Friday 20 May 2016

சர்வ கார்ய சித்தியும் சர்வ ஐஸ்வர்யமும் தரும்
ஸ்ரீ பகளாமுகி மந்திரம்
தசமஹா வித்யா என்ற 10 பெரும்தெய்வங்களில் இவளும் ஒருவள். விரைந்து அருள் செய்யும் தெய்வங்களில் ஸ்ரீ பகளமுகியும் ஒரு சக்தி.அதர்வண ரஹசிய ஸ்ரீ பகளாமுகி ஹ்ருதயம் மிக உயர்ந்த பலன்களைத் தருவது. இம்மந்திர ஸ்லோகத்தில் கீழ்க்கண்ட மந்திரம் வருகிறது. ஸ்ரீ பகளாமுகி ஹ்ருதயத்தையும் இம்மந்திரத்தையும் சேர்த்துப் படித்து வந்தால் சர்வ காரியமும் சித்திப்பதொடு மனோ விருப்பங்களை விரைவில் நிறைவேற்றும்.வறுமை ஒழியும்.
மஞ்சள் வண்ண ஆடை அணிந்து மேற்கு முகமாக அமர்ந்து ஜெபிக்க வேண்டும்.மஞ்சள் நிறப்பூக்கள் மிக பிடித்தமானவை.தேன்,எள் , சம்பாஅவல், நெய் கலந்த நைவேத்யம் மிகப் பிடித்தமானது.
ஸ்ரீ பகளாமுகி மந்திரம் :-
ஓம் ஹ்ராம் ஐம் ஸ்ரீம் க்லீம் ஸ்ரீ பகலானனே |
மம ரிபூன் நாசய நாசய |
மம ஐஸ்வர்யாணி தேஹி தேஹி |
சீக்ரம் மனோ வாஞ்ச்சித கார்யம் ஸாதய ஸாதய |
ஹ்ரீம் ஸ்வாஹா ||
Like
Comment

No comments:

Post a Comment