Monday 30 May 2016

ஆழ்ந்த தூக்கம் வர தாந்திரீக பரிகாரம்
மிகுந்த மனஉளைச்சலுடன் தூக்கமில்லாமல் அவதிபடுகிறீர்களா Insomania இன்சோமேனியா என்று மருத்துவர்கள் சொல்லும் தூக்கமின்மை என்ற வியாதியால் பாதிக்கப்பட்டவரா
நீங்கள் தூக்க மாத்திரை துணை இல்லாமல் உங்களுக்கு தூக்கம் வரவில்லையா 
உங்களுக்காக இந்து கலாசாரத்தில் தாந்த்ரீக மாந்திரீக வழியில் பல வழிகள் சொல்லப்பட்டுள்ளன
மருத்துவம் தோற்கும்போது கடைசியில் மனிதன் வந்து விழுவது இறைவனின் காலடியில் இதை மறந்து விட்ட இன்றைய தலைமுறையினர் தாந்த்ரீகத்தையும் மாந்திரீகத்தையும் தொலைத்து விட்டனர்
அதை மீட்டெடுக்கும் பணியில் என்னை அற்பணித்து விட்டேன் அதில் சிறு முயற்சியே என் பதிவுகள்
சரி விஷயத்துக்கு வருவோம்
தூக்கமின்மையை போக்க வேண்டுமென்றால் நீங்கள் படுக்கைக்கு செல்லும் முன் ஒரு டம்ளரில் குடிநீர் எடுத்துக் கொண்டு அதை வலது கையில் பிடித்து கீழே சொல்லப்பட்ட மந்திரத்தை 21 தடவை உச்சரிக்கவும்
பின்னர் இந்த உருவேற்றப்பட்ட நீரை குடித்து விட்டு படுக்க செல்லவும் படுத்தவுடன் இந்த மந்திரத்தை தூக்கம் வரும் வரை நீங்கள் விருப்ப பட்டால் சொல்லலாம் இதனால் மந்திர அதிர்வலைகள் உங்கள் தூக்கத்திற்குண்டான நாடிகளை இயக்கி உங்களை விரைவிலேயே ஆழ்ந்த தூக்கத்தில் ஆழ்த்தும்
தூக்கம் வரவில்லையென்று மாத்திரைக்கு அடிமையாகி விடாதீர்கள்
மந்திரம்
யா தேவி சர்வ பூதேஷு நித்ர ரூபேண சம்ஸ்திதா நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை நமோ நமஹா
Like
Comment

No comments:

Post a Comment