ஸ்ரீ சனீஸ்வரபகவானால் உண்டாகும் பாதிப்புகள் நீக்கும் எளிய தாந்த்ரீகப் பரிகாரங்கள்
1.உணவில் கருப்பு உப்பு அள்ளது கல்உப்பு சேர்த்து வரலாம்.
2.கண்மை அல்லது இஸ்லாமியர்கள் பயன்படுத்தும் சுர்மா பவுடர் கண்களில் போட்டு வர சனிக்கிரக கெடுபலன்கள் குறையும்.
2.கண்மை அல்லது இஸ்லாமியர்கள் பயன்படுத்தும் சுர்மா பவுடர் கண்களில் போட்டு வர சனிக்கிரக கெடுபலன்கள் குறையும்.
3.ஜனன ஜாதகத்தில் 7 மற்றும் 11 ஆம் வீட்டில் சனி பகவான் அமையப் பெற்றவர்கள் புதிதாக ஒரு சிறு மண்கலயம் அல்லது பானை வாங்கி ஆலயத்திற்கு அல்லது வயதானவர்களுக்குத் தானமாக வழங்க சனீஸ்வரரால் ஏற்படும் பாதிப்புகள் நீங்கும்.
4.மேலும்,ஏழாம் இடத்தில் சனிபகவான் அமையப் பெற்றவர்கள் ஏற்கனவே செய்துவரும் பரிகாரங்கள் எதுவானாலும் அவை முழுப் பலன்தர மது, மாமிசம்,புகையிலை,பீடி ,சிகரெட் போன்ற பழக்கங்களை அறவே கைவிட்டு விட தீய பலன்கள் வெகுவாகக் குறையும்.அல்லது பெரும்பொருள் இழப்பு,அவமானம்,நண்பர்கள் எதிரிகளைச் சரியாகக் கணித்து நடந்து கொள்ளும் திறன் இன்மை இவை ஏற்படும்.
5.இரும்பாலான பர்னிச்சர் பொருட்கள் பயன்படுத்துவது சனீஸ்வரருக்கு பிரியமானது எனவே இதுவும் கெடுபலன்கள் குறைய உதவும்.
6.ஜாதகத்தில் சனீஸ்வரர் பாதகமான ஸ்தானத்தில் அமைந்து அதனால் குழந்தை இன்மை அல்லது அடிக்கடி கரு களைந்து போகுதல் இவை ஏற்பட்டால் அந்தப் பெண்மணி தான் உண்ணும் முன் தான் உண்ணும் உணவில் உள்ள அத்தனை வகைகளிலும் தனியே சிறிது எடுத்து வைத்து அதை கருப்பு நிறமுள்ள நாய்க்கு போட்டு வர இந்த பாதிப்பில் இருந்து விடுபடலாம்.கருப்பு நிற நாய்க்கு இடுவது சிறப்பு, தங்கள் பகுதியில் கருப்பு நிற நாய் இல்லாதவர்கள் வேறு நாய்க்குப் போடலாம்.
நாய்க்கு உணவு படைக்கும் பொழுது அதை பைரவராகப் பாவித்து மனதிற்குள்
நாய்க்கு உணவு படைக்கும் பொழுது அதை பைரவராகப் பாவித்து மனதிற்குள்
ஓம் ஹ்ரீம் காலபைரவாய மம சனிக்கிரக தோஷம் நசி நசி
என்ற மந்திரத்தை 3 தடவை ஜெபித்துக் கொள்ளவும்.
இந்தப் பரிகாரத்தைச் செய்ய முடியாத பெண்கள் ,குளிக்கும் முன் அந்த நீரில் ஒன்றிரண்டு மரமஞ்சளைப் போட்டுச் சில நிமிடங்கள் கழித்துக் குளித்து வரவும்
இந்தப் பரிகாரத்தைச் செய்ய முடியாத பெண்கள் ,குளிக்கும் முன் அந்த நீரில் ஒன்றிரண்டு மரமஞ்சளைப் போட்டுச் சில நிமிடங்கள் கழித்துக் குளித்து வரவும்
No comments:
Post a Comment