Friday 20 May 2016

வீட்டில் திருட்டு நேராமல் காக்க ,திருடர் பயம் நீங்க ஆன்மீகத் தீர்வு
சமீப காலமாக திருட்டு அதிகரித்து நகை,பணம் இவற்றைக் கொள்ளையடித்துச் செல்வதோடு அதன் உரிமையாளர்களைக் கொலை செய்வதும் அதிகரித்து வருகிறது.அனேக அன்பர்களின் வேண்டுகோளின்படி
இதற்கு எளிமையும்,வலிமையான இரண்டு தீர்வுகளை இந்தப் பதிவில் குறிப்பிடுகிறேன்.இவற்றில் எது உங்களுக்கு எளிமையானதோ அதைச் செய்து பயன்பெறுங்கள்.
பரிகாரம் 1
மேற்கண்ட இந்த அரேபிய யந்திரத்தை, சுத்தமான வெள்ளைப் பேப்பரில் பிரிண்ட் எடுத்து அதில் நான்கு பக்கமும் கொஞ்சம் அத்தர் தடவி ஊதுவத்தி காண்பித்து அசுத்தம் படாத படி வைத்திருக்கவும்.இரவில் உறங்கும் பொழுது தலையணைக்கு அடியில் வைத்து உறங்க திருடர் அத்துமீறி நம் வீட்டிற்குள் நுழையமாட்டார்கள். இது எளிமையான மற்றும் மிகச்சக்தி வாய்ந்த முறை.
பிரிண்ட் எடுக்க முடியாதவர்கள் குளித்து முடித்து மேற்கு நோக்கி அமர்ந்து ஒரு சுத்தமான வெள்ளைப் பேப்பரில் மேற்கண்ட படத்தில் உள்ள படி எழுதி
அதில் நான்கு பக்கமும் கொஞ்சம் அத்தர் தடவி ஊதுவத்தி காண்பித்து அசுத்தம் படாத படி வைத்திருக்கவும்.இரவில் உறங்கும் பொழுது தலையணைக்கு அடியில் வைத்து உறங்க திருடர் அத்துமீறி நம் வீட்டிற்குள் நுழையமாட்டார்கள்.
பரிகாரம் 2
picture 2 யந்திரத்தை சுத்தமான வெள்ளை பேப்பரில் பிரிண்ட் எடுத்து அல்லது எழுதி அதில் நான்கு பக்கமும் கொஞ்சம் அத்தர் தடவி ஊதுவத்தி காண்பித்து லேமினேஷன் அல்லது பிரேம் செய்து வீட்டின் தலைவாசலில் மாட்டவும்.தலைவாசலுக்குக் கிழக்கு ஓரத்தில் படம் இருக்கும் படி இருந்தால் மிக நல்லது.இதுவும் திருடர்கள் வராமல் காக்கும்
Like
Comment

No comments:

Post a Comment