Monday 30 May 2016

வாஸ்து சாந்தி யந்திரம்
வாஸ்து தோஷ நிவாரணத்திற்கு பல பரிகாரங்கள் நடைமுறையில் உள்ளன. ஆனால் அவற்றைச் செய்து முடிக்க அதிகம் செலவாகும்.குறைந்த செல்வில் வாஸ்து தோஷத்தைச் சரிசெய்யலாம்.
வீட்டின் உரிமையாளர் அல்லது வீட்டை நிர்வாகம் செய்பவர் வளர்பிறையில் தனக்குப் படுபக்ஷி இல்லாத நல்ல நாளாகப் பார்த்து அதிகாலையில் எழுந்து குளித்து மஞ்சள் வஸ்திரம் உடுத்திக் கிழக்கு முகமாக அமர்ந்து ஒரு கனமான செம்புத் தகடு வாங்கி அதைப் பஞ்சகவ்யம்,பன்னீர் இவற்றால் சுத்தி செய்து சுத்தமான துணி கொண்டு துடைத்துக் கொள்ளவும். பின்னர் கீழே உள்ள யந்திரத்தில் உள்ளபடி எண் யந்திரத்தை வரையவும்.பூக்கள் போட்டு அர்ச்சித்து சாம்பிராணி,குங்கிலியம் போட்டுத் தூபம் காண்பித்து அந்த யந்திரத்தை வீட்டின் பூஜை அறையில் அல்லது வீட்டின் பிரதான வாயில் கதவில் மாட்டி வைக்கவும்.
இந்த யந்திரம் வாஸ்து தோஷத்தை நீக்குவதோடு வீட்டில் பாசிடிவ் வைப்ரேஷனையும் அதிகரிக்கும்.இது செலவு குறைந்த சக்தி மிகுந்த முறை
Like
Comment

No comments:

Post a Comment