Friday 20 May 2016

குடும்பத்தில் ஏற்படுகின்ற பலவிதமான பிரச்சனைகளுக்கு இந்த சரபேஸ்வரர் மந்திரம் நல்லபலனை அளிக்கும்.
பல விதமான பிரச்சனைகளை தீர்க்கும் ஸ்ரீ சரபேஸ்வர கவசம்
நம்மில் சிலபேருக்கு வீட்டில் இருக்கும் போதோ அல்லது வெளியில் செல்லும் பொழுதோ இனம் புரியாத அச்சம் ஏற்படும். சிலருக்கு பல காரணங்களினால் திருமணம் தடைபட்டு கொண்டே இருக்கும். ஒரு சிலருக்கு அடிக்கடி தீய கனவுகள் வரும். சில குடும்பங்களில் கணவன் மனைவி தீய குணங்களால் குடும்பமே நெருக்கடிக்கு ஆளாகக்கூடிய நிலையில் இருக்கும்.
சில மாணவர்கள் தைரியம் குறைந்தவர்களாக இருப்பார்கள் அவர்களும் ஸ்ரீ கவச ஜலூஷர் இயற்றிய சக்திவாய்ந்த இந்த ஸ்ரீ சரபேஸ்வர கவசத்தை சொல்லி வரவும் தக்க நிவாரணம் கிடைக்கும்.
உக்கிரம் உடைத்து வந்த
பரமசிவம் பறவையாய் எழுந்த என் கோவே!
ஹர ஹர எனச் சொல்லி ஆனந்தமாக்கி உன்னை
உரத்த குரலில் கூவி அழைப்பேன் சாலுவேசா என்றே
சிரம் இரண்டும் கண் கூறிய மூக்குடனே
கரம் நான்காய் எனைக் காத்தருளும் கருணாகரனே!
பரம் பொருளே! சரபேசா!வாழி வாழியே! "
- இந்த திவ்ய கவசத்தை தினமும் சொல்லிக்கொண்டு இருக்கும் போதே இதன் மகிமையை நீங்கள் உணரலாம். பலபேரை காப்பாற்றிய கண்கண்ட மந்திரம். அனைத்து நேரங்களிலும் உங்களின் கையில் இருக்கட்டும்
Like
Comment

No comments:

Post a Comment