Friday 20 May 2016

குரு தோஷ நிவர்த்தி பரிகாரம்
உங்கள் ஜாதகத்தில் குரு க்ரஹ தோஷம் உள்ளது என்று ஜோதிடர் கூறினால் அதன் பாதிப்பு நீங்கித் திருமணம் மற்றும் வாழ்வில் சுப காரியங்கள் இனிதே நடைபெறக் கீழ்க்கண்ட செலவற்ற,எளிய பரிகாரங்களில் ஏதேனும் ஒன்றோ அல்லது அதற்கு மேலோ செய்து வர விரைவில் நல்ல பலன்களை எதிர்பார்க்கலாம்.
1.அதிகாலையில் எழுந்து,குளித்துவிட்டு நெற்றியில் மஞ்சள்பொடி,சந்தனம் அல்லது குங்குமம் வைத்துக் கொள்ளவும்.
2.அரசமர வேருக்கு வலது உள்ளங்கையில் பட்டுச் செல்லும்படி நீர் ஊற்றவும்.
3.வீட்டிலோ அல்லது வீட்டுத் தோட்டத்திலோ மஞ்சள்நிறமான பூக்கள் கொண்ட செடிகளை வளர்க்கலாம்,
4.முடிந்தால் வியாழக்கிழமை தோறும் விரதமிருக்கலாம்.அல்லது அரை வயிறு உண்டு ,தகாத மற்றும் கெட்ட வார்த்தைகள் பேசாமல் இருக்கவும்.
5.வியாழக்கிழமை அன்று மௌன விரதம் இருக்கலாம்.நாள் முழுக்க மௌன விரதம் இருக்க முடியாதவர்கள் வியாழக்கிழமை அன்று அதிகாலை 6 மணிக்குள் குளித்து முடித்து 6 முதல் 7 மணி வரை மௌனமாக இருந்து ஏதேனும் மந்திரங்களை மனதிற்குள் ஜெபித்து வரலாம்.அல்லது தியானம் செய்யலாம்.
6.கீழே உள்ள குரு யந்திரத்தை ஒரு தூய்மையான வெள்ளைப் பேப்பரில் மஞ்சள் பொடியும்,பன்னீரும் கலந்த கலவையினால் வரைந்து 4 மூலைகளிலும் சந்தனம்,குங்குமம் வைத்து பிரேம் செய்து வடக்குப் பக்கச் சுவற்றில் மாட்டி வணங்கி வரவும்.
குருபகவான் எண் யந்திரம்
7.குருபகவான் மந்திரம்
கீழ்க்கண்ட மந்திரங்களில் ஒன்றை வளர்பிறை வியாழக்கிழமை அன்று குரு ஹோரையில் வடக்கு முகமாக அமர்ந்து ஜெபிக்கத் துவங்கி,பின்னர் தினமும் அல்லது இயன்ற நாட்களில் குரு ஹோரையில் ஜெபித்து வருவது நல்லது.
1.ஓம் ஹ்ரீம் க்லீம் சௌம் ||
2.ஓம் நமோ பகவதே தக்ஷிணாமூர்த்தே மஹ்யம் மேதாம் ப்ரக்ஞாம் ப்ரயச்ச ஸ்வாஹா ||
3.ஓம் நமோ பகவதே தக்ஷிணாமூர்த்தே மஹ்யம் சர்வ ஸ்ரேய மேதாம் ப்ரக்ஞாம் ப்ரயச்ச ஸ்வாஹா ||
Like
Comment

No comments:

Post a Comment