Saturday 9 April 2016

தொழில், வியாபாரத்தில் அமோக லாபம் அடையவும், மூத்த சகோதரர்கள் நலமோடு வாழவும், வழக்கில் வெற்றி உண்டாகவும் ஞானசம்பந்தர் பாடிய இந்த தேவாரப் பாடலை தினமும் மாலையில் திருவிளக்கு முன் அமர்ந்து பக்தியுடன் படியுங்கள்.
வாசீ தீரவே, காசு நல்குவீர்;
மாசுஇல் மிழலையீர்; ஏசல் இல்லையே.
இறைவர் ஆயினீர்; 
மறைகொள் மிழலையீர்;
கறைகொள் காசினை, முறைமை நல்குமே.
செய்யமேனியீர்; மெய்கொள் மிழலையீர்;
பைகொள் அரவினீர்; உய்ய நல்குமே.
நீறு பூசினீர்; ஏறு அது ஏறினீர்;
கூறு மிழலையீர்; பேறும் அருளுமே.
காமன் வேவ, ஓர் தூமக் கண்ணினீர்;
நாம மிழலையீர்; சேமம் நல்குமே.
பிணிகொள் சடையினீர்; மணிகொள் மிடறினீர்;
அணிகொள் மிழலையீர்; பணிகொண்டு அருளுமே.
மங்கை பங்கினீர்; துங்க மிழலையீர்;
கங்கை முடியினீர்; சங்கை தவிர்மினே.
அரக்கன் நெரிதர, இரக்கம் எய்தினீர்;
பரக்கும் மிழலையீர்; கரக்கை தவிர்மினே.
அயனும் மாலுமாய் முயலும் முடியினீர்;
இயலும் மிழலையீர்; பயனும் அருளுமே.
பறிகொள் தலையினார், அறிவது அறிகிலார்;
வெறிகொள் மிழலையீர்; பிரிவது அரியதே.
காழிமா நகர் வாழி சம்பந்தன்,
வீழிமிழலை மேல், தாழும் மொழிகளே.
Like
Comment

No comments:

Post a Comment