Saturday 9 April 2016

மகத்தான முத்திரை மகா சிரசு முத்திரை தலை தொடர்பான பிரச்சனைகளை தீர்க்கும் மகா சிரசு முத்திரை
உடலுக்குத் தலை மிகவும் முக்கியம். அந்தத் தலை தொடர்பான பிரச்சனைகளுக்குத் சிறந்த தீர்வாக இருப்பது ‘மகா சிரசு முத்திரை’. இந்த முத்திரை உச்சி முதல் கழுத்து, தோள்பட்டை வரை உள்ளஅனைத்துப் பகுதிகளுக்கும் ரத்த ஓட்டத்தை அதிகப்படுத்தி, அங்குள்ள சளி, நீர் ஆகியவற்றை வெளியேற்றும். High Blood pressure உயர் இரத்த அழுத்தம் உள்ளவர்கள் இதை செய்ய வேண்டாம்
செய்முறை :
மகா சிரசு முத்திரைளை கட்டை விரல் ஆள்காட்டி விரல் நாடு விரல் இவைகளின் நுனிகளை ஒன்றோடொன்று தொடவேண்டும். மோதிர விரலை மடித்து கட்டைவிரலின் அடிப்பாக சதைப் பகுதியில் மோதிர விரலின் நுனியை வைக்க வேண்டும். படத்தை நன்றாகப் பார்க்கவும். சுண்டுவிரல் நேராக இருக்கும்படி வைக்கவும்.
பயன்கள் :
நீர்கோத்தலால் ஏற்படும் தலைவலி, தலைபாரம், சளியால் ஏற்படும் தலைவலி, நெற்றிப்பொட்டில் ஏற்படும் வலி (Frontal sinusitis), மூக்குக்கு இருபுறமும் கண்களுக்குக் கீழே உள்ள எலும்புகளில் வரும் வலியை (Maxillaray sinusitis, Ethomoidal sinusitis) சரியாக்கும்.
மூக்கடைப்பு, மூக்கில் சதை வளர்தல், மூக்கில் நீர் வடிதல், ஒரு பக்க மூக்கில் மூச்சுவிடுதல், வாசனை உணராமல்போதல் பிரச்னை உள்ளவர்கள் மூன்று மாதங்கள் தொடர்ந்து செய்துவந்தால் நல்ல பலன் கிடைக்கும்.
காது குறுகுறுப்பு, காதில் நீர் மற்றும் சீழ் வடிதல், காது வலி, காதைச் சுற்றியுள்ள இடங்களில் ஏற்படும் வலி போன்றவை சரியாகும்.
சிலருக்குக் கழுத்து எலும்பில் உள்ள சவ்வு பாதிக்கப்பட்டிருக்கும். இதனால் தோள்பட்டை, கை வரை வலி பாயும். இவர்களுக்கான பிரச்சனையைத் தீர்க்கும் சிறந்த முத்திரை இது.
Like
Comment

No comments:

Post a Comment