Saturday 9 April 2016

சித்தர்கள் வரலாறு இடைக்காடர் சித்தர்
(மறு பதிவு) some Technical issue to read in last status
மதுரைக்குக் கிழக்கே உள்ள இடைக்காடு என்ற ஊர்தான் இடைக்காடர் பிறந்த ஊர் என்று கூறுவர். தொண்டை மண்டலத்தில் உள்ள இடையன்மேடு என்ற ஊரில் இச்சித்தர் வாழ்ந்தவர் என்பதால் இடைக்காடர் என்று அழைக்கப்பட்டார் எனக் கூறுவோறும் உண்டு.நவக்கிரகங்கள் தாம் தத்தம் நிலைப் பாடுகளால் மனிதர்களைஆட்டி வைப்பவையாகும். அத்தகைய நவக் கிரகங்களை ஆட்டி வைத்தவரான இச்சித்தர், தேவர் இட்ட சாபம் காரணமாக இடையர்களின் குலமாகிய கோனார் குலத்தில் பிறந்து எழுத்தறிவு இல்லாது ஆடுமாடுகளை மேய்த்துக் கொண்டிருந்தவர்.இவர் தமது ஊருக்கு அருகே உள்ள மலைச்சரிவுப் பகுதிக்கு நாள்தோறும் ஆடு மாடுகளை மேய்ச்சலுக்காக ஓட்டிச் செல்வார். அப்பகுதியில் அவற்றை மேய விட்டுவிட்டு அங்கிருந்து ஒரு மரத்தடியில் தனது சிந்தனையை ஒடுக்கி சிவயோக நிலையில் தனது கொம்பினை ஊன்றி நின்றுவிடுவார். அப்போது உயிர் எங்கோ பறந்து கொண்டிருக்கும்.ஒரு நாள் இவ்வாறு மெய்ம்மறந்த நிலையில் இவர் நின்றிருந்த சமயத்தில் வான் வழியே சென்று கொண்டிருந்த நவநாத சித்தர் ஒருவர் இவரை கண்டார். ‘எழித்தறிவு அற்ற இந்த மானிடன் சிவத்தில் ஒடுங்கி நிற்கின்றானே! இது எப்படி இவனால் முடிந்தது?’ என்று ஐயுற்று அந்த சித்தர் விண்ணிலிருந்து பூவுலகுக்கு இறங்கிவந்து இடைக்காடரிடம்,மகனேஅங்கு எதனை நீ காண்கிறாய்? எது உன்னிடம் பேசிக் கொண்டுள்ளது? உன்னுடன் உறவாடுவது எது? என்று பலவாறாகக் கேட்டார்.நவநாத சித்தர் இவ்வாறு கேட்டதும் திடுக்கிட்டு விழித்துப் பார்த்தார், இடைக்காடர். தம் எதிரே நின்ற சித்தரைக் கண்டதும் இடைக்காடர் பேருவகை கொண்டார். ஐயனே!தாங்களா? தாங்களா என் முன் தோன்றியுள்ளீர்கள்? ஐயோ…. கால் கடுக்க தாங்கள் நின்று கொண்டிருக்கிறீர்களே சற்று இங்கே அமருங்கள்….. அமருங்கள் என்று தன்னருகே இருந்த தர்ப்பைப்புல் விரிப்பைப் போட்டு அந்தச் சித்தர் பெருமானை இடைக்காடர் உபசரித்தார். பின் மேய்ந்து கொண்டிருந்த தனது ஆடு ஒன்றைப் பிடித்து வந்துஅதன் பாலினைக் கறந்து சித்தரிடம் அளித்து இடைக்காடர் பேரானந்தம் அடைந்தார். பின் சித்தர் பெருமானும் மனம் களித்து இடைக்காடர் தமக்கு அளித்த ஆட்டுப்பாலை வாங்கிப் பருகியதுடன் அவருக்கு மெய்ஞ்ஞான பாலை வழங்கிடத் திருவுள்ளம் கொண்டார். அந்நொடி வரையில் எழுத்தறிவு இல்லாதிருந்த இடைக்காடர் மெய்யறிவு என்னும் ஒளி வெள்ளம் தம்முள் பாயக் கண்டார். பேரானந்தப்பட்ட அவர் வாதம், வைத்தியம், ஞானம், யோகம் என அனைத்தையும் விரைவில் தெளிவுறக் கற்றுத் தேர்ந்தார்.இடைக்காடருக்குத் தாம் கற்பித்திட வேண்டிய அனைத்தையும் கற்பித்து முடித்த நவநாத சித்தர் சட்டென மறைந்தருளினார். அதுகண்டு மனம் வருந்தினாலும் இடைக்காடர், ஆயிரத்தெட்டு வட்டமும் கண்டேன் அந்தவட்டத்துள்ளே நின்றதும் கண்டேன்மாயிரு ஞாலத்து நூற்றெட்டும் பார்த்தேன் மந்த மனத்தூறும் சந்தேகம் தீர்ந்தேன்என்று மனம் தெளிந்து, இறை நெறியில் நின்று மனிதர்கள் உய்ய வேண்டித் தாம் உணர்ந்த ஞானத்தைப் பாடல்களாகப் பாடத் துவங்கினார
இடைக்காடருக்கு ஞான உபதேசம் செய்தருளியவர் போக முனிவர் என்றும், தாம் சமாதி கொள்ளப்போகும் முன்பாக புலிப்பாணியைப் பழநியிலும், இடைக்காடரைத் திருவண்ணாமலையிலும் இருந்து இறைத் தொண்டாற்றி வரும்படி போக முனிவர் கட்டளையிட்டார் என்றும் கூறப்படுகிறது. இதற்குச் சான்றாக இடைக் காடரின் சமாதி திருவண்ணாமலையில் அமைந்துள்ளது. எண்ணற்ற நூல்களை இடைக்காடர் இயற்றியுள்ளார். அவர் ஊர்வசி பஞ்சரத்தினத்தில் பெருமையோர்கள் இடைக்காட்டுச் சித்தர் மொழிபேசினார்கள் உலகம் தன்னில்பேணியான் அறிவது ஏழு காண்டம் பெருநூலிதற்குச் சரியாகுமோ ஏழு காண்டம் ஏழாயிரம் கவி அல்லாமல் எண்ணூறது ஏழுநூல் அஞ்சு நூறதற்கு அஞ்சு நூறதிலும் ஏழதற்கு மேல் ஏழுநூறுவாழு மூன்று நூறாயுதக் கலைமாறி ஏழு நூறாவது என்று தாம் இயற்றிய பல நூல்களைப் பற்றிக் கூறியுள்ளார்.சோதிடக் கலையிலும் மிகச் சிறந்து விளங்கியவர் இடைக்காடர் ஆவார். இன்றும் பஞ்சாங்கங்களில் அந்த ஆண்டுக் குரிய பொதுப் பலன்களைக் கூறும் தனிப் பாடல் இடைக்காடரின் பாடலாக அமைந்துள்ளதைக் காணலாம்.தருமாரி பின்பெய்யும், தான் முன்-முகில் சோர்ந்துகொஞ்ச மழை பெய்யும் குலவு கழை தழைக்கும்பஞ்சம் பருத்தி உப்பு பாழ்அதாவது வெகுதான்ய வருடத்தில் மழை மிகவும் தாமதமாகப் பெய்யும். பருத்தி விளைச்சல் குறையும், உப்பு உற்பத்தி குறைந்து விலை ஏறும் என்று இடைக்காடர் அன்று உரைத்தவை உண்மையானது இன்றும் கண்கூடாகக் காண்கிறோம்.ஒரு முறை தம் ஜோதிட ஆய்வின் மூலம் சிறிது காலத்தில் கொடிய பஞ்சம் ஏற்படும் என்பதை இடைக்காடர் உணர்ந்தார். முன்னேற்பாடாகத் தம்முடைய ஆடுகளுக்கு எக்காலத்தும் கிடைக்கக் கூடிய எருக்கிலை போன்றவற்றை தின்ன கொடுத்துப் பழக்கினார். குறுவரகு என்ற தானியத்தை மண்ணுடன் சேர்த்துப் பிசைந்து சுவர்களை எழுப்பிக் குடிசை கட்டிக் கொண்டார். எருக்கிலையை உண்ட ஆடுகள் உடலில் அரிப்பெடுத்து சுவரில் உராய்ந்தன. அதனால் மண் சுவரில் இருந்து உதிர்ந்த குறுவரகு தானியத்தைக் காய்ச்சி உண்டு வாழ்ந்தார். இவ்வாறு வரவிருக்கும் பஞ்சத்தை எதிர்கொள்ள இடைக்காடர் தம்மைத் தயார் படுத்திக் கொண்டார். எதிர்பார்த்தபடியே பஞ்சமும் வந்தது. உண்ண உணவும், அருந்த நீரும் இல்லாது மக்கள் மடிந்தனர். இதனால் ஊர்கள் பாழ்பட்டுப் போயின. நாடே மக்கள் நடமாட்டம் இன்றி பாலைவனம் போல் காட்சியளித்தது. ஆனால் இடைக்காடர்மட்டும் என்றும்போல் தம் ஆடுகளுடன் வாழ்ந்து கொண்டிருந்தார். இதைக் கண்டு நவக்கிரக நாயகர்கள் வியந்தனர். இது என்ன விந்தை நாடே பஞ்சத்தால் பாழ்பட்டுப் போய் உள்ளது. இடைக்காடர் மட்டும் எவ்வாறு வழக்கம்போல் வாழ்ந்து வருகிறார்? என்று புரியாமல் தவித்தனர். இதன் காரணத்தைக் கண்டறிய வேண்டும் என்று கிரக நாயகர்கள் ஒன்பது பேரும் ஒன்றாக கூடி இடைக்காடரின் குடிசைக்கு வந்தனர்.
நவக்கிரக நாயகர்கள் தம் குடிசைக்கு வந்ததைக் கண்டு இடைக்காடர் போரானந்தம் அடைந்தார். ஐயோ என்ன விந்தை இதுவிண்ணுலக வாசிகளான நீங்கள் என் குடிசைக்கு வந்துள்ளீர்களே முதலில் கொஞ்சம் சாப்பிடுங்கள். இந்த ஏழையிடம் என்ன இருக்கப் போகிறது வரகு ரொட்டியும், ஆட்டுப் பாலும்தான் உள்ளன. இவை எளிய உணவு என்று இகழாதீர்கள். என் உயிரைக் கலந்து நான் தருகிறேன். இவ்வுணவை உண்டு சிரம பரிகாரம் செய்துகொள்ளுங்கள். பிறகு பேசுவோம் என்று தம் குடிசைக்கு வந்த நவக்கிரக நாயகர்களை உபசரித்தார்.சித்தரான இடைக்காடரின் வேண்டுதலை மறுக்க முடியாது நவக்கிரக நாயகர்களும் அவர் அளித்த வரகு ரொட்டிகளை உண்டு ஆட்டுப்பாலைப் பருகினார். எருக்கிலைச் சத்து நிறைந்த பால் என்பதால் அதை அருந்தியதும் நவக்கிரக நாயகர்கள் மயங்கி விழுந்தனர். கிரக நாயகர்கள் மயக்கமுற்றுக் கிடப்பதைக் கண்டதும் இடைக்காடர் அவை யாவும் எந்தெந்த இடத்தில் இருந்தால் மழை பொழியுமோ அந்த அமைப்பில் மாற்றிப் படுக்க வைத்துவிட்டார்.உடனே வானில் கருமேகங்கள் திரண்டு இருண்டது. மழை பொழிந்தது. வறண்ட பூமி குளிர்ந்தது. ஆறு, குளம், குட்டைகள் என யாவும் நிரம்பி வழிந்தன. மயக்கம் தெளிந்து விழித்தெழுந்த நவக்கிரக நாயகர்கள் தாங்கள் இடம் மாறி அமைந்திருப்பதைக் கண்டு திகைத்தனர். நொடியில் அவர்களுக்கு இது சித்தர் செய்த அற்புதம் என்பதை உணர்ந்தனர். நாட்டில் நிலவிய பஞ்சத்தைப் போக்கிய இடைக்காடரின் நுண்ணறிவை மெச்சிய அவர்கள் அவர்வேண்டிய வரங்களை அளித்து விடைபெற்றுச் சென்றனர்.இதனால் இடைக்காடரின் புகழ் பாரெங்கும் பரவியது. அவரைத் தரிசிக்கவும், உபதேசம் பெறவும் உலகில் மூலை முடுக்கிலிருந்தெல்லாம் மக்கள் பெருந்திரளாக வந்து கூடினர்.ஒரு முறை திருமாலை வழிபடுவோர்க்கு ஓர் ஐயம் உண்டானது. திருமால் பத்து அவதாரம் எடுத்துள்ளாரே இதில் எந்த அவதாரத்தை வழிபட்டால் விரைவில் பலன் கிடைக்கும் என்றுஆலோசித்தனர். இதற்கான விடை காணாது தவித்த திருமாலின் பக்தர்கள் சித்தரிடம் இதற்கான விடையைப் பெற்றிடலாம் எனக் கருதி இடைக்காடரிடம் வந்து கேட்டனர். ஆனால் சித்தர் பெருமானாகிய இடைக்காடரோ, ஏழை இடையன் இளிச்சவாயன் என்று கூறிவிட்டுச் சென்றார்.தங்கள் ஐயப்பாட்டுக்கு விடை தேடி வந்த திருமால் பக்தர்களுக்கு சித்தரின் பதில் சட்டெனப் புரியவில்லை.நீண்ட நேரம் யோசித்தனர். பின் இடையன் என்றால் கிருஷ்ணர், இளிச்சவாயன் என்றால் நரசிம்மர், ஏழை என்றால் சக்கரவர்த்தித் திருமகனாகப் பிறந்தும் ஏழையாகவே வாழ்ந்த இராமன் என்று முடிவு செய்தனர். அதன்படி ஸ்ரீ கிருஷ்ணபகவான், நரசிம்ம மூர்த்தி, ஸ்ரீ இராமபிரான் ஆகிய மூவரையும் வழிபட்டால் விரைவில் இறையருள் கிட்டும் என்பதை உணர்ந்து தெளிந்தனர். தங்களது ஐயப் பாட்டை எளிதில் தீர்த்தருளிய இடைக் காடரின் நுண்ணறிவைப் போற்றி மகிழ்ந்தனர்.இடைக்காடர் வாழ்ந்த காலம் கடைச்சங்க காலம் என்றும், திருவள்ளுவ மாலையில், கடுகைத் துளைத்து, ஏழு கடலைப் புகுத்தி என துவங்கும் திருக்குறளின் பெருமைகளைப் பறைசாற்றும் பாடல் இவர் பாடியது என்றும் கூறுவர்.இவர் குலசேகர பாண்டியன் காலத்தவர் என்றும், கபிலருடன் சேர்ந்து பாண்டிய மன்னரைக் காண வந்தபோது மன்னர் மரியாதை செய்யாததால் அங்கிருந்து கோபித்துக் கொண்டு சென்று விட்டார் என்றும், இடைக்காடர் சென்றதைத் தொடர்ந்து கபிலர் உள்ளிட்ட சங்கப் புலவர்களும் உடன் நீங்கினர் என்றும் கூறப்படுகிறது. இதனைக் கண்டு மனம் வருந்திய பாண்டிய மன்னர் இடைக்காடரிடம் தம் தவறை மன்னித்தருளுமாறு வேண்டி அவரை உரிய மரியாதையுடன் அரண்மனைக்கு அழைத்து வரப் பிற புலவர் பெருமக்களும் அரசவைக்குத் திரும்பினர் என்றும் கூறுவர். இவர் பாடிய பாடல்கள் அகநானூறு, நற்றிணை, குறுந்தொகை, புறநானூறு போன்றவற்றில் இடம் பெற்றுள்ளன. ஆனால் இப் பாடல்களைப் பாடிய இடைக்காடர் வேறு நபர் என்று கூறுவோரும் உள்ளனர்.கேரளத்தில் உள்ள இடைக்காடு என்ற ஊரில் பிறந்து ஊசிமுறி என்ற நூலை இயற்றியவர் இவரே என்றுரைப்போரும் உண்டு. ஒரு சிலர் இவர் திருமாலின் அவதாரம் என்றும் கூடக் கூறியுள்ளனர். தம்முடைய ஞானசூத்திரம் 70என்ற நூலின் காப்புப் பாடலில் இடைக்காடர்,காப்பு முதல் காட்சி என்று கடைசியில் நின்றுகடைச் சரக்கைக் கண்டுகொள்ளக் காப்பிற் பாடிகாப்பு முதல் முதற்சேர்த்து நடுவில் நின்றுகணபதி தாளிரு சரணம் காப்பாம் என்றுகாப்பு முதல் மூலர் கோரக்க நாதர்கமலமுனி போகரிஷி பாதங் காப்புஎன்று பாடியுள்ளார். இதனால் போகமுனிவரே இவரின் குருநாதர் என்றும், ஆடுகளை மேய்த்துக் கொண்டிருந்த இடைக்காடருக்கு மெய்ஞ்ஞான உபதேசம் செய்தருளியவர் போக முனிவரே என்றும் உறுதிபடக் கூறப்படுகிறது. இடைக்காடர்திருவிடைமருதூரில் சமாதி கொண்டுள்ளார் என்று போகர் ஜனன சாதரத்தில் கூறப்பட்டுள்ளது
இவருடைய காலம் சங்க காலம். இடைக்காடரின் ஞானசூத்திரம் -70 என்ற நூல் மிகவும் சிறப்புடையது. இவர் திருவண்ணாமலையில் சமாதியடைந்தார். ஜனன சாகரத்தில் சமாதியடைந்தார் என்று போகர் கூறுகிறார்.
தியானச் செய்யுள்:
ஆயனராய் அவதரித்து
ஆண்டியாய் உருத்தரித்து
அபலைகளுக்கருளிய கோணார் பெருமானே!
ஓடுகின்ற நவக்கிரகங்களை
கோடு போட்டு படுக்கவைத்த
பரந்தாமனின் அவதாரமே!
மண் சிறக்க விண்சிறக்க
கடைக்கண் திறந்து காப்பீர்
இடைக்காடர் ஸ்வாமியே!
ஸ்ரீ இடைக்காடர் சித்தரின் பூசை முறைகள்:
தேகசுத்தியுடன் அழகிய சிறு பலகையில் மஞ்சளிட்டு மெழுகி, பக்தியுடன் கோலமிட்டு, அம்மஞ்சள் பலகையின்மேல் இடைக்காடர் சித்தரின் படத்தினை வைத்து மஞ்சள் குங்குமமிட்டு, அலங்கரிக்கப்பட்ட குத்துவிளக்கினை ஏற்றி வைக்க வேண்டும். முதலில இந்த சித்தரின் தியானச் செய்யுளை கண்மூடி மனமுருக கூறி பின்வரும் 16 போற்றிகளை கூறி தென்னம்பூ, மல்லிகை பூக்கள் கொண்டு அர்ச்சிக்க வேண்டும்.
பதினாறு போற்றிகள்:
1. கிருஷ்ணனை தரிசிப்பவரே போற்றி!
2. கருணாமூர்த்தியே போற்றி!
3. பஞ்சத்தைப் போக்குபவரே போற்றி!
4. இளநீர் பிரியரே போற்றி!
5. உலகரட்சகரே போற்றி!
6. அபயவரதம் உடையவரே போற்றி!
7. மருந்தின் உருவமானவரே போற்றி!
8. பூலோகச் சூரியனே போற்றி!
9. ஒளிமயமானவரே போற்றி!
10. கருவை காப்பவரே போற்றி!
11. “ஸ்ரீம்” பீஜாட்சரத்தில் வசிப்பவரே போற்றி!
12. கால்நடைகளைக் காப்பவரே போற்றி!
13. ஸ்ரீ லட்சுமியின் கருணையை அளிப்பவரே போற்றி!
14. அங்குசத்தை உடையவரே போற்றி!
15. தேவலீலை பிரியரே போற்றி!
16. எல்லாம் வல்ல வனத்தில் வசிக்கும் ஸ்ரீ இடைக்காட்டு சித்தர் சுவாமியே போற்றி! போற்றி!
இவ்வாறு அர்ச்சித்த பின்பு மூலமந்திரமான “ஓம் ஸ்ரீம் இடைக்காடர் சித்தர் சுவாமியே போற்றி!” என்று 108 முறை ஜெபிக்க வேண்டும்.
அதன்பின் நிவேதனமாக இளநீர், பால், பழம், தண்ணீர் வைக்க வேண்டும். இவருக்கு பச்சை வண்ண வஸ்திரம் அணிவிக்க வேண்டும். பூசை செய்ய உகந்த நாள் புதன்கிழமை.
இடைக்காடர் சித்தரின் காரியசித்தி பூஜா பலன்கள்:
இவர் நவக்கிரகங்களில் புதன் பகவானை பிரதிபலிப்பவர். இவரை முறைப்படி வழிபட்டால்..
1. ஜாதகத்தில் புதன் பகவானால் ஏற்படும் தோஷங்கள் நீங்கி நல்ல பலன்கள் ஏற்படும்.
2. கல்வியில் தடை, சரியாக படிக்க முடியாத நிலை அகலும்.
3. வியாபாரிகளுக்கு உள்ள பிரச்சனைகள் நீங்கி வளம் பெருகும்.
4. கற்பனைத் திறன், கவித்திறன் கூடும்.
5. அரசாங்கத்தால் ஏற்படக்கூடிய பிரச்சனைகள் தீரும்.
6. புத்திசாலித்தனம் அதிகரிக்கும்.
7. பிள்ளை இல்லாதவர்களுக்கு பிள்ளை வரம் கிட்டும்.
8. கல்விக்கூடங்களுக்கு உண்டான பிரச்சனைகள், ஆசிரியர்களுக்கு ஏற்படும் பிரச்சனைகள் அகலும்.
9. தோல் சம்பத்தப்பட்ட வியாதிகள் நீங்கும்.
இடைக்காடர் சித்தரின் வரலாறு முற்றிற்று.
LikeShow more reactions
Comment

No comments:

Post a Comment