Friday 20 May 2016

கணவன் மனைவி ஒற்றுமைக்கு ஸ்ரீ துர்கா மந்திரம்
வெள்ளிக்கிழமை சுக்ர ஹோரையில் சிகப்பு அல்லது வெண்ணிற ஆடை அணிந்து விளக்கேற்றி ஸ்ரீ துர்கா தேவியை விளக்கில் எழுந்தருள வேண்டி நைவேத்தியமாக வெற்றிலை,பாக்கு,பழங்கள்,பாயசம் வைத்து விரிப்பில் ரோஸ் வாட்டர் அல்லது பன்னீர் தெளித்து அமர்ந்து கீழ்க்கண்ட மந்திரத்தை 108 தடவை முதல் நாள் ஜெபிக்கவும்.அடுத்து வரும் நாட்களில் குறைந்தது 54 தடவையாவது ஜெபித்து வர உங்கள் கர்ம பலனைப் பொறுத்து சில நாட்கள் அல்லது சில வாரங்களில் தம்பதிகளுக்குள் ஒற்றுமை உண்டாகும்.
ஜெபம் செய்து முடிந்ததும் " ஸ்ரீ துர்கா மாதா தங்கள் வருகைக்கு நன்றி மீண்டும் அழைத்தால் வந்து அருள் செய்ய வேண்டுகிறேன் " என்று வேண்டி விளக்கைக் குளிர்வித்து விளக்குத் திரியின் கருக்கை நெற்றியில் அல்லது தலை வகிட்டில் அல்லது புருவத்தில் தடவி வரவும்.விரைவான பலனைத் தரும்.

மந்திரம்
வஷட் ஐம் ஹ்ரீம் க்லீம் சாமுண்டாயை விச்சே ...........................வஷட் மே வஷ்யம் குரு குரு ஸ்வாஹா
முக்கிய குறிப்பு : .மந்திரத்தில் .....................கோடிடப்பட்டுள்ள இடத்தில் கணவன் அல்லது மனைவி பெயரைக் குறிப்பிட்டு ஜெபிக்கவும்.
உதாரணமாக கணவர் பெயர் கிருஷ்ணன் என்றால்
வஷட் ஐம் ஹ்ரீம் க்லீம் சாமுண்டாயை விச்சே கிருஷ்ணன் வஷட் மே வஷ்யம் குரு குரு ஸ்வாஹா என்று ஜெபிக்கவும்.
வேறு பெண்களுக்கு பயன்படுத்தினால் அன்னை துர்கையின் தண்டனையிலிருந்து தப்பிக்க முடியாது எச்சரிக்கை நண்பர்களே
சிறு கருத்து வேறுபாடால் குடும்பங்கள் பிரிந்தவை ஆயிரமாயிரம் எனவே பொதுநலன் கருதி இந்த வழிமுறை வெளியிடபடுகிறது
Like
Comment

No comments:

Post a Comment