Friday 20 May 2016

மகாலட்சுமி வீட்டில் நிலைத்து வாசம் செய்ய அருளும் மந்திரம்
தினமும் விளக்கேற்றும் முன் ஊதுவத்தி ஏற்றி வீட்டு நிலைவரை சென்று இந்த மந்திரத்தை 3 தடவை ஜெபித்தபின் அந்த ஊதுவத்தியை விளக்கிற்கு முன் வைத்து விளக்கேற்ற வேண்டும்.அதன் பின் விளக்கிற்கு சந்தானம் குங்குமம் இட வேண்டும்.முடிந்தால் பூக்கள் சூடலாம்.இதை அதிகாலையிலும் இரவு துவங்கும் வேளையிலும் செய்து வர ஸ்ரீ மகாலட்சுமி என்றென்றும் நிரந்தரமாக உங்கள் இல்லத்தில் வாசம் செய்வாள்.இதை அலுவலகம், கடை, போன்ற இடங்களிலும் முடிந்த நேரங்களில் செய்யலாம்.
வெள்ளிக்கிழமைக மாலை நேரத்தில் பன்னீர் வாங்கி வைத்து இம்மந்திரத்தை 108 தடவை வடக்கு முகமாக அமர்ந்து ஜெபித்து அந்தப் பன்னீரை வீட்டில், கடையில்,வீட்டில் உள்ளவர்கள் முகத்தில் தெளித்து வர தரித்திரம் நீங்கி வளம் கொழிக்கும்.
மந்திரம் :-
ஓம் சபரிதேவ்யோ மம க்ருஹே லக்ஷ்மி ஸ்திர குரு குரு ஸ்வாஹா ||
Like
Comment

No comments:

Post a Comment