Friday 20 May 2016

தந்த்ரோக்த சர்வ கார்ய சித்தி மந்திரம்
எல்லா காரியங்களிலும் வெற்றி அருளும் இம்மந்திரத்தைத் தாந்த்ரீக குருமார்கள் ரகசியமாக குருபரம்பையாக உபதேசித்து வருகின்றனர்.எனது வலைத்தளத்தைத் தொடர்ந்து பார்வையிட்டு வரும் அன்பர்களின் நலன் கருதி வெளியிடுகிறேன்.
நமக்கு தொழில்,வியாபாரம்,வேலை,குழந்தைகள் படிப்பு,பள்ளியில் சேர்க்கை,பெரிய மனிதர்களின் உதவி வேண்டுதல் இப்படிப் பல தேவைகள் வாழ்வில் ஏற்பட்ட வண்ணம் இருக்கும்.அவற்றில் சரி பாதி அல்லது அதற்கு மேலான காரியங்களில் தோல்வியையும் துன்பத்தையும் சந்தித்து வருபவர்கள் ஏராளம்.ஒவ்வொரு காரிய வெற்றிக்கும் தனிப்பட்ட சிறப்பான பூஜை மற்றும் மந்திரங்களை இன்றைக்குள்ள பிஸியான காலகட்டத்தில் செய்ய இயலாது.அதற்கு ஒரு எளிதான மந்திர ரீதியான தீர்வாக இம்மந்திரம் விளங்கும்.
ஜெப விதிகள் :-
இம்மந்திரத்தைக் கிரகணத்தன்று ஜெபிக்கவேண்டும்.
வெள்ளை நிற ஆடை அணிந்து வெள்ளை நிற விரிப்பில் அமர்ந்து வடக்கு முகமாக ஜெபிக்கவும்.
முதலில் குருவை மனதில் நினைத்து ஓம் கும் குருப்யோ நமஹ என 108 தடவை ஜெபிக்கவேண்டும்.அதன் பின்னரே கார்ய சித்தி மந்திரம் 1008 தடவை ஜெபிக்கவேண்டும்.இவ்வாறு ஜெபிக்க மந்திரம் சித்தியாகும்.
இது உங்கள் காரியங்கள் யாவிலும் வெற்றி தரும்.எந்த ஒரு முக்கியமான வேலையில் ஈடுபடுவதாக இருந்தாலும் இம்மந்திரத்தை 108 தடவை ஜெபித்து வேண்டிச் செல்ல அதில் வெற்றி கிட்டும்.தனக்கோ பிறருக்கோ துன்பம் தரும் தவறான காரியங்களுக்குப் பயன்படுத்தக் கூடாது.
தந்த்ரோக்த சர்வ கார்ய சித்தி மந்திரம்
ஓம் சர்வோதய சம்பூர்ண லாப ப்ராப்த்யர்த்தே நமஹா ||
Like
Comment

No comments:

Post a Comment