ சுந்தர காண்டம் பாராயணம் செய்யும்போது, அருகில் ஒரு ஆசனத்தை (சிறிய பலகை/ சுத்தமான விரிப்பு) போட்டு வைக்க வேண்டும். ‘ராம’ நாமம் எங்கு ஒலித்தாலும் ஆஞ்சநேயர் அங்கே பிரஸன்ன மாவார் என்பது ஐதிகம். அவர் அமருவதற்காகத்தான் அந்த ஆசனம்

No comments:

Post a Comment