Friday 20 May 2016

சர்வ கார்ய சித்தியும் சர்வ வசீகரமும் தரும் மந்திரம்
சர்வ ஐஸ்வர்யமும்,எல்லோராலும் நேசிக்கப்படும் பேறும்,மனோ விருப்பங்களை நிறைவேற்றும் ஸ்ரீ பத்மாவதி தாய் மந்திரம்.
இம்மந்திரம் சித்திக்க லக்ஷம் உரு ஜெபிக்க வேண்டும்.12 ஆயிரம் உரு ஜெபத்திற்கு மேல் பலன் தெரிய ஆரம்பிக்கும்.லக்ஷம் உரு ஜெபித்தவர்கள் தங்கள் இறுதிக்காலம் வரை வறுமையை அனுபவிக்க மாட்டார்கள்.
இதை வளர்பிறை வெள்ளிக்கிழமை அல்லது பௌர்ணமி அன்று மாலை 5:30 முதல் 7:30 மணிக்குள் ஜெபிக்க ஆரம்பித்து அவரவர் திறனுக்கேற்ப ஜெபம் செய்து வருதல் நன்று.
தினமும் இரவில் குளித்து முடித்துத் தூய்மையான இடத்தில் அமர்ந்து தூய ஆடை அணிந்து முன்னால் அகல் விளக்கு அல்லது வெள்ளி விளக்கில் நெய் ஊற்றித் தாமரைத்தண்டு அல்லது பன்னீரில் நனைத்துக் காய்ந்த பஞ்சுத்திரி போட்டு விளக்கேற்றவும்.
மந்திரம் :
ஓம் நமோ பகவதி பத்மாவதி |சர்வஜன மோஹினி|
சர்வகார்யகாரிணி | மம விகட சங்கட சம்ஹாரிணி |
மம மஹா மனோரத பூரணி |மம சர்வ சிந்த பூரணி |
ஓம் பத்மாவதி நம ஸ்வாஹா ||
Like
Comment

No comments:

Post a Comment