Tuesday 12 April 2016

இத்தி

ஆல் இலை வடிவில் சிறிய இலைகளை உடைய மரம். சாறு பால் வடிவில் இருக்கும். இச்சி என்றும் அழைக்கப்படும். தமிழகமெங்கும் வளர்க்கப்படுகிறது.
மரப்பட்டை, பிஞ்சு காய் ஆகியவை மருத்துவப் பயனுடையவை.

மலமிளக்கல் தாதுப் பெருக்கம் ஆகியவை இதன் மருத்துவப் பயன்கள்.

1. 100 கிராம் இத்திக்காயை ஒன்றிரண்டாய் இடித்து ஒரு லிட்டர் நீரிலிட்டு அரை லிட்டராகுமாறு வற்றக் காய்ச்சிப் பிசைந்து வடிகட்டிக் காலையில் சாப்பிட மலம் தாராளமாகப் போகும்.

2. இத்திப் பிஞ்சு 25 கிராம் அதிகாலையில் மென்றுதின்ன அதிசாரம், பேதி, கிராணி உள்ளுறுப்புப் புண்கள் ஆகியவை தீரும்.

3. 100 கிராம் இத்திப் பட்டையை ஒன்றிரண்டாய் இடித்து 1 லிட்டர் நீரிலிட்டு அரை லிட்டராகக் காய்ச்சி வடிகட்டி காலை மாலை பாதிப்பாதியாய்க் குடிக்க அதிசாரம், பெரும்பாடு தீரும்.

4. இத்திக் காயை நெய்விட்டு வதக்கி உணவுடன் கொள்ள மலச்சிக்கல் அறும்

No comments:

Post a Comment