பில்கேட்ஸ் இரகசியம்
ஒரு சில பேர் எந்த பரிகாரமும் வழிபாடும் மந்திர உச்சரிப்பும் செய்யாமல் கோயில் குளம் ஏறி இறங்காமல் தன்னம்பிக்கையாலும் முயற்சியாலும் பெரும் உழைப்பாலும் முன்னேறியிருக்கிறார்கள் அல்லது முன்னேற்ற பட்டிருக்கிறார்கள் யாரால் முன்னேற்பட்டார்கள் என்று பார்த்தால் அவர்கள் வேறு யாரும் இல்லை நம் நவகிரக நாயகர்கள்தான்
உலகின் நம்பர் ஒன் கோடீஸ்வரன் பில்கேட்ஸ் பற்றி அனைவருக்கும் தெரியும் ஆனால் இந்த நிலை வருவதற்கு அவர் எந்த ஜாதக பரிகாரமும் செய்ய வில்லை மந்திரமும் உச்சரிக்கவில்லை ஆனால் நவகிரகங்கள் அவரை உச்சத்தில் கொண்டு போய் உட்கார வைத்து விட்டது எனவே இவருக்கு எந்த பரிகாரமும் மந்திரமும் தேவைப்படாது
இவரை போன்ற எந்த பிரபலங்களின் ஜாதகத்தை எடுத்து பார்த்தாலும் இதே நிலைதான் ஆனால் நம்மை போன்ற பாவபட்ட பிறவிகளுக்கும் நம்மை விட கீழான நிலையிருப்பவர்களுக்கும் பிளாட்பாரத்தில் வசிப்பவர்களுக்கும் இது போன்ற கிரக நிலைகள் ஜாதகத்தில் அமைவதில்லை அப்படி அமைந்து விட்டால் அவன் பிச்சையெடுப்பதில்லை வறுமையில் வாடுபவர்களின் ஜாதகங்களை பார்த்தால் அவை அனைத்துமே ஏதோ ஒரு தோஷத்தினாலோ நீச்ச கிரகத்தாலோ அவயோகத்தாலோ பாதிக்கப்பட்டிருப்பதை ஜோதிடர்கள் அறிவார்கள் ஆனா VIP பிரபலங்களின் ஜாதகம் சுத்தமாக இருக்கும் அதாவது பல யோகங்களுடன் கிரகங்கள் உச்சநிலை பெற்று அவர்களை சிறப்பாக வாழ வைக்கும் இது பிறப்பிலேயே அமைய கூடிய இரகசியம் என்பதால் ஒருவன் கெட்டவனாக பொருக்கியாக ரெளடியாக வாழ்ந்தாலும் சிலரை செல்வாக்காக வாழ வைப்பது அவனது ஜாதகத்தில் உள்ள கிரக நிலைகளே ஆனால் அவன் செய்யும் பாவ வினைகளுக்கு ஏற்றபடி கர்ம வினைகள் அவனை பின் தொடர்ந்து வந்து அடுத்த பிறவியில் அவனை பிச்சையெடுக்க வைத்து விடுகிறது அல்லது இந்த பிறவியிலேயே அவனது முடிவு மிக மோசமாக அமைந்து விடுகிறது
இவரை போன்ற எந்த பிரபலங்களின் ஜாதகத்தை எடுத்து பார்த்தாலும் இதே நிலைதான் ஆனால் நம்மை போன்ற பாவபட்ட பிறவிகளுக்கும் நம்மை விட கீழான நிலையிருப்பவர்களுக்கும் பிளாட்பாரத்தில் வசிப்பவர்களுக்கும் இது போன்ற கிரக நிலைகள் ஜாதகத்தில் அமைவதில்லை அப்படி அமைந்து விட்டால் அவன் பிச்சையெடுப்பதில்லை வறுமையில் வாடுபவர்களின் ஜாதகங்களை பார்த்தால் அவை அனைத்துமே ஏதோ ஒரு தோஷத்தினாலோ நீச்ச கிரகத்தாலோ அவயோகத்தாலோ பாதிக்கப்பட்டிருப்பதை ஜோதிடர்கள் அறிவார்கள் ஆனா VIP பிரபலங்களின் ஜாதகம் சுத்தமாக இருக்கும் அதாவது பல யோகங்களுடன் கிரகங்கள் உச்சநிலை பெற்று அவர்களை சிறப்பாக வாழ வைக்கும் இது பிறப்பிலேயே அமைய கூடிய இரகசியம் என்பதால் ஒருவன் கெட்டவனாக பொருக்கியாக ரெளடியாக வாழ்ந்தாலும் சிலரை செல்வாக்காக வாழ வைப்பது அவனது ஜாதகத்தில் உள்ள கிரக நிலைகளே ஆனால் அவன் செய்யும் பாவ வினைகளுக்கு ஏற்றபடி கர்ம வினைகள் அவனை பின் தொடர்ந்து வந்து அடுத்த பிறவியில் அவனை பிச்சையெடுக்க வைத்து விடுகிறது அல்லது இந்த பிறவியிலேயே அவனது முடிவு மிக மோசமாக அமைந்து விடுகிறது
எனவே நம்மை போன்ற பாவப்பட்ட மனிதர்கள் பரிகாரங்கள் செய்து கொள்வதன் மூலமும் மந்திரங்கள் உச்சரிப்பதன் மூலமாகவும் இறைவாழிபாட்டின் மூலம் கண்ணீர் சிந்துவதாலும் பல பிறவிகளில் நாம் சேர்த்து வைத்த மலை போன்ற தீய கர்ம வினைகளை பக்தி என்ற பெருங்கடலில் சிறு துளி பாவத்தையாவது கரைக்க முயற்சி செய்ய வேண்டும்
மழை வரப்போகிறது என்று தெரிந்தவுடன் குடையை எடுத்து செல்வோம் அல்லவா அது போல நன்றாக வாழும் காலத்திலேயே இறைவழிபாட்டை மேற்கொண்டு துன்பம் வரும் காலத்தில் அவன் அருளால் நம் தப்பிக்கலாம் ஆனால் நாம் நன்றாக இருக்கும் காலத்தில் நான்தான்டா அப்பா டக்கரு எனக்கு முன்னாடி எவனும் இல்லடா ஒரு மேட்டரு ஜாலியா இருக்க நாம அடிக்கலாம் குவாட்டரு எவனாவது என்னை பகைச்சிக்கிட்டா முடிச்சிடுவேன் அவன் சேப்டரு என காலரையும் காலையும் தூக்கி கொண்டு போகையில திறந்திருக்கும் கால்வாயில் விழுந்து விடுகிறார்கள் அந்த நேரத்தில் காப்பாற்ற எந்த தெய்வமும் உதவிக்கு ஓடி வராது ஏனென்றால் எந்த தெய்வத்தையும் அவன் வணங்கி வழிபடவில்லையே
உங்கள் பிரச்சினைகள் தீர அதற்குரிய தெய்வங்களை வணங்கி வந்தால் விரைவில் நிவாரணம் காண முடியும்
உதாரணமாக உங்கள் பெயர் பாலாஜி என்று வைத்து கொள்வோம் தூரத்தில் நிற்கும் நான் உங்களை பாலாஜி என்று அழைத்தால் மட்டுமே நீங்கள் என்னை திரும்பி பார்ப்பீர்கள் அதை விட்டுவிட்டு ஏங்க ஏங்க ஹலோ உங்களைத்தான் என்று அழைத்தால் பஸ் ஸ்டான்டில் இருப்பவர்கள் அனைவரும் திரும்பி பார்த்து குழப்பத்துடன் நிற்பார்கள் இவன் யாரை கூப்பிடுகிறான் என்று தெரியலையே என அமைதியாக இருந்து விடுவார்கள் எனவே உடல் வியாதி தீர தன்வந்திரி தடைகள் தகர கணபதி வறுமை அகல மகாலட்சுமி கல்வியறிவு வாக்குவன்மை பெற சரஸ்வதி ஹயகிரீவர் பாதுகாப்பு பெற சரபேஸ்வர் ப்ரத்தியங்கிரா காளி
உடல் சக்திபெற அனுமன் இன்னும் பல தெய்வங்கள் நம் இந்து மதத்தில் சொல்லப்பட்டுள்ளது எனவே உங்களுக்கு தேவையானவற்றை அதற்குன்டான தெய்வதிடம் கேட்டால் பலன் உடனடியாக கிடைக்கும்
உதாரணமாக உங்கள் பெயர் பாலாஜி என்று வைத்து கொள்வோம் தூரத்தில் நிற்கும் நான் உங்களை பாலாஜி என்று அழைத்தால் மட்டுமே நீங்கள் என்னை திரும்பி பார்ப்பீர்கள் அதை விட்டுவிட்டு ஏங்க ஏங்க ஹலோ உங்களைத்தான் என்று அழைத்தால் பஸ் ஸ்டான்டில் இருப்பவர்கள் அனைவரும் திரும்பி பார்த்து குழப்பத்துடன் நிற்பார்கள் இவன் யாரை கூப்பிடுகிறான் என்று தெரியலையே என அமைதியாக இருந்து விடுவார்கள் எனவே உடல் வியாதி தீர தன்வந்திரி தடைகள் தகர கணபதி வறுமை அகல மகாலட்சுமி கல்வியறிவு வாக்குவன்மை பெற சரஸ்வதி ஹயகிரீவர் பாதுகாப்பு பெற சரபேஸ்வர் ப்ரத்தியங்கிரா காளி
உடல் சக்திபெற அனுமன் இன்னும் பல தெய்வங்கள் நம் இந்து மதத்தில் சொல்லப்பட்டுள்ளது எனவே உங்களுக்கு தேவையானவற்றை அதற்குன்டான தெய்வதிடம் கேட்டால் பலன் உடனடியாக கிடைக்கும்
இனி பில் கேட்ஸை பார்ப்போம்
பண மழையில் பில்கேட்ஸ் நிமிடத்திற்கு 2600 அமெரிக்க டாலர் சம்பாதித்து உலக கோடீஸ்வராக கொடிகட்டி பறக்கிறார் பில்கேட்ஸ். சாதாரண குடும்பத்தில் பிறந்து 13 வயதில் இருந்தே கணிணி தொழில்நுட்பங்களை ஆராய்ந்து தனது அறிவு திறனால் முன்னேறியவர். மைக்ரோசாப்ட் தலைவர். உலகமே பெருமைபடும் மனிதர் பில்கேட்ஸ். இன்றைய பகுதியில் நாம் இவருடைய ஜாதகத்தின் சிறப்புகளைதான் ஆராய இருக்கிறோம். 28.10.1955.ம் வருடம் பிறந்தவர் வில்லியம் ஹென்றி கேட்ஸ் என்கிற பில்கேட்ஸ். பொதுவாக சூரியனின் ஆதிக்கத்தில் பிறந்தவர்கள் தனித்திறன் கொண்ட மனிதர்களாக இருக்கிறார்கள். இவர் மீன இராசி – ரிஷப லக்கினம், உத்திரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்.
இவரின் ஜாதகத்தில் சிறப்புக்குரிய யோகங்களாக “காளசர்ப்பயோகம்”, புதன் – சுக்கிரன் பரிவர்த்தனை பெற்று, “பரிவர்த்தனை யோகம்” போன்ற யோகங்கள் இருக்கிறது.
இவரின் இராசிக்கு 6-க்குரியவனான சூரியன் எட்டில் நீச்சம் அடைந்த காரணத்தினால், “கெட்டவன் கெட்டிடில் கிட்டிம் இராஜயோகம்” என்ற ஜோதிட வாக்குக்கு ஏற்ப பெரும் யோகத்தை சூரியன் வாரி கொடுத்தான்.
ஒருவரின் ஜாதகத்தில் 3,6,11-ல் சனி இருந்தாலே அவர்கள் பெரும் பணக்காரர்களாக திகழ்கிறார்கள்.
இவரின் ஜாதகத்தில் லக்கினத்திற்கு தர்மகர்மாதிபதியான சனி, 6-ல் உச்சம் பெற்று, லக்கினாதிபதியோடு சுக்கிரன் சேர்ந்ததால் உலக புகழ் கிடைத்தது.
9,10-க்குரிய சனி, 3-க்குரிய சந்திரன் லாபத்தில் அமர்ந்ததாலும், அதனை செவ்வாய் பார்வை செய்து, “சந்திர மங்களயோக“த்தை கொடுத்தார். பொதுவாக சந்திரன் – செவ்வாய் இணைந்திருந்தாலும், சந்திரன் – செவ்வாய் பார்வை இருந்தாலும், அத்தகைய ஜாதகர்கள் நினைத்ததை சாதிக்கும் வல்லமை கொண்டவர்கள்.
ஜாதகத்தில் 3-ம் இடம், எழுத்துத் துறை – புத்தகத் துறை ஆகியவற்றை குறிப்பிடுகிற இடமாகும். ஆகவேதான் எழுத்து தொடர்புடைய கம்ப்யூட்டர் துறையில் பணத்தை அள்ளிக் கொண்டு இருக்கிறார் பில்கேட்ஸ். அத்துடன் 11-ம் ஸ்தானத்தை செவ்வாய் பார்ப்பதால், கம்ப்யூட்டர் எலக்ட்ரானிக்ஸ் துறைகளும் பெரும் வெற்றியை கொடுக்கிறது.
எவர் ஒருவருக்கு பூர்வ புண்ணியஸ்தானம் மற்றும் பாக்கியஸ்தானம் ஆகிய இரண்டும் வலுவாக இருக்கிறதோ, அப்படிப்பட்ட ஜாதகர்களுக்கு மற்ற யோகங்கள் ஜாதகத்தில் இருக்க வேண்டும் என்கிற அவசியமே இல்லை. அவர்கள் யோகசாலிகள். எந்த துறையில் இருந்தாலும் அவர்களுக்கு பணம், மழையாக கொட்டும். தன – பஞ்சமாதிபதி புதன், பஞ்சம ஸ்தானத்தில் ஆட்சி பெற்று, சந்திரன் சம சப்தமாக பார்த்து விட்டதால், இவருக்கு ஜாதக யோகம் – ஆலமரமாக விஸ்வரூபம் எடுக்கிறது.
லக்கினத்திலோ 5. அல்லது 9-ல் கேது இருந்தாலோ, தான – தர்மங்கள் செய்வதில் பெரும் சிறப்பினை அடைவார்கள் என்பது ஜோதிட விதி. இவரது ஜாதகத்தில் லக்கினத்திலே கேது அமர்ந்து, தரும காரியங்களை வாரி வழங்க செய்கிறார். சிலருக்கு காலனா கிடைத்தாலே நாலனா ஆட்டம் போடுவார்கள். ஆனால் இவரோ உலகின் பெரும் கோடீஸ்வரராக இருந்தும், அதை பற்றி அலட்டிக் கொள்ளாமல் – பந்தாவாக இல்லாமல் அமைதியாக இருக்கிறார் என்றால் அதற்கு காரணம், லக்கினாதிபதி சுக்கிரன், சூரியனோடு சேர்ந்து அஸ்தங்கம் ஆனதால் வீண் பெருமை, ஆடம்பர ஜம்பம் இல்லாமல் அமைதியாக இருக்கிறார். என்பதே காரணம்.
அஷ்டம ஸ்தானத்தையும் – ஜீவன ஸ்தானத்தையும் – விரைய ஸ்தானத்தையும் குருபார்வை செய்வதால், இந்த ஸ்தானங்கள் சிறப்பாக வலிமை பெறுகிறது. பொதுவாக, “அந்தணன் தனித்து நின்றால் அபகீர்த்தி மெத்த உண்டு” என்ற ஜோதிட சொல் இவரின் ஜாதகத்தில் மெய்யாகவில்லை. அதாவது – அந்தணன என்னும் குரு, ஒருவர் ஜாதகத்தில் தனித்து நின்றால் அந்த இடம் நாஸ்தி ஆகிவிடும். அதாவது கெட்டுவிடும். ஆனால் 6,8,12.க்குரியவனாக குரு இருந்து, அவன் தனித்து நின்றால் அவன் அமரும் பாவத்தை கெடுக்க மாட்டான். சரி. தற்போது கோச்சார ரீதியாக மீன இராசிக்கு சனி 8-ல் அதாவது அஷ்டம சனியாக இருக்கிறரே, துன்பம் தருமா? என்றால் தராது. காரணம், ஏற்கனவே கூறி இருக்கிறேன். 6,8,12-க்குரியவன் 6,8,12-ல் அமைந்தால் அதிர்ஷ்டத்தை அள்ளி கொடுப்பான். இந்த கோட்சாரப்படி இவர் உலக கோடீஸ்வர பட்டியலில் இன்னும் சற்று முன்னேறுவார்
இப்பொழு சொல்லுங்கள் இவராகவே முன்னேறினாரா அல்லது நவகிரகங்களால் முன்னேற்றப்பட்டாரா
நான் தொழில் முறை ஜோதிடன் அல்ல எனவே என்னை யாரும் தொடர்பு கொள்ள வேண்டாம் நம்பிக்கையற்றவர்களுக்காக மட்டுமே இந்த பதிவில் மேற்கோள் காட்டப்பட்டது
நன்றி இந்த ஜாதகத்தை நீங்கள் கண்ணால் கண்டாலே அந்த ஜாதகத்தில் உள்ள நல்லவை கெட்டவைகள் உங்களையும் பாதிக்கும் இதை ஜோதிடர்கள் நன்கு அறிவார்கள்
பில்கேட்சும் குபேரனை போன்றவரே உலகின் நம்பர் ஒன் கோடிஸ்வர அதிபதி அல்லவா
இதனால்தான் நம் முன்னோர்கள் நாம் வீடுகளில் அனுமன் ஜாதகம் ராமர் ஜாதகம் விநாயகர் ஜாதகம் குபேர ஜாதகம் ஆகியவற்றை வைத்து வழிபட சொன்னார்கள் யந்திர தகடுகளுக்கும் இந்த வழிபாடு பொருந்தும்
நன்றி இந்த ஜாதகத்தை நீங்கள் கண்ணால் கண்டாலே அந்த ஜாதகத்தில் உள்ள நல்லவை கெட்டவைகள் உங்களையும் பாதிக்கும் இதை ஜோதிடர்கள் நன்கு அறிவார்கள்
பில்கேட்சும் குபேரனை போன்றவரே உலகின் நம்பர் ஒன் கோடிஸ்வர அதிபதி அல்லவா
இதனால்தான் நம் முன்னோர்கள் நாம் வீடுகளில் அனுமன் ஜாதகம் ராமர் ஜாதகம் விநாயகர் ஜாதகம் குபேர ஜாதகம் ஆகியவற்றை வைத்து வழிபட சொன்னார்கள் யந்திர தகடுகளுக்கும் இந்த வழிபாடு பொருந்தும்
No comments:
Post a Comment