Thursday 5 May 2016

வெள்ளெருக்கு விநாயகர் எழுந்தருளிய வீட்டில் செல்வம் பெருகும். பீடைகள் அகலும், மகிழ்ச்சியுடன் மன அமைதியும் உண்டாகும்.
பொறாமை,திருஷ்டியை போக்கி சகல செல்வங்களையும் தரும் வெள்ளெருக்கு விநாயகர்
அகஸ்திய மகரிஷியும் வெள்ளெருக்கு வேர் விநாயகரும்
அகஸ்திய மகரிஷி அவர்கள் தம்முடைய மூலிகை ஜாலரத்தினம் என்னும் நூலில் வாழ்கையில் தடைகளை நீக்கி நல்வழி காட்டும் விநாயகப்பெருமானை பூஜித்து நற்பலன்கள் பெற்று வாழ,அருகு,வன்னி,வெள்ளெருக்கு முதலிய மூலிகைகள் மிகச் சிறந்தது எனக் கூறியுள்ளார்கள்.
இவற்றுள் வெள்ளெருக்கு வேரின் குணம் மிக உயர்ந்தது எனவும் இதனை சாதாரனமாக வீடுகளில் வைத்திருந்தாலே தோஷங்கள் நீங்கி சுபிட்சம் பெருகும் என்றும் மேலும் வெள்ளெருக்கு வேரில் விநாயகர் சிற்பம் செய்து வீட்டில் வைத்து பூஜித்து வந்தால் நல்ல முயற்சிகள் அனைத்திற்கும் தடைகளை நீங்கி காரியசித்தி ஆவதுடன் சகல பலன்களும் பெற்று மன நிறைவு பெறுவர் என்று அகஸ்திய மகரிஷி தமது மூலிகை ஜாலரத்தினம் என்ற நூலில் தெளிவுப்பட கூறியுள்ளார்.
Like
Comment

No comments:

Post a Comment