தொழிலில் ஏற்பட்ட நஷ்டங்களில் இருந்து மீண்டு வர
ஒவ்வொரு திங்கட்கிழமை அன்றும் அரசமரத்தில் இருந்து 11 இலைகளைப் பறித்துப் பன்னீரால் சுத்தம் செய்து செஞ்சந்தனத்தை அரைத்துக் குழைத்து அதைக் கொண்டு அந்த இலைகள் ஒவ்வொன்றிலும் "ராம் ராம்" என்று 4 தடவை எழுதவும்.பின்னர் அந்த 11 இலைகளையும் அனுமன் விக்ரகம் உள்ள ஏதேனும் கோவிலில் அனுமனின் பாதத்தில் வைத்து வணங்கிக் கொள்ளவும்.
இந்தப் பரிகாரத்தைத் தொழிலில் ஏற்பட்ட நஷ்டங்கள் சரியாகி நல்ல நிலைக்கு வரும்வரை செய்துவரவும்.இடையில் தவிர்க்க முடியாத காரணத்தினால் ஏதாவது ஒரு திங்கள்கிழமை செய்ய முடியாவிட்டாலும் பரவாயில்லை.முடிந்த திங்கட்கிழமைகளில் செய்து வர நற்பலன்களைக் காண்பீர்கள்.
No comments:
Post a Comment