Saturday 9 April 2016

மந்திர தீர்த்தம் நீங்களே செய்வது எப்படி
உங்கள் வீட்டிலோ அல்லது கடையிலோ தொழில் செய்யும் இடத்திலோ தீய சக்தி நடமாட்டம் மற்றும் உங்களுக்கு யாராவது செய்வினை பில்லி சூனியம் ஏவல் வைத்திருப்பதாக தோன்றினால் உங்களை சுற்றி நடக்கும் விஷயங்கள் எடக்கு மடக்காக ஏடாகூடமாக நடப்பதாக தோன்றினால் இந்த சக்தி வாய்ந்த பரிகாரத்தை செய்யவும்
ஒரு சுத்தமான பாத்திரத்தில் ஒரு சொம்பு தண்ணீர் ஊற்றி அதில் மஞ்சள் பொடியை கலந்து வைத்து கொண்டு அதன் மீது உங்கள் வலது உள்ளங்கையை வைத்து கீழே உள்ள மந்திரத்தை 27 தடவை அதிகபடசம் 108 தடவை சொல்லுங்கள் இப்போது மந்திரத்தின் சக்தியை நீரில் ஏற்றிய பிறகு உங்கள் வீட்டை சுற்றியோ கடையை சுற்றியோ தெளித்து விடுங்கள் அதன் பிறகு நடக்கும் அறிகுறிகளை கவனியுங்கள் தீய சக்திகள் கோபத்தில் சில சேட்டைகளை செய்து விட்டு அந்த இடத்தை விட்டு ஓட்டம் பிடிக்கும் அதாவது அருகே உள்ள பொருட்கள் கீழே விழுந்து உடைவது மின்சாரம் கட் ஆவது பல்பு fuse ஆவது அல்லது யாரிடமாவது பகையை மூட்டி விடுவது ஏதோ ஒன்று கண்டிப்பாக நடக்கும் எனவே சில நாட்களுக்கு அறிகுறிகளை கவனியுங்கள் பயப்படாமல் மந்திரத்தை மனதுக்குள் உச்சாடனம் செய்யுங்கள் உங்களுக்கு எந்த பாதகமும் நேராது தண்ணீர் இல்லாமல் தனியாக இருக்கும் போது இந்த மந்திரத்தில் சொல்லப்பட்ட ஸ்வாஹா என்ற வார்த்தையை எடுத்து விட்டு நமஹ என்று மந்திரத்துடன் சேர்த்து உச்சரிக்கவும்
மந்திரம்
ஓம் ஹ்ரீம் பகளாமுகி ஸ்வாஹா
ஓம் ஹ்ரீம் ப்ரத்யங்கிராய ஸ்வாஹா
ஓம் ஹ்ரீம் சரபேஸ்வராய ஸ்வாஹா
Like
Comment

No comments:

Post a Comment