Monday 23 May 2016

சோம்பேறிகள் மந்திரம் சொன்னால் பணம் வருமா?
இங்கே பதிவிட பட்டிருக்கும் பல பதிவுகள் பெரும்பாலும் நமக்கு நாமே செய்து கொள்ள கூடிய எளிய பரிகார முறைகள் மற்றும் வழிபாட்டு முறைகள் ஆகும் ஆயிரகணக்கில் செலவு செய்து பரிகாரம் செய்யமுடியாத நண்பர்களுக்கு மட்டுமே நான் யாரையும் சோம்பேறிகளாக்கவோ தன்னம்பிக்கை அற்றவர்களாக ஆக்கவோ இந்த பதிவுகளை இடவில்லை
வேலைக்கு போகாமல் சோம்பேறியாக வீட்டில் இருந்து கொண்டு மந்திரம் சொன்னால் பணம் வந்து விடுமா என்று நண்பர்கள் கேட்கும் கேள்விக்கு எனக்கு தெரிந்த பதிலை சொல்வதற்காகவே இந்த பதிவு
சோம்பேறியாக வீட்டில் இருந்து கொண்டு மந்திரம் சொன்னால் பணம் வராமல் இருக்கலாம் அல்லது உறவினர்கள் உதவியுடன் சில நாட்களுக்கு சில மாதங்களுக்கு பணவுதவி கிடைத்தாலும் கிடைக்கலாம் ஆனால் அது நிரந்தரமாக இருக்காது எனவே செய்யும் தொழிலே தெய்வம் என்பதை ஒப்புக்கொள்கிறேன் ஆனால் நல்ல வேலை கிடைக்கவும் கிடைத்த வேலையை தக்க வைத்து கொள்ளவும் சம்பள உயர்வு பெறவும் அலுவலகத்திலும் இந்த சமுகத்திலும் ஒரு நல்ல அந்தஸ்தை பெறவும் இறைவழிபாடும் பரிகாரங்களும் மந்திரங்களும் கண்டிப்பாக ஒருவருக்கு துணை செய்யும் நீங்கள் செய்யும் வழிபாட்டின் மூலம் உங்கள் நிலையை மாற்றி கொள்ள அது உதவும் கெட்ட கிரகங்களின் சதியால் இருண்டு போன உங்கள் மூளைக்கு ஒரு ஒளி கிடைக்கும் ஆம் ஒருவருடைய ஜாதகத்தில் கிரக நிலைகள் சரியில்லாத போது அந்த கிரகங்களின் தீய அதிர்வு அலைகள் மனிதனை சரியாக சிந்திக்க விடாமல் செய்துவிடுகிறது சரியான பாதைகளும் சரியான தகவல்களும் உங்கள் கண்ணுக்கு முன்னே இருந்தாலும் கெட்ட கிரகம் வேலை செய்யும்போது சரியான வழிகள் உங்கள் கண்களுக்கு புலபடாது கிரகங்களின் தீயஅதிர்வுகள் உங்கள் மூளை செல்கள் உயிரணுக்கள் ஆகியவற்றில் தாக்கத்தை ஏற்படுத்தி அவை சரியாக செயல்படாமல் தடுத்து நாம் என்ன மாதிரியான இழிநிலையில் இருக்கின்றோம் என்ற சிந்திக்கும் திறனை இழக்க செய்து அவனை செயலற்ற நிலைக்கு கொண்டு சென்று இந்த சமூகத்தின் பார்வைக்கு அவனை சோம்பேறி என்ற பட்டத்தையும் தண்ட சோறு என்ற அவச்சொல்லையும் குடிகாரன் என்ற கெட்ட பெயரையும் சுலபாமாக வாங்க வைக்கிறது ஆனால் காலம் மாறும் போது அதே கிரகங்கள் நேர்மறை அதிர்வுகளை ஏற்படுத்தி அவனது மூளையை சிறப்பாக செயல்பட வைத்து அவன் முன்னேற கூடிய பாதைகளை கண்ணுக்கெதிராக இருப்பதை காட்டிக்கொடுக்கிறது அதன் பிறகு அவன் வாழ்க்கையில் முன்னேறி எங்கோ உயர்ந்த நிலைக்கு சென்றுவிடுவான் அவன் ஜாதகத்தை நம்பினாலும் சரி நம்பாவிட்டாலும் சரி இது கண்டிப்பாக நடந்தேறும் எனவே
ஒருவனை தன்னம்பிக்கையுடன் உழைக்க வைப்பதற்கு சக்தியை கொடுப்பதும் அந்த நவகிரகங்கள்தான் சோம்பேறியாக்கி வீட்டுமூலைக்குள் உட்கார வைப்பதும் அந்த கிரகங்கள்தான்
எனவே அந்த மாதிரியான கால கட்டத்தில் இறை வழிபாட்டின் மூலமும் மந்திர உச்சரிப்பு மூலமும் தெய்வங்களையும் கிரகங்களையும் மகிழ்ச்சியடைய செய்து அவர்கள் வழங்கும் ஆசி மூலம் உங்கள் வாழ்க்கையில் ஒளி காண்பதற்காகவுமே இந்த பரிகாரங்களும் மந்திரங்களும் உதவுகின்றன அதை கூட எல்லாரும் முயற்சி எடுத்து செய்வது இயலாத காரியம் ஏனென்றால் கெட்ட நேரம் படுத்தும்பாடு அப்படி
இந்த பரிகாரங்களை கூட சரியாக செய்வதற்கு பாக்கியம் இருப்பவர்களால் மட்டுமே முடியும்
மற்றவர்கள் வேடிக்கை மட்டுமே பார்த்து விட்டு Like போட்டுவிட்டு சென்று விடுவார்கள்
பரிகாரங்கள் செய்யாமல் மந்திரங்கள் உச்சரிக்காமல் இறை வழிபாடு செய்யாமல் தன்னம்பிக்கையுடன் சுயஉழைப்பின் மூலம் முன்னேறியவர்கள் யாரும் இல்லையா என்று கேள்விகேட்டு மீண்டும் முதலில் இருந்து ஆரம்பிக்காதிர்கள் அப்படியொரு கேள்வி உங்களுக்குள் இருந்தால் மீண்டும் ஒரு முறை இந்த பதிவை முதலில் இருந்து பொறுமையாக படிக்கவும் அதிலும் திருப்தி இல்லையென்றால் சில vip ஜாதகங்களை விளக்கத்துடன் அடுத்த பதிவுகளில் காணலாம்
LikeShow more reactions
Comment

No comments:

Post a Comment