Friday 29 April 2016

சத்தி மந்திரம்.!
பாரப்பா சிவபூசை செய்துகொண்டு
பண்பான தேவிமந்திரம் பகரக்கேளு
ஆரப்பா அறிவார்கள் அறிவோமென்று
அப்பனே ஸ்ரீசிரீங் சிவயவசி வாவென்று
நேரப்பா சிவரூபி வாவாவென்று
நேர்மையுடனோர் மனதாய் நூற்றெட்டானால்
காரப்பா சத்திசிவம் ரெண்டும்வைத்துக்
கருணைபெறத் தொழிற்முகத்திற் பூசைபண்ணே.
-அகத்தியர் பரிபாசைத்திரட்டு 500
பொருள்: முதலில் சிவமந்திரத்தை பற்றி சொன்னேன், அதற்கு அடுத்தபடியாக சத்தியின் பூசை மந்திரத்தை பற்றி சொல்கிறேன் கேள்,
"ஓம் ஸ்ரீ சிரீங் சிவயவசி வாவா சிவரூபீ வாவா"
என்று மன ஓர் நிலையோடு நூற்றி எட்டு உரு செபித்து விட்டு எக்காரியம் செய்தாலும் அது சித்தியாகும்.
எந்த காரியம் செய்யும் முன்னும் சத்தி,சிவனுக்கு பூசை செய்து விட்டு பின்னர் செய்ய அதில் யாதொரு தடையுமின்றி சித்தியாகும் என்கிறார் அகத்திய மாமுனிவர்
LikeShow more reactions
Comment

No comments:

Post a Comment