Tuesday 26 April 2016

சகல கோடி தெய்வங்களுக்கும் ஒரே மந்திரம்
ஶ்ரீ சக்கரத்தில் அஷ்ட லட்சுமிகளும் சகல கோடி தேவதைகளும் தெய்வங்களும் அன்னை பராசக்தி, புவனேஸ்வரி, ராஜராஜேஸ்வரி, காஞ்சி காமாட்சி காசி விசாலாட்சி மதுரை மீனாட்சி திரிபுர சுந்தரி என பல தெய்வங்களுக்கு பல ஆயிரம் மந்திரங்களும் பல ஆயிரம் பூஜை முறைகளும் உள்ளன இந்த பூஜை முறைகளை நம்மால் கடைபிடிக்க முடியுமா என்று மலைத்து நிற்பவர்களுக்கு ஒரு எளிய வழி உண்டு
ஶ்ரீ சக்கர யந்திரத்தில் பல கோடி தெய்வங்கள் இருந்தாலும் அவர்கள் அனைவரையும் ஒரே ஒரு எளிய மந்திரத்தின் மூலம் வழிபட முடியும் இந்த மந்திரம் ஶ்ரீ ஸூக்த பாடலின் வரியில் உள்ளது
ஶ்ரீ சக்கரத்திற்கு பூ வைத்து பொட்டு வைத்து ஊதுபத்தி ஏற்றி நெய் விளக்கு ஏற்றிய பிறகு சொல்ல வேண்டிய மந்திரம்
ஓம் ஶ்ரீ சக்கர சஞ்சாரினியை நமஹ
(108 அல்லது 1008 தடவை சொல்லி எளிய முறையில் வழிபட்டால் சகல கோடி தெய்வங்களின் ஆசிர்வாதமும் வந்து சேரும்
ஒரே கல்லில் பல கோடி மாங்காய் விழுந்தால் வேண்டாம் என்றா சொல்வீர்கள்)

No comments:

Post a Comment